என் மலர்
நீங்கள் தேடியது "நாகை மீனவர்கள்"
- நாகை துறைமுகத்தில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.
- நீண்ட நாட்களுக்கு பிறகு கடலுக்கு செல்வதால் அதிகளவில் மீன்கள் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் மீனவர்கள் சென்றுள்ளனர்.
நாகப்பட்டினம்:
வங்கக்கடலில் உருவான மோன்தா புயல் காரணமாக மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என கடந்த 18-ந் தேதி மீன்வளத்துறை மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இதனால் நாகை மாவட்டத்தில் உள்ள அக்கரைப்பேட்டை, நாகூர், பட்டினச்சேரி, நம்பியார் நகர், செருதூர், காமேஷ்வரம், விழுந்தமாவடி, ஆறுகாட்டுதுறை, கோடியக்கரை உள்ளிட்ட 25 மீனவ கிராமங்களில் உள்ள 700 விசை படகுகள், 3,000 பைபர் படகுகள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. மேலும் நாகை துறைமுகத்தில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டும் ஏற்றப்பட்டது.
அதைத்தொடர்ந்து நேற்று மோந்தா புயல் கரையை கடந்ததை அடுத்து நாகை துறைமுகத்தில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு இறக்கப்பட்டது.
இதனால் கடல் சீற்றம் குறைந்தது. எனவே கடந்த 11 நாட்களுக்கு பிறகு மீனவர்கள் கடலுக்கு சென்று மீன்பிடிக்க மீன்வளத்துறையினர் அனுமதித்தனர்.
இதையடுத்து மீன்வளத்துறை மூலம் படகுகளுக்கு வழங்கப்படும் டோக்கன்கள் வழங்கப்பட்டு இன்று அதிகாலை நாகப்பட்டினம் மீன்பிடித்துறைமுகத்தில் இருந்து படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.
நீண்ட நாட்களுக்கு பிறகு கடலுக்கு செல்வதால் அதிகளவில் மீன்கள் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் மீனவர்கள் சென்றுள்ளனர்.
- மீனவர்கள் நள்ளிரவு வேதாரண்யத்திற்கு தென்கிழக்கே, சுமார் 15 நாட்டிகல் கடல் மைல் தூரத்தில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.
- கரை திரும்பிய பிரகதீஸ், சாந்தகுமார் ஆகிய 2 மீனவர்களும் ஒரத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நாகபட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்டம் செருதூர் பிடிஏ சுனாமி குடியிருப்பு பகுதியை சேர்ந்த வெண்ணிலா என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் செருதூர் சிங்காரவேலன் நகரை சேர்ந்த பாலகிருஷ்ணன் (வயது 49), பிஎஸ்என்எல் சுனாமி குடியிருப்பை சேர்ந்த இடும்பன் (47), ரெத்தினம் (25) பிடிஏ சுனாமி குடியிருப்பு பகுதியை சேர்ந்த கணேசன் (55) ஆகிய 4 பேரும் கடந்த 10-ந்தேதி காலை கடலுக்கு மீன் பிடிக்க புறப்பட்டுச் சென்றனர். நேற்று நள்ளிரவு வேதாரண்யத்திற்கு தென்கிழக்கே, சுமார் 15 நாட்டிகல் கடல் மைல் தூரத்தில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது, அங்கு ஒரு பைபர் படகில் வந்த இலங்கை கடற்கொள்ளையர்கள் 4 பேர் கடலில் மீன் பிடித்து கொண்டிருந்த 4 மீனவர்களை சுற்றி வளைத்தனர். பின்னர் அவர்களிடம் செல்போன் மற்றும் தொழில் நுட்ப கருவிகளை கேட்டனர். அவர்கள் தரமறுத்ததால் மீனவர்களை தாக்கி கத்தியை காட்டி மிரட்டி செல்போன், ஜி.பி.எஸ். கருவி, பேட்டரி, டார்ச் லைட் ஆகியவற்றை பறித்து சென்று விட்டனர். இந்நிலையில் இன்று காலையில் அவர்கள் கரை திரும்பினர். கடற்கொள்ளையர்களால் படுகாயம் அடைந்த பாலகிருஷ்ணன், இடும்பன், கணேசன் ஆகிய 3 மீனவர்களும் ஒரத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
இது குறித்து கீழையூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மற்றொரு சம்பவம்...
