search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "4 people were arrested for"

    • போலீசார் சட்ட விரோதமாக மதுவிற்றவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • மது பாட்டில்கள் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    ஈரோடு:

    சுதந்திர தினத்தை முன்னிட்டு நேற்று மாநிலம் முழுவதும் அரசு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இந்நிலையில் தடையை மீறி மதுபா னங்கள் ஏதேனும் விற்கப்ப டுகிறதா என போலீசார் தீவிர கண்காணிப்பு பணி யில் ஈடுபட்டனர்.

    அப்போது அரசு தடையை மீறி சட்டவி ரோதமாக மது விற்றுக் கொண்டிருந்த ஆண்டிபாளையம் பிள்ளை யார் கோவில் தெருவை சேர்ந்த வெள்ளியங்கிரி (வயது 58), பவானி பூலப்பா ளையம் பகுதியை சேர்ந்த குணசேகரன் மகன் அஜய் (19) ஆகியோரை கடத்தூர் போலீசார் கைது செய்தனர்.

    பின்னர் அவர்கள் விற்ப னைக்காக வைத்திருந்த 12 மது பாட்டில்கள் மற்றும் ரூ.30 ஆயிரத்து 600-ஐ போலீசார் பறிமுதல் செய்தனர்.

    இதைப்போல் கவுந்த ப்பாடி, அங்கம்பாளையம் பகுதியில் தடையை மீறி மது விற்று கொண்டிருந்த கவுந்தப்பாடி பூபதி (53), அங்கம்பாளையம் ராசு மகன் விக்னேஷ் (28) ஆகி யோரை கவுந்தபாடி, சிறுவ லூர் போலீசார் கைது செய்தனர்.

    இதையடுத்து அவர்களிடம் இருந்த 10 மது பாட்டில்கள் மற்றும் ரூ.680-ஐ போலீசார் பறிமு தல் செய்தனர். பின்னர் போலீசார் சட்ட விரோ தமாக மதுவிற்றவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • போலீசார் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனையில் ஈடுபட்டனர்.
    • அரசு மதுபானத்தை விற்பதற்காக பதுக்கி வைத்திருந்த 4 பேரை கண்டுபிடித்தனர்.

    ஈரோடு:

    சட்டவிரோத மது விற்பனையைத் தடுக்க ஈரோடு மாவட்ட போலீசார் தீவிர கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

    அதன்படி ஆசனூர், அம்மாபேட்டை, திங்களூர் போலீசார், தங்களது காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது சட்டவிரோதமாக அரசு மது பானத்தை அதிக விலைக்கு விற்பதற்காக பதுக்கி வைத்திருந்த 4 பேரை கண்டுபிடித்தனர்.

    இதையடுத்து, அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்து 173 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.

    • தாலுகா போலீசார் ரோந்து சென்றனர்.
    • அப்போது சட்டவிரோதமாக மது விற்ற விக்னேஷ் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு சென்னிமலை ரோடு பகுதியில் தாலுகா போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அங்கு நின்று கொண்டு சட்டவிரோதமாக மது விற்ற திங்களூா் பகுதியை சேர்ந்த விக்னேஷ் (வயது 20) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

    இதேபோல் சோலார் டாஸ்மாக் கடை அருகே நின்றுகொண்டு சட்டவிரோதமாக மது விற்ற சாஸ்திரி நகரை சேர்ந்த சிவக்குமாரை தாலுகா போலீசாரும்,

    ஈரோடு ரெயில்நிலையம் அருகில் மதுவிற்ற சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பகுதியை சேர்ந்த பாண்டியராஜூவை (31) சூரம்பட்டி போலீசாரும்,

    சூளை குப்புக்காடு பகுதியில் மது விற்ற சுக்கிரமணியன் வலசை சேர்ந்த சொக்கலிங்கம் (47) என்பவரை வீரப்பன்சத்திரம் போலீசாரும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து மது பாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டது.

    • அனுமதியின்றி மதுபாட்டில்களை விற்பனைக்கு வைத்திருப்பதும் தெரிய வந்தது.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து நாகராஜனை கைது செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் அனுமதியின்றி மது விற்பனை நடைபெறுகிறதா? என்பதை கண்காணிக்கும் வகையில் மாவட்டம் முழுவதும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் சிறுவலூர் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் குருசாமி தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டு இருந்தனர்.

    கெட்டிசெவியூர், சாந்தகடை பகுதி அருகே ஒருவர் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்தார்.

    அவரை பிடித்து விசாரித்த போது அவர் நம்பியூர் சூரியம்பாளையம் பகுதியை சேர்ந்த நாகராஜன் (34) என்பதும் அனுமதியின்றி அரசு மதுபாட்டில்களை அதிக விலைக்கு விற்பனைக்கு வைத்திருப்பதும் தெரிய வந்தது.

    இது குறித்து சிறுவலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து நாகராஜனை கைது செய்தனர். அவரிடம் இருந்து 14 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    இதேபோல் கருங்கல்பாளையம், கொடுமுடி, கடம்பூர் பகுதிகளிலும் அனுமதியின்றி மது விற்பனையில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    • பவானிசாகர் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
    • இதுகுறித்து பவானிசாகர் போலீசார் வழக்கு பதிவு செய்து பெருமாளை கைது செய்தனர்.

    ஈரோடு:

    பவானிசாகர் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

    அப்போது பவானிசாகர் அடுத்த பசுவபாளையம் அருகே வெள்ளை நிறப்பை உடன் ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அவரது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த போலீசார் அவரை பிடித்து விசாரித்த போது அவர் அதே பகுதியை சேர்ந்த பெருமாள் (60) என்பதும்,

    அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை, ஹான்ஸ், பான் மசாலா போன்ற பொருட்களை விற்பனைக்கு கொண்டு சென்றதை அவர் ஒப்புக்கொண்டார்.

    இதனையடுத்து அவரிடம் இருந்து 670 கிராம் புகையிலை பான் மசாலா பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு ரூ 2 ஆயிரம் இருக்கும்.

    மேலும் போலீசார் அவரிடம் விசாரணை நடத்திய போது திருக்குமார் என்ற நபர் மூலம் பான் மசாலா, புகையிலை பொருட்கள் வாங்கியதாக கூறினார்.

    இதுகுறித்து பவானிசாகர் போலீசார் வழக்கு பதிவு செய்து பெருமாளை கைது செய்தனர். தலைமறைவாக இருக்கும் திருக்குமாரை பிடிக்க தீவிரம் காட்டி வருகின்றனர்.

    இதேப்போல் டவுன் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட ஒருவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 200 கிராம் கஞ்சா பொட்டலம் பறிமுதல் செய்யப்பட்டது.

    இதேபோல் சூரம்பட்டி போலீசாரும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 2 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 200 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

    ×