என் மலர்
நீங்கள் தேடியது "IPS officers"
- சென்னை மாநகர போக்குவரத்துப்பிரிவு வடக்கு மண்டல இணை ஆணையராக சோனல் சந்திரா நியமனம்.
- சென்னை போக்குவரத்து துணை ஆணையராக சுஹாசினி நியமனம்.
ஐ.பி.எஸ். அதிகாரிகள் 9 பேரை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, அனிஷா ஹுசைன், லட்சுமி, சோனல் சந்திரா, ஜவஹர், சுஹாசினி, திவ்யா, சஜிதா உள்ளிட்ட 9 ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
* சென்னை லஞ்ச ஒழிப்புத்துறை ஐ.ஜி. ஆக லட்சுமி, சிலை திருட்டு தடுப்புப்பிரிவு ஐ.ஜி. ஆக அனிஷா ஹுசைன் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
* சென்னை மாநகர போக்குவரத்துப்பிரிவு வடக்கு மண்டல இணை ஆணையராக சோனல் சந்திரா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
* சென்னை மாநகர சிபிசிஐடி கண்காணிப்பாளராக ஜவஹர், சென்னை போக்குவரத்து துணை ஆணையராக சுஹாசினி நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
* கோவை காவல் தலைமையக துணை ஆணையராக திவ்யா, பதவி உயர்வு பெற்ற சஜிதா சென்னை சிபிசிஐடி எஸ்.பி.யாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
* சிபிசிஐடி-யில் நிர்வாகம் மற்றும் ஒருங்கிணைப்புப்பிரிவு புதிதாக உருவாக்கப்பட்டு அதன் எஸ்.பி.யாக சஜிதா ஐ.பி.எஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

- சென்னையில் பயங்கரவாத தடுப்புப் பிரிவு எஸ்பியாக அருளரசு நியமிக்கப்பட்டுள்ளார்.
- சென்னை கோயம்பேடு துணை ஆணையராக சுஜித்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் 33 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, சிவகங்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக சிவபிரசாத் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.சிவகங்கை மாவட்ட எஸ்.பி. ஆஷிஷ் ராவத் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில் புதிய எஸ்.பி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக விவேகானந்தா சுக்லா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக ஜோஸ் தங்கையா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
கொளத்தூர் துணை ஆணையராக இருந்து தற்காலிக விடுப்பில் உள்ள பாண்டியராஜன் டிபிஎஸ் பட்டாலியன் எஸ்.பி.ஆக நியமனம் செய்யப்பட்டுள்ளார். திருமலா பால் மேலாளர் மரண விவகாரத்தில் சர்ச்சைக்கு ஆளானவர் பாண்டியராஜன்.
சென்னையில் பயங்கரவாத தடுப்புப் பிரிவு எஸ்பியாக அருளரசு நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை கோயம்பேடு துணை ஆணையராக சுஜித்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
நாமக்கல் எஸ்பியாக விமலா மற்றும் வேலூர் மாவட்ட எஸ்பியாக மயில்வாகனன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை நுண்ணறிவுப்பிரிவு இணை ஆணையராக இருந்த தர்மராஜன் வேலூருக்கு மாற்றம் செய்யப்பட்டார்.
மகேந்திர குமார் ரத்தோட் காவல்துறை தலைமையக ஐஜியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக விஸ்வேஸ், ராணிப்பேட்டை எஸ்பியாக அய்மன் ஜமால் நியமிக்கப்பட்டுள்ளார்.