இதைப்போல் செருதூர் மீனவ கிராமத்தில் இருந்து செல்வகுமார் என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் அதே பகுதியை சேர்ந்த பிரகதீஸ் (வயது 25), திரிசெல்வம் (44), சுந்தரவேல் (30), மீனவர் காலனி வெல்லப்பள்ளத்தை சேர்ந்த சாந்தகுமார் (28), அந்தோணிராஜ் ஆகிய 4 பேரும் கடந்த 10-ந்தேதி மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர்.
அவர்கள் நேற்று இரவு வேதாரண்யத்திற்கு தென்கிழக்கே, சுமார் 15 நாட்டிகள் கடல் மைல் தூரத்தில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு ஒரு பைபர் படகில் வந்த இலங்கை கடற்கொள்ளையர்கள் 4 மீனவர்களையும் தாக்கி கத்தியை காட்டி மிரட்டி, அவர்களிடமிருந்து 200 கிலோ எடையுள்ள மீன்பிடி வலை, செல்போன்கள், பேட்டரி, டார்ச் லைட், சார்ஜர், பெட்ரோல் கேன், ஜிபிஎஸ் கருவி ஆகியவற்றை பறித்து சென்று விட்டனர்.
இன்று காலை கரை திரும்பிய பிரகதீஸ், சாந்தகுமார் ஆகிய 2 மீனவர்களும் ஒரத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதைப்போல் செருதூரில் இருந்து சென்ற மற்றொரு பைபர் படகில் இருந்து 4 மீனவர்களை இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்கி அவர்களிடமிருந்து மீன்பிடி வலை மற்றும் தொழில் நுட்பபொருட்களை பறித்து சென்றனர். இது தொடர்பாக கீழையூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த சம்பவத்தால் செருதூர் மீனவர்கள் பெரும் அச்சமடைந்துள்ளனர். இனிவரும் காலங்களில் இந்த சம்பவம் நடக்காமல் தடுக்க மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாகை மாவட்ட மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- மீன்பிடி வலைகள், தளவாடப் பொருட்கள் மற்றும் பிடித்த மீன்களை பறித்துச் சென்றுள்ளனர்.
- படுகாயமடைந்த மீனவர்கள் ஒரத்தூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நாகையை சேர்ந்த மீனவர்கள் 10 பேர் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
செந்தில், சுரேஷ் ஆகிய இருவருக்கு சொந்தமான படகில் மீன்பிடிக்க சென்ற நாகை மீனவர்கள் மீது கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தி மீன்பிடி வலைகள், தளவாடப் பொருட்கள் மற்றும் பிடித்த மீன்களை பறித்துச் சென்றுள்ளனர்.
கடற்கொள்ளையர்கள் தாக்கியதில் படுகாயமடைந்த மீனவர்கள் ஒரத்தூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
- தாக்குதலில் மீனவர்கள் ஆனந்த், முரளி உள்பட 5 பேரும் பலத்த காயமடைந்தனர்.
- கடலோர காவல்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகப்பட்டினம்:
தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தப்படுவது வாடிக்கையாகி வருகிறது.
இந்த நிலையில் நாகை மாவட்டத்தை 17 மீனவர்கள் கடலில் 3 பிரிவுகளாக வெவ்வேறு பகுதிகளில் மீன்பிடித்து கொண்டிருந்த போது அவர்களை இலங்கை கடற்கொள்ளையர்கள் சரமாரியாக கத்தியால் குத்தி தாக்கி பல லட்சம் மதிப்புள்ள பொருட்களை கொள்ளையடித்து தப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அதன் பற்றிய விவரம் வருமாறு :-
நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டை மீனவ கிராமத்தை சேர்ந்த ஆனந்த் என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் அவர் உட்பட முரளி, சாமிநாதன், வெற்றிவேல், அன்பரசன் உள்ளிட்ட 5 மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க சென்றனர்.

கோடியக்கரை தென்கிழக்கே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு படகில் வேகமாக வந்த இலங்கை கடற்கொள்ளையர்கள் 6 பேர் திடீரென மீனவர்களை தாக்க தொடங்கினர்.
