என் மலர்
நீங்கள் தேடியது "Teenager arrested for"
- ஆஸ்பத்திரியில் பணியாற்றி வரும் ஊழியர்கள் மற்றும் உள் நோயாளிகள் செல்போன்கள் தொடர்ந்து திருட்டு போனது.
- அப்போது ஒரு வாலிபர் ஆஸ்பத்திரிக்குள் நுழைந்து செல்போன் திருடி சென்ற காட்சி பதிவாகி இருந்தது.
பவானி:
ஈரோடு மாவட்டம் பவானி புது பஸ் நிலையம் அருகே ஒரு தனியார் ஆஸ்பத்திரி செயல்பட்டு வருகிறது. இந்த ஆஸ்பத்திரியில் பணியாற்றி வரும் ஊழியர்கள் மற்றும் உள் நோயாளிகள் செல்போன்கள் தொடர்ந்து திருட்டு போனது.
இது குறித்து ஆஸ்பத்திரியின் நிர்வாக இயக்குநர் ஹரி கிருஷ்ணன் என்பவர் பவானி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆஸ்பத்திரியில் இருந்த சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமிராவை ஆய்வு செய்தனர்.
அப்போது ஒரு வாலிபர் ஆஸ்பத்திரிக்குள் நுழைந்து செல்போன் திருடி சென்ற காட்சி பதிவாகி இருந்தது. இதையடுத்து போலீசார் அந்த வாலிபர் குறித்து விசாரணை நடத்தினர்.
அப்போது அவர் பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அர்பாத் நகர் பகுதியைச் சேர்ந்த தியாகத் அலி என்பவரது மகன் நியாஷ் அகமது (20) என்பது தெரிய வந்தது.
இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு வருவது போல் நடித்து தொடர் செல்போன் திரு ட்டில் ஈடுப ட்டது தெரிய வந்தது.
இதையடுத்து போலீசார் அவரிடமிருந்து 8 செல்போன்களை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு பவானி கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.
- கஞ்சா விற்பனை செய்த பணத்தை வைத்து தந்தையை ஜாமீனில் எடுக்கலாம் என பிரகாஷ் முடிவு செய்தார்.
- இது குறித்து கடம்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து பிரகாசை கைது செய்தனர்.
சத்தியமங்கலம்:
சத்தியமங்கலம் அருகே உள்ள கடம்பூர் மலைப்பகுதி மொசல்மடுவு பகுதியில் சட்ட விரோதமாக கஞ்சா கடத்தி விற்பனை செய்வ தாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் அந்த பகுதியில் ரோந்து சென்று சோதனை செய்தனர்.
அப்போது மொசல் மடுவு அருகே பள்ளத்தின் வழியாக ஒரு வாலிபர் சாக்கு பையுடன் மோட்டார் சைக்கிளில் வந்தார். சந்தே கம் அடைந்த போலீசார் அவரை நிறுத்தி அவர் வைத்து இருந்த பையை சோதனை செய்தனர். அப்போது அந்த பையில் 4½ கிலோ கஞ்சா இருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து போலீசார் அந்த வாலிபரிடம் விசா ரணை நடத்தினர். இதில் அவர் மொசல் மடுவு பகுதியை சேர்ந்த ஆண்டி சாமியின் மகன் பிரகாஷ் (வயது 27) என தெரிய வந்தது.
மேலும் பிரகாசின் தந்தை ஆண்டிசாமி சம்பவத்தன்று மொசல்மடுவு பகுதியில் தனது வீட்டின் பன்புறம் உள்ள புறம்போக்கு நில த்தில் கஞ்சா செடிகள் பயிரிடப்பட்டதும், கள்ளச் சாராயம் காய்ச்சுவதற்காக 60 லிட்டர் சாராய ஊறல்கள் வைத்திருந்ததையும் போலீ சார் கண்டு பிடித்தனர்.
