என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Police Inspector Suspended"

    • உலக சுற்றுச்சூழல் தின விழா நடந்து கொண்டிருந்த போது விழா மேடைக்கு கீழே நின்று தலைமை செயலாளர் மற்றும் அதிகாரிகளை பார்த்து நேரு எம்.எல்.ஏ. சரமாரியாக குற்றம்சாட்டி பேசினார்.
    • மேடையில் முதலமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் ஏம்பலம் செல்வம், தலைமை செயலாளர் ராஜீவ் வர்மா ஆகியோரும் இருந்தனர்.

    புதுச்சேரி:

    புதுவையில் நடைபெற்று வரும் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளில் ஊழல், முறைகேடுகள் நடப்பதாக உருளையன்பேட்டை தொகுதி சுயேச்சை எம்.எல்.ஏ. நேரு குற்றம்சாட்டி வந்தார்.

    தனது தொகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நடைபெறும் அண்ணா திடல் மேம்பாட்டு பணி ஓராண்டுக்குள் முடித்திருக்க வேண்டும். 2½ ஆண்டாக பணிகள் முடிக்கப்படாமல் உள்ளது.

    அதோடு தரமில்லாமல் பணிகள் நடந்து வருகிறது. தொகுதிக்குட்பட்ட புதிய பஸ் நிலைய மேம்பாட்டு பணிகளை தொடங்கவில்லை என்றும் புகார் கூறியிருந்தார்.

    இதை கண்டித்தும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் சேர்மனான தலைமை செயலாளர் ராஜீவ் வர்மாவை கண்டித்தும் தலைமை செயலகத்தை நேற்று நேரு எம்.எல்.ஏ. தனது ஆதரவாளர்களுடன் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்.

    ஆனால் தலைமை செயலாளர் அரசு விழாவில் பங்கேற்றிருப்பதாக அவருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நேரு எம்.எல்.ஏ. தனது ஆதரவாளர்கள், சமூக நல அமைப்பினரோடு அரசு விழா நடந்த கம்பன் கலையரங்கிற்கு வந்தார்.

    நேரு எம்.எல்.ஏ. வரும் தகவல் கிடைத்ததை தொடர்ந்து கம்பன் கலையரங்கின் 2 நுழைவு வாயில்களையும் போலீசார் மூடினர். மேலும் அங்கு வந்த நேரு எம்.எல்.ஏ மற்றும் அவரது ஆதரவாளர்களை உள்ளே செல்ல அனுமதிக்க மறுத்தனர். இதனால் ஆத்திரமடைந்த நேரு எம்.எல்.ஏ கேட் மீது ஏறி குதித்து கம்பன் கலையரங்கில் உள்ளே சென்றார். அவருடன் அவரது ஆதரவாளர்களும் கேட் ஏறி குதித்து சென்றனர்.

    அங்கு உலக சுற்றுச்சூழல் தின விழா நடந்து கொண்டிருந்த போது விழா மேடைக்கு கீழே நின்று தலைமை செயலாளர் மற்றும் அதிகாரிகளை பார்த்து நேரு எம்.எல்.ஏ. சரமாரியாக குற்றம்சாட்டி பேசினார்.

    மேடையில் முதலமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் ஏம்பலம் செல்வம், தலைமை செயலாளர் ராஜீவ் வர்மா ஆகியோரும் இருந்தனர்.

    இதனால் அரசு விழா சில நிமிடங்கள் தடைபட்டது. இதன்பின்னர் நேரு எம்.எல்.ஏ. விழாவில் முதலமைச்சர் பேச்சுக்கு இடையூறு செய்ய விரும்பவில்லை என கூறி வெளியேறினார்.

    இந்த நிலையில் கம்பன் கலையரங்கிற்கு நேரு எம்.எல்.ஏ. வரும் தகவல் கிடைத்தும், சரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கையை காவல்துறை எடுக்கவில்லை என புகார் எழுந்தது.

    அதோடு அரசு விழாவுக்கு வந்த எம்.எல்.ஏ.வை தடுப்பதா? என்ற கேள்வியும் எழுந்தது. அவரை மட்டும் அனுமதித்து, ஆதரவாளர்களை தடுத்திருக்கலாம் என கருத்து தெரிவிக்கப்பட்டது.

    இந்த நிலையில் கம்பன் கலையரங்கில் அரசு விழாவில் பாதுகாப்பு குறைபாடு புகாரை தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணியிலிருந்த ஓதியஞ்சாலை இன்ஸ்பெக்டர் கண்ணன் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார். சரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததால் அவர் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.