கத்தியால் குத்தி கொலை வெறி தாக்குதல் நடத்தினர். மேலும் மீனவர்களிடம் இருந்து வலை, ஜி.பி.எஸ் கருவி, மீன்கள், செல்போன் உள்ளிட்ட தளவாட பொருட்களை கொள்ளையடித்துச் தப்பினர். இந்த கொடூர தாக்குதலில் மீனவர்கள் ஆனந்த், முரளி உள்பட 5 பேரும் பலத்த காயமடைந்தனர்.
இதேப்போல் மற்றொரு பகுதிகளில் தமிழக எல்லையில் நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்த நாகை மாவட்டம் செருதூர் கிராமத்தை சக்திவேல், இளையராஜா உள்பட சேர்ந்த 7 மீனவர்கள் மற்றும் வெள்ளப்பள்ளம் மீனவ கிராமத்தை சேர்ந்த பிரவீன், விஷால் உள்பட 5 மீனவர்களை இலங்கை கடற்கொள்ளையர்கள் சரமாரியாக தாக்கி ஜி.பி.எஸ் கருவி உள்ளிட்ட பல்வேறு பொருட்களை கொள்ளையடித்தனர்.

ஒரே நாளில் அடுத்தடுத்து 3 இடங்களில் இலங்கை கடற்கொள்ளையர்கள் நடத்திய கொலை வெறி தாக்குதல்களில் நாகை மீனவர்கள் 17 பேர் பலத்த காயம் அடைந்துள்ளனர். பல லட்சம் மதிப்புள்ள ஜி.பி.எஸ் கருவிகள், செல்போன், வலை, மீன் உள்ளிட்ட பல்வேறு உபகரண பொருட்களையும் பறி கொடுத்துள்ளனர்.
இந்த தாக்குதலில் படுகாயமடைந்த 17 மீனவர்களும் இன்று அதிகாலை கரைக்கு திரும்பினர். தொடர்ந்து அவர்கள் அனைவரும் நாகை அரசு மருத்துவகல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் குறித்து நாகை கடலோர காவல்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழக மீனவர்கள் மீது தொடர்ந்து அத்துமீறி தாக்குதல் நடத்தி வரும் இலங்கை கடற்கொள்ளையர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். இனி இதுபோன்ற சம்பவம் நடைபெறாமல் இருக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீனவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
- ஒருவரை படகுடன் காணவில்லை, மற்றொருவர் நிலை தடுமாறி விழுந்தார்.
- கப்பல் மூலம் தீவிரமாக தேடி வருகின்றனர்.
நாகப்பட்டினம்:
நாகை அக்கரைப் பேட்டை திடீர் குப்பத்தை சேர்ந்தவர் கண்ணதாசன் (வயது 57). இவர் நேற்று முன்தினம் இரவு தனக்கு சொந்தமான பைபர் படகில் மீன் பிடிக்க கடலுக்கு சென்றார்.
நேற்று கண்ணதாசன் கரை திரும்பி இருக்க வேண்டும், ஆனால், அவர் கரை திரும்பவில்லை. பைபர் படகுடன் மாயமாகி விட்டார். இதையடுத்து அக்கரைப்பேட்டையில் இருந்து 5 படகுகளில் மீனவர்கள் கடலுக்கு சென்று மாயமான கண்ணதாசனை தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால், நீண்ட நேரம் தேடியும் அவர் கிடைக்க வில்லை.
பின்னர், இதுகுறித்து மீன்வளத்துறைக்கு புகார் அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, மீன்வளத்துறையினர் இந்திய கடற்படைக்கு தகவல் தெரிவித்ததன் பேரில், அவர்கள் கடலில் மாயமான கண்ணதாசனை கடற்படை கப்பல் மூலம் தேடி வருகின்றனர்.
இதேபோல், நாகையை அடுத்துள்ள நாகூர் சம்பா தோட்டம் பகுதியை சேர்ந்தவர் மாணிக்கம் (52). இவர் கடந்த 14-ந்தேதி நாகை மீன்பிடி துறை முகத்தில் இருந்து விசைப்படகில் 11 மீனவர்களுடன் மீன்பிடிக்க கடலுக்கு சென்றார்.
