search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Zomato"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 9.13 கோடி பிரியாணி ஆர்டர்கள் செய்யப்பட்டன.
    • இந்த வருடம் 5.84 கோடி பீட்சா ஆர்டர்கள் செய்யப்பட்டன.

    ஆன்லைன் மூலம் உணவுகள் ஆர்டர் செய்வதில் சொமேட்டோ செயலி முன்னணியாக இருந்து வருகிறது. இந்த செயலி 2024-ல் எவ்வளவு ஆர்டர் செய்யப்பட்டது என்பதை வெளியிட்டுள்ளது.

    அதன்படி பிரியாணி கடந்த 8 ஆண்டாக முதல் இடத்தை வகிக்கிறது. பீட்சா 2-வது இடம் வகிக்கிறது. 9.13 கோடி பிரியாணி ஆர்டர் செய்யப்பட்டுள்ளது. ஆனால் கடந்த ஆண்டு 10.09 கோடியாக இருந்த நிலையில் இந்த வருடம் 95 லட்சம் ஆர்டர்கள் குறைந்துள்ளன.

    பீட்சாவுக்காக இந்த வருடம் 5.84 கோடி ஆர்டர்கள் செய்யப்பட்டன. ஆனால் கடந்த வருடம் ஆர்டர் 7.45 கோடியாக இருந்தது. இந்த வருடம் 1.6 கோடி ஆர்டர் குறைந்துள்ளது. 20 சதவீதம் குறைவாகும்.

    சமீபத்தில் மற்றொரு ஆன்லைன் ஆர்டர் செயலியான ஸ்விக்கி பிரியாணி அதிக அளவில் ஆர்டர் செய்யப்பட்டதாகவும், 2-வதாக தோசை அதிக அளவில் ஆர்டர் செய்யப்பட்டதாகவும் குறிப்பிட்டிருந்தது.

    சொமேட்டோவில் ஒவ்வொரு இரண்டு வினாடிகளுக்கும் 3 பிரியாணிகள் ஆர்டர் செய்யப்படுகின்றன. ஸ்விக்கியில் ஒரு வினாடிக்கு 2-க்கும் அதிகமான பிரியாணிகள் ஆர்டர் செய்யப்படுகின்றன.

    • கோல்டன் டிக்கெட் வாங்கியவன் என்ற உரிமையில் இதை செய்தேன்
    • பாதுகாப்பு அதிகாரிகளை தாண்டி ஒரு மரத்தின் அருகில் சென்றேன்.

    பிரபல ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனமான சோமாடோ [ZOMATO] ஏற்பாடு செய்த பிரையன் ஆடம்ஸ் கச்சேரி சமீபத்தில் மும்பையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கழிவறை வசதி இல்லாததால் தனது கால் சட்டையிலேயே சிறுநீர் கழித்ததாக நீரழிவு நோயாளி ஒருவர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ZOMATO சிஇஓ தீபிந்தர் கோயலுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

    மீடியா மற்றும் பொழுதுபோக்கு நிபுணரான ஷெல்டன் அரன்ஜோ தனது கடிதத்தில், பிரையன் ஆடம்ஸ் கச்சேரியில் சிறுநீர் கழிக்கதான் நான் பணம் செலுத்தி டிக்கெட் வாங்கினேன் போலும்.

     

    பாம்பே கன்வென்ஷன் & எக்ஸிபிஷன் சென்டரின் குளிரூட்டப்பட்ட அரை எனக்கு சிறுநீரை வரவழைத்தது. அதற்காக நீண்ட அரிசில் கழிவறைக்கு முன் காத்துக்கிடந்தேன். ஆனால் வரிசை நகர்வதாக இல்லை. மற்றொரு வரிசைக்கு மாறினேன்.

    ஆனால் அதுவே OTHER CATAGORY கழிவறை, எனவே அங்கு நான் செல்ல முடியாது. எனவே கோல்டன் டிக்கெட் வாங்கியவன் என்ற உரிமையில் பாதுகாப்பு அதிகாரிகளை நைசாக தாண்டி ஒரு மரத்தின் அருகில் எனது அவஸ்த்தையை இறக்கி வைத்தேன்.

