search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "shaktikanta das"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • உலகளாவிய கடன்-ஜிடிபி விகிதம் அதிகமாக உள்ளது. வளர்ந்து வரும் பொருளாதாரங்களில் இது விளைவை ஏற்படுத்தலாம்.
    • 2025 நிதியாண்டில் இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 7 சதவீதமாக கணிக்கப்பட்டுள்ளது.

    இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் இன்று நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    1. ரிசர்வ் வங்கியின் பயணம் இந்தியப் பொருளாதாரத்தின் பரிணாம வளர்ச்சியுடன் நெருங்கிய தொடர்புடையது.

    2. எங்களின் பல பொறுப்புகளை நிறைவேற்றும்போது கற்றுக் கொள்ளவும், ஏற்றுக்கொள்ளவும், புதுமைப்படுத்தவும் தொடர்ந்து பாடுபடுகிறோம்.

    3. ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை குழு ரெப்போ வட்டியை 6.5 சதவீதமாக நீட்டிக்க முடிவு செய்துள்ளது.

    4. வலுவான வளர்ச்சி வாய்ப்புகள் கொள்கை பணவீக்கத்தை 4 சதவீத இலக்கை கொண்டு வருவதில் கவனம் செலுத்துவதற்கான இடத்தை வழங்குகிறது.

    5. உணவுப் பணவீக்க அழுத்தங்கள் பிப்ரவரியில் அதிகரித்தன; பணவீக்கத்தின் தலைகீழ் ஆபத்தில் எம்.பி.சி. விழிப்புடன் உள்ளது.

    6. உலகளாவிய கடன்-ஜிடிபி விகிதம் அதிகமாக உள்ளது. வளர்ந்து வரும் பொருளாதாரங்களில் இது விளைவை ஏற்படுத்தலாம்.

    7. கிராமப்புற தேவை மற்றும் நுகர்வு2025 நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    8. 2025 நிதியாண்டில் இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 7 சதவீதமாக கணிக்கப்பட்டுள்ளது.

    9. உலகளாவிய வளர்ச்சி மீள்தன்மையுடன் உள்ளது. சமீபத்திய கச்சா எண்ணெய் விலை உயர்வை உன்னிப்பாகக் கண்காணிக்க வேண்டி நிலை உள்ளது.

    10. தொடரும் உலகளாவிய அரசியல் பதற்றங்கள் பொருட்களின் விலைகளில் தலைகீழான அபாயங்களை ஏற்படுத்துகின்றன.

    11. அறையில் இருந்த யானை (பணவீக்கம்) நடைபயிற்சிக்கு வெளியே சென்றதுபோல் தெரிகிறது. அது மீண்டும் காட்டில் இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.

    12. விலை ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதே எங்கள் முயற்சி

    13. வங்கிகள், என்.பி.எஃப்.சி-க்கள், பிற நிதி நிறுவனங்கள் தொடர்ந்து நிர்வாகத்திற்கு அதிக முன்னுரிமை கொடுக்க வேண்டும்

    14. ரிசர்வ் வங்கி அரசுப் பத்திரச் சந்தையில் சில்லறை வணிக பங்களிப்பை எளிதாக்க மொபைல் செயலியை அறிமுகப்படுத்த உள்ளது.

    15. இந்தியாவின் அந்நிய செலாவணி இது வரை இல்லாத அளவிற்கு மார்ச் 29-ல் உயர்வு.

    • 2024 நிதியாண்டில் சில்லறை பணவீக்கம் 5.4 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
    • ரெப்போ வட்டி தொடர்ந்து 6.5 சதவீதமாக இருக்கும். எந்த மாற்றமும் இல்லை.

    இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் இன்று அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் கடன்களுக்கான வட்டி விகிதமான ரெப்போ ரேட்டில் எந்த மாற்றமும் இல்லை. தொடர்ந்து 6.5 சதவீதமாக தொடர முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

    உலகக் பொருளாதாரம் தொடர்ந்து உடையக் கூடியதாக உள்ளது. இந்திய பொருளாதாரத்தின் அஸ்திவாரம் தொடர்ந்து வலுவாகவே உள்ளது.

    உள்நாட்டு உற்பத்தி முந்தைய 6.5 சதவீதத்தில் இருந்து 7 சதவீதமாக உயரும் என கணிக்கப்பட்டுள்ளது. வங்கி- கார்பரேட் ஆகியவற்றின் ஆரோக்கியமான இரட்டை சமநிலைக்கு தனியார் துறை வளர்ச்சியை ஊக்குவிக்க வேண்டும்.