அப்போது ஆழ்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது மாணிக்கம் நிலை தடுமாறி கடலில் விழுந்துவிட்டார். இதனை கண்ட விசைப்படகில் இருந்த சக மீனவர்கள் மீன்வளத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
இதைதொடர்ந்து, மீன்வளத்துறை தெரிவித்த தகவலின் பேரில் இந்திய கடற்படையினர் கடலில் தவறி விழுந்த மாணிக்கத்தை கப்பல் மூலம் தீவிரமாக தேடி வருகின்றனர்.
கடலுக்கு மீன்பிடிக்க சென்ற நாகை மீனவர்கள் அடுத்தடுத்து மாயமான சம்பவம் மீனவ கிராமங்களில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- எல்லை தாண்டி வந்ததாக கூறி இலங்கை கடற்படையினர் சிறை பிடித்து செல்கின்றனர்.
- பாதிக்கப்பட்ட மீனவர்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த ஆறுகாட்டுத்துறையில் இருந்து பல்வேறு விசை படகுகள், பைபர் படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்று தங்களது வாழ்வை நடத்தி வருகின்றனர். அவ்வாறு அவர்கள் நடுக்கடலில் மீன் பிடிக்கும் போது எல்லை தாண்டி வந்ததாக கூறி இலங்கை கடற்படையினர் சிறை பிடித்து செல்கின்றனர்.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக மீனவர்கள் மற்றொரு பெரும் பிரச்சினையை சந்தித்து வருகின்றனர். அவர்கள் நடுக்கடலில் மீன் பிடித்து கொண்டிருக்கும் போது அங்கு பல படகுகளில் வரும் கடற்கொள்ளையர்கள் மீனவர்கள் மீது கொலைவெறி தாக்குதல் அவர்கள் படகுகளில் வைத்துள்ள மீன்பிடி வலைகள், திசை காட்டும் கருவி, பேட்டரிகள், வாக்கி டாக்கி மற்றும் மீன்பிடி உபகரணங்களை பறித்துக் கொண்டு சென்று விடுகின்றனர்.
இதனால் பாதிக்கப்பட்ட மீனவர்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் தாக்குதலில் காயமடைந்த ஆற்காடுதுறை, வெள்ளபள்ளம் மீனவர்கள் 15 பேர் நாகை மற்றும் வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த தாக்குதல் தொடர்பாக மீனவர்கள் வேதாரண்யம் கடலோர பாதுகாப்பு குழும போலீசில் புகார் அளித்தனர். இது தொடர்பாக வேதாரண்யம் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் 11 படகு மற்றும் அடையாளம் தெரியாத 46 இலங்கை கடல் கொள்ளையர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
- கீழையூர் கடலோர காவல் படை குழும போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
- படுகாயம் அடைந்த மீனவர்கள் சிகிச்கைக்காக நாகை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்டம் நாகை மீனவர்கள் மற்றும் வேதாரண்யம் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லும் போது அவர்களை இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குவது தொடர்கதையாக நடந்து வருகிறது.
இதனால் அவர்களின் தொழில் மிகவும் பாதிக்கப்படுகிறது. இதைப்போன்ற சம்பவம் இன்று நடந்துள்ளது. அதன் விவரம் வருமாறு:
நாகப்பட்டினம் மாவட்டம் செருதூர் பகுதியை சேர்ந்தவர் சபாபதி. இவருக்கு சொந்தமாக படகு உள்ளது.
இந்நிலையில் கடந்த 21-ந்தேதி சபாபதிக்கு சொந்தமான படகில் பிரகாஷ், பிரவின், திருமுருகன், பிரதீப் ஆகிய 4 மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.
இந்நிலையில் இன்று காலை கோடியக்கரை அருகே கடலில் மீன் பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு 2 அதிவேக விசை படகில் 6 இலங்கை கடற்கொள்ளையர்கள் வந்தனர்.
அவர்கள் சபாபதிக்கு சொந்தமான படகில் ஏறி அதில் இருந்த 4 மீனவர்களை கடுமையாக தாக்கினர். பின்னர் படகில் இருந்த சுமார் 500 கிலோ மீன்பிடி வலைகள், ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள மீன்கள் மற்றும் வாக்கிடாக்கிகள், தொழில் நுட்ப உபகரணங்கள் ஆகியவற்றை கொள்ளை எடுத்து கொண்டு மீன்னல் வேகத்தில் தப்பி சென்றனர்.
