என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Inspector of Police"

    • 6 ஆண்டுகளுக்கு மேலாக பணி செய்து வரும் நிலையில் கடந்த 6 மாதமாக எனக்கு சம்பளம் வழங்கப்படவில்லை.
    • இது தொடர்பாக நான் கேட்கும் போது என்னை சிலர் மிரட்டுகின்றனர்

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் மானூர் யூனியனுக்கு உட்பட்ட சேதுராயன் புதூர் பஞ்சாயத்து தெற்கு தெருவை சேர்ந்தவர் பிச்சம்மாள் (வயது 55).

    இவர் இன்று காலை நெல்லை கலெக்டர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்திருந்தார். அப்போது அவர் கையில் ஒரு கேனில் மண்எண்ணை மறைத்து வைத்து கொண்டு வந்தார்.

    இதனை அங்கு பாதுகாப்பு பணியில் நின்றிருந்த போலீசார் பார்த்து அவரிடமிருந்து பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவரிடம் மேலப்பாளையம் குற்றப் பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் மாரியப்பன் விசாரித்தார். அப்போது அவரது கையில் இருந்த மனுவை வாங்கி படித்தார்.

    நான் மானூர் யூனியனுக்கு உட்பட்ட சேதுராயன்புதூர் ஊராட்சியில் தூய்மை பணியாளராக பணியாற்றி வருகிறேன். சுமார் 6 ஆண்டுகளுக்கு மேலாக பணி செய்து வரும் நிலையில் கடந்த 6 மாதமாக எனக்கு சம்பளம் வழங்கப் படவில்லை.

    இது தொடர்பாக நான் கேட்கும் போது என்னை சிலர் மிரட்டுகின்றனர். இதனால் நான் மானூர் வட்டார வளர்ச்சி அதிகாரிகளிடம் புகார் அளித்து உள்ளேன். அவர்களும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    தற்போது எனக்கு பதிலாக 2-வது வார்டு உறுப்பினரை தூய்மை காவலராக நியமித்து விட்டதாக கூறுகிறார்கள். எனவே இது தொடர்பாக விசாரணை நடத்தி தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சீமான் வீடு காவலாளியை இன்ஸ்பெக்டர் பிரவீன்ராஜேஷ் நேற்று கைது செய்தார்.
    • சீமானின் மனைவி கயல்விழி போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் நடந்த செயலுக்கு மன்னிப்பு கேட்டார்.

    நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி விட்டார் என்று விஜயலட்சுமி கடந்த 2011-ம் ஆண்டு சென்னை வளசரவாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    இந்த வழக்கை விசாரித்து, 3 மாதங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது. இதனையடுத்து, சீமானிடம் இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு ஆஜராகுமாறு வளசரவாக்கம் போலீசார் கடந்த 24-ந்தேதி சம்மன் அனுப்பி இருந்தனர்.

    இதற்கிடையே சென்னை நீலாங்கரையில் உள்ள சீமான் வீட்டின் வெளிப்பக்க கதவில் மீண்டும் சம்மன் நோட்டீஸ் ஒட்டப்பட்டது. போலீசார் சம்மன் நோட்டீசை ஒட்டிவிட்டு சென்ற சிறிது நேரத்தில் அந்த சம்மனை சீமான் வீட்டு பணியாளர் ஒருவர் கிழித்தெறிந்தார்.

    இதனையடுத்து, சம்மனை கிழித்த சீமான் வீட்டு பணியாளர் மற்றும் போலீசாரிடம் மோதலில் ஈடுபட்ட சீமான் வீடு காவலாளியை இன்ஸ்பெக்டர் பிரவீன்ராஜேஷ் நேற்று கைது செய்தார்.

    அப்போது சீமானின் மனைவி கயல்விழி போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் நடந்த செயலுக்கு மன்னிப்பு கேட்டார். ஆனால் அதனை ஏற்க மறுத்து இன்ஸ்பெக்டர் கோபத்துடன் காவலாளியை ஜீப்பில் ஏற்றி அழைத்து சென்றார்.

    இந்நிலையில், சீமான் வீட்டில் காவலாளியை கைது செய்த நீலாங்கரை காவல் ஆய்வாளர் பிரவீன் ராஜேஷூக்கு எதிராக வேறொரு வழக்கில் வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது

    2019-ம் ஆண்டு சோமங்கலத்தை சேர்ந்த வழக்கறிஞர் பார்த்திபன் என்பவரை தாக்கியதாக தாம்பரம் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருந்தது; இதில் வரும் 3 தேதி பிரவீன் ராஜேஷ் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    ×