search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Teenager arrested for"

    • மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் ஒருவரை தடுத்து விசாரித்தனர்.
    • போதைப்பொருளான கஞ்சா 2 கிலோ இருந்தது தெரியவந்தது.

    ஈரோடு;

    ஈரோடு வெண்டி பாளையம் கதவணை மின் நிலைய பாதையில் ஈரோடு டவுன் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் ஒருவரை தடுத்து விசாரித்தனர். அதில் அவர் ஈரோடு கருங்கல்பாளையம், கமலா நகரை சேர்ந்த சக்தி (31) என்பது தெரியவந்து.

    அவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளில் போலீசார் சோதனையிட்டதில் தடை செய்யப்பட்ட போதைப் பொருளான கஞ்சா 2 கிலோ இருந்தது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் அவர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். மேலும் அவர் விற்பனை செய்வதற்காக கடத்தி வந்த ரூ.20 ஆயிரம் மதிப்பிலான 2 கிலோ கஞ்சா மற்றும் அவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் ஆகிவற்றையும் பறிமுதல் செய்தனர்.

    கைது செய்யப்பட்ட வாலிபர் சக்தியின் மீது ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீஸ் நிலையத்தில் ஏற்கனவே கஞ்சா கடத்தல் வழக்கு நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • சந்தேகத்துக்கிடமாக நின்றிருந்த நபரை பிடித்து விசாரித்தனர்.
    • போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெற்று வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அப்பகுதியில் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது அங்குள்ள செல்போன் கடை ஒன்றின் அருகில் சந்தேகத்துக்கிடமாக நின்றிருந்த நபரை பிடித்து விசாரித்தனர். அதில் அவர் அதே பகுதியை சேர்ந்த கவுதம் (29) என்பதும், தடை செய்யப்பட்ட போதை பொருளான கஞ்சாவை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்ததும் தெரியவந்தது.

    இதையடுத்து ஈரோடு மதுவிலக்கு மற்றும் போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்த ரூ.1,200 மதிப்பிலான 60 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.

    • கஞ்சா விற்று கொண்டிருந்த இந்திரன் என்பவரை கைது செய்தார்.
    • கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

     ஈரோடு மாவட்டம் பூந்துறை அருகே கஞ்சா விற்பனை நடைபெறுவதாக ஈரோடு டவுண் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் சப் இன்ஸ்பெக்டர் பிரபாகரன் சம்பவ இடத்திற்கு சென்று அங்கு திருட்டுத்தனமாக கஞ்சா விற்று கொண்டிருந்த ஓடைப்பள்ளம் அண்ணாத்துரை மகன் இந்திரன் (வயது 23) என்பவரை கைது செய்தார்.

    பின்னர் அவர் விற்பனைக்காக வைத்திருந்த கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் ஈரோடு மாவட்டம் திரு.வி.க. நகர் டாஸ்மாக் அருகே உள்ள பொது இடத்தில் சூரம்பட்டிவலசு சதீஷ்குமார் (48), அதே பகுதியைச் சேர்ந்த கவின் குமார் (23) ஆகியோர் மீது ஈரோடு தெற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வெள்ளை நிறப்பையுடன் நின்று கொண்டிருந்த நபர் போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயன்றார்.
    • போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    ஈரோடு:

    பெருந்துறை அருகே கஞ்சாவை கடத்தி வந்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் பெருந்துறை-கோவை ரோட்டில் உள்ள பெரிய வேட்டுவபாளையம் பிரிவு அருகில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது அங்கு வெள்ளை நிறப்பையுடன் நின்று கொண்டிருந்த நபர் போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயன்றார். போலீசார் அவரை மடக்கி பிடித்து அவரது பையை சோதனையிட்டனர். அதில் 1 கிலோ கிராம் கஞ்சா இருந்தது தெரியவந்தது.

    விசாரணையில் அவர் சிவகிரி, மாரங்காட்டூர் வாழைத் தோட்டம் பகுதியை சேர்ந்த ராஜேஷ்குமார் (25) என்பதும் தற்போது பெருந்துறை ஜெ.ஜெ.நகரில் வாடகை வீட்டில் தங்கி கஞ்சா கடத்தலில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த ரூ.11 ஆயிரம் மதிப்பிலான கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.

    • மது பாட்டில்களை அனுமதியின்றி விற்பனை செய்து கொண்டு இருந்ததும் தெரிய வந்தது.
    • போலீசார் அவரை கைது செய்தனர்.

