என் மலர்
நீங்கள் தேடியது "Teenagers arrested"
- ஆந்திராவில் இருந்து 21 கிலோ கஞ்சா கடத்திய 3 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
- மதுரை மாநகரில் கஞ்சா கடத்தல், பதுக்கல் மற்றும் விற்பனையில் ஈடுபடும் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று மாநகர போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டார்.
மதுரை
மதுரை மாநகரில் கஞ்சா கடத்தல், பதுக்கல் மற்றும் விற்பனை ஆகியவை கொடிகட்டி பறந்து வருகின்றன. எனவே அவற்றில் ஈடுபடும் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவிட்டார். இதன்படி மாநகர தெற்கு துணை கமிஷனர் சீனிவாச பெருமாள் உத்தரவின் பேரில், மீனாட்சி அம்மன் கோவில் உதவி கமிஷனர் காமாட்சி ஆலோசனை பேரில், தெப்பக்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மாடசாமி அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.
தனிப்படை போலீசார் குருவிக்காரன் சாலையில் ரோந்து சென்றனர். அப்போது மோட்டார் சைக்கிளுடன் வாலிபர் ஒருவர் பதுங்கி இருந்தார். உடனே போலீசார் அவரை பிடித்து அவர் வைத்திருந்த பைகளை சோதனை செய்த போது 21 கிலோ கஞ்சா வைத்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அந்த வாலிபர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு நடத்திய விசாரணையில் அந்த வாலிபர் காளவாசல் பாண்டியன் நகரை சேர்ந்த மதன்குமார் (30) என தெரிய வந்தது. இவர் ஆந்திராவில் இருந்து கஞ்சாவை கடத்தி மதுரையில் விற்று வந்துள்ளார். போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
எஸ்.எஸ்.காலனி போலீசார் கோச்சடை மேலக்கால் மெயின் ரோட்டில் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள தண்ணீர் தொட்டி அருகே கஞ்சா விற்று கொண்டிருந்த செக்கானூரணியை சேர்ந்த குபேந்திரன் (23) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 1 கிலோ 200 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
இதேபோல் விளாச்சேரி மெயின் ரோடு முனியாண்டி புரம் சந்திப்பில் கஞ்சா விற்ற மகாவிஷ்ணு (21) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
- சுடுகாடு செல்லும் பாதையில் கஞ்சா மற்றும் சாராய ம்விற்பனை செய்தனர்.
- சுடுகாடு செல்லும் பாதையில் கஞ்சா மற்றும் சாராய ம்விற்பனை செய்தனர்.
கடலூர்:
பண்ருட்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பண்ருட்டி டி.எஸ்.பி. சபியுல்லா உத்தரவின் பேரில் பண்ருட்டிபோலீ ஸ்இன்ஸ்பெக்டர்(பொ) நந்தகுமார், சப் இன்ஸ்பெ க்டர் சரண்யாதலைமையில்போலீசார்நேற்றுதீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது விழமங்கலம் சுடுகாடு செல்லும் பாதையில் கஞ்சா மற்றும் சாராயம் விற்பனை செய்தனர்.
இது குறித்து ஓட்டேரி கிராமத்தைச் சேர்ந்த கிஷோர் (20), தாழம்பட்டுகிராமத்தைச் சேர்ந்த சத்தியமூர்த்தி (21), தூக்கணாம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த அரவிந்த் (19), கோகுல்ராஜ் (21) ஆகியோரை கைது செய்து அவர்களிடமிருந்து சுமார் ஒரு கிலோ கஞ்சா மற்றும் 5 லிட்டர் சாராயத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
- அனந்தீஸ்வரன் கோவில் அருகே பஸ்சினை நிறுத்திவிட்டு காலையில் விருத்தாசலத்திற்கு இந்த பஸ் இயக்கப்படும்.
- அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்தனர்.
