search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஓசூர் இரட்டை கொலை வழக்கில் மேலும் 3 பேர் கைது சரணடைந்த 2 பேர் தருமபுரி சிறையில் அடைப்பு
    X

    ஓசூர் இரட்டை கொலை வழக்கில் மேலும் 3 பேர் கைது சரணடைந்த 2 பேர் தருமபுரி சிறையில் அடைப்பு

    • 15 பேர் கொண்ட கும்பல் இருவரையும் வெட்டி படுகொலை செய்தது.
    • கொலை வழக்கில் ஈடுபட்டவர்களை மேலும் சிலரை ஓசூர் டவுன் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பிஸ்மில்லா நகரை சேர்ந்தவர் பர்கத் (வயது31).

    அதேபோல ஓசூர் பழைய வசந்த நகர் பகுதியை சேர்ந்தவர் பொன்வண்ணன் என்ற சிவா (வயது.27). இவர்கள் தமிழக வாழ்வுரிமை கட்சியில் முன்னாள் நிர்வாகிகளாக இருந்தனர்.

    இந்நிலையில் கடந்த 19-ந் தேதி நள்ளிரவில் அதே பகுதியைச் சேர்ந்த பக்கா பிரகாஷ் என்பவரை சேலம் மத்திய சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே எடுத்து வந்து ஓசூருக்கு அழைத்து வந்தனர். அப்போது அவர்கள் 3பேரும் பார்வதி நகர் என்ற இடத்தில் வந்தபோது பர்கத் மற்றும் சிவா ஆகிய 2 பேரை 15 பேர் கொண்ட கும்பல் இருவரையும் வெட்டி படுகொலை செய்தது. இதில் இவர்களது நண்பர் பக்கா பிரகாஷ் என்பவர் தப்பித்து ஓடியதில் உயிர் தப்பினார்.

    இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த ஓசூர் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவகுமார் தலைமையில் போலீசார் கொலையாளிகள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்நிலையில், இந்த சம்பவத்தின்போது தப்பித்த பக்கா பிரகாஷ் என்பவர் ஓசூர் நகர காவல் நிலையத்தில் அளித்த புகாரில்

    முன்விரோதம் காரணமாக ஓசூர் பார்வதி நகரை சேர்ந்த நாகராஜ், ராம்நகரை சேர்ந்த நவாஸ், சாந்தி நகரை சேர்ந்த ராதாகிருஷ்ணன், கனிஞ்சூர் கிராமத்தை சேர்ந்த முனிராஜ், ஓசூர் பார்வதி நகரை சேர்ந்த முனியப்பா மற்றும் கூச்சன் உள்ளிட்ட 15 பேர் தங்களை கொலை செய்ய வந்ததும் இதில் தான் தப்பியதாகவும், இவர்கள் தான் தன்னுடைய நண்பர்கள் பர்கத் மற்றும் பொன்வண்ணன் ஆகியோரை கொலை செய்ததாகவும் புகாரில் தெரிவித்திருந்தார்.

    அதன் அடிப்படையில் 3 தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை நடத்தியதில் கன்ஞ்சூர் கிராமத்தை சேர்ந்த முனிராஜ் (49) என்பவரை கைது செய்தனர். அதனை தொடர்ந்து அவரை நீதி மன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    இந்த கொலை வழக்கில் தொடர்புடைய 10-க்கும் மேற்பட்ட கொலையாளிகளை போலீசார் தேடி வந்த நிலையில் நேற்று மதியம் ஓசூர் ராம் நகர் பகுதியைச் சேர்ந்த நவாஸ் (37), சீதாராம்மேடு பகுதியைச் சார்ந்த ஹமித் (24) ஆகிய 2 பேரும் பாலக்கோடு ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.

    2 பேருக்கும் 15 நாள் சிறை அடைப்பு காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

    அதனை தொடர்ந்து போலீசார் அவர்களை தர்மபுரி கிளை சிறையில் அடைத்தனர். பாலக்கோட்டில் சரண அடைந்த 2 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க ஓசூர் டவுன் போலீசார் முடிவு செய்துள்ளனர்.

    இந்நிலையில இரட்டைக் கொலையில் தொடர்புடைய ஓசூர் பெரியார் நகரை சேர்ந்த முபாரக்(27), சானசந்திரம் ஆரிப் (22) மற்றும் ஓசூர் சீதாராம் மேடு பகுதியை சேர்ந்த நிஜாம் (26) ஆகிய 3 பேரை ஓசூர் டவுன் போலீசார் கைது செய்தனர். கைதான 3 பேரையும் நேற்று இரவு ஓசூருக்கு போலீசார் அழைத்து வந்தனர். அவர்களிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த வழக்கில் இதுவரை ஓசூரில் கைதான முனிராஜ், முபாரக், ஆரிப் நிஜாம் மற்றும் கோர்ட்டில் சரணடைந்த நவாஸ், ஹமித் ஆகிய 5 பேரும் சிக்கி உள்ளனர். இந்த கொலை வழக்கில் ஈடுபட்டவர்களை மேலும் சிலரை ஓசூர் டவுன் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    Next Story
    ×