search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மது விற்ற 4 பேர் கைது
    X

    மது விற்ற 4 பேர் கைது

    • தாலுகா போலீசார் ரோந்து சென்றனர்.
    • அப்போது சட்டவிரோதமாக மது விற்ற விக்னேஷ் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு சென்னிமலை ரோடு பகுதியில் தாலுகா போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அங்கு நின்று கொண்டு சட்டவிரோதமாக மது விற்ற திங்களூா் பகுதியை சேர்ந்த விக்னேஷ் (வயது 20) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

    இதேபோல் சோலார் டாஸ்மாக் கடை அருகே நின்றுகொண்டு சட்டவிரோதமாக மது விற்ற சாஸ்திரி நகரை சேர்ந்த சிவக்குமாரை தாலுகா போலீசாரும்,

    ஈரோடு ரெயில்நிலையம் அருகில் மதுவிற்ற சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பகுதியை சேர்ந்த பாண்டியராஜூவை (31) சூரம்பட்டி போலீசாரும்,

    சூளை குப்புக்காடு பகுதியில் மது விற்ற சுக்கிரமணியன் வலசை சேர்ந்த சொக்கலிங்கம் (47) என்பவரை வீரப்பன்சத்திரம் போலீசாரும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து மது பாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டது.

    Next Story
    ×