இலங்கை தமிழர்களுக்கு 70 வீடுகள் கட்டும் பணி

இலங்கை தமிழர்களுக்கு 70 வீடுகள் கட்டும் பணிகளை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் மேகநாதரெட்டி தலைமை தாங்கினார்.
இலங்கை தமிழர்களுக்கு வீடு கட்டும் பணியை தொடங்கி வைத்து வேலை உத்தரவு ஆணைகளை  அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் வழங்கினார். அருகில் கலெக்டர் மேகநாத ரெட்டி மற்றும் அதிகாரிகள் உள்ளனர்.
இலங்கை தமிழர்களுக்கு வீடு கட்டும் பணியை தொடங்கி வைத்து வேலை உத்தரவு ஆணைகளை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் வழங்கினார். அருகில் கலெக்டர் மேகநாத ரெட்டி மற்றும் அதிகாரிகள் உள்ளனர்.
Published on

விருதுநகர்

விருதுநகர் மாவட்டம் அனுப்பங்குளம் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் உள்ள இலங்கை தமிழர்களுக்கு செவலூரில் ரூ.3 கோடியே 51 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பில் 70 வீடுகள் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்து வேலை உத்தரவு ஆணைகளை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

இந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் மேகநாதரெட்டி தலைமை தாங்கினார். விருதுநகர் எம்.எல்.ஏ. சீனிவாசன் முன்னிலை வகித்தார். பின்னர் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார்.

அவர் பேசும் போது கூறியதாவது:-

விருதுநகர் மாவட்டம், சிவகாசி ஊராட்சி ஒன்றியம், செவலூர் ஊராட்சியில் உள்ள இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் 60 தொகுப்பு வீடுகள் ரூ.3 கோடி மதிப்பிலும், 2 தனிவீடுகள் ரூ.11.30 லட்சம் மதிப்பிலும், அனுப்பங்குளம் ஊராட்சியில் உள்ள இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் 8 தொகுப்பு வீடுகள் ரூ.40 லட்சம் மதிப்பிலும் என மொத்தம் ரூ.3.51 கோடி மதிப்பில் 70 வீடுகள் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டி, பணிகளை தொடங்கி வைத்து, வேலை உத்தரவு ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், இலங்கை தமிழர்க ளுடைய வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக அரசின் அனைத்து நலத்திட்ட ங்களும் படிப்படி யாக செயல்படுத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ரவிக்குமார், திட்ட இயக்குநர் (மா.ஊ.வ.மு) திலகவதி, சார் ஆட்சியர் (சிவகாசி) பிருத்திவிராஜ், உதவி இயக்குநர்(ஊராட்சிகள்) உமாசங்கர்,சிவகாசி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் முத்துலட்சுமி, விருதுநகர் நகர்மன்ற தலைவர் மாதவன், சிவகாசி ஊராட்சி ஒன்றியக்குழுத் துணைத்தலைவர் விவேகன்ராஜ், வட்டாட்சியர் (இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்) கார்த்திகேயினி, சிவகாசி வட்டாட்சியர் லோகநாதன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com