என் மலர்
நீங்கள் தேடியது "Sri Lankan"
- தாக்குதலில் மீனவர்கள் ஆனந்த், முரளி உள்பட 5 பேரும் பலத்த காயமடைந்தனர்.
- கடலோர காவல்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகப்பட்டினம்:
தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தப்படுவது வாடிக்கையாகி வருகிறது.
இந்த நிலையில் நாகை மாவட்டத்தை 17 மீனவர்கள் கடலில் 3 பிரிவுகளாக வெவ்வேறு பகுதிகளில் மீன்பிடித்து கொண்டிருந்த போது அவர்களை இலங்கை கடற்கொள்ளையர்கள் சரமாரியாக கத்தியால் குத்தி தாக்கி பல லட்சம் மதிப்புள்ள பொருட்களை கொள்ளையடித்து தப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அதன் பற்றிய விவரம் வருமாறு :-
நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டை மீனவ கிராமத்தை சேர்ந்த ஆனந்த் என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் அவர் உட்பட முரளி, சாமிநாதன், வெற்றிவேல், அன்பரசன் உள்ளிட்ட 5 மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க சென்றனர்.

கோடியக்கரை தென்கிழக்கே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு படகில் வேகமாக வந்த இலங்கை கடற்கொள்ளையர்கள் 6 பேர் திடீரென மீனவர்களை தாக்க தொடங்கினர்.
கத்தியால் குத்தி கொலை வெறி தாக்குதல் நடத்தினர். மேலும் மீனவர்களிடம் இருந்து வலை, ஜி.பி.எஸ் கருவி, மீன்கள், செல்போன் உள்ளிட்ட தளவாட பொருட்களை கொள்ளையடித்துச் தப்பினர். இந்த கொடூர தாக்குதலில் மீனவர்கள் ஆனந்த், முரளி உள்பட 5 பேரும் பலத்த காயமடைந்தனர்.
இதேப்போல் மற்றொரு பகுதிகளில் தமிழக எல்லையில் நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்த நாகை மாவட்டம் செருதூர் கிராமத்தை சக்திவேல், இளையராஜா உள்பட சேர்ந்த 7 மீனவர்கள் மற்றும் வெள்ளப்பள்ளம் மீனவ கிராமத்தை சேர்ந்த பிரவீன், விஷால் உள்பட 5 மீனவர்களை இலங்கை கடற்கொள்ளையர்கள் சரமாரியாக தாக்கி ஜி.பி.எஸ் கருவி உள்ளிட்ட பல்வேறு பொருட்களை கொள்ளையடித்தனர்.

ஒரே நாளில் அடுத்தடுத்து 3 இடங்களில் இலங்கை கடற்கொள்ளையர்கள் நடத்திய கொலை வெறி தாக்குதல்களில் நாகை மீனவர்கள் 17 பேர் பலத்த காயம் அடைந்துள்ளனர். பல லட்சம் மதிப்புள்ள ஜி.பி.எஸ் கருவிகள், செல்போன், வலை, மீன் உள்ளிட்ட பல்வேறு உபகரண பொருட்களையும் பறி கொடுத்துள்ளனர்.
இந்த தாக்குதலில் படுகாயமடைந்த 17 மீனவர்களும் இன்று அதிகாலை கரைக்கு திரும்பினர். தொடர்ந்து அவர்கள் அனைவரும் நாகை அரசு மருத்துவகல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் குறித்து நாகை கடலோர காவல்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழக மீனவர்கள் மீது தொடர்ந்து அத்துமீறி தாக்குதல் நடத்தி வரும் இலங்கை கடற்கொள்ளையர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். இனி இதுபோன்ற சம்பவம் நடைபெறாமல் இருக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீனவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
- ரூ.4.51 கோடியில் இலங்கை அகதிகளுக்கு 90 வீடுகள் கட்டும் பணிகளை மாற்றுத்திறனாளிகள் நல ஆணையர் ஆய்வு செய்தார்.