இதையடுத்து போலீசார் ஏற்கனவே ஆண்டிசாமியை கைது செய்து கோபிசெட்டிபாளையம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
சிறையில் உள்ள ஆண்டி சாமியை ஜாமீனில் எடுப்ப தற்கு பணம் இல்லாததால் ஆண்டிசாமி மறைத்து வைத்து இருந்த கஞ்சாவை எடுத்து விற்பனை செய்து அதில் கிடைக்கும் பணத்தை வைத்து தந்தையை ஜாமீனில் எடுக்கலாம் என பிரகாஷ் முடிவு செய்தார்.
அதன்படி அவரது தந்தை மறைத்து வைத்து இருந்த கஞ்சாவை எடுத்து கொண்டு விற்பனை செய்ய சென்ற போது போலீசாரிடம் சிக்கி கொண்டது விசாரணையில் தெரிய வந்தது.
இதையடுத்து போலீசார் அவரிடம் இருந்து 4½ கிலோ கஞ்சா மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.
இது குறித்து கடம்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து பிரகாசை கைது செய்தனர். இதை தொடர்ந்து அவரை கோபிசெட்டி பாளையம் கோர்ட்டில் ஆஜர் படுத்தி கோபிசெட்டி பாளையம் மாவட்ட சிறை யில் அடைத்தனர்.
- சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
- அவர் பாலிதீன் கவரில் கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது.
பவானி:
பவானி அருகில் உள்ள சித்தோடு ஆவின் எதிரே உள்ள டாஸ்மார்க் அருகில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குகனேஸ்வரன் மற்றும் போலீசார் வாகன சோதனை ஈடுபட்டிருந்தனர்.
அப்போது சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் சித்தோடு தென்றல் நகர் பகுதியை சேர்ந்த ஆனந்குமார் (35) என்பதும், அவர் பாலிதீன் கவரில் 1 கிலோ 100 கிராம் கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது.
இதனைத்தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்து அவரிடம் விற்பனைக்காக இருந்த கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
- சந்தேகத்துக்கு இடமான வகையில் நின்றுெகாண்டு இருந்த ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர்.
- விசாரணையில் அவர் கஞ்சா விற்க நின்றுகொண்டு இருந்தது தெரிந்தது.
பு.புளியம்பட்டி:
புஞ்சை புளியம்பட்டி செங்குந்தபுரம் பகுதியில் கஞ்சா விற்பதாக கிடைத்த தகவலின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பகவதியம்மாள் தலைமையில் போலீசார் அங்கு ரோந்து சென்றார்கள்.
அப்போது அங்கு சந்தேகத்துக்கு இடமான வகையில் நின்றுெகாண்டு இருந்த ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர் செங்குந்தபுரத்தை சேர்ந்த சுரேஷ்குமார் (வயது 42) என்பதும், கஞ்சா விற்க நின்றுகொண்டு இருந்ததும் தெரிந்தது.
இதையடுத்து சுரேஷ்குமாரை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்த 150 கிராம் கஞ்சா மற்றும் பணம் ரூ.700-யும் பறிமுதல் செய்தனர்.
- பங்களாபுதூர் போலீசார் கே.என்.பாளையம், மோடூர் பிரிவு நிறுத்தம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
- சந்தேகத்துக்கு இடமாக நின்றிருந்த நபர் ஒருவரிடம் சோதனையிட்டதில் அவரிடம் 700 கிராம கஞ்சா இருந்தது தெரியவந்தது.
ஈரோடு:
தடைசெய்யப்பட்ட புகையிலை மற்றும் போதைப் பொருள்கள் விற்பனையைத் தடுக்க போலீசார் தீவிர ரோந்து பணி மேற்கொண்டு வருகின்றனர்.
அதன் அடிப்படையில் பங்களாபுதூர் போலீசார் கே.என்.பாளையம், மோடூர் பிரிவு நிறுத்தம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அங்கு சந்தேகத்துக்கு இடமாக நின்றிருந்த நபர் ஒருவரிடம் சோதனையிட்டதில் அவரிடம் 700 கிராம கஞ்சா இருந்தது தெரியவந்தது.
மேலும், அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில் அவர், சத்தியமங்கலம், கே.என்.பாளையம் பகுதியைச் சேர்ந்த அய்யப்பன் (27) என்பது தெரியவந்தது.