பின்னர் படுகாயத்துடன் 4 மீனவர்கள் கோடியக்கரை திரும்பினர். பின்னர் இது குறித்து மீன்வளத்துறை அதிகாரிகளுக்கும், கடலோர காவல் படை குழுமத்திற்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து கீழையூர் கடலோர காவல் படை குழும போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
படுகாயம் அடைந்த மீனவர்கள் சிகிச்கைக்காக நாகை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இச்சம்பவம் கோடியக்கரை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- பயங்கர ஆயுதங்களுடன் நாகை மீனவர்களை இலங்கை கடற்கொள்ளையர்கள் கடும் தாக்குதலை நடத்தியுள்ளனர்.
- வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் செருதூர் கிராமத்தை சேர்ந்தவர் சபாபதி. இவருக்கு சொந்தமான விசைப்படகில் அவருடைய மகன்கள் பிரதீப், பிரகாஷ், பிரவின், திருமுருகன் உள்ளிட்ட 4 பேர் கடந்த 21-ம் தேதி கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். நேற்று முன்தினம் இரவு 8 மணிக்கு கோடியக்கரை தென்கிழக்கே 10 நாட்டில்கள் கடல் மைல் தொலைவில் மீன்பிடித்து கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு அத்துமீறி 2 அதிவேக படகில் வந்த இலங்கை கடற்கொள்ளையர்கள் நாகை மீனவர்களிடம் கத்தி முனையில் மீன்கள் மற்றும் தளவாட பொருட்களை கேட்டு மிரட்டியுள்ளனர். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் நாகை மீனவர்களை இலங்கை கடற்கொள்ளையர்கள் கடும் தாக்குதலை நடத்தியுள்ளனர்.
பின்னர் கத்தி முனையில் நாகை மீனவர்களின் ரூ. 3 லட்சம் மதிப்புள்ள 500 கிலோ வலை, 50 ஆயிரம் மதிப்புள்ள மீன்கள், ஜிபிஎஸ் கருவி , 4 செல்போன்களை இலங்கை கடற்கொள்ளையர்கள் பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். பின்னர் படுகாயங்களுடன் செருதூர் மீன் இறங்குதளத்திற்கு வந்த மீனவர்களை ஆம்புலன்ஸ் மூலம் சக மீனவர்கள் நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்துவதால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு தொழில் செய்யமுடியாத நிலை ஏற்பட்டு இருப்பதாகவும், ஒன்றிய அரசும் தமிழக அரசும் இலங்கை கடற்கொள்ளையர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாகை மாவட்ட மீனவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து வேதாரண்யம் கடலோர காவல் குழுமம் துணை போலீஸ் சூப்பிரண்டு சுந்தர், போலீஸ் சூப்பிரண்டு ஜோதிராமலிங்கம் நாகை மீனவர்களை தாக்கி மீன் மற்றும் வலைகளை கொள்ளையடித்து சென்ற இலங்கை கடற்கொள்ளையர்கள் 7 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கண்இமைக்கும் நேரத்தில் மீனவர்கள் ஹரிகிருஷ்ணன் உள்பட 5 மீனவர்களையும் ஆயுதங்களால் சரமாரியாக தாக்க தொடங்கினர்.
- தொடர் அட்டூழியத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று தமிழக மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாகப்பட்டினம்:
நாகை அருகே உள்ள செருதூர் கிராமத்தில் இருந்து சக்திபாலன் என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் நேற்று காலை அதே கிராமத்தை சேர்ந்த ஹரிகிருஷ்ணன் (வயது 26), சூர்யா (25), கண்ணன் (23), சிரஞ்சீவி, சக்தி பாலன் ஆகிய 5 மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க புறப்பட்டனர்.
இன்று அதிகாலை 5 பேரும் கோடியக்கரை அருகே நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது 2 அதிவேக படகில் வந்த இலங்கை கடற்கொள்ளையர்கள் 10-க்கும் மேற்பட்டோர் அத்துமீறி இந்திய எல்லைக்குள் நுழைந்தனர். பின்னர் அவர்கள் நாகை மீனவர்கள் பைபர் படகில் ஏறினர். கண்இமைக்கும் நேரத்தில் மீனவர்கள் ஹரிகிருஷ்ணன் உள்பட 5 மீனவர்களையும் ஆயுதங்களால் சரமாரியாக தாக்க தொடங்கினர்.