- முகாம் வாழ் தமிழர்கள் மொத்தம் 1,609 குடும்பங்களை சேர்ந்த 3ஆயிரத்து 242 பேர் உள்ளனர்.
சிவகங்கை
சிவகங்கை ஊராட்சி ஒன்றியம், ஒக்கூர் ஊராட்சியில் இலங்கை அகதிகளுக்கான குடியிரு ப்புக்கள் கட்ட ப்பட்டு வருகிறது. இதன் கட்டுமான பணிகள் குறித்து, மாற்றுத்திறனாளிகள் நல ஆணையர், அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை ஆணையர் (முழு கூடுதல் பொறுப்பு) ஜெசிந்தா லாசரஸ் , கலெக்டர் மதுசூதன் ரெட்டி பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும் முகாம் வாழ் தமிழர்களிடம் குறைகளை கேட்டறிந்தனர்.
இந்த ஆய்வின்போது, கலெக்டர் மதுசூதன்ரெட்டி கூறியதாவது:-
நமது அண்டை நாடான இலங்கையில் நெருக்கடியான சூழ்நிலை யின் காரணமாக, பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டு தமிழகம் வந்த ஈழத்தமிழர்களின் நலனை காக்கும் வகை யில் அவர்களின் தாய் தமிழகமாக திகழ்ந்து வரும் தமிழகத்தில் உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இருப்பிடம் மற்றும் அடிப்படைத் தேவைகள் அனைத்தையும் தமிழக அரசு அவர்களுக்கு வழங்கி பாதுகாத்து வருகிறது.
அதன்படி சிவகங்கை மாவட்டம் தாயமங்கலம், காரையூர், மூங்கில்ஊரணி, சென்னாலக்குடி, ஒக்கூர், தாழையூர் ஆகிய
6 பகுதிகளில் முகாம் வாழ் தமிழர்கள் வாழும் பகுதிகள் உள்ளது. அந்த பகுதிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்கென அரசுத்துறைகளுடன் தனியார் தொண்டு நிறுவ னங்களின் பங்களிப்புடன் ஆய்வு செய்து, அதனை ஆலோசனைக் குழுவின் மூலம் பரிசீலித்து, அரசின் கவனத்திற்கு எடுத்துச் சென்று நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
சிவகங்கை மாவட்டத்தில் முகாம் வாழ் தமிழர்கள் மொத்தம் 1,609 குடும்பங்களை சேர்ந்த 3ஆயிரத்து 242 பேர் உள்ளனர். அதில் ஒக்கூர் ஊராட்சியில் மட்டும் 236 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். ஒக்கூர் ஊராட்சியில், ஒரு குடும்பத்திற்கு 300 சதுர அடி வீடும், 20 சதுர அடி கழிப்பிடமும் என 320 சதுர அடியில் 88 தொகுப்பு வீடுகளும், 2 தனி வீடுகளும் மொத்தம் 90 வீடுகள் என ரூ.4.51 கோடி மதிப்பீட்டில் வீடுகளின் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த பணிகளை விரைந்து தரமான முறையில் முடிக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது .
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின் போது, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சிவராமன், ஊரக வளர்ச்சி முகமை உதவி திட்ட அலுவலர் விசாலாட்சி, உதவி செயற்பொறியாளர் மாணிக்கவாசகம், ஒக்கூர் ஊராட்சி மன்றத்தலைவர் பூமா அருணாசலம், வட்டாட்சியர் பாலகுரு, தனி வட்டாட்சியர் (இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு) உமா உள்பட பலர் உடனிருந்தனர்.
- உரிய ஆவணங்கள் இல்லாமல் இலங்கையில் இருந்து கள்ளதோணி மூலம் இந்தியாவுக்கு நுழைந்து தெரிந்தது.
- வழக்கு விசாரணை திருப்பூர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
திருப்பூர் :
ஈரோடு மாவட்ட 'க்யூ பிரிவு' போலீசார், திருப்பூர் மாவட்டம் காங்கயம் பகுதியில் சட்டவிரோதமாக வெளிநாட்டினர் சட்டவிரே ாதமாக தங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் படி கண்காணித்து வந்தனர்.