கடலூர்:
விருத்தாசலத்திலிருந்து பண்ருட்டி அருகே முத்தாண்டிக்குப்பத்திற்கு தடம் எண்.12-ல் அரசு பஸ் இயக்கப்படுகிறது. இரவு நேரங்களில் பேர்பெரியான்குப்பம் அனந்தீஸ்வரன் கோவில் அருகே பஸ்சினை நிறுத்திவிட்டு காலையில் விருத்தாசலத்திற்கு இந்த பஸ் இயக்கப்படும். அதுபோல நேற்று இரவு இந்த பஸ்சினை நிறுத்திவிட்டு டிரைவர் முருகன் (வயது 46), கண்டக்டர் எம்பெருமான் 2 பேரும் ஓய்வு எடுத்தனர். ஆங்கில புத்தாண்டு பிறப்பினை கொண்டாடும் விதமாக குடித்து விட்டு முழு போதையில் 3 வாலிபர்கள் நள்ளிரவு 3 மணிக்கு பஸ்சின் அருகில் வந்தனர். பக்கவாட்டில் நின்ற 3 பேரும் பஸ்சினை தட்டினர். பஸ்சினுள் இருந்து இறங்கி வந்த டிரைவர் முருகன், எதற்காக பஸ்சினை தட்டுகிறீர்கள் என்று போதை வாலிபர்களிடம் கேட்டுள்ளார்.
ஆத்திரமடைந்த போதை வாலிபர்கள் 3 பேரும் டிரைவர் முருகனை தாக்கிவிட்டு, பஸ்சின் பக்கவாட்டில் உள்ள கண்ணாடியை உடைத்துவிட்டு தப்பிவிடுகின்றனர். இதில் பலத்த காயமடைந்த டிரைவர் முருகன் பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பான புகாரின் பேரில் முத்தாண்டிக்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜதாமரைபாண்டியன், சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில் மானடிக்குப்பம் ராஜதுரை (வயது 24), முத்தாண்டிக்குப்பம் பிரவின் குமார் (23), வீரசிங்ககுப்பம் செல்வமணி (23) ஆகியோர் இச்சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. அவர்களை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மதுரையில் வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
- இது குறித்த புகாரின் பேரில் அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
மதுரை
மதுரை வண்டியூர் சி.எஸ். ஆர். தெருவை சேர்ந்தவர் விஜய் (வயது 20). இவர் ரிங் ரோட்டில் உள்ள பஞ்சர் கடையில் நின்று கொண்டிருந்தார். அங்கு வந்த யாகப்பா நகர் வெற்றிவேல் மகன் அஜித்குமார் (26) அவரை கத்தி முனையில் மிரட்டி அவரிடம் இருந்து ரூ.100-ஐ வழிப்பறி செய்தார்.
இது குறித்த புகாரின் பேரில் அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அஜித்குமாரை கைது செய்தனர்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் கோட்டையை சேர்ந்தவர் ஞானசேகரன் (60). இவர் நரிமேடு அவ்வையார்தெரு ஆட்டோ நிறுத்தம் அருகே சென்று கொண்டிருந்தார். அவரை 2 வாலிபர்கள் வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி ரூ. 600-ஐ வழிப்பறி செய்தனர்.
இதுகுறித்து ஞான சேகரன் தல்லாகுளம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து வழிப்பறியில் ஈடுபட்ட பி.பி. குளம் நேதாஜிரோடு மாணிக்கம் மகன் முருகன் என்ற டால்பின் (29), திருமங்கலம் ஆனந்த் நகர் குமார் மகன் கவியரசன் என்ற பொம்மை கையன் (23) ஆகியோரை கைது செய்தனர்.
- கொள்ளையர்களை பிடிக்க திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங் சாய் தனிப்படை அமைத்து உத்தரவிட்டார்.
- போலீசார் சரவணன், கண்ணன் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
உடுமலை:
உடுமலை யசோதா ராமலிங்கம் லேஅவுட் பகுதியை சேர்ந்தவர் ராஜம்மாள்( வயது 80). இவருக்கு திருமணம் ஆகாததால் தனது சகோதரருடன் வசித்து வருகிறார். ராஜம்மாள் கடந்த 12-ந்தேதி காந்திநகரில் உள்ள விநாயகர் கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்கு சென்றார். சாமி தரிசனம் செய்துவிட்டு வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 நபர்கள் ராஜம்மாள் கழுத்தில் அணிந்திருந்த 2 1/2 பவுன் சங்கிலியை பறித்து கொண்டு தப்பி சென்று விட்டனர். பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் உடுமலை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து ராஜம்மாள் உடுமலை போலீசில் புகார் செய்தார்.
கொள்ளையர்களை பிடிக்க திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங் சாய் தனிப்படை அமைத்து உத்தரவிட்டார். அதன்பேரில் தனிப்படை போலீசார் அந்தப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி. பதிவுகளை வைத்து தலைமறைவான மர்ம ஆசாமிகளை தீவிரமாக தேடி வந்தனர்.