    உருளையன்பேட்டை இன்ஸ்பெக்டர் பாபுஜி, ஓதியஞ்சாலை போலீஸ் நிலைய பணிகளை கூடுதலாக கவனிப்பார் என காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.

    மேலும், அரசு விழாவில் கேட் ஏறி குதித்து உள்ளே சென்று வாக்குவாதம் செய்த சுயேட்சை எம்.எல்.ஏ நேரு மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    • குற்றவாளிகள் யார் என்பதை கண்டறிய அந்த பகுதி மக்களிடம் விசாரணை நடத்தினார்கள்.
    • தனிப்படை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்கள்.

    ஆவடி அருகே உள்ள பட்டாபிராம் ஆயில் சேரி பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் ரெட்டைமலை சீனிவாசன் (வயது 27). அவரது தம்பி ஸ்டாலின் (24). ரெட்டைமலை சீனிவாசன் மீது பூந்தமல்லி, ஆவடி. பட்டாபிராம் ஆகிய போலீஸ் நிலையங்களில் 10-க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகளும், ஸ்டாலின் மீது பல அடிதடி வழக்குகளும் உள்ளதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் நேற்று மாலையில் இருவரும் மது போதையில் இருந்துள்ளனர். அப்போது அந்த வழியாக வாகனங்களில் சென்றவர்களிடம் தகராறில் ஈடுபட்டு உள்ளனர்.

    இதனால் ரெட்டைமலை சீனிவாசன், ஸ்டாலின் ஆகியோருக்கும், அப்பகுதியை சேர்ந்த வாலிபர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. பின்னர் அந்த வாலிபர்கள் அங்கிருந்து சென்று விட்டனர்.

    சிறிது நேரத்தில் அந்த வாலிபர்கள் தங்கள் நண்பர்களை அழைத்துக் கொண்டு அங்கு வந்தனர். 7 பேர் கொண்ட அந்த கும்பல், அண்ணன் - தம்பி இருவரையும் பழிவாங்கும் நோக்கத்தில் கத்தி, அரிவாள் போன்ற ஆயுதங்களுடன் ஓட ஓட விரட்டி வெட்டினார்கள்.

    முதலில் ரெட்டைமலை சீனிவாசனை வெட்டிய கும்பல், தொடர்ந்து ஸ்டாலினையும் கண்ணிமைக்கும் நேரத்தில் வெட்டி விட்டு தப்பி ஓடிவிட்டனர். இதில் சம்பவ இடத்திலேயே அண்ணன் - தம்பி இருவரும் உயிரிழந்தனர்.

    இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை விரைந்து பிடிக்க ஆவடி துணை போலீஸ் கமிஷனர் ஐமன் ஜமால் தலைமையில், பட்டாபிராம் உதவி போலீஸ் கமிஷனர் சுரேஷ்குமார் மேற்பார்வையில் தனிப்படை அமைத்து ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கர் உத்தரவிட்டுள்ளார்.

    இதையடுத்து தனிப்படை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்கள். குற்றவாளிகள் யார் என்பதை கண்டறிய அந்த பகுதி மக்களிடம் விசாரணை நடத்தினார்கள். குடிபோதையில் தகராறு செய்ததால் தான் அண்ணன் - தம்பி இருவரையும் தீர்த்து கட்டினார்களா அல்லது வேறு ஏதேனும் காரணமாக கொலை நடந்ததா என்று தீவிரமாக துப்பு துலக்கி வருகிறார்கள்.

    மேலும் அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களில் கொலையாளிகள் உருவம் பதிந்துள்ளதா என்பதையும் ஆய்வு செய்து வருகிறார்கள். தப்பி சென்ற குற்றவாளிகள் 7 பேரையும் பிடிக்க போலீசார் பல இடங்களுக்கும் சென்று தேடுதல் வேட்டையில் ஈடு பட்டுள்ளனர்.

    இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக பட்டாபிராம் சட்டம் ஓழுங்கு ஆய்வாளர் ஜெகநாதன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளது.

    பட்டாபிராம் சட்டம்- ஒழுங்கு ஆய்வாளர் ஜெகநாதன் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

    பட்டாபிராம் காவல் ஆய்வாளராக, திருவேற்காடு காவல் ஆய்வாளர் கிருஷ்ணா விஜய ராஜ் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

    ×