கடந்த 2020ம் ஆண்டு காங்கயம், காடையூரில் தங்கியிருந்த இலங்கை கிளிநொச்சியை சேர்ந்த தசிக்குமார், 36 என்வரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தனர். உரிய ஆவணங்கள் இல்லாமல் இலங்கையில் இருந்து கள்ளதோணி மூலம் இந்தியாவுக்கு நுழைந்து தெரி ந்தது. அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இவ்வழக்கு விசாரணை திருப்பூர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அதில் குற்றவாளி தசிக்குமாருக்கு மூன்று ஆண்டு சிறையும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து ஸ்வர்ணம் நடராஜன் தீர்ப்பளித்து உத்தரவிட்டார்.இதனையடுத்து அவரை சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.
- எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறிதமிழக மீனவர்கள் கைது.
- தமிழக மீனவர்களை காங்கேசன் கடற்படை முகாமில் வைத்து விசாரணை.
தமிழக மீனவர்கள் 4 பேர் மற்றும் விசைப்படகை இலங்கை கடற்படை சிறைபிடித்துள்ளது.
எல்லைத்தாண்டி வந்து மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 13 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
நெடுந்தீவு அருகே தமிழக மீனவர்கள் 4 பேர் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
மேலும், அவர்களது விசைப்படகுகளையும் இலங்கை கடற்படை சிறை பிடித்துள்ளது.
கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை காங்கேசன் கடற்படை முகாமில் வைத்து விசாரணை நடத்த அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக தகவல் வேளியாகியுள்ளது.
- இலங்கை தமிழர்களுக்கு 70 வீடுகள் கட்டும் பணிகளை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார்.
- இந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் மேகநாதரெட்டி தலைமை தாங்கினார்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் அனுப்பங்குளம் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் உள்ள இலங்கை தமிழர்களுக்கு செவலூரில் ரூ.3 கோடியே 51 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பில் 70 வீடுகள் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்து வேலை உத்தரவு ஆணைகளை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
இந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் மேகநாதரெட்டி தலைமை தாங்கினார். விருதுநகர் எம்.எல்.ஏ. சீனிவாசன் முன்னிலை வகித்தார். பின்னர் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார்.
அவர் பேசும் போது கூறியதாவது:-
விருதுநகர் மாவட்டம், சிவகாசி ஊராட்சி ஒன்றியம், செவலூர் ஊராட்சியில் உள்ள இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் 60 தொகுப்பு வீடுகள் ரூ.3 கோடி மதிப்பிலும், 2 தனிவீடுகள் ரூ.11.30 லட்சம் மதிப்பிலும், அனுப்பங்குளம் ஊராட்சியில் உள்ள இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் 8 தொகுப்பு வீடுகள் ரூ.40 லட்சம் மதிப்பிலும் என மொத்தம் ரூ.3.51 கோடி மதிப்பில் 70 வீடுகள் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டி, பணிகளை தொடங்கி வைத்து, வேலை உத்தரவு ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது.
மேலும், இலங்கை தமிழர்க ளுடைய வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக அரசின் அனைத்து நலத்திட்ட ங்களும் படிப்படி யாக செயல்படுத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ரவிக்குமார், திட்ட இயக்குநர் (மா.ஊ.வ.மு) திலகவதி, சார் ஆட்சியர் (சிவகாசி) பிருத்திவிராஜ், உதவி இயக்குநர்(ஊராட்சிகள்) உமாசங்கர்,சிவகாசி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் முத்துலட்சுமி, விருதுநகர் நகர்மன்ற தலைவர் மாதவன், சிவகாசி ஊராட்சி ஒன்றியக்குழுத் துணைத்தலைவர் விவேகன்ராஜ், வட்டாட்சியர் (இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்) கார்த்திகேயினி, சிவகாசி வட்டாட்சியர் லோகநாதன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- இந்திய பெருங்கடல் பகுதியில் கண்காணிப்பு பணிகளை சீன கப்பல் மேற் கொள்கிறது.
