search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "double murder case"

    • 15 பேர் கொண்ட கும்பல் இருவரையும் வெட்டி படுகொலை செய்தது.
    • கொலை வழக்கில் ஈடுபட்டவர்களை மேலும் சிலரை ஓசூர் டவுன் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பிஸ்மில்லா நகரை சேர்ந்தவர் பர்கத் (வயது31).

    அதேபோல ஓசூர் பழைய வசந்த நகர் பகுதியை சேர்ந்தவர் பொன்வண்ணன் என்ற சிவா (வயது.27). இவர்கள் தமிழக வாழ்வுரிமை கட்சியில் முன்னாள் நிர்வாகிகளாக இருந்தனர்.

    இந்நிலையில் கடந்த 19-ந் தேதி நள்ளிரவில் அதே பகுதியைச் சேர்ந்த பக்கா பிரகாஷ் என்பவரை சேலம் மத்திய சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே எடுத்து வந்து ஓசூருக்கு அழைத்து வந்தனர். அப்போது அவர்கள் 3பேரும் பார்வதி நகர் என்ற இடத்தில் வந்தபோது பர்கத் மற்றும் சிவா ஆகிய 2 பேரை 15 பேர் கொண்ட கும்பல் இருவரையும் வெட்டி படுகொலை செய்தது. இதில் இவர்களது நண்பர் பக்கா பிரகாஷ் என்பவர் தப்பித்து ஓடியதில் உயிர் தப்பினார்.

    இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த ஓசூர் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவகுமார் தலைமையில் போலீசார் கொலையாளிகள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்நிலையில், இந்த சம்பவத்தின்போது தப்பித்த பக்கா பிரகாஷ் என்பவர் ஓசூர் நகர காவல் நிலையத்தில் அளித்த புகாரில்

    முன்விரோதம் காரணமாக ஓசூர் பார்வதி நகரை சேர்ந்த நாகராஜ், ராம்நகரை சேர்ந்த நவாஸ், சாந்தி நகரை சேர்ந்த ராதாகிருஷ்ணன், கனிஞ்சூர் கிராமத்தை சேர்ந்த முனிராஜ், ஓசூர் பார்வதி நகரை சேர்ந்த முனியப்பா மற்றும் கூச்சன் உள்ளிட்ட 15 பேர் தங்களை கொலை செய்ய வந்ததும் இதில் தான் தப்பியதாகவும், இவர்கள் தான் தன்னுடைய நண்பர்கள் பர்கத் மற்றும் பொன்வண்ணன் ஆகியோரை கொலை செய்ததாகவும் புகாரில் தெரிவித்திருந்தார்.

    அதன் அடிப்படையில் 3 தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை நடத்தியதில் கன்ஞ்சூர் கிராமத்தை சேர்ந்த முனிராஜ் (49) என்பவரை கைது செய்தனர். அதனை தொடர்ந்து அவரை நீதி மன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    இந்த கொலை வழக்கில் தொடர்புடைய 10-க்கும் மேற்பட்ட கொலையாளிகளை போலீசார் தேடி வந்த நிலையில் நேற்று மதியம் ஓசூர் ராம் நகர் பகுதியைச் சேர்ந்த நவாஸ் (37), சீதாராம்மேடு பகுதியைச் சார்ந்த ஹமித் (24) ஆகிய 2 பேரும் பாலக்கோடு ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.

    2 பேருக்கும் 15 நாள் சிறை அடைப்பு காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

    அதனை தொடர்ந்து போலீசார் அவர்களை தர்மபுரி கிளை சிறையில் அடைத்தனர். பாலக்கோட்டில் சரண அடைந்த 2 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க ஓசூர் டவுன் போலீசார் முடிவு செய்துள்ளனர்.

