search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அனுமதியின்றி மது விற்ற 2 பேர் கைது
    X

    அனுமதியின்றி மது விற்ற 2 பேர் கைது

    • அதிக விலைக்கு மது பாட்டில்கள் வைத்து விற்பனை
    • பவானி பாலக்கரை வீதியை சேர்ந்த குணசேகரன் (46) என்பவரை பவானி போலீசார் கைது செய்தனர்

    பவானி,

    பவானி அருகில் உள்ள சங்கர கவுண்டன் பாளையம் பகுதியில் பவானி போலீசார் ஆய்வு மேற்கொண்டனர்.அப்போது சிங்காரவேலன் பெட்டிக்கடை அருகே மறைவான இடத்தில் அதிக விலைக்கு மது பாட்டில்கள் வைத்து விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது.

    இதனைத் தொடர்ந்து பவானி சங்கர கவுண்டன் பாளையம் பகுதியில் வசிக்கும் சிங்காரவேலன் (39) என்பவர் கைது செய்யப்பட்டு விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 6 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    அதேபோல் பவானி அந்தியூர் ஜங்ஷன் பூக்கடை அருகில் மறைவான பகுதியில் மதுபாட்டில்கள் வைத்து விற்பனை செய்த குற்றத்திற்காக பவானி பாலக்கரை வீதியை சேர்ந்த குணசேகரன் (46) என்பவரை பவானி போலீசார் கைது செய்து அவரிடமிருந்து 6 மது பாட்டில்கள் பறிமுதல் செய்தனர்.

    Next Story
    ×