    உள்நாட்டுப் பொருளாதார நடவடிக்கைகள் சிறப்பாக உள்ளன.

    முக்கிய பணவீக்கத்தில் பரந்த அடிப்படையிலான தளர்வு உணவு பணவீக்கத்திற்கு ஆபத்தானது. 2024 நிதியாண்டில் சில்லறை பணவீக்கம் 5.4 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

    • ஜூலை மாதம் சில்லறை பணவீக்கம் 7.44 சதவீதமாக அதிகரிப்பு
    • விலைவாசி உயர்வு பணவீக்க எதிர்பார்ப்புகளை அதிகரிப்பதற்கான ஆபத்தை ஏற்படுத்துகின்றன

    இந்தியாவில் கடந்த 15 மாதங்களில் இல்லாத அளவிற்கு ஜூலை மாத சில்லறை பணவீக்கம் 7.44 சதவீதமாக அதிகரித்திருந்தது. இதற்கு காய்கறி விலை உயர்வு, தானியங்களின் விலை உயர்வு ஆகியவை முக்கிய காரணம்.

    பருவமழை மற்றும் புவிசார் பதற்றம் போன்ற காரணிகளும் முக்கிய காரணம். சில்லறை பணவீக்கம் காரணமாக மக்கள் அதிக அளவில் பணம் செலவழிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். தொடர்ந்து பண்டிகை காலங்கள் வருவதால் இந்த பணவீக்கம் இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.

    ஆனால், அடுத்த (செப்டம்பர்) மாதத்தில் இருந்து காய்கறிகளின் விலை உயர்வு, தானியங்களின் விலை உயர்வு குறைய வாய்ப்புள்ளது என்று இந்திய ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து சக்திகாந்த தாஸ் கூறுகையில் ''நாங்கள் காய்கறி பணவீக்கம் செப்டம்பரில் இருந்து குறையும் என எதிர்பார்க்கிறோம். புவிசார் பதற்றங்கள் உணவுப் பொருட்களின் விலையை உயர்த்தும் என்ற போதிலும், தானிய வகைகளின் விலை குறைய பிரகாசமான வாய்ப்புகள் உள்ளன.

    முக்கிய பணவீக்கம் அதிகரித்துள்ள போதிலும், கடந்த சில மாதங்களாக அதில் காணப்படும் நிலையான தளர்வு பணவியல் கொள்கை பரிமாற்றத்தின் அறிகுறியாகும்.

    தொடர்ந்து வரும் விலைவாசி உயர்வு, கடந்த வரும் செப்டம்பரில் இருந்து வருடம் பணவீக்க எதிர்பார்ப்புகளை அதிகரிப்பதற்கான ஆபத்தை ஏற்படுத்துகின்றன. இதை நாங்கள் தொடர்ந்து கவனித்து வருகிறோம்.

    இவ்வாறு சக்திகாந்த தாஸ் தெரிவித்தார்.

    • செப்டம்பர் 30-ந் தேதி கடைசிநாள் என்பது கல்லில் எழுதப்பட்டது அல்ல.
    • பொதுமக்கள் பீதியடைந்து வங்கிக்கு படையெடுக்க வேண்டாம்.

    மும்பை :

    கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ந் தேதி, 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, 2,000 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன.

    அவற்றை அச்சிடும் பணி, 2018-2019 நிதி ஆண்டிலேயே நிறுத்தப்பட்டது. அதனால், கடந்த மார்ச் 31-ந் தேதி நிலவரப்படி, புழக்கத்தில் இருந்த நோட்டுகளில் 2,000 ரூபாய் நோட்டுகள், வெறும் 10.8 சதவீதமாக இருந்தன. அவற்றின் மதிப்பு ரூ.3 லட்சத்து 62 ஆயிரம் கோடி ஆகும்.

    இதற்கிடையே, 2,000 ரூபாய் நோட்டுகள் வாபஸ் பெறப்படுவதாகவும், செப்டம்பர் 30-ந் தேதிக்குள் அந்த நோட்டுகளை வங்கியில் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம் என்றும் ரிசர்வ் வங்கி அறிவித்தது.

    கடந்த 8-ந் தேதி நிருபர்களுக்கு பேட்டி அளித்த ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ், 50 சதவீத 2,000 ரூபாய் நோட்டுகள் வங்கிக்கு திரும்பி விட்டதாக கூறினார்.