மேலும், கர்நாடக மாநிலம், புளிஞ்சூர் பகுதியில் இருந்து கஞ்சாவை வாங்கி வந்து விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, பங்களாபுதூர் போலீசார் அவர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.
மேலும் அவரிடமிருந்த ரூ. 700 மதிப்பிலான கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்
- கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
- கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த ரமேஷ் என்பவரை கைது செய்தனர்.
ஈரோடு:
ஈரோடு தண்ணீர்பந்தல்பாளையம் பஸ் நிறுத்தம் பகுதியில் தடை செய்யப்பட்ட போதை பொருளான கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதன்பேரில் ஈரோடு மதுவிலக்கு போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
அங்கு கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் வசந்தம் நகரை சேர்ந்த ரமேஷ் (34) என்பவரை கைது செய்து, விற்பனைக்கு வைத்திருந்த 1.20 கிலோ கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.
- வாலிபர் ஒருவரை பிடித்து விசாரித்தனர்.
- அவரிடம் கஞ்சா இருந்தது தெரியவந்தது.
ஈரோடு:
ஈரோடு டவுன் போலீசார் மரப்பாலம் அருகே உள்ள பழைய நடராஜா தியேட்டர் அருகில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அங்கு சந்தேகத்துக்கிடமாக நின்றிருந்த வாலிபர் ஒருவரை பிடித்து விசாரித்தனர். அப்போது அவரிடம் 1,100 கிராம் கஞ்சா இருந்தது தெரியவந்தது.
விசாரணையில் அவர் ஈரோடு பெரியார் வீதியை சேர்ந்த ஆனந்த் (23) என்பதும், கஞ்சா கடத்தி விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த ரூ. 11 ஆயிரம் மதிப்பிலான கஞ்சா மற்றும் பணம் ரூ.3,570 ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.
- கஞ்சா பொட்டலங்கள் விற்பனைக்கு வைத்து இருந்தது தெரிய வந்தது.
- ஈரோடு டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து ஜவித்தை கைது செய்தனர்.
ஈரோடு:
ஈரோடு ஸ்டேட் பேங்க் ரோடு கால்நடை மருத்துவமனை அருகே டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் நடராஜன், ஏட்டு தியாகராஜன் மற்றும் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது அந்த பகுதியில் ஒரு வாலிபர் சந்தேகம் படும்படி நின்று கொண்டு இருந்தார். இதையடுத்து அவர் போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயன்றார்.
இதையடுத்து போலீசார் அவரை சுற்றி வளைத்து பிடித்து அவரிடம் சோதனை செய்தனர். அப்போது அவர் கஞ்சா பொட்டலம் வைத்து இருந்தது தெரிய வந்தது.
இதை தொடர்ந்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். இதில் அவர் பழைய பூந்துறை ரோடு பகுதியை சேர்ந்த ஜவித் (19) என்பதும், அவர் கஞ்சா பொட்டலங்கள் விற்பனைக்கு வைத்து இருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து அவரிடம் இருந்து ரூ.1,500 மதிப்புள்ள 100 கிராம் கஞ்சா பொட்டலத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இது குறித்து ஈரோடு டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து ஜவித்தை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- மணிகண்டன் என்பவர் கேபிள் வயர் திருடியது தெரியவந்தது.
- அவரிடம் இருந்து ரூ.7 ஆயிரம் மதிப்புள்ள கேபிள் வயர் மீட்கப்பட்டது.
சென்னிமலை:
சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஈஸ்வரன் (63) என்பவர் மண்டல பொருப்பாளராக பணியாற்றி வருகிறார்.
இவர் பெருந்துறை அடுத்த கருமாண்டிசெல்லிபாளையம் பகுதியை சேர்ந்த சுந்தர்ராஜ் என்பவருக்கு சொந்தமான இடத்தில் டவர் அமைத்துள்ளார்.