இந்த தாக்குதலில் மீனவர்கள் 5 பேரும் காயமடைந்து படகில் சரிந்து விழுந்தனர். இதனை தொடர்ந்து 550 கிலோ வலை, ரூ.50 ஆயிரம் மதிப்பிலான பிடித்து வைக்கப்பட்ட மீன்கள், வாக்கி டாக்கி, ஜி.பி.எஸ் கருவி, பேட்டரி உள்ளிட்ட பல்வேறு பொருட்களை இலங்கை கடற்கொள்ளையர்கள் கொள்ளையடித்து தப்பினர்.
கடற்கொள்ளையர்களால் தாக்கப்பட்ட மீனவர்கள் 5 பேரும் இன்று காலை கரைக்கு திரும்பி உறவினர்களுக்கு நடந்த விவரங்களை கூறினர்.
இது குறித்து தகவல் அறிந்த நாகை கடலோர காவல்படையினர் சம்பவ இடத்துக்கு வந்து காயமடைந்த மீனவர்களை நாகை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு கோடியக்கரையில் மீன்பிடித்து கொண்டிருந்த 4 நாகை மீனவர்களை இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்கி பொருட்களை பறித்து சென்றனர். தற்போது மீண்டும் கோடியக்கரையில் இலங்கை கடற்கொள்ளையர்கள், மீனவர்களை தாக்கி கொள்ளையடித்து சென்ற சம்பவம் மீனவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
இலங்கை கடற்கொள்ளையர்களின் தொடர் அட்டூழியத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று தமிழக மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- 1200 விசைப்படகுகளும், 6000 பைபர் படகுகளும் கரையோரம் பாதுகாப்பாக நிறுத்தி வைத்து இருந்தனர்.
- நான்கு நாட்களுக்கு பிறகு இன்று காலை நாகை மாவட்ட விசைப்படகு மீனவர்கள் மற்றும் பைபர் படகு கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.
நாகப்பட்டினம்:
வங்கக்கடலில் ஏற்பட்ட புயல் சின்னம் காரணமாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை தொடர்ந்து நாகை மாவட்ட மீன்வளத்துறையினர் ஆழ்கடல் செல்லும் விசைப்படகு மீனவர்கள் மற்றும் பைபர் படகு மீனவர்கள்கடலுக்கு செல்ல தடை விதித்தனர்.
இதனால் நாகை மாவட்டத்தில் அக்கரைப்பேட்டை, கீச்சாங்குப்பம், நம்பியார்நகர், நாகூர், சிருதூர் வேளாங்கண்ணி விழுந்தமாவடி, புஷ்பவனம், கோடியக்ககரை வேதாரணியம் ஆற்காடுதுறை உள்ளிட்ட மீனவ கிராமங்களில் இருந்து மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. இதனால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மேலும் 1200 விசைபடகுகளும், 6000 பைபர் படகுகளும் கரையோரம் பாதுகாப்பாக நிறுத்தி வைத்து இருந்தனர்.
நேற்று ஹாமூன் புயல் கரையை கடந்ததை தொடர்ந்து அவர்களுக்கான தடையை மீன்வள துறையினர் விலக்கிக்கொண்டு நேற்று மாலை முதல் கடலுக்கு மீன் பிடிக்க செல்வதற்கான அனுமதி டோக்கன் வழங்கத் தொடங்கினர்.
இதனால் நான்கு நாட்களுக்கு பிறகு இன்று காலை நாகை மாவட்ட விசைப்படகு மீனவர்கள் மற்றும் பைபர் படகு கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.
முன்னதாக மீனவர்கள் அவர்களுக்கு தேவையான டீசல், ஐஸ் உள்ளிட்ட மீன்பிடி உபகரணங்களைபடகுகளில் ஏற்றினர். பின்னர் அவர்களின் இஷ்ட தெய்வமான கடல் மாதாவை வணங்கி கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.