    இந்நிலையில், நேற்று ஒரு செய்தி நிறுவனத்துக்கு சக்திகாந்த தாஸ் பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியதாவது:-

    கடந்த வார மத்தியில் இருந்த நிலவரப்படி, ரூ.2 லட்சத்து 41 ஆயிரம் கோடி மதிப்புள்ள 2,000 ரூபாய் நோட்டுகள் வங்கிக்கு திரும்பி விட்டன. இவை மொத்த 2,000 ரூபாய் நோட்டுகளில், மூன்றில் இரண்டு பங்கை விட அதிகம். இவற்றில் 85 சதவீத நோட்டுகள் டெபாசிட்டாகவும், மற்றவை வேறு நோட்டுகளாக மாற்றிய வகையிலும் வந்துள்ளன.

    செப்டம்பர் 30-ந் தேதி கடைசிநாள் என்பது கல்லில் எழுதப்பட்டது அல்ல. எனவே, பொதுமக்கள் பீதியடைந்து வங்கிக்கு படையெடுக்க வேண்டாம்.

    நோட்டு வாபஸ் நடவடிக்கையால், நிதி ஸ்திரத்தன்மைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது. பொதுமக்களின் நுகர்வு அதிகரித்து, அவர்கள் அதிக செலவு செய்ய வேண்டி இருக்கும் என்று சில ஆய்வறிக்கைகள் கூறுகின்றன. ஆனால், பொருளாதாரம் மீது எதிர்மறை தாக்கம் எதுவும் ஏற்படாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நமது வெளிநாட்டு கடன், நிர்வகிக்கக்கூடிய அளவுக்குத்தான் உள்ளது.
    • அமெரிக்க டாலர் மதிப்பு உயர்வு நமக்கு எந்த பிரச்சினையையும் ஏற்படுத்தாது.

    கொச்சி :

    கேரள மாநிலம் கொச்சியில், பெடரல் வங்கி நிறுவனர் கே.பி.ஹார்மிஸ் வருடாந்திர நினைவுநாள் நிகழ்ச்சியில் ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் கலந்து கொண்டார்.

    அங்கு அவர் பேசியதாவது:-

    இந்திய நிதித்துறை சீராக உள்ளது. மோசமான பணவீக்க காலம் கடந்து சென்று விட்டது.

    நமது வெளிநாட்டு கடன், நிர்வகிக்கக்கூடிய அளவுக்குத்தான் உள்ளது. எனவே, அமெரிக்க டாலர் மதிப்பு உயர்வு நமக்கு எந்த பிரச்சினையையும் ஏற்படுத்தாது.

    அதிகமான வெளிநாட்டு கடன் வைத்திருக்கும் நாடுகளுக்கு ஜி20 நாடுகள் உதவ வேண்டும். பருவநிலை மாற்றத்தால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு போர்க்கால அடிப்படையில் உதவ வேண்டும்.

    அமெரிக்காவில் ஏற்பட்ட வங்கி பிரச்சினையை மனதில் வைத்து, நமது வங்கிகள் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • கொரோனா 3-வது அலை இருந்தபோதும் ஏற்கனவே சரிவடைந்த பொருளாதாரம் இயல்பு நிலைக்கு திரும்பும் நேரத்தில் ஏற்பட்ட உக்ரைன் போர் புதிய சவால்களை கொண்டு வந்தது.
    • ரிசர்வ் வங்கியின் ஆராய்ச்சி செயல்பாடு கடந்த காலத்தில் இருந்தது போல இந்த சாத்தியக்கூறுகளை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும்.

    ஐதராபாத்:

    ரிசர்வ் வங்கியின் பொருளாதாரம் மற்றும் கொள்கை ஆய்வுத்துறையின் வருடாந்திர ஆய்வு மாநாடு ஐதராபாத்தில் நடக்கிறது. இதை ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் அவர் பேசும்போது கூறியதாவது:-

    கொரோனா பெருந்தொற்று பெரிய தரவுகளின் சக்தியை ஆராய்ந்து பயன்படுத்தவும் மற்றும் வீட்டிலிருந்து பணிபுரியும்போது நேரடி கருத்து வழிமுறைகளை வலுப்படுத்தவும் வாய்ப்பை உருவாக்கியது.

