search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆட்டோவில் கஞ்சா கடத்திய 5 வாலிபர்கள் கைது
    X

    ஆட்டோவில் கஞ்சா கடத்திய 5 வாலிபர்கள் கைது

    • பேரையூர் அருகே ஆட்டோவில் கஞ்சா கடத்திய 5 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
    • ஆந்திராவில் இருந்து கொண்டு வரப்பட்டதா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் பேரையூர் அருகே அயோத்திபட்டி விலக்கு பகுதியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத் தலைமையில் தனிப்பிரிவு போலீசார் கஞ்சா கடத்தலில் தொடர்புடைய நபர்களை பிடிப்பதற்காக சென்றனர். அப்போது அயோத்திபட்டி விலக்கில் சென்ற ஆட்டோ மற்றும் மோட்டார் சைக்கிளை நிறுத்தி சந்தேகத்தின்பேரில் சோதனை செய்தனர்.

    அப்போது அந்த ஆட்டோவில் 8 கிலோ கஞ்சா மறைத்து வைத்தி ருப்பது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. அதனை கடத்தி வந்ததாக பொம்மனம்பட்டியை சேர்ந்த மனோகரன் மகன் வீரணன்(வயது31), சகாதேவன் மகன் கார்த்திக்(29), அல்லிகுண்டம் வடக்கு தெருவை சேர்ந்த முத்துபாண்டி மகன் ஜனகராஜ்(27), மூக்கன் மகன் ஜெயராம்(29), மேக்கிழார்பட்டி ராஜாங்கம் மகன் ஈஸ்வரன்(28) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

    மேலும் அவர்கள் கஞ்சா விற்பனை செய்து வைத்திருந்த ரொக்கப்ப ணம் ரூ.95ஆயிரத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர். விசாரணையில் கைதான கார்த்திக் ஆந்திராவில் இருந்து கஞ்சாவை கடத்தி வந்து விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

    இது தொடர்பாக அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கஞ்சா கடத்தல் கும்பலை ேசர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பேரையூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×