சேலம் காவல் ஆணையராக இருந்த பிரவீன் குமார் அபிநபு தமிழக காவல்துறை பொதுப்பிரிவு ஐஜி-ஆக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
காத்திருப்போர் பட்டியலில் இருந்த அனில்குமார் கிரி, சேலம் காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
வேலூர் சரக டிஐஜியாக இருந்த தேவராணி காஞ்சிபுரம் சரக டிஐஜியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழக காவல்துறை பொதுப்பிரிவு ஐஜியாக ருஇந்த சாமுண்டீஸ்வரி சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு ஐஜியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
- நரேந்திரன் நாயர் ஐபிஎஸ், காவல்துறை விரிவாக்க பிரிவு ஐஜியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
- சென்னை வடக்கு மண்டல கூடுதல் காவல் ஆணையராக பிரவேஷ்குமார் ஐபிஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் மூன்று ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
அதன்படி, காவல்துறை விரிவாக்கம் ஐஜியாக இருந்த லட்சுமி ஐபிஎஸ் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை வடக்கு கூடுதல் ஆணையர் நரேந்திரன் நாயர் ஐபிஎஸ், காவல்துறை விரிவாக்க பிரிவு ஐஜியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை வடக்கு மண்டல கூடுதல் காவல் ஆணையராக பிரவேஷ்குமார் ஐபிஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

- சென்னை மாநகர சட்டம் ஒழுங்கு (தெற்கு) இணை ஆணையராக தர்மராஜன் நியமனம்.
- கோவை சிவில் சப்ளை சி.ஐ.டி பிரிவின் எஸ்.பி. ஆக சந்திரசேகரன் நியமனம்.
சென்னை:
ஏ.டி.ஜி.பி. கல்பனா நாயக், சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தின் உறுப்பினர் செயலராக நியமனம்.
சிறைத்துறை ஏ.டி.ஜி.பி. ஆக மகேஷ்வர் தயாள், தமிழ்நாடு செய்தித்தாள் நிறுவன தலைமை கண்காணிப்பு அதிகாரியாக அமரேஷ் புஜாரி நியமனம்.
TANGEDCO நிறுவனத்தின் ஐ.ஜி. ஆக பிரமோத் குமார், மகளிருக்கு எதிரான குற்றப்பிரிவின் ஐ.ஜி.ஆக தமிழ்சந்திரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை மாநகர சட்டம் ஒழுங்கு (தெற்கு) இணை ஆணையராக தர்மராஜன், கோவை சிவில் சப்ளை சி.ஐ.டி பிரிவின் எஸ்.பி. ஆக சந்திரசேகரன், மதுரை மாநகர துணை ஆணையராக பாலாஜி நியமனம்.
திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி. ஆக பிரதீப், சென்னை மாநகர போக்குவரத்து துணை ஆணையராக பாஸ்கரன், கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்.பி. ஆக சமய் சிங் மீனா நியமிக்கப்பட்டுள்ளார்.
- 7 பேர் டி.ஐ.ஜி. பதவியில் இருந்து ஐ.ஜி.யாக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.
- 10 பேர் போலீஸ் சூப்பிரண்டு பதவியில் இருந்து டி.ஐ.ஜி.யாக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.
சென்னை:
1999-ம் ஆண்டு பிரிவு ஐ.பி.எஸ். அதிகாரிகள் ஆனந்த குமார் சோமானி, தமிழ்சந்திரன் ஆகிய 2 பேரும் ஐ.ஜி. பதவியில் இருந்து கூடுதல் டி.ஜி.பி.யாக பதவி உயர்வு பெற்றுள்ளனர். ஐ.பி.எஸ். அதிகாரிகள் ஜெயஸ்ரீ (2004 பிரிவு), சாமுண்டீஸ்வரி, லட்சுமி, ராஜேஸ்வரி, ராஜேந்திரன், முத்துசாமி, மயில்வாகணன் (2006 பிரிவு) ஆகிய 7 பேர் டி.ஐ.ஜி. பதவியில் இருந்து ஐ.ஜி.யாக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.
ஐ.பி.எஸ். அதிகாரிகள் வெண்மதி (2009 பிரிவு), அரவிந்தன், விக்ரமன், சரோஜ் குமார் தாகூர், மகேஷ்குமார், தேவராணி, உமா, திருநாவுக்கரசு, ஜெயந்தி, ராமர் (2010 பிரிவு) ஆகிய 10 பேரும் போலீஸ் சூப்பிரண்டு பதவியில் இருந்து டி.ஐ.ஜி.யாக பதவி உயர்வு பெற்றுள்ளனர். இதில் திருநாவுக்கரசு முதல்-அமைச்சரின் பாதுகாப்பு பிரிவு போலீஸ் சூப்பிரண்டாக உள்ளார்.
