search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ips officers"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தமிழகத்தில் 11 எஸ்.பி.க்கள் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
    • திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி.யாக சீனிவாசபெருமாள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    சென்னை:

    தமிழகத்தில் 11 எஸ்.பி.க்கள் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

    இதுதொடர்பாக தமிழக உள்துறை செயலாளர் அமுதா பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியுள்ளதாவது:

    திருவள்ளூர் எஸ்.பி: சீனிவாசபெருமாள்

    திருப்பூர் மாவட்ட எஸ்.பி.: அபிஷேக் குப்தா

    தெற்கு மண்டல பொருளாதார குற்றப்பிரிவு எஸ்.பி.: பகோர்லா செபாஸ் கல்யாண்

    சிஐடி பாதுகாப்பு பிரிவு எஸ்.பி: சக்திவேல்

    சென்னை கொளத்தூர் துணை கமிஷனர்: பாண்டியராஜன்

    தெற்கு சரக லஞ்ச மற்றும் ஊழல் தடுப்பு பிரிவு எஸ்.பி.: சாமிநாதன்

    உளவுப்பிரிவு, தடை செய்யப்பட்ட குற்றங்கள் பிரிவு எஸ்.பி.: ஷியாமளா தேவி

    வடக்கு சரக லஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு பிரிவு எஸ்.பி.: சரவணகுமார்

    கோவை வடக்கு சட்டம் ஒழுங்கு துணை கமிஷனர்: ரோஹித் நாதன் ராஜகோபால்

    திருப்பூர் வடக்கு சட்டம் ஒழுங்கு துணை கமிஷனர்: ராஜராஜன்

    நெல்லை தலைமையிட துணை கமிஷனர்: அனிதா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    • 7 பேர் டி.ஐ.ஜி. பதவியில் இருந்து ஐ.ஜி.யாக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.
    • 10 பேர் போலீஸ் சூப்பிரண்டு பதவியில் இருந்து டி.ஐ.ஜி.யாக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.

    சென்னை:

    1999-ம் ஆண்டு பிரிவு ஐ.பி.எஸ். அதிகாரிகள் ஆனந்த குமார் சோமானி, தமிழ்சந்திரன் ஆகிய 2 பேரும் ஐ.ஜி. பதவியில் இருந்து கூடுதல் டி.ஜி.பி.யாக பதவி உயர்வு பெற்றுள்ளனர். ஐ.பி.எஸ். அதிகாரிகள் ஜெயஸ்ரீ (2004 பிரிவு), சாமுண்டீஸ்வரி, லட்சுமி, ராஜேஸ்வரி, ராஜேந்திரன், முத்துசாமி, மயில்வாகணன் (2006 பிரிவு) ஆகிய 7 பேர் டி.ஐ.ஜி. பதவியில் இருந்து ஐ.ஜி.யாக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.

    ஐ.பி.எஸ். அதிகாரிகள் வெண்மதி (2009 பிரிவு), அரவிந்தன், விக்ரமன், சரோஜ் குமார் தாகூர், மகேஷ்குமார், தேவராணி, உமா, திருநாவுக்கரசு, ஜெயந்தி, ராமர் (2010 பிரிவு) ஆகிய 10 பேரும் போலீஸ் சூப்பிரண்டு பதவியில் இருந்து டி.ஐ.ஜி.யாக பதவி உயர்வு பெற்றுள்ளனர். இதில் திருநாவுக்கரசு முதல்-அமைச்சரின் பாதுகாப்பு பிரிவு போலீஸ் சூப்பிரண்டாக உள்ளார்.

    இதற்கான உத்தரவை தமிழ்நாடு அரசின் உள்துறை முதன்மை செயலாளர் அமுதா பிறப்பித்தார்.

    • சென்னை மாநகர சட்டம் ஒழுங்கு (தெற்கு) இணை ஆணையராக தர்மராஜன் நியமனம்.
    • கோவை சிவில் சப்ளை சி.ஐ.டி பிரிவின் எஸ்.பி. ஆக சந்திரசேகரன் நியமனம்.

    சென்னை:

    ஏ.டி.ஜி.பி. கல்பனா நாயக், சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தின் உறுப்பினர் செயலராக நியமனம்.

    சிறைத்துறை ஏ.டி.ஜி.பி. ஆக மகேஷ்வர் தயாள், தமிழ்நாடு செய்தித்தாள் நிறுவன தலைமை கண்காணிப்பு அதிகாரியாக அமரேஷ் புஜாரி நியமனம்.

    TANGEDCO நிறுவனத்தின் ஐ.ஜி. ஆக பிரமோத் குமார், மகளிருக்கு எதிரான குற்றப்பிரிவின் ஐ.ஜி.ஆக தமிழ்சந்திரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    சென்னை மாநகர சட்டம் ஒழுங்கு (தெற்கு) இணை ஆணையராக தர்மராஜன், கோவை சிவில் சப்ளை சி.ஐ.டி பிரிவின் எஸ்.பி. ஆக சந்திரசேகரன், மதுரை மாநகர துணை ஆணையராக பாலாஜி நியமனம்.

    திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி. ஆக பிரதீப், சென்னை மாநகர போக்குவரத்து துணை ஆணையராக பாஸ்கரன், கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்.பி. ஆக சமய் சிங் மீனா நியமிக்கப்பட்டுள்ளார்.

    தமிழகத்தில் 11 ஐ.பி.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து உத்தரவு பிறபிக்கப்பட்டு உள்ளது. தென்மண்டல ஐ.ஜி.ஆக இருந்த சைலேஷ்குமார் யாதவ் ஆயுதப்படை ஐ.ஜி.ஆக மாற்றப்பட்டுள்ளார். #IPSofficers
    சென்னை:

    உள்துறை செயலர் பிறப்பித்த உத்தரவில் கூறி இருப்பதாவது:-

    1.ஐபிஎஸ் அதிகாரி மனோகரன் ஐஜி பதவி உயர்வுடன் திருப்பூர் கமிஷனராகவும், 

    2. சமூக நீதி மற்றும் மனித உரிமை டிஐஜி பாஸ்கரனுக்கு, ஐஜியாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.

    3. திருப்பூர் கமிஷனர் நாகராஜன், போலீஸ் பயிற்சி பள்ளி ஐஜியாகவும்,

    4. போலீஸ் பயிற்சி பள்ளி ஐஜி சண்முக ராஜேஸ்வரன், தென் மண்டல ஐஜியாகவும்.

    5. தென் மண்டல ஐஜி சைலேஷ்குமார் யாதவ், சென்னை ஆயுதப்படை ஐஜியாகவும்,

    6. தமிழக காவல்துறை நலன், சென்னை ஐஜி டேவிட்சன் தேவாசிர்வாதம் மதுரை கமிஷனராகவும்

    7. மதுரை கமிஷனர் மகேஷ் குமார் அகர்வால், சிபிசிஐடி சிறப்பு பிரிவு ஐஜியாகவும்

    8. தலைமையிடத்து கூடுதல் கமிஷனராக இருந்த சேஷாயி, தமிழக காவல்துறை நலன் ஐஜியாகவும், 

    9. சென்னை குற்றப்பிரிவு ஐஜி பாஸ்கரன், தமிழக பயிற்சி பள்ளி ஐஜியாகவும்

    10.போலீஸ் தொழில்நுட்ப சேவை டிஐஜி மகேந்திர குமார் ரத்தோட், நெல்லை போலீஸ் கமிஷனராகவும்,

    11. போலீஸ் பயிற்சி பள்ளி டிஐஜி ஆசியம்மாள், தொழில்நுட்ப சேவை டிஐஜியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். 

    இவ்வாறு அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #tamilnews #IPSofficers
    கர்நாடகா முதல்-மந்திரியாக பதவி ஏற்ற எடியூரப்பா தலைமை செயலாளர், தலைமை வக்கீல், 5 ஐ.பி.எஸ். அதிகாரிகளை இடம் மாற்றியது அதிகாரிகள் வட்டாரத்தில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
    பெங்களூர்:

    கர்நாடகா முதல்-மந்திரியாக பதவி ஏற்ற எடியூரப்பா, முதல்வர் அலுவலகத்துக்கு சென்று அமர்ந்ததும் கோப்புகளை பார்க்கத் தொடங்கினார்.

    அடுத்த ஒரு மணி நேரத்தில் பல்வேறு துறை உயர் அதிகாரிகளை மாற்றி எடியூரப்பா அதிரடி உத்தரவுகளை பிறப்பித்தார்.

    கர்நாடகா மாநில அரசின் தலைமை வக்கீலாக மதுசூதன் நாயக் இருந்தார். அவருக்கு பதில் நவதகி புதிய அரசு வக்கீலாக நியமிக்கப்படுவதாக எடியூரப்பா உத்தரவிட்டார்.

    அதன் பிறகு அரசின் கூடுதல் தலைமை செயலாளரையும் எடியூரப்பா மாற்றினார். அதன்படி புதிய கூடுதல் தலைமை செயலாளராக லட்சுமி நாராயணன் நியமிக்கப்பட்டுள்ளார்.

    இவை தவிர சில முக்கிய துறைகளின் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளையும் எடியூரப்பா மாற்றினார். போலீஸ் உயர் அதிகாரிகளில் 5 ஐ.பி.எஸ். அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

    இந்த இடமாற்ற அறிவிப்புகள் கர்நாடகா மாநில அரசுத்துறை அதிகாரிகள் வட்டாரத்தில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் தலைவர்கள் எடியூரப்பாவின் உத்தரவுகளுக்கு எதிர்ப்பும் கண்டனமும் தெரிவித்துள்ளனர்.

    ×