அதை பராமரிக்க ஜோதிநாத் என்பவரை நியமித்துள்ளார். இதையடுத்து அவர் டவரை பராமரித்து கண்காணித்து வருகிறார்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் டவர் லைன் அமைக்க வைத்திருந்த 20 மீட்டர் கேபிள் வயர் மாயமானதை கண்டு அதிர்ச்சி அடைந்தார் இதை யரோ திருடி சென்றது தெரிய வந்தது.
இது குறித்து அவர் ஈஸ்வரனுக்கு தகவல் கொடுத்தார்.
இதையடுத்து ஈஸ்வரன் பெருந்துறை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த மணிகண்டன் (39) என்பவர் கேபிள் வயர் திருடியது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் மணிகண்டனை பிடித்து விசாரிதது அவரிடம் இருந்து ரூ.7 ஆயிரம் மதிப்புள்ள கேபிள் வயர் மீட்கப்பட்டது
இதையடுத்து பெருந்துறை போலீசார் மணிகண்டனை கைது செய்து கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
- மது பாட்டில்களை அனுமதியின்றி விற்பனை செய்து கொண்டு இருந்ததும் தெரிய வந்தது.
- போலீசார் அவரை கைது செய்தனர்.
கோபி:
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கெட்டிசெவியூர் பகுதியில் சிறுவலூர் போலீசார் ரோந்து சென்று ஆய்வு செய்தனர்.
அப்போது அந்த பகுதியில் உள்ள சந்தை அருகே ஒருவர் இருந்தார். இதையடுத்து சந்தேகம் அடைந்த போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தி சோதனை செய்தனர்.
இதில் அவர் கோபிசெட்டிபாளையம் அடுத்த செஞ்சிராம்பாளை யம் பகுதியை சேர்ந்த செல்வன் (40) என்பதும் அவர் டாஸ்மாக் மது பாட்டில்களை அனுமதியின்றி விற்பனை செய்து கொண்டு இருந்ததும் தெரிய வந்தது.
இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். இது குறித்து சிறுவலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரிடம் இருந்த 6 மது பாட்டில்களை பறிமுதல் செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- வெள்ளை நிறப்பையுடன் நின்று கொண்டிருந்த நபர் போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயன்றார்.
- போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
ஈரோடு:
பெருந்துறை அருகே கஞ்சாவை கடத்தி வந்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் பெருந்துறை-கோவை ரோட்டில் உள்ள பெரிய வேட்டுவபாளையம் பிரிவு அருகில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அங்கு வெள்ளை நிறப்பையுடன் நின்று கொண்டிருந்த நபர் போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயன்றார். போலீசார் அவரை மடக்கி பிடித்து அவரது பையை சோதனையிட்டனர். அதில் 1 கிலோ கிராம் கஞ்சா இருந்தது தெரியவந்தது.
விசாரணையில் அவர் சிவகிரி, மாரங்காட்டூர் வாழைத் தோட்டம் பகுதியை சேர்ந்த ராஜேஷ்குமார் (25) என்பதும் தற்போது பெருந்துறை ஜெ.ஜெ.நகரில் வாடகை வீட்டில் தங்கி கஞ்சா கடத்தலில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த ரூ.11 ஆயிரம் மதிப்பிலான கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.
- கஞ்சா விற்று கொண்டிருந்த இந்திரன் என்பவரை கைது செய்தார்.
- கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் பூந்துறை அருகே கஞ்சா விற்பனை நடைபெறுவதாக ஈரோடு டவுண் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன் பேரில் சப் இன்ஸ்பெக்டர் பிரபாகரன் சம்பவ இடத்திற்கு சென்று அங்கு திருட்டுத்தனமாக கஞ்சா விற்று கொண்டிருந்த ஓடைப்பள்ளம் அண்ணாத்துரை மகன் இந்திரன் (வயது 23) என்பவரை கைது செய்தார்.
பின்னர் அவர் விற்பனைக்காக வைத்திருந்த கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் ஈரோடு மாவட்டம் திரு.வி.க. நகர் டாஸ்மாக் அருகே உள்ள பொது இடத்தில் சூரம்பட்டிவலசு சதீஷ்குமார் (48), அதே பகுதியைச் சேர்ந்த கவின் குமார் (23) ஆகியோர் மீது ஈரோடு தெற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.