search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "selling Tasmac liquor"

    • மது பாட்டில்களை அனுமதியின்றி விற்பனை செய்து கொண்டு இருந்ததும் தெரிய வந்தது.
    • போலீசார் அவரை கைது செய்தனர்.

    கோபி:

    ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கெட்டிசெவியூர் பகுதியில் சிறுவலூர் போலீசார் ரோந்து சென்று ஆய்வு செய்தனர்.

    அப்போது அந்த பகுதியில் உள்ள சந்தை அருகே ஒருவர் இருந்தார். இதையடுத்து சந்தேகம் அடைந்த போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தி சோதனை செய்தனர்.

    இதில் அவர் கோபிசெட்டிபாளையம் அடுத்த செஞ்சிராம்பாளை யம் பகுதியை சேர்ந்த செல்வன் (40) என்பதும் அவர் டாஸ்மாக் மது பாட்டில்களை அனுமதியின்றி விற்பனை செய்து கொண்டு இருந்ததும் தெரிய வந்தது.

    இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். இது குறித்து சிறுவலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரிடம் இருந்த 6 மது பாட்டில்களை பறிமுதல் செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×