    கோபி:

    ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கெட்டிசெவியூர் பகுதியில் சிறுவலூர் போலீசார் ரோந்து சென்று ஆய்வு செய்தனர்.

    அப்போது அந்த பகுதியில் உள்ள சந்தை அருகே ஒருவர் இருந்தார். இதையடுத்து சந்தேகம் அடைந்த போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தி சோதனை செய்தனர்.

    இதில் அவர் கோபிசெட்டிபாளையம் அடுத்த செஞ்சிராம்பாளை யம் பகுதியை சேர்ந்த செல்வன் (40) என்பதும் அவர் டாஸ்மாக் மது பாட்டில்களை அனுமதியின்றி விற்பனை செய்து கொண்டு இருந்ததும் தெரிய வந்தது.

    இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். இது குறித்து சிறுவலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரிடம் இருந்த 6 மது பாட்டில்களை பறிமுதல் செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • மணிகண்டன் என்பவர் கேபிள் வயர் திருடியது தெரியவந்தது.
    • அவரிடம் இருந்து ரூ.7 ஆயிரம் மதிப்புள்ள கேபிள் வயர் மீட்கப்பட்டது.

    சென்னிமலை:

    சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஈஸ்வரன் (63) என்பவர் மண்டல பொருப்பாளராக பணியாற்றி வருகிறார்.

    இவர் பெருந்துறை அடுத்த கருமாண்டிசெல்லிபாளையம் பகுதியை சேர்ந்த சுந்தர்ராஜ் என்பவருக்கு சொந்தமான இடத்தில் டவர் அமைத்துள்ளார்.

    அதை பராமரிக்க ஜோதிநாத் என்பவரை நியமித்துள்ளார். இதையடுத்து அவர் டவரை பராமரித்து கண்காணித்து வருகிறார்.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் டவர் லைன் அமைக்க வைத்திருந்த 20 மீட்டர் கேபிள் வயர் மாயமானதை கண்டு அதிர்ச்சி அடைந்தார் இதை யரோ திருடி சென்றது தெரிய வந்தது.

    இது குறித்து அவர் ஈஸ்வரனுக்கு தகவல் கொடுத்தார்.

    இதையடுத்து ஈஸ்வரன் பெருந்துறை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த மணிகண்டன் (39) என்பவர் கேபிள் வயர் திருடியது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் மணிகண்டனை பிடித்து விசாரிதது அவரிடம் இருந்து ரூ.7 ஆயிரம் மதிப்புள்ள கேபிள் வயர் மீட்கப்பட்டது

    இதையடுத்து பெருந்துறை போலீசார் மணிகண்டனை கைது செய்து கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • கஞ்சா பொட்டலங்கள் விற்பனைக்கு வைத்து இருந்தது தெரிய வந்தது.
    • ஈரோடு டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து ஜவித்தை கைது செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு ஸ்டேட் பேங்க் ரோடு கால்நடை மருத்துவமனை அருகே டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் நடராஜன், ஏட்டு தியாகராஜன் மற்றும் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது அந்த பகுதியில் ஒரு வாலிபர் சந்தேகம் படும்படி நின்று கொண்டு இருந்தார். இதையடுத்து அவர் போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயன்றார்.

    இதையடுத்து போலீசார் அவரை சுற்றி வளைத்து பிடித்து அவரிடம் சோதனை செய்தனர். அப்போது அவர் கஞ்சா பொட்டலம் வைத்து இருந்தது தெரிய வந்தது.

    இதை தொடர்ந்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். இதில் அவர் பழைய பூந்துறை ரோடு பகுதியை சேர்ந்த ஜவித் (19) என்பதும், அவர் கஞ்சா பொட்டலங்கள் விற்பனைக்கு வைத்து இருந்தது தெரிய வந்தது.

    இதையடுத்து அவரிடம் இருந்து ரூ.1,500 மதிப்புள்ள 100 கிராம் கஞ்சா பொட்டலத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    இது குறித்து ஈரோடு டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து ஜவித்தை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • வாலிபர் ஒருவரை பிடித்து விசாரித்தனர்.
    • அவரிடம் கஞ்சா இருந்தது தெரியவந்தது.

