என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்"

    • சென்னையில் பயங்கரவாத தடுப்புப் பிரிவு எஸ்பியாக அருளரசு நியமிக்கப்பட்டுள்ளார்.
    • சென்னை கோயம்பேடு துணை ஆணையராக சுஜித்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

    தமிழகத்தில் 33 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

    அதன்படி, சிவகங்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக சிவபிரசாத் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.சிவகங்கை மாவட்ட எஸ்.பி. ஆஷிஷ் ராவத் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில் புதிய எஸ்.பி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக விவேகானந்தா சுக்லா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக ஜோஸ் தங்கையா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    கொளத்தூர் துணை ஆணையராக இருந்து தற்காலிக விடுப்பில் உள்ள பாண்டியராஜன் டிபிஎஸ் பட்டாலியன் எஸ்.பி.ஆக நியமனம் செய்யப்பட்டுள்ளார். திருமலா பால் மேலாளர் மரண விவகாரத்தில் சர்ச்சைக்கு ஆளானவர் பாண்டியராஜன்.

    சென்னையில் பயங்கரவாத தடுப்புப் பிரிவு எஸ்பியாக அருளரசு நியமிக்கப்பட்டுள்ளார்.

    சென்னை கோயம்பேடு துணை ஆணையராக சுஜித்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

    நாமக்கல் எஸ்பியாக விமலா மற்றும் வேலூர் மாவட்ட எஸ்பியாக மயில்வாகனன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    சென்னை நுண்ணறிவுப்பிரிவு இணை ஆணையராக இருந்த தர்மராஜன் வேலூருக்கு மாற்றம் செய்யப்பட்டார்.

    மகேந்திர குமார் ரத்தோட் காவல்துறை தலைமையக ஐஜியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக விஸ்வேஸ், ராணிப்பேட்டை எஸ்பியாக அய்மன் ஜமால் நியமிக்கப்பட்டுள்ளார்.

    சேலம் காவல் ஆணையராக இருந்த பிரவீன் குமார் அபிநபு தமிழக காவல்துறை பொதுப்பிரிவு ஐஜி-ஆக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    காத்திருப்போர் பட்டியலில் இருந்த அனில்குமார் கிரி, சேலம் காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    வேலூர் சரக டிஐஜியாக இருந்த தேவராணி காஞ்சிபுரம் சரக டிஐஜியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    தமிழக காவல்துறை பொதுப்பிரிவு ஐஜியாக ருஇந்த சாமுண்டீஸ்வரி சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு ஐஜியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

    சாரங்கன் உள்பட ஐபிஎஸ் அதிகரிகள் நான்கு பேரை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
    சென்னை :

    ஐபிஎஸ் அதிகாரிகள் சாரங்கன், பிரமோத் குமார், சுமித் சரன் மற்றும் பெரியப்பா ஆகிய 4 பேரை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

    கோவை மாநகர ஆணையராக சுமித் சரண், கோவை மேற்கு மண்டல ஐஜியாக பெரியப்பா ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், காவல்துறை பயிற்சியக ஐஜியாக சாரங்கன், மண்டபம் ஐஜியாக பிரமோத் குமார் நியமிக்கப்பட்டு தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
    ×