    கொரோனா முதல் அலை காலத்தில் தரவுகளை திரட்டுவதும், தரவுகளில் தொடர்புடைய புள்ளிவிவர இடைவெளியும் முதலாவது மிகப்பெரிய சவாலாக இருந்தது. மிகவும் ஆபத்தான இரண்டாவது அலையின்போது, இலக்கு கொள்கை தலையீடுகளை வடிவமைப்பதற்கு துறை அளவிலான அழுத்தம் பற்றிய தகவல்களை சேகரிப்பது இன்னும் முக்கியமானதாக இருந்தது.

    கொரோனா 3-வது அலை இருந்தபோதும் ஏற்கனவே சரிவடைந்த பொருளாதாரம் இயல்பு நிலைக்கு திரும்பும் நேரத்தில் ஏற்பட்ட உக்ரைன் போர் புதிய சவால்களை கொண்டு வந்தது. ஒரு கடினமான உணவு மற்றும் எரிசக்தி நெருக்கடியை உலகம் திடீரென எதிர்கொண்டது.

    வேகமாக மாறிவரும் புவிசார் அரசியல் சூழல்களால் உந்தப்பட்டு உலகப் பொருளாதாரத்தின் துண்டாடுதல் வடிவில் ஒரு புதிய ஆபத்து உருவானது. இது முக்கியமான பொருட்களுக்கான எந்த ஒரு மூலத்தையும் சார்ந்திருப்பதைக் குறைக்க வேண்டியதன் அவசியத்தை முன்னுக்குக் கொண்டு வந்தது.

    பொருட்களின் விலை வானளவு உயர்ந்ததுடன், வினியோக சங்கிலியிலும் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. இந்த காரணிகள் பணவீக்கத்தின் உலகமயமாக்கலுக்கு வழிவகுத்தன.

    வர்த்தகக் கொள்கை நடவடிக்கைகள் (கட்டணம் மற்றும் வரி அல்லாத) மற்றும் நிதி நடவடிக்கைகள் (விலை முடக்கம், வரிக்குறைப்பு மற்றும் ஏழைகளுக்கு மானியங்கள்) ஆகியவற்றை உலக நாடுகள் நாடியதால், இந்தியச் சூழலில் இத்தகைய நடவடிக்கைகளின் பொருத்தத்திற்கும் கவனம் செலுத்தப்பட்ட ஆராய்ச்சி கவனம் தேவை.

    கொரோனா, ஐரோப்பாவில் போர் மற்றும் நாடுகளின் பணவியல் கொள்கையின் தீவிரமான இறுக்கம் ஆகிய 3 மிகப்பெரிய அதிர்ச்சிகள் 2020-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து பொருளாதார ஆராய்ச்சிக்கு மிகவும் மாறுபட்ட சவால்களை முன்வைத்தன.

    இந்த மூன்று அதிர்ச்சிகளின் பின்விளைவுகள் இன்னும் வெளிவருகின்றன. இதனால் தொடர்ந்து விழிப்புடன் இருக்க வேண்டும். எனவே ரிசர்வ் வங்கியின் ஆராய்ச்சி செயல்பாடு கடந்த காலத்தில் இருந்தது போல இந்த சாத்தியக்கூறுகளை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும்.

    இவ்வாறு சக்திகாந்த தாஸ் கூறினார்.

    • உலக அளவிலான அரசியல் நிலவரங்கள், சவால்களை உண்டாக்கி வருகின்றன.
    • நாட்டில் பொருளாதார நடவடிக்கைகள் தொடர்ந்து வேகம் எடுத்துள்ளன.

    மும்பை :

    ரிசர்வ் வங்கியின் நிதி கொள்கை குழு கூட்டம் கடந்த மாதம் 30-ந் தேதி நடந்தது. அதில், கடனுக்கான வட்டியை 0.5 சதவீதம் உயர்த்த முடிவு செய்யப்பட்டது.

    கூட்டத்தில் ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் பேசிய உரை, நேற்று வெளியிடப்பட்டது. அதில் சக்திகாந்த தாஸ் பேசியதாவது:-

    கலவையான அறிகுறிகள் தென்பட்டாலும், நாட்டில் பொருளாதார நடவடிக்கைகள் தொடர்ந்து வேகம் எடுத்துள்ளன. உலக அளவிலான அரசியல் நிலவரங்கள், சவால்களை உண்டாக்கி வருகின்றன.