    இந்நிலையில இரட்டைக் கொலையில் தொடர்புடைய ஓசூர் பெரியார் நகரை சேர்ந்த முபாரக்(27), சானசந்திரம் ஆரிப் (22) மற்றும் ஓசூர் சீதாராம் மேடு பகுதியை சேர்ந்த நிஜாம் (26) ஆகிய 3 பேரை ஓசூர் டவுன் போலீசார் கைது செய்தனர். கைதான 3 பேரையும் நேற்று இரவு ஓசூருக்கு போலீசார் அழைத்து வந்தனர். அவர்களிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த வழக்கில் இதுவரை ஓசூரில் கைதான முனிராஜ், முபாரக், ஆரிப் நிஜாம் மற்றும் கோர்ட்டில் சரணடைந்த நவாஸ், ஹமித் ஆகிய 5 பேரும் சிக்கி உள்ளனர். இந்த கொலை வழக்கில் ஈடுபட்டவர்களை மேலும் சிலரை ஓசூர் டவுன் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சம்பவம் குறித்து சி.பி.ஐ. விசாரித்து இரட்டை கொலை வழக்குப் பதிவு செய்தது.
    • சிறையில் உள்ள சப்-இன்ஸ்பெக்டர் ரகு கணேஷ் தனக்கு ஜாமீன் கேட்டு மீண்டும் மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

    மதுரை:

    தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த வியாபாரி ஜெயராஜ் அவ ரது மகன் பென்னிக்ஸ் ஆகியோரை கடந்த 2020 ஆம் ஆண்டு விசாரணைக்காக போலீசார் அழைத்துச் சென்றனர்.

    போலீஸ் நிலையத்தில் இருவரும் கடுமையாக தாக்கப்பட்டுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த அவர் கள் இருவரும் பரிதாபமாக அடுத்தடுத்து இறந்தனர்.

    இந்த சம்பவம் குறித்து சி.பி.ஐ. விசாரித்து இரட்டை கொலை வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கில் சாத்தான்குளம் போலீஸ் நிலையத்தின் அப்போதைய இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன் உள்பட 9 போலீசார் கைதானார்கள். இவர்கள் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இந்த இரட்டை கொலை வழக்கு மதுரை மாவட்ட கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வருகிறது.

    ஏற்கனவே கைதான போலீசார் தங்களுக்கு ஜாமீன் கேட்டு மாவட்ட கோர்ட்டு, ஐகோர்ட்டு, சுப்ரீம் கோர்ட்டுகளில் தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இந்நிலையில் சிறையில் உள்ள சப்-இன்ஸ்பெக்டர் ரகு கணேஷ் தனக்கு ஜாமீன் கேட்டு மீண்டும் மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

    இந்த மனு நீதிபதி முரளி சங்கர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப் போது சி.பி.ஐ. வக்கீல் மற்றும் இறந்த ஜெயராஜின் மனைவி செல்வராணி தரப்பு வக்கீல் ஆகியோர் ஆஜராகி, இந்த வழக்கை விசாரிக்கும் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் சமீபத்தில் தான் நீதிபதி நியமனம் செய்யப்பட்டு உள்ளார். எனவே இன்னும் 3 மாதத்தில் இந்த வழக்கு விசாரணை முடிந்து விடும்.

    சி.சி.டி.வி. காட்சிகளுக்காக ஒரு சாட்சியை சேர்த்து உள்ளார். எனவே இந்த ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என வாதாடினர். இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, தீர்ப்புக்காக இந்த வழக்கை தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.

    • கடந்த 11-ந் தேதி மேக்கரை-அணைக்கட்டு பகுதியில் காசிர் அலி, ஜைத்தூன் பீவி ஆகியோர் கொலை செய்யப்பட்டு கிடந்தனர்.
    • கஞ்சா விற்பனை தொடர்பான பிரச்சினையில் பேரனை கொன்ற பாட்டியையும் வாலிபர் கொலை செய்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

    செங்கோட்டை:

    தென்காசி மாவட்டம் செங்கோட்டை தாலுகா அச்சன்புதூர் அருகே மேக்கரை கிராமத்தை சேர்ந்தவர் அப்துல் கனி. இவரது மனைவி ஜைத்தூன் பீவி (வயது 70).