- 20-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் உள்ள மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
- ஆயிரக்கணக்கான பைபர் படகுகள் கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
வேதாரண்யம்:
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாகை மாவட்ட பைபர் படகு மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.
நாகை மாவட்ட பைபர் படகு மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் இலுவைமடிவலை மீன்பிடி முறையை தடை செய்ய வேண்டும், நேற்று நடைபெற்ற கோஷ்டி மோதலில் உயிரிழந்த மீனவர் குடும்பத்திற்கு நிவாரண உதவி வழங்க வேண்டும், நாகை மாவட்ட பைபர் படகு மீனவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும், கடலில் மாயமான மீனவரை தேடி கண்டுபிடிக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கீழ்வேளூர், வேதாரண்யம் தாலுக்கா கோடியக்கரை, ஆறுகாட்டுதுறை புஷ்பவனம் வாணவன்மகாதேவி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் உள்ள மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
இதனால் ஆயிரக்கணக்கான பைபர் படகுகள் கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. இதனால் வேதாரண்யம், கீழ்வேளூர் உள்ளிட்ட கடற்கரை பகுதியில் வெறிச்சோடி காணப்படுகின்றன. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
- நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தினர்.
- இந்தத் தாக்குதலில் முருகன் என்ற மீனவர் படுகாயம் அடைந்தார்.
நாகை:
நாகப்பட்டினம் மாவட்டம் செருதூர் மீனவ கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன். இவருக்கு சொந்தமான நாட்டுப் படகில் முருகன் மற்றும் அக்கரைபேட்டையை சேர்ந்த முத்து, முருகவேல், சின்னையன் உள்ளிட்ட 4 பேர் கடந்த 28-ம் தேதி காலை 11 மணியளவில் மீன் பிடி தொழிலுக்காக கடலுக்குச் சென்றனர். அவர்கள் கோடியக்கரையில் தென்கிழக்கே சுமார் 15 நாட்டிக்கல் தொலைவில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.
இந்நிலையில், நேற்று இரவு அவர்கள் நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருக்கும்போது அங்கு திடீரென படகில் இலங்கை கடற்கொள்ளையர்கள் வந்தனர். அவர்கள் முருகன் உள்ளிட்ட மீனவர்களிடம் பிடித்து வைத்துள்ள மீன்கள், மீன்பிடி வலைகள் மற்றும் தொழில்நுட்ப கருவிகளை கேட்டு மிரட்டினர். ஆனால் மீனவர்கள் அவற்றை கொடுக்க மறுத்தனர்.
இதனால் ஆத்திரமடைந்த இலங்கை கடற்கொள்ளையர்கள் மீனவர்களை இரும்பு கம்பி மற்றும் கட்டையால் தாக்கினர். இதில் படகின் உரிமையாளர் முருகனுக்கு தலை மற்றும் கைகளில் பலத்த காயம் ஏற்பட்டது. மற்ற 3 பேருக்கும் லேசான காயம் ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து மீனவர்கள் மீன்பிடிக்க பயன்படுத்திய மீன் வலை, ஜிபிஎஸ் கருவி, வாக்கி டாக்கி, டார்ச் லைட், செல்போன், உள்ளிட்ட சுமார் ரூ.3 லட்சம் மதிப்புள்ள பொருட்களை இலங்கை கடல் கொள்ளையர்கள் கொள்ளையடித்து தப்பிச்சென்றனர்.
பலத்த காயங்களுடன் இன்று அதிகாலை 3 மணி அளவில் கரை திரும்பிய மீனவர்களை செருதூர் மீனவர்கள் மீட்டு நாகை ஒரத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இச்சம்பவம் குறித்து வேளாங்கண்ணி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவர்கள் மீன்பிடி தடையை மீறி கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றார்களா என்ற கோணத்திலும் விசாரணை நடந்துவருகிறது.
மீன்பிடி தடைக்காலம் அமலில் உள்ள நிலையில் தமிழக எல்லையில் மீன்பிடித்துக் கொண்டிருந்த நாகை மாவட்டத்தைச் சேர்ந்த நாட்டு படகு மீனவர்கள் 4 பேர் இலங்கை கடற்கொள்ளையர்களால் தாக்கப்பட்ட சம்பவம் நாகை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






