என் மலர்
நீங்கள் தேடியது "சக்தி காந்த தாஸ்"
- சிறந்த வங்கியாளராக ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்த தாஸ் அங்கீகரிக்கப்பட்டுள்ளார்.
- இவருக்கு ஏ பிளஸ் கிரேடு கொடுக்கப்பட்டு முதலிடம் வழங்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி:
அமெரிக்காவில் செயல்பட்டு வருவது குளோபல் பைனான்ஸ் இதழ். இது ஆண்டுதோறும் சிறப்பாகச் செயல்படும் மத்திய வங்கி கவர்னர்களை அங்கீகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவது, பொருளாதார வளர்ச்சி இலக்குகள் மற்றும் வட்டி விகித மேலாண்மை போன்ற பல்வேறு காரணிகளை மையப்படுத்தித் தரப்படுத்தி வருகின்றன.
இந்த சூழல்களில் சிறப்பாக கையாண்ட வங்கியாளர்கள் கிரேடிங் முறையில் வரிசைப்படுத்தப்படுகின்றனர். இதில் ஏ முதல் எப் வரை கிரேடிங் பிரிவுகள் உள்ளன.
இந்நிலையில், நடப்பு ஆண்டுக்கான சிறந்த வங்கியாளராக ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்த தாஸ் அங்கீகரிக்கப்பட்டுள்ளார். சென்ட்ரல் பேங்கர் ரிப்போர்ட் கார்டில் இவருக்கு ஏ பிளஸ் கிரேடு கொடுக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே கடந்த 2023-ம் ஆண்டும் இந்த விருதுக்கு சக்தி காந்த தாஸ் அங்கீகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதுதொடர்பாக ரிசர்வ் வங்கி தனது சமூக வலைத்தளத்தில், குளோபல் பைனான்ஸ் சென்ட்ரல் பேங்கர் ரிப்போர்ட் கார்டு 2024-ல் கவர்னர் சக்திகாந்த தாஸ் ஏ பிளஸ் என மதிப்பிடப்பட்டுள்ளார் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம் என பதிவிட்டுள்ளது.
- சக்தி காந்த தாஸை நியமனம் செய்து அமைச்சரவையின் நியமனக் குழுவின் செயலாளர் மனிஷா சக்ஷேனா உத்தரவிட்டுள்ளார்.
- சக்தி காந்ததாஸ், மோடியின் பதவிக்காலம் வரை பதவியில் நீடிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமரின் முதன்மை செயலாளராக முன்னாள் ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இவரது நியமனத்தை அமைச்சரவையின் நியமனக் குழுவின் செயலாளர் மனிஷா சக்ஷேனா உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, பிரதமரின் 2வது முதன்மை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள சக்தி காந்ததாஸ், மோடியின் பதவிக்காலம் வரை பதவியில் நீடிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல, நிதி ஆயோக்கின் சி.இ.ஓ.,வாக செயல்பட்டு வந்த பி.வி.ஆர்.சுப்ரமணியத்தின் பதவி காலமும் ஓராண்டுக்கு நீட்டித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2018ம் ஆண்டு டிசம்பர் மாதம் ரிசர்வ் வங்கியின் கவர்னராக சக்திகாந்த தாஸ் நியமனம் செய்யப்பட்டார்.
தொடர்ந்து, 6 ஆண்டுகளாக அந்தப் பொறுப்பில் இருந்த அவர் கடந்த ஆண்டு ஓய்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.