இந்த நிலையில் உடுமலை பகுதியில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது சந்தேகத்தின் அடிப்படையில் அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 நபர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் செயின் பறிப்பு சம்பவம் நடந்த பகுதியில் பதிவான சிசிடிவி., பதிவுகளும் அவர்களுடன் ஒத்துப்போனது. தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் அந்த நபர்கள் கோயம்புத்தூரை சேர்ந்த சரவணன்(31), கண்ணன்(20) என்பதும் ராஜம்மாளிடம் தங்கச் செயினை பறித்து சென்றதையும் ஒப்புக்கொண்டனர். இதையடுத்து அவர்களிடம் இருந்து நகை பறிமுதல் செய்யப்பட்டது.மேலும் போலீசார் சரவணன், கண்ணன் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
- 6 பவுன் நகைகள் பறிமுதல்
- போலீசார் விசாரணை
அரக்கோணம்:
அரக்கோணம் சுற்றி உள்ள பகுதிகளில் தனியாக செல்லும் பெண்களை நோட்டமிட்டு மர்ம கும்பல் செயின் பறிப்பு, வழிப்பறி செய்தனர்.
போலீசார் வழக்கு பதிவு செய்து சிசிடிவி காட்சிகளை கொண்டு விசாரணை நடத்தி மர்ம கும்பலை தேடி வந்தனர்.
இந்த நிலையில் காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் பெண் கற்பழிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட 2 வாலிபர்களை போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.
கற்பழிப்பு சம்பவத்தில் ஈடுபட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்ட வாலிபர்கள் மீது அரக்கோணம் டவுன் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் புழல் சிறையில் இருந்து 2 வாலிபர்களை அரக்கோணம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
விசாரணையில் அரக்கோணத்தில் நடைபெற்ற செயின் பறிப்பில் முக்கியமான குற்றவாளிகள் என தெரியவந்தது.
இவர்கள் திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை சேர்ந்த நாகராஜ் (வயது 31), பிரகாஷ் (30) என்பதும் இவர்கள் அரக்கோணம் பகுதிக்கு பைக்கில் வந்து தனியாக செல்லும் பெண்களிடம் செயின் பறிப்பது, வழிப்பறி உள்ளிட்டவற்றை அரங்கேற்றியுள்ளனர்.
அரக்கோணம் மங்கம்மா பேட்டை பகுதியை சேர்ந்த விமலா, நேதாஜி நகரை சேர்ந்த வச்சலா, மங்கம்மா பேட்டை பகுதியை சேர்ந்த பெண்களிடம் செயின் பறிப்பில் ஈடுபட்டது தெரிய வந்தது.
இதனைத் தொடர்ந்து அவர்களிடம் இருந்து 6 பவுன் நகையை போலீசார் பறிமுதல் செய்தனர்.எ
- அசோக்குமாரிடம் மோட்டார் சைக்கிள் மற்றும் தங்கஞ் சங்கிலியை வழிப்பறி செய்ததை ஒப்புக்கொண்டனர்.
- 3 பவுன் தங்க சங்கலி, ஒரு மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
பல்லடம்:
பல்லடம் அருகே உள்ள சேடபாளையம் பகுதியைச் சேர்ந்த அசோக்குமார்(46) இவர் கடந்த மார்ச் 2 ந்தேதி அன்று இரவு வெட்டுப்பட்டான் குட்டை பகுதியில் இருந்து சேடபாளையம் நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது வாலிபர் ஒருவர் லிப்ட் கேட்டு உள்ளார். அதற்காக அவர் வண்டியை நிறுத்தி எங்கு செல்ல வேண்டும் என கேட்டுக் கொண்டிருந்தபோது, அங்கு மறைந்திருந்த 2 பேர் ஓடிவந்தனர். அசோக்குமாரை மிரட்டி அவர் அணிந்திருந்த 3 பவுன் தங்கச் சங்கிலி, மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறித்துக்கொண்டு, மின்னல் வேகத்தில் மறைந்து விட்டனர். பின்னர் இது குறித்து அசோக் குமார் பல்லடம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். வழக்குப்பதிவு செய்த போலீசார் இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் பல்லடம் அருகே உள்ள அருள்புரம் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 3 வாலிபர்களை பிடித்து விசாரித்த போது முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தனர். அவர்களை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை செய்தபோது, அவர்கள் அசோக்குமாரிடம் மோட்டார் சைக்கிள் மற்றும் தங்கஞ் சங்கிலியை வழிப்பறி செய்ததை ஒப்புக்கொண்டனர். போலீசாரது விசாரணையில் அவர்கள் பல்லடம் அருகே உள்ள அருள் புரத்தைச் சேர்ந்த பாரதி என்பவரது மகன் ராகுல் (20) பல்லடம் அம்மாபாளையம் பகுதியைச் சேர்ந்த பழனிச்சாமி என்பவரது மகன் தாமரைச்சந்திரன்(19,)திண்டுக்கல் மாவட்டம் தர்மத்துப்பட்டியைச் சேர்ந்த மருதமுத்து என்பவரது மகன் பிரவீன் குமார்(24) ஆகிய 3 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து 3 பவுன் தங்க சங்கலி, ஒரு மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- பேரையூர் அருகே ஆட்டோவில் கஞ்சா கடத்திய 5 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
- ஆந்திராவில் இருந்து கொண்டு வரப்பட்டதா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமங்கலம்
மதுரை மாவட்டம் பேரையூர் அருகே அயோத்திபட்டி விலக்கு பகுதியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத் தலைமையில் தனிப்பிரிவு போலீசார் கஞ்சா கடத்தலில் தொடர்புடைய நபர்களை பிடிப்பதற்காக சென்றனர். அப்போது அயோத்திபட்டி விலக்கில் சென்ற ஆட்டோ மற்றும் மோட்டார் சைக்கிளை நிறுத்தி சந்தேகத்தின்பேரில் சோதனை செய்தனர்.
அப்போது அந்த ஆட்டோவில் 8 கிலோ கஞ்சா மறைத்து வைத்தி ருப்பது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. அதனை கடத்தி வந்ததாக பொம்மனம்பட்டியை சேர்ந்த மனோகரன் மகன் வீரணன்(வயது31), சகாதேவன் மகன் கார்த்திக்(29), அல்லிகுண்டம் வடக்கு தெருவை சேர்ந்த முத்துபாண்டி மகன் ஜனகராஜ்(27), மூக்கன் மகன் ஜெயராம்(29), மேக்கிழார்பட்டி ராஜாங்கம் மகன் ஈஸ்வரன்(28) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
மேலும் அவர்கள் கஞ்சா விற்பனை செய்து வைத்திருந்த ரொக்கப்ப ணம் ரூ.95ஆயிரத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர். விசாரணையில் கைதான கார்த்திக் ஆந்திராவில் இருந்து கஞ்சாவை கடத்தி வந்து விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.
இது தொடர்பாக அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கஞ்சா கடத்தல் கும்பலை ேசர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பேரையூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- போலீசாரின் ரோந்து பைக்கை உடைத்ததால் பரபரப்பு
- மாரியம்மன் கோவில் திருவிழா நடந்தது
குடியாத்தம்:
வேலூர் மாவட்டம் குடியாத்தம் புத்தர் நகரில் ஆடி 4-ம் வெள் ளிக்கிழமையான நேற்று முன்தினம் மாரியம்மன் கோவில் திருவிழா நடை பெற்றது.
இதனையொட்டி நெல்லூர்பேட்டை ஏரிக் கரை பகுதியில் இருந்து பேரணாம்பட்டு சாலை வழியாக மேளதாளத்துடன் பூங்கரகம் ஊர்வலமாக சென்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
அப்போது புத்தர் நகர் பகுதியை சேர்ந்த மனோஜ்(வயது 20), மகாவி(29) ஆகியோர் பட்டாசுகளை கொளுத்தி பக்தர்கள் மீது வீசி ரகளையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் பூங்கரக ஊர்வலத்தில் பங்கேற்ற பக்தர்கள் அலறியடித்து ஓடினர். பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் பட்டாசு வீசியவர்களை தடுத்தனர். ஆனால் அவர்கள் போலீசாரை மிரட்டிய தோடு, அங்கு நிறுத்தியிருந்த போலீசின் ரோந்து பைக்கை அடித்து உடைத்து விட்டு தப்பி சென்றனர்.
இதுகுறித்து டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து மனோஜ், மகாவி ஆகியோரை கைது செய்தனர்.
- நேற்று முன்தினம் இரவு காளி குமாரசாமி கோவில் பின்புறம் செல்போன் பேசிக்கொண்டு நடந்து சென்றார்.
