search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "patients and staff"

    • ஆஸ்பத்திரியில் பணியாற்றி வரும் ஊழியர்கள் மற்றும் உள் நோயாளிகள் செல்போன்கள் தொடர்ந்து திருட்டு போனது.
    • அப்போது ஒரு வாலிபர் ஆஸ்பத்திரிக்குள் நுழைந்து செல்போன் திருடி சென்ற காட்சி பதிவாகி இருந்தது.

    பவானி:

    ஈரோடு மாவட்டம் பவானி புது பஸ் நிலையம் அருகே ஒரு தனியார் ஆஸ்பத்திரி செயல்பட்டு வருகிறது. இந்த ஆஸ்பத்திரியில் பணியாற்றி வரும் ஊழியர்கள் மற்றும் உள் நோயாளிகள் செல்போன்கள் தொடர்ந்து திருட்டு போனது.

    இது குறித்து ஆஸ்பத்திரியின் நிர்வாக இயக்குநர் ஹரி கிருஷ்ணன் என்பவர் பவானி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆஸ்பத்திரியில் இருந்த சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமிராவை ஆய்வு செய்தனர்.

    அப்போது ஒரு வாலிபர் ஆஸ்பத்திரிக்குள் நுழைந்து செல்போன் திருடி சென்ற காட்சி பதிவாகி இருந்தது. இதையடுத்து போலீசார் அந்த வாலிபர் குறித்து விசாரணை நடத்தினர்.

    அப்போது அவர் பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அர்பாத் நகர் பகுதியைச் சேர்ந்த தியாகத் அலி என்பவரது மகன் நியாஷ் அகமது (20) என்பது தெரிய வந்தது.

    இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு வருவது போல் நடித்து தொடர் செல்போன் திரு ட்டில் ஈடுப ட்டது தெரிய வந்தது.

    இதையடுத்து போலீசார் அவரிடமிருந்து 8 செல்போன்களை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு பவானி கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.

    ×