- இலங்கைக்கு சீன கப்பல் வருகை குறித்து இந்தியா கண்காணிப்பு.
கொழும்பு:
இலங்கையில் உள்ள ஹம்பந்தோட்டா துறைமுகத்தில் அடுத்த மாதம் சீன ஆராய்ச்சி கப்பல் யுவான் வாங்கை நிறுத்துவதற்கு அந்நாட்டு ராணுவம் அனுமதி வழங்கியுள்ளது.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய இலங்கை ராணுவ செய்தித் தொடர்பாளர் கெனல் நளின் கரத், பல நாடுகளில் இருந்து வர்த்தக மற்றும் ராணுவக் கப்பல்கள் நுழைவதற்கு இலங்கை அனுமதி வழங்குவது வழக்கமான ஒன்று என தெரிவித்துள்ளார். இதே சூழலில் சீனக் கப்பலுக்கு நாங்கள் அனுமதியும் வழங்கியுள்ளோம் என்று கூறியுள்ளார்.
இலங்கை துறைமுகத்தில் ஆகஸ்ட் 11ந் தேதி முதல் நிறுத்தப்படும் சீன ஆராய்ச்சி கப்பல் செப்டம்பர் வரை இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தின் வடமேற்கு பகுதியில் செயற்கைக்கோள் கட்டுப்பாடு மற்றும் ஆராய்ச்சி கண்காணிப்பை மேற்கொள்ளும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சீன கப்பல் இலங்கை வருகை குறித்து கவனமுடன் கண்காணித்து வருவதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் பொருளாதார நலன்களை பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது என்றும் அவர் கூறியுள்ளார். இதற்கிடையில் இந்திய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் இலங்கையில் சீன ராணுவத்தின் தலையீட்டிற்கு இடமளிக்க கூடாது என்று அந்நாட்டின் தமிழ் தேசிய கூட்டமைப்பு கட்சிகள், இலங்கை அரசை வலியுறுத்தி உள்ளன.
- ஏர்வாடி கடற்கரையில் கரை ஒதுங்கிய இலங்கை படகில் கடத்தல்காரர்கள் வந்தார்களா? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- இந்த படகில் அகதிகளோஅல்லது வேறு நபர்களோ வரவில்லை. படகில் என்ஜின்கூட கிடையாது என்றனர்.
கீழக்கரை
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே உள்ள சின்ன ஏர்வாடி கடற்கரையில் இலங்கையை சேர்ந்த பைபர் படகு நேற்று மாலை கரை ஒதுங்கியது.
அந்த படகில் கழுகு உருவம் பொறித்த அடையாளம் உள்ளது. இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து மன்னார் வளைகுடா கடற்கரை பகுதிகளில் இலங்கை தமிழர்கள் தமிழகத்தை நோக்கி கடல் மார்க்கமாக வருகின்றனர்.
அதேபோல் இந்த படகிலும் அகதிகள் தப்பி வந்தார்களா? அல்லது தங்க கடத்தல்காரர்கள் வந்தார்களா? என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது. படகில் என்ஜின் இல்லாமல் இருப்பதால் படகில் வந்த கடத்தல்காரர்கள் என்ஜினுடன் தப்பி சென்று இருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது.
படகு கரை ஒதுங்கிய பிறகு மரைன் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டும் அவர்கள் தாமதமாக வந்து விசாரணை நடத்தியதாக அந்த பகுதி மீனவர்கள் கூறினர்.
இதுகுறித்து மரைன் போலீஸ் தரப்பில் கூறுகையில், நேற்று கடலில் படகு மிதந்து வந்துள்ளது. இதை கடலில் மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் பார்த்துள்ளனர். இந்த படகில் அகதிகளோஅல்லது வேறு நபர்களோ வரவில்லை. படகில் என்ஜின்கூட கிடையாது என்றனர்.
