45 வாலிபர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு

தேவர் சிலைக்கு மாலை அணிவிக்க வந்தனர் 45 வாலிபர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
45 வாலிபர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு
Published on

திருச்சி:

தேவர் ஜெயந்தி விழா நடைபெற்றதை தொடர்ந்த அனைத்து கட்சி உள்ளிட்ட ஏராளமானவர்கள் திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் உள்ள தேவர் சிலைக்கு மாலை அணிவிக்க வந்தனர். அப்போது 20க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனத்தில் பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் விதமாக 45 வாலிபர்கள் திருச்சி தலைமை தபால் நிலையம் பகுதியில் ஒன்று திரண்டனர்.

திருச்சி கண்டோன்மெண்ட் போலீஸ் எஸ்ஐ அகிலா, அவர்களை எச்சரித்தும் கண்டு கொள்ளவில்லை. இதன் காரணமாக ராமநாதபுரத்தை சேர்ந்த சதாசிவம், ராஜா உள்ளிட்ட 45 பேர் மீது வழக்கு பதியப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com