இதற்கான உத்தரவை தமிழ்நாடு அரசின் உள்துறை முதன்மை செயலாளர் அமுதா பிறப்பித்தார்.
- தமிழகத்தில் 11 எஸ்.பி.க்கள் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
- திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி.யாக சீனிவாசபெருமாள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை:
தமிழகத்தில் 11 எஸ்.பி.க்கள் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
இதுதொடர்பாக தமிழக உள்துறை செயலாளர் அமுதா பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியுள்ளதாவது:
திருவள்ளூர் எஸ்.பி: சீனிவாசபெருமாள்
திருப்பூர் மாவட்ட எஸ்.பி.: அபிஷேக் குப்தா
தெற்கு மண்டல பொருளாதார குற்றப்பிரிவு எஸ்.பி.: பகோர்லா செபாஸ் கல்யாண்
சிஐடி பாதுகாப்பு பிரிவு எஸ்.பி: சக்திவேல்
சென்னை கொளத்தூர் துணை கமிஷனர்: பாண்டியராஜன்
தெற்கு சரக லஞ்ச மற்றும் ஊழல் தடுப்பு பிரிவு எஸ்.பி.: சாமிநாதன்
உளவுப்பிரிவு, தடை செய்யப்பட்ட குற்றங்கள் பிரிவு எஸ்.பி.: ஷியாமளா தேவி
வடக்கு சரக லஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு பிரிவு எஸ்.பி.: சரவணகுமார்
கோவை வடக்கு சட்டம் ஒழுங்கு துணை கமிஷனர்: ரோஹித் நாதன் ராஜகோபால்
திருப்பூர் வடக்கு சட்டம் ஒழுங்கு துணை கமிஷனர்: ராஜராஜன்
நெல்லை தலைமையிட துணை கமிஷனர்: அனிதா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
- சென்னை மாநகர சட்டம் ஒழுங்கு கூடுதல் ஆணையர்கள் இருவரும் பணியிட மாற்றம்.
- தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் மாற்றப்பட்டு, அப்பொறுப்புக்கு அபின் தினேஷ் மோதக் நியமனம்.
தமிழ்நாடு முழுவதும் 18 ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை மாநகர சட்டம் ஒழுங்கு கூடுதல் ஆணையர் (வடக்கு) அஸ்ரா கர்க் மாற்றப்பட்டு, அப்பொறுப்புக்கு நரேந்திரன் நாயர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை மாநகர சட்டம் ஒழுங்கு கூடுதல் ஆணையர் (தெற்கு) பிரேம் ஆனந்த் சின்ஹா மாற்றப்பட்டு, அப்பொறுப்புக்கு கண்ணன் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் மாற்றப்பட்டு, அப்பொறுப்புக்கு அபின் தினேஷ் மோதக் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
வடக்கு மண்டல ஐ.ஜி. நரேந்திரன் நாயர் மாற்றப்பட்டு அப்பொறுப்புக்கு அஸ்ரா கர்க் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
வடக்கு மண்டல ஐஜி நரேந்திர நாயர் சென்னை வடக்கு கூடுதல் ஆணையாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தெற்கு மண்டல ஐ.ஜி. கண்ணன் மாற்றப்பட்டு, அப்பொறுப்புக்கு பிரேம் ஆனந்த் சின்ஹா நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
தெற்கு மண்டல ஐ.ஜி. கண்ணன், சென்னை தெற்கு கூடுதல் ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ் மதுவிலக்கு அமலாக்குத்துறை கூடுதல் டிஜிபி ஆக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
அபின் தினேஷ் மோடக் தாம்பரம் காவல் ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
கள்ளக்குறிச்சி சம்பவத்திற்கு பிறகு காத்திருப்போர் பட்டியலில் இருந்த மகேஷ் குமார் அகர்வால், ஆயுதப்படை கூடுதல் டிஜிபி ஆக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சிபிசிஐடி கூடுதல் டிஜிபி வெங்கட்ராமன் நிர்வாக கூடுதல் டிஜிபி ஆக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
சிபிசிஐடி ஐஜி அன்பு, சிபிசிஐடி கூடுதல் டிஜிபிக்கான பொறுப்புகளையும் கவனிக்க உள்ளார்.
