என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கஞ்சா கடத்திய 3 பேர் கைது
- பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து நவீன், பிரதாப், உள்பட 3 பேரையும் கைது செய்தனர்.
- தலைமறைவான கணேசன் மற்றும் பாலாவை போலீசார் தேடி வருகின்றனர்.
பெருந்துறை:
பெருந்துறை பகுதியில் கஞ்சா கடத்துவதாக போலீ சாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், ஏட்டு தங்கதுரை மற்றும் போலீ சார் வாய்க்கால் மேடு பகுதியில் ேசாதனை செய்து கண்காணித்தனர்.
அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் 2 பேர் வந்தனர். அவர்களை போலீசார் பிடித்து சோத னை நடத்தி விசாரித்தனர். இதில் அவர்கள் ஈரோடு சூரம்பட்டிவலசு பகுதியை சேர்ந்த பிரதாப் (21), பெருந்துறை பழைய பாளையம் பகுதி சேர்ந்த 18 வயது வாலிபர் என தெரியவந்தது.
மேலும் போலீசார் அவர்கள் வைத்து இருந்த கட்டைப் பையை சோதனை செய்தனர்.
அப்போது அதில் ரூ.20 ஆயிரம் மதிப்பி லான 2 கிலோ கஞ்சா மற்றும் எலக்ட்ரானிக் எடை மெஷின் இருந்ததும், அவர்கள் கஞ்சாவை கடத்தி வந்து விற்பனை செய்ய வைத்திருந்தும், இவர்கள் ஈரோடு பழைய பாளையம் பகுதியை சார்ந்த நவீன் (21) என்பவரிடமிருந்து கஞ்சா வை வாங்கி வந்து விற்பனை செய்வதாகவும் தெரிவித்த னர்.
இதையடுத்து போலீசார் அவர்களிடமிருந்து 2 கிலோ கஞ்சா, எடை மெஷின், மோட்டார் சைக்கிள் ஆகிய வற்றை பறிமுதல் செய்தனர்.
இதை தொடர்ந்து நவீனை பிடித்து போலீசார் விசாரித்தனர். இதில் அவர் ஈரோடு மணல்மேடு பகுதியை சார்ந்த கணேசன் மற்றும் ஈரோடு காந்தி கார்டன் பகுதியை சேர்ந்த பாலா (29) ஆகியோரிடம் கஞ்சாவை வாங்கி விற்பனை செய்வதாக தெரி வித்தார்.
இதையடுத்து பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து நவீன், பிரதாப், உள்பட 3 பேரையும் கைது செய்தனர். தலைமறைவான கணேசன் மற்றும் பாலாவை போலீசார் தேடி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்