    அதையும் மீறி, நடப்பு நிதிஆண்டில், பொருளாதாரத்தில் வேகமாக வளரும் நாடுகளில் ஒன்றாக இந்தியா இருக்கும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ரிசர்வ் வங்கியின் நம்பகத்தன்மை மற்றும் தன்னாட்சி உரிமையை நிலைநாட்ட முயற்சிப்பேன் என புதிய கவர்னர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார். #ShaktikantaDas #RBIGovernor #RBIGovernorappointed
    மும்பை:

    மத்திய அரசுக்கும் ரிசர்வ் வங்கிக்கும் தொடர்ந்து மோதல் இருப்பதாக வெளியான தகவல்களுக்கு வலிமை சேர்க்கும் வகையில் ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் பட்டேல் தனது பதவியை திடீரென்று ராஜினாமா செய்தார்.

    இதைதொடர்ந்து, மத்திய முன்னாள் நிதித்துறை செயலாளரும், மத்திய நிதிக்குழுவின் உறுப்பினருமான சக்திகாந்த தாஸ் ரிசர்வ் வங்கியின் 25-வது கவர்னராக நேற்று நியமிக்கப்பட்டார். வரும் மூன்றாண்டுகளுக்கு இந்த பதவியில் இவர் நீடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில், மும்பையில் உள்ள ரிசர்வ் வங்கி தலைமை அலுவலகத்தில் இன்று பொறுப்பேற்று கொண்ட புதிய கவர்னர் சக்திகாந்த தாஸ் நிருபர்களுக்கு முதன்முறையாக பேட்டியளித்தார்.

    ரிசர்வ் வங்கி என்பது இந்த நாட்டின் மிகப்பெரிய அமைப்பாகும். நீண்ட செழுமையான வரலாறு கொண்ட இந்த அமைப்பின் தன்னாட்சி உரிமை, ஒருமைப்பாடு மற்றும் நம்பகத்தன்மையை நிலைநாட்ட நான் முயற்சிப்பேன் என்று அவர் குறிப்பிட்டார்.


    ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னருக்கும் மத்திய நிதித்துறை அமைச்சகத்துக்கும் இடையில் இருந்ததாக கூறப்படும் மோதல்போக்கு தொடர்பாக கருத்து தெரிவிக்க மறுத்த அவர், ‘எல்லா அமைப்புகளும் தங்களது தன்னாட்சி உரிமையை பேணி பாதுகாக்க வேண்டும். அதேவேளையில் பொறுப்புணர்வுடனும் நம்பகமாகவும் செயல்பட வேண்டும்.

    அரசுக்கும் ரிசர்வ் வங்கிக்கும் இடையிலான நல்லுறவில் முட்டுக்கட்டை உருவாகியுள்ளதா? என்பது எனக்கு தெரியாது. ஆனால், ஏற்கனவே ரிசர்வ் வங்கியின் மத்திய குழு கூட்டம் திட்டமிட்டபடி டிசம்பர் 14-ம் தேதி நடைபெறும் என்றும் சக்திகாந்த தாஸ் தெரிவித்தார். #ShaktikantaDas #RBIGovernor #RBIGovernorappointed 
    ரிசர்வ் வங்கியின் புதிய கவர்னராக மத்திய முன்னாள் நிதித்துறை செயலாளர் சக்திகாந்த தாஸ் நியமிக்கப்பட்டுள்ளார். #ShaktikantaDas #RBIGovernor #RBIGovernorappointed
    புதுடெல்லி:

    மத்திய அரசுக்கும் ரிசர்வ் வங்கிக்கும் தொடர்ந்து மோதல் இருப்பதாக வெளியான தகவல்களுக்கு வலிமை சேர்க்கும் வகையில் ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் பட்டேல் தனது பதவியை நேற்று ராஜினாமா செய்தார்.

    இந்நிலையில், மத்திய முன்னாள் நிதித்துறை செயலாளரும், மத்திய நிதிக்குழுவின் உறுப்பினருமான சக்திகாந்த தாஸ் ரிசர்வ் வங்கியின் புதிய கவர்னராக இன்று நியமிக்கப்பட்டுள்ளார். வரும் மூன்றாண்டுகளுக்கு இந்த பதவியில் இவர் நீடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


    முன்னதாக, தமிழக அரசில் தொழில்துறை முதன்மை செயலாளராகவும் இவர் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
    #ShaktikantaDas  #RBIGovernor #RBIGovernorappointed 
    ×