    ஆனால் அதற்கு முன்னதாகவே எனது சிறுநீர் பேண்டில் இறங்கி விட்டது. நான் ஒரு சர்க்கரை நோயாளி, எனவே இதை சொல்வதில் எனக்கு எந்த வெட்கமும் இல்லை,1000 விருந்தினர்களுக்கு மொத்தமே அங்கு 3 கழிவறைகள் ஒதுக்கிய நீங்கள் தான் வெட்கப்பட வேண்டும்  என்று அவர் தனது திறந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார். இந்த கடிதம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. 

     

    • பணியில் சேர்பவர்களுக்கு வித்தியாசமான நிபந்தணைகள் விதித்துள்ளார்.
    • ஃபீடிங் இந்தியாவுக்கு ரூ. 20 லட்சம் நன்கொடை அளிக்க வேண்டும்.

    ஜொமாட்டோ தலைமை செயல் அதிகாரி தீபிந்தர் கோயல் வெளியிட்ட வேலைவாய்ப்பு தொடர்பான அறிவிப்பு பேசு பொருளாகியுள்ளது. இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், தலைமை பணியில் சேர்பவர்களுக்கு வித்தியாசமான நிபந்தணைகள் விதித்துள்ளார்.

    அதன்படி இந்த பணியில் சேர்பவர்களுக்கு முதலாவது ஆண்டு முழுக்க சம்பளம் வழங்கப்படாது. மேலும், பணியில் சேர்பவர்கள் ஜொமாட்டோவின் லாப நோக்கற்ற அமைப்பான ஃபீடிங் இந்தியாவுக்கு ரூ. 20 லட்சம் நன்கொடை அளிக்க வேண்டும்.

    இதைத் தொடர்ந்து வெற்றிகரமான வேட்பாளர் தேர்வு செய்யும் தொண்டு நிறுவனத்திற்கு ரூ. 50 லட்சம் நன்கொடை வழங்குவதாக ஜொமாட்டோ தெரிவித்துள்ளது. இது புது வகையான கற்றல் வாய்ப்பு என ஜொமாட்டோ தெரிவித்துள்ளது. ஜொமாட்டோவின் இந்த அறிவிப்பு இணையத்தில் பேசு பொருளாகியுள்ளது.

    கோயல் அறிவித்து இருக்கும் இந்த தலைமை பதிவியில் பணியில் இணைவோர் ஜொமாட்டோவின் பல்வேறு பிராண்டுகளான ப்ளின்க்-இட், ஹைப்பர்-பியூர், டிஸ்ட்ரிக்ட் மற்றும் ஃபீடிங் இந்தியா உள்ளிட்டவைகளில் பணியாற்றுவர். கற்றுக் கொள்ள ஆர்வம் கொண்டவர்கள், உறுதியான தகவல் பரிமாற்ற திறன் உள்ளிட்டவை இந்த பணியில் இணைபவர்கள் அவசியம் கொண்டிருக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளது.

    • ஸ்விக்கியும் கட்டண அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
    • இந்த அறிவிப்பு பயனர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

    தீபாவளி பண்டிகை விரைவில் துவங்க இருக்கும் நிலையில், ஆன்லைன் உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்களான ஸ்விக்கி மற்றும் ஜொமாட்டோ பிளாட்ஃபார்ம் கட்டணத்தை உயர்த்தி இருப்பது வாடிக்கையாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

    பெங்களூருவை சேர்ந்த ஸ்விக்கி நிறுவனம் தனது உணவு டெலிவரி சேவைக்கான பிளாட்ஃபார்ம் கட்டணம் அக்டோபர் 23 ஆம் தேதி மட்டும் ரூ. 10 வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது. முன்னதாக ஜொமாட்டோ நிறுவனமும் இதே போன்ற கட்டண முறையை அறிவித்த நிலையில், ஸ்விக்கியும் கட்டண அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

    தீபாவளி பண்டிகையை ஒட்டி லாபம் ஈட்டும் நோக்கில் ஆன்லைனில் உணவு டெலிவரி செய்யும் பிளாட்ஃபார்ம் கட்டணத்தை விதித்துள்ளன. இந்த அறிவிப்பு பயனர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. மேலும், பலர் இது குறித்து சமூக வலைதளங்களில் கமெண்ட் செய்து வருகின்றனர்.

