search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "stealing old iron products"

    • ரூ.2 லட்சம் மதிப்பிலான 5 டன் பழைய இரும்பு பொருள்களை காணவில்லை.
    • 7 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை, செங்காடு பகுதியை சேர்ந்தவர் சுசீந்திரன் (26). இவர் ஈரோடு, பெருந்துறை ரோட்டில் உள்ள பிரபல தனியார் கட்டுமான நிறுவனத்தில் மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறார்.

    அந்த கட்டுமான நிறுவ னத்துக்கு சொந்தமான இரு ம்பு பொருள்கள், பெயிண்ட் டிரம்கள் என 5 டன் எடையிலான பழைய இரும்பு பொருள்கள் நிறுவனத்தின் கிடங்கில் போட்டு வைக்கப்ப ட்டிருந்தன.

    அந்த கிடங்கில் ராஜேஷ் என்பவர் வாட்ச்மேனாக வேலை பார்த்து வந்தார். இந்த பழைய இரும்பு பொருள்களை அலாவுதீன்பாஷா என்பவர் வாங்கி செல்வது வழக்கம்.

    இந்த நிலையில் கட்டுமான நிறுவனத்தின் மேற்பார்வை யாளர் சுசீந்திரன் கடந்த 16-ந் தேதி கிடங்குக்கு சென்று பார்த்தபோது அங்கு வைக்க ப்பட்டிருந்து ரூ.2 லட்சம் மதிப்பிலான 5 டன் பழைய இரும்பு பொருள்களை காணவில்லை.

    விசாரணையில் பழைய இரும்பு பொருள்களை வாங்கிச் செல்லும் அலாவூதீன் பாஷா மற்றும் வாட்ச்மேன் ராஜேஷ் மற்றும் 5 பேர் கொ ண்ட கும்பல் ஒரு வேனில் 5 டன் பழைய இரும்பு பொருள்களை எடுத்து சென்றது தெரியவந்தது.

    இதுகுறித்து சுசீந்திரன் வீரப்பன்சத்திரம் போலீசில் புகார் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து அலா வுதீன்பாஷா, ராஜேஷ் மற்றும் இரும்பு பொரு ள்களை திருடி சென்ற 5 பேர் என 7 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    • கடையில் பொருட்கள் சிதறி கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
    • அப்போது கடைக்குள் வைக்கப்பட்டு இருந்த ரூ.70 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் நபர்கள் திருடி சென்றதும் தெரியவந்தது.

    பெருந்துறை:

    பெருந்துறையை அடுத்துள்ள விஜயமங்கலம், கோவில்பாளையம் பகுதியை சேர்ந்தவர் அழகர்சாமி. இவரது மகன் சுரேஷ் (வயது 31).இவர் விஜயமங்கலம், பெருமாள் கோவில் பின்புறம் கடந்த 8 வருடங்களாக பழைய இரும்பு பொருட்களை வாங்கி விற்கும் கடை வைத்து நடத்தி வருகிறார்.

    இந்த நிலையில் சம்பவ த்தன்று இரவு இவர் வேலை முடிந்து கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்று விட்டார். மறு நாள் காலை கடைக்கு வந்து கேட்டைத் திறந்து உள்ளே சென்று பார்த்தார்.

    அப்போது கடையில் பொருட்கள் சிதறி கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். கடையின் சுற்று சுவர் அருகே ஒரு பழைய பிளாஸ்டிக் டிரம் இருந்தது. பின்னர் பொருட்களை சரி பார்த்தார்.

    அப்போது கடைக்குள் வைக்கப்பட்டு இருந்த 60 கிலோ எடையுள்ள இரு சக்கர வாகன பேட்டரிகள், 80 கிலோ எடை உள்ள செம்பு கம்பிகள், 40 கிலோ எடையுள்ள பித்தளை பொருட்கள் என மொத்தம் ரூ.70 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் திருடப்பட்டு இருந்ததும் மர்ம நபர்கள் பொருட்களை திருடி சென்றதும் தெரியவந்தது.

    இது குறித்து பெருந்துறை போலீசில் புகார் கொடு த்தார். இது தொடர்பாக பெருந்துறை சப்-இன்ஸ் பெக்டர் செந்தில்குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து அந்தப் பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமிரா க்களை ஆய்வு செய்தார்.

    அப்போது அதில் 2 பேர் இரும்பு கடையில் பழைய பொருட்களை திருடி ஒரு ஆட்டோவில் ஏற்றி கொண்டு சென்றது தெரிய வந்தது. அவர்களின் உருவங்களை வைத்து போலீசார் விசாரணை நடத்தி தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    இந்த நிலையில் ஈரோடு சென்னிமலை ரோட்டில் உள்ள ஒரு தனியார் கல்லூரி அருகே பஞ்சர் கடை வைத்து நடத்தி வரும் 2 பேரை பிடித்து விசாரித்தனர்.

    இதில் அவர்கள் ஈரோடு, முத்தம்பாளை யம் ஹவுசிங் யூனிட் பகுதியை சேர்ந்த சுரேஷ் (27) ஈரோடு சூரம்பட்டி பகுதியை சேர்ந்த பக்கிரி (36) என்பதும் விஜயமங்கலம் பழைய இரும்பு கடையில் பொரு ட்களை திருடியதும் தெரிய வந்தது.

    இதையடுத்து அவர்களி டம் இருந்து திருட பயன்படுத்திய வாகனம் மற்றும் ரூ.70 ஆயிரம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இதை தொடர்ந்து போலீசார் அவர்கள் 2 பேரையும் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×