    இவர்களுடைய மூத்த மகன் முகமது கனியின் மகன் காசிர் அலி (26). கூலி தொழிலாளி. இந்நிலையில் கடந்த 11-ந் தேதி மேக்கரை-அணைக்கட்டு பகுதியில் காசிர் அலி, ஜைத்தூன் பீவி ஆகியோர் கொலை செய்யப்பட்டு கிடந்தனர்.

    கொலை கும்பலை பிடிக்க துணை போலீஸ் சூப்பிரண்டு மணிமாறன் உத்தரவின்பேரில் இன்ஸ்பெக்டர்கள் வேல்கனி, ஷியாம் சுந்தர் ஆகியோர் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு அவர்கள் தீவிரமாக தேடி வந்தனர்.

    இந்நிலையில் கொலை தொடர்பாக அப்பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். அதில் கஞ்சா விற்பனை தொடர்பாக காசிர் அலியை அடித்துக் கொன்றது தெரியவந்தது.

    அதனை அவரது பாட்டி ஜைத்தூன் பீவி பார்த்து விட்டதால் வெளியே சொல்லி விடுவார் என நினைத்து அவரையும் அந்த வாலிபர் கொலை செய்தது தெரியவந்தது. அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    காதல் ஜோடி கொலை வழக்கில் கொலையாளி திவாகரின் தூக்குத் தண்டனையை உச்ச நீதிமன்றம் நிறுத்திவைத்துள்ளது. #SuruliMalaiMurder #SC
    புதுடெல்லி:

    தேனி அருகே சுருளிமலையில் கடந்த 2011ம் ஆண்டு கஸ்தூரி மற்றும் அவரது காதலன் எழில் முதல்வன் ஆகியோர் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டனர். இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட திவாகர் மீது தேனி மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த தேனி மாவட்ட நீதிமன்றம், கடந்த ஆண்டு மார்ச் மாதம் திவாகருக்கு தூக்குத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இந்த தண்டனையை உயர்நீதிமன்றமும் உறுதி செய்தது.



    இதையடுத்து திவாகர் தரப்பில் தண்டனையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரணைக்கு ஏற்ற உச்ச நீதிமன்றம், திவாகரின் தூக்குத் தண்டனையை நிறுத்தி வைத்துள்ளது. அத்துடன் திவாகரின் மேல்முறையீட்டு மனு மீது தொடர்ந்து விசாரணை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    திவாகருக்கு வரும் 22ம் தேதி (திங்கட்கிழமை) தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட இருந்தது குறிப்பிடத்தக்கது. #SuruliMalaiMurder #SC

    6 வருடங்களுக்கு பிறகு இரட்டை கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
    திருமானூர்:

    அரியலூர் மாவட்டம், திருமானூர் அருகே உள்ள க.மேட்டுத்தெருவை சேர்ந்தவர் முருகானந்தம் (வயது 33). இவருக்கும், திருமழபாடியை சேர்ந்த தீபக்குமார் (30) என்பவருக்கும் இருந்த முன் விரோத தகராறில், கடந்த 2012-ம் ஆண்டு தீபக்குமார் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து முருகானந்தத்தையும், அவரது நண்பர் க.மேட்டுத்தெருவை சேர்ந்த மைனர் மகன் ஸ்டாலின் (23) என்பவரையும் அடித்து கொலை செய்து திருமழபாடி கொள்ளிடம் ஆற்றில் புதைத்து விட்டனர்.

    இதையடுத்து திருமானூர் போலீசார் முருகானந்தம், ஸ்டாலின் உடலை தோண்டியெடுத்து அங்கேயே பிரேத பரிசோதனை செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த இரட்டை கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை போலீசார் கைது செய்தனர். ஆனால், முக்கிய குற்றவாளியான திருமழபாடியை சேர்ந்த தீபக்குமார் தலைமறைவானார். இந்நிலையில், தீபக்குமார் திருமழபாடியில் இருப்பதாக நேற்று முன்தினம் இரவு கிடைத்த தகவலையடுத்து, திருமழபாடிக்கு சென்ற திருமானூர் போலீசார் தீபக்குமாரை கைது செய்து, அரியலூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். 
    ×