search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருப்பூரில் முறைகேடாக தங்கியிருந்த இலங்கை வாலிபர் சிறையில் அடைப்பு
    X

    தசிக்குமார்.

    திருப்பூரில் முறைகேடாக தங்கியிருந்த இலங்கை வாலிபர் சிறையில் அடைப்பு

    • உரிய ஆவணங்கள் இல்லாமல் இலங்கையில் இருந்து கள்ளதோணி மூலம் இந்தியாவுக்கு நுழைந்து தெரிந்தது.
    • வழக்கு விசாரணை திருப்பூர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

    திருப்பூர் :

    ஈரோடு மாவட்ட 'க்யூ பிரிவு' போலீசார், திருப்பூர் மாவட்டம் காங்கயம் பகுதியில் சட்டவிரோதமாக வெளிநாட்டினர் சட்டவிரே ாதமாக தங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் படி கண்காணித்து வந்தனர்.

    கடந்த 2020ம் ஆண்டு காங்கயம், காடையூரில் தங்கியிருந்த இலங்கை கிளிநொச்சியை சேர்ந்த தசிக்குமார், 36 என்வரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தனர். உரிய ஆவணங்கள் இல்லாமல் இலங்கையில் இருந்து கள்ளதோணி மூலம் இந்தியாவுக்கு நுழைந்து தெரி ந்தது. அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இவ்வழக்கு விசாரணை திருப்பூர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அதில் குற்றவாளி தசிக்குமாருக்கு மூன்று ஆண்டு சிறையும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து ஸ்வர்ணம் நடராஜன் தீர்ப்பளித்து உத்தரவிட்டார்.இதனையடுத்து அவரை சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×