இதற்கு முன்னதாக ஆம்ஸ்ட்ராங் படுகொலை எதிரொலியாக சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் மாற்றப்பட்டு, புதிய காவல் ஆணையராக அருண் நியமிக்கப்பட்டார். சட்டம் ஒழுங்கு டிஜிபியாக டேவிட்சன் தேவாசீர்வாதம் நியமிக்கப்பட்டார்.சென்னை பெருநகர காவல் ஆணையர் பதவி பறிக்கப்பட்ட சந்தீப் ராய் ராத்தோர் காவலர் பயிற்சி பள்ளி இயக்குநராக நியமிக்கப்பட்டார்.
- 3 ஏடிஜிபிக்களுக்கு, டிஜிபிக்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
- ஏடிஜிபி வெங்கட்ராமனுக்கு நிர்வாகப் பிரிவு சிறப்பு டிஜிபியாக பதவி உயர்வு வழங்கப்பட்டது.
சென்னை:
தமிழகம் முழுவதும் 56 ஐ.பி.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 3 ஏடிஜிபிக்களுக்கு, டிஜிபிக்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி, ஏடிஜிபி மகேஷ்குமார் அகர்வாலுக்கு ஆயுதப்படை சிறப்பு டிஜிபியாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
ஏடிஜிபி வெங்கட்ராமனுக்கு நிர்வாகப் பிரிவு சிறப்பு டிஜிபியாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
தலைமையிட ஏடிஜிபி வினித் தேவ் வான்கடேவுக்கு டிஜிபியாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணைய ஏடிஜிபி கல்பனா நாயக், சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஏடிஜிபியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
திருச்சி எஸ்.பி. வருண்குமாருக்கு டிஐஜியாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்ட எஸ்.பி. அபிஷேக் குப்தா புதுக்கோட்டை எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.
விழுப்புரம் எஸ்.பி. தீபக் சிவாச் அரியலூர் எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.
புதுக்கோட்டை எஸ்.பி வந்திதா பாண்டேவுக்கு திண்டுக்கல் சரக டிஐஜியாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
சென்னை காவல் கிழக்கு இணை ஆணையர் சரோஜ் குமார் தலைமை இணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கர்நாடகா முதல்-மந்திரியாக பதவி ஏற்ற எடியூரப்பா, முதல்வர் அலுவலகத்துக்கு சென்று அமர்ந்ததும் கோப்புகளை பார்க்கத் தொடங்கினார்.
அடுத்த ஒரு மணி நேரத்தில் பல்வேறு துறை உயர் அதிகாரிகளை மாற்றி எடியூரப்பா அதிரடி உத்தரவுகளை பிறப்பித்தார்.
கர்நாடகா மாநில அரசின் தலைமை வக்கீலாக மதுசூதன் நாயக் இருந்தார். அவருக்கு பதில் நவதகி புதிய அரசு வக்கீலாக நியமிக்கப்படுவதாக எடியூரப்பா உத்தரவிட்டார்.
அதன் பிறகு அரசின் கூடுதல் தலைமை செயலாளரையும் எடியூரப்பா மாற்றினார். அதன்படி புதிய கூடுதல் தலைமை செயலாளராக லட்சுமி நாராயணன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவை தவிர சில முக்கிய துறைகளின் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளையும் எடியூரப்பா மாற்றினார். போலீஸ் உயர் அதிகாரிகளில் 5 ஐ.பி.எஸ். அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்த இடமாற்ற அறிவிப்புகள் கர்நாடகா மாநில அரசுத்துறை அதிகாரிகள் வட்டாரத்தில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் தலைவர்கள் எடியூரப்பாவின் உத்தரவுகளுக்கு எதிர்ப்பும் கண்டனமும் தெரிவித்துள்ளனர்.