    ஈரோடு:

    ஈரோடு டவுன் போலீசார் மரப்பாலம் அருகே உள்ள பழைய நடராஜா தியேட்டர் அருகில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது அங்கு சந்தேகத்துக்கிடமாக நின்றிருந்த வாலிபர் ஒருவரை பிடித்து விசாரித்தனர். அப்போது அவரிடம் 1,100 கிராம் கஞ்சா இருந்தது தெரியவந்தது.

    விசாரணையில் அவர் ஈரோடு பெரியார் வீதியை சேர்ந்த ஆனந்த் (23) என்பதும், கஞ்சா கடத்தி விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த ரூ. 11 ஆயிரம் மதிப்பிலான கஞ்சா மற்றும் பணம் ரூ.3,570 ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.

    • கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த ரமேஷ் என்பவரை கைது செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு தண்ணீர்பந்தல்பாளையம் பஸ் நிறுத்தம் பகுதியில் தடை செய்யப்பட்ட போதை பொருளான கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதன்பேரில் ஈரோடு மதுவிலக்கு போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

    அங்கு கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் வசந்தம் நகரை சேர்ந்த ரமேஷ் (34) என்பவரை கைது செய்து, விற்பனைக்கு வைத்திருந்த 1.20 கிலோ கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.

    • பங்களாபுதூர் போலீசார் கே.என்.பாளையம், மோடூர் பிரிவு நிறுத்தம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
    • சந்தேகத்துக்கு இடமாக நின்றிருந்த நபர் ஒருவரிடம் சோதனையிட்டதில் அவரிடம் 700 கிராம கஞ்சா இருந்தது தெரியவந்தது.

    ஈரோடு:

    தடைசெய்யப்பட்ட புகையிலை மற்றும் போதைப் பொருள்கள் விற்பனையைத் தடுக்க போலீசார் தீவிர ரோந்து பணி மேற்கொண்டு வருகின்றனர்.

    அதன் அடிப்படையில் பங்களாபுதூர் போலீசார் கே.என்.பாளையம், மோடூர் பிரிவு நிறுத்தம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது அங்கு சந்தேகத்துக்கு இடமாக நின்றிருந்த நபர் ஒருவரிடம் சோதனையிட்டதில் அவரிடம் 700 கிராம கஞ்சா இருந்தது தெரியவந்தது.

    மேலும், அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில் அவர், சத்தியமங்கலம், கே.என்.பாளையம் பகுதியைச் சேர்ந்த அய்யப்பன் (27) என்பது தெரியவந்தது.

    மேலும், கர்நாடக மாநிலம், புளிஞ்சூர் பகுதியில் இருந்து கஞ்சாவை வாங்கி வந்து விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, பங்களாபுதூர் போலீசார் அவர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.

    மேலும் அவரிடமிருந்த ரூ. 700 மதிப்பிலான கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்

    • சந்தேகத்துக்கு இடமான வகையில் நின்றுெகாண்டு இருந்த ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர்.
    • விசாரணையில் அவர் கஞ்சா விற்க நின்றுகொண்டு இருந்தது தெரிந்தது.

    பு.புளியம்பட்டி:

    புஞ்சை புளியம்பட்டி செங்குந்தபுரம் பகுதியில் கஞ்சா விற்பதாக கிடைத்த தகவலின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பகவதியம்மாள் தலைமையில் போலீசார் அங்கு ரோந்து சென்றார்கள்.

    அப்போது அங்கு சந்தேகத்துக்கு இடமான வகையில் நின்றுெகாண்டு இருந்த ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர் செங்குந்தபுரத்தை சேர்ந்த சுரேஷ்குமார் (வயது 42) என்பதும், கஞ்சா விற்க நின்றுகொண்டு இருந்ததும் தெரிந்தது.

    இதையடுத்து சுரேஷ்குமாரை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்த 150 கிராம் கஞ்சா மற்றும் பணம் ரூ.700-யும் பறிமுதல் செய்தனர்.

    • சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
    • அவர் பாலிதீன் கவரில் கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது.

    பவானி:

    பவானி அருகில் உள்ள சித்தோடு ஆவின் எதிரே உள்ள டாஸ்மார்க் அருகில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குகனேஸ்வரன் மற்றும் போலீசார் வாகன சோதனை ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

    விசாரணையில் சித்தோடு தென்றல் நகர் பகுதியை சேர்ந்த ஆனந்குமார் (35) என்பதும், அவர் பாலிதீன் கவரில் 1 கிலோ 100 கிராம் கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது.

    இதனைத்தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்து அவரிடம் விற்பனைக்காக இருந்த கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

    ×