ஏர்வாடி தர்காவில் தற்போது சந்தனக்கூடு திருவிழா நடந்து வரும் சூழ்நிலையில் மக்கள் கூட்டம் அதிகமாக உள்ளது.இதை சாதகமாக்கிய கடத்தல்காரர்கள் பக்தர்கள் போர்வையில் இந்த பகுதியில் ஊடுருவி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
கடலோரப் பகுதிகளில் கூடுதல் காவல் படையினரை நியமித்து இரவு நேரங்களில் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இலங்கையில் கடந்த 21-ந் தேதி ஈஸ்டர் பண்டிகையின்போது தேவாலயங்கள், நட்சத்திர ஓட்டல்களில் தொடர் வெடிகுண்டு தாக்குதல்கள் நடந்தன. இதில் 250-க்கும் மேற்பட்டோர் கொன்று குவிக்கப்பட்டனர்.
உலகையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பின்னரும், இலங்கையில் தொடர்ந்து அமைதியற்ற சூழல் நீடிக்கிறது. அந்நாட்டின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து, வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்படுவதால் மக்கள் அச்சத்தில் வாழ்ந்து வருகிறார்கள்.

இலங்கை ராணுவத்தின் உயர் அதிகாரி பிரிகேடியர் ஏ.என்.அமரசேகராவை கொழும்புவின் நாரஹெம்பிடா பகுதியில் உள்ள தனது வீட்டுக்கு வரவழைத்து அவரிடம் தனது 5 நாய்களையும் ஷிரு விஜெமானே ஒப்படைத்தார். ராணுவத்தின் வெடிகுண்டுகள் கண்டறிந்து அகற்றும் துறையில் இந்த நாய்கள் சேர்க்கப்பட்டு இலங்கை ராணுவப் படைப்பிரிவு பொறியாளர்கள் மூலம் பயிற்சி அளிக்க உள்ளதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர். #SriLankabombings #Easterblasts #colomboblasts #PetDog

107 படகுகளில் 20 மட்டுமே மீட்கும் நிலையில் உள்ளதாக இலங்கை சென்ற மீனவ அதிகாரிகள், மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களின் விசைப்படகுகள், இலங்கை துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளன. இவற்றை மீட்டுத்தர வேண்டும் என மத்திய- மாநில அரசுகளுக்கு மீனவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதுகுறித்து மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கையை தொடர்ந்து இலங்கை அரசின் அறிவுறுத்தலின் படி 184 விசைப்படகுகளை விடுவித்து இலங்கை கோர்ட்டு உத்தரவிட்டது.
இதனைத் தொடர்ந்து அந்த படகுகளை இந்தியா கொண்டு வருவது குறித்தும் அவற்றின் தரம் குறித்து ஆய்வு செய்யவும் தமிழக மீன் வளத்துறை அதிகாரிகள் மற்றும் மீனவர் சங்க தலைவர்கள் மதுரையில் இருந்து விமானம் மூலம் இலங்கை சென்றனர்.
ராமநாதபுரம் மாவட்ட மீன்வளத்துறை கூடுதல் இயக்குநர் ஜானி டாம் வர்கீஸ் தலைமையில் சென்ற இந்த குழு நேற்று இலங்கையில் காரை நகர் துறைமுகம் சென்றது. அங்கு நிறுத்தப்பட்டு இருந்த 107 தமிழக படகுகளை ஆய்வு செய்தனர்.
அங்கிருந்த படகுகளில் 20 மட்டும் தான் மீட்கும் நிலையில் இருந்ததை கண்டு அதிகாரிகளும் மீனவர்களும் அதிர்ச்சி அடைந்தனர். இன்று காங்கேசன் துறைமுகம், கிராஞ்சி, மன்னார் மற்றும் கல்பட்டி ஆகிய துறைமுகங்களில் நிறுத்தப்பட்டுள்ள 77 படகுகளை தமிழக குழு ஆய்வு செய்கிறது. #tamilnadufisherman






