search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "guilty"

    • சி.பி.சி.ஐ.டி. போலீசார் நடவடிக்கை
    • நீரழிவு நோயால் 2 நாட்கள் முன்பு அவரின் இடதுகால் சுண்டுவிரல் வெட்டி அகற்றப்பட்டது.

    புதுச்சேரி:

    புதுவை காமாட்சியம்மன் கோவில் சொந்தமான நிலம் ரெயின்போ நகரில் உள்ளது. இந்த நிலத்தை போலி ஆவணம் தயாரித்து விற்பனை செய்ததாக புகார் எழுந்தது. புகாரின் பேரில் சி.பி.சி.ஐ.டி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். விசாரணைக்கு பின் போலி ஆவணம் தயாரித்து விற்ற வழக்கில் 13 பேரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்தனர்.

    போலி ஆவணம் பதிவு செய்த சார்பதிவாளர் சிவசாமி கடந்த 20-ந் தேதி கைது செய்யப்பட்டு காலாப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவர் ஜாமீன்கோரி புதுவை தலைமை குற்றவியல் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

    சிறையிலிருந்த சிவசாமிக்கு கடந்த 28-ந் தேதி வாந்தி, மயக்கம் ஏற்பட்டு அரசு ஆஸ்பத்திரி யில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். நீரழிவு நோயால் 2 நாட்கள் முன்பு அவரின் இடதுகால் சுண்டுவிரல் வெட்டி அகற்றப்பட்டது. இதையடுத்து சிவசாமி சார்பில் ஆஜரான வக்கீல் சம்பத், தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற ஜாமீன் கோரினார்.

    அரசு தரப்பில் வக்கீல் லோகேஸ்வரன் ஆஜரானார். மருத்துவ கண்காணிபபாளர் அறிக்கை, சிகிச்சை ஆவணங்கள் சமர்பிக்கப்பட்டது. இதைடுத்து நீதிபதி மோகன், சிவசாமி மேல் சிகிச்சை பெற வரும் 18-ந் தேதி வரை இடைக்கால ஜாமீன் வழங்கினார். அன்று சிவசாமி கோர்ட்டில் ஆஜராக வேண்டும்.

    மருத்துவ சிகிச்சை தொடர்ந்தால் அதற்கான ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டார்.இந்த வழக்கில் முன்ஜாமீன்கோரி அப்போதைய மாவட்ட பதிவாளரும், தற்போதைய நில அளவைத்துறை இயக்குனருமான ரமேஷ், அப்போதைய தாசில்தாரும், தற்போது மீன்வளத்துறை இயக்குனரமாக உள்ள பாலாஜி ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தனர்.

    இந்த மனுக்கள் நிலுவையில் உள்ளது. இந்த அதிகாரிகள் நீண்ட விடுப்பில் உள்ளனர்.

    இந்த நிலையில் அதிகாரிகள் ரமேஷ், பாலாஜி ஆகியோரை குற்றவாளிகளாக சி.பி.சி.ஐ.டி போலீசார் வழக்கில் சேர்த்துள்ளனர். இதுதொடர்பான ஆவணங்களை கோர்ட்டில் தாக்கல் செய்துள்ளனர். இதனால் விரைவில் அதிகாரிகள் 2 பேரும் கைது செய்யப்படுவார்கள் என தெரிகிறது.

    6 வருடங்களுக்கு பிறகு இரட்டை கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
    திருமானூர்:

    அரியலூர் மாவட்டம், திருமானூர் அருகே உள்ள க.மேட்டுத்தெருவை சேர்ந்தவர் முருகானந்தம் (வயது 33). இவருக்கும், திருமழபாடியை சேர்ந்த தீபக்குமார் (30) என்பவருக்கும் இருந்த முன் விரோத தகராறில், கடந்த 2012-ம் ஆண்டு தீபக்குமார் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து முருகானந்தத்தையும், அவரது நண்பர் க.மேட்டுத்தெருவை சேர்ந்த மைனர் மகன் ஸ்டாலின் (23) என்பவரையும் அடித்து கொலை செய்து திருமழபாடி கொள்ளிடம் ஆற்றில் புதைத்து விட்டனர்.

    இதையடுத்து திருமானூர் போலீசார் முருகானந்தம், ஸ்டாலின் உடலை தோண்டியெடுத்து அங்கேயே பிரேத பரிசோதனை செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த இரட்டை கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை போலீசார் கைது செய்தனர். ஆனால், முக்கிய குற்றவாளியான திருமழபாடியை சேர்ந்த தீபக்குமார் தலைமறைவானார். இந்நிலையில், தீபக்குமார் திருமழபாடியில் இருப்பதாக நேற்று முன்தினம் இரவு கிடைத்த தகவலையடுத்து, திருமழபாடிக்கு சென்ற திருமானூர் போலீசார் தீபக்குமாரை கைது செய்து, அரியலூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். 
    மத்திய பிரதேசத்தில் ஈவுஇரக்கமின்றி 9 வயது சிறுமியை கற்பழித்த குற்றவாளிக்கு புதிய சட்டத்தின் கீழ் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.
    போபால்:

    மத்திய பிரதேச மாநிலம் சாகர் மாவட்டத்தில் கடந்த மே 21-ந்தேதி 9 வயது சிறுமி கற்பழிக்கப்பட்டாள். அது தொடர்பாக வாலிபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

    அவர் மீது கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த கோர்ட்டு அவருக்கு தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

    கற்பழிப்பு குற்றவாளிக்கு 7 ஆண்டுகள் வரை ஜெயில் தண்டனை விதிக்க வகை செய்யும் சட்டம் நடைமுறையில் உள்ளது.

    ஆனால் மத்திய பிரதேசத்தில் 12 வயதுக்குட்பட்ட சிறுமிகளை கற்பழிக்கும் நபருக்கு தூக்கு தண்டனை விதிக்கும் வகையில் புதிய சட்டம் இயற்றப்பட்டது. கடந்த ஆண்டு டிசம்பரில் சட்டசபையில் இந்த சட்ட வரைவு கொண்டு வரப்பட்டு ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

    ஏப்ரல் 21-ந்தேதி ஜனாதிபதி ஒப்புதல் பெற்ற பிறகு இந்த சட்டம் நடைமுறைக்கு வந்தது. புதிய சட்டத்தின் கீழ் சிறுமியை கற்பழித்த நபருக்கு முதன் முறையாக தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பு கூறப்பட்டுள்ளது. இந்த தகவலை சாகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சத்யேந்திர சுக்லா தெரிவித்தார்.

    இது குறித்து முதல்-மந்திரி சிவ்ராஜ்சிங் சவுகான் கூறும் போது “கற்பழிப்பு குற்றவாளிகளுக்கு இதன் மூலம் கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் மற்றும் சிறுமிகளை கற்பழிப்பவர்கள் ஈவுஇரக்கமின்றி தூக்கிலிடப்படுவார்கள்” என்றார்.
    ×