என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கஞ்சா கடத்திய வாலிபர் கைது
- வெள்ளை நிறப்பையுடன் நின்று கொண்டிருந்த நபர் போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயன்றார்.
- போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
ஈரோடு:
பெருந்துறை அருகே கஞ்சாவை கடத்தி வந்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் பெருந்துறை-கோவை ரோட்டில் உள்ள பெரிய வேட்டுவபாளையம் பிரிவு அருகில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அங்கு வெள்ளை நிறப்பையுடன் நின்று கொண்டிருந்த நபர் போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயன்றார். போலீசார் அவரை மடக்கி பிடித்து அவரது பையை சோதனையிட்டனர். அதில் 1 கிலோ கிராம் கஞ்சா இருந்தது தெரியவந்தது.
விசாரணையில் அவர் சிவகிரி, மாரங்காட்டூர் வாழைத் தோட்டம் பகுதியை சேர்ந்த ராஜேஷ்குமார் (25) என்பதும் தற்போது பெருந்துறை ஜெ.ஜெ.நகரில் வாடகை வீட்டில் தங்கி கஞ்சா கடத்தலில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த ரூ.11 ஆயிரம் மதிப்பிலான கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்