- வீரபாண்டி போலீசார் 3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்
திருப்பூர்:
திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த செல்வராஜ் என்பவரின் மகன் கிறிஸ்டின் ராஜ் (வயது 27). இவர் திருப்பூர் பலவஞ்சிபாளையம் பகுதியில் தங்கியிருந்து அப்பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் டெய்லராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு காளி குமாரசாமி கோவில் பின்புறம் செல்போன் பேசிக்கொண்டு நடந்து சென்றார். அப்போது 3 வாலிபர்கள் திடீரென்று அவரை வழிமறித்து பணம் கேட்டு வழிப்பறியில் ஈடுபட்டுள்ளனர். அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட போது அதில் ஒருவர் கத்தியை எடுத்து கிறிஸ்டின் ராஜன் கழுத்தில் காயப்படுத்தி விட்டு செல்போனை பறித்துக் கொண்டு 3 பேரும் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
இது குறித்து வீரபாண்டி குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கீதாவிடம் கிறிஸ்டின் ராஜ் புகார் தெரிவித்தார். அதன் அடிப்படையில் போலீசார் தனிப்படை அமைத்து தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். இது தொடர்பாக திருப்பூர் பலவஞ்சிபாளையம் அடுக்குமாடி குடியிருப்போர் பகுதியை சேர்ந்த நிதிஷ்குமார் (வயது 19), சூர்யா (19) மற்றும் கவுதம் (22) என்ற 3 வாலிபர்களை போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் கிறிஸ்டின் ராஜை வழிமறித்து பணம் கேட்டு மிரட்டியதோடு கத்தியால் காயப்படுத்தி அங்கிருந்து தப்பி சென்றதும் தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து வீரபாண்டி போலீசார் 3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.
- பள்ளகவுண்டம்பாளையத்தில் மோட்டார் சைக்கிள் ஒன்று திருட்டு போய் இருந்தது.
- திருப்பூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே உள்ள ஆதியூர் பிரிவில் மளிகை கடை உள்ளது. சம்பவத்தன்று இங்கு மளிகை கடையின் பூட்டை உடைத்து ரூ.7 ஆயிரம் ரொக்க பணம் திருட்டு போய் இருந்தது. இதேபோல் பள்ளகவுண்டம்பாளையத்தில் மோட்டார் சைக்கிள் ஒன்று திருட்டு போய் இருந்தது. இந்த 2 குற்றத்திற்கும் ஊத்துக்குளி போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை வலைவீசி தேடி வந்தனர். இந்நிலையில் சம்பவத்தன்று ஊத்துக்குளி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது சந்தேகத்தின் பேரில் 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் ஊத்துக்குளி ஹவுசிங் யூனிட் பகுதியை சேர்ந்த அகமது நசீர் (வயது 26), யாசர் அராபத் (வயது 24) ஆகிய 2 பேர் மேற்கண்ட திருட்டு வழக்கில் தொடர்பு உடையவர்கள் என்பதை ேபாலீசார் கண்டு பிடித்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து, கைது செய்தனர். பின்னர் அவர்களிடம் இருந்து ரூ.7 ஆயிரம் ரொக்க பணம் மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து அவர்கள், திருப்பூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.
- தொழிலதிபர்கள், நடிகர், நடிகைகளுக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டது.
- பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.
திருப்பதி:
பிரபல தொழிலதிபர் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா திருமணம் வெகு விமரிசையாக நடந்தது.
திருமணத்தில் கலந்து கொள்ள தொழிலதிபர்கள், நடிகர், நடிகைகளுக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டது. முக்கிய பிரபலங்கள் திருமணத்தில் கலந்து கொண்டதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.
இந்த நிலையில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த யூடியூபர் வெங்கடேஷ் நரசைய்யா அல்லூரி (வயது 26) மற்றும் முகமது ரஃபி ஷேக் (28) ஆகியோர் திருமணம் நடைபெறும் மண்டபத்திற்குள் அத்துமீறி நுழைந்தனர்.
சந்தேகத்திற்கு இடமாக இருவரும் சுற்றி திரிந்ததால் பாதுகாப்பு பணியில் இருந்தவர்கள் அவர்களை பிடித்து வெளியே அனுப்பினர்.
வெளியே சென்ற இருவரும் மீண்டும் யாருக்கும் தெரியாமல் மண்டபத்திற்குள் நுழைந்தனர். இதனால் சந்தேகம் அடைந்த பாதுகாவலர்கள் 2 வாலிபர்களையும் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து பிடிபட்ட 2 வாலிபர்களிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.