    • ஜொமாட்டோவில் உணவு டெலிவரி செய்யும் பணியை மேற்கொண்டார்.
    • ஜொமாட்டோ சி.இ.ஓ. பதிவுக்கு பலர் லைக்குகளை வழங்கினர்.

    இந்தியாவில் பிரபல ஆன்லைன் உணவு விற்பனை தளமாக ஜொமாட்டோ விளங்குகிறது. இந்நிறுவனத்தின் இணை நிறுவனரும், தலைமை செயல் அதிகாரியுமான தீபிந்திர் கோயல் தனது வழக்கமான பணிகளை விட்டுவிட்டு, ஜொமாட்டோவில் உணவு டெலிவரி செய்யும் பணியை மேற்கொண்டார்.

    இதற்காக ஜொமாட்டோ சீருடையில் தயாரான தீபிந்தர் உடன் அவரது மனைவி ஜியா கோயல் இணைந்து உணவு டெலிவரி செய்த கணவருக்கு உதவியாக செயல்பட்டார். இதுகுறித்த பதிவிட்ட கோயல், "சில நாட்களுக்கு முன் ஜியா கோயல் உடன் இணைந்து உணவு டெலிவரி கொடுக்க சென்றிருந்தேன்," என குறிப்பிட்டு, உடன் உணவு டெலிவரியின் போது அவர்கள் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை இணைத்து இருந்தார்.

     


    இவரது இந்த பதிவுக்கு பலர் லைக்குகளை வழங்க, சிலர் டெலிவரி பணியை எங்கள் பகுதியில் செய்யுங்கள் என்றவாரு கமென்ட் செய்தனர். பலர் இவரது செயல் பாராட்டுக்குரியது என்றும், சிலர் இவர் விளம்பரத்திற்காக இப்படி செய்கிறார் என்றும் கமென்ட் செய்துள்ளனர்.

    இது ஒருபுறம் இருக்க சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ஜொமாட்டோ சி.இ.ஓ. தீபிந்தர் கோயல், ஷார்க் டேன்க் இந்தியாவை போட்டி நிறுவனமான ஸ்விக்கி ஸ்பான்சர் செய்வதாகவும், அந்நிறுவனம் தன்னை புதிய சீசனில் இருந்து வெளியேற்ற முயற்சிப்பதாக கூறினார்.

    ஸ்விக்கி நிறுவனம் ஷார்க் டேன்க் இந்தியா புதிய சீசனை ஸ்பான்சர் செய்ய ரூ. 25 கோடி மதிப்பிலான ஒப்பந்தம் மேற்கொள்வதில் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    • தாமதமானதற்கு தொடர்ந்து மன்னிப்பு கேட்டார்.
    • இன்னமும் நான் பாதுகாப்பற்றதாக உணர்கிறேன் என்று கூறியுள்ளார்.

    ZOMATO டெலிவரி முகவரால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானேன் என பெண் ஒருவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    அந்த பதிவில், கடந்த செவ்வாய்க்கிழமை இரவு அகமதாபாத்தில் தொடர்மழை பெய்து கொண்டிருந்தது. அப்போது சோமாட்டோவில் காஃபி ஆர்டர் செய்தேன். என்னுடைய ஆர்டர் தாமதமாக வந்தாலும் மழை பெய்ததால் சூழ்நிலையை புரிந்துகொண்டேன்.

    ஸ்வேதாங் ஜோஷி என்ற டெலிவரி செய்யும் நபர் என்னுடைய ஆர்டரை கொண்டு வந்தார். தாமதமானதற்கு தொடர்ந்து மன்னிப்பு கேட்டார். பின்னர் தனது பாதத்தில் அடிபட்டதாக தொடர்ந்து சொல்லிக் கொண்டே இருந்தார். டார்ச் அடித்து பாதத்தை பார்க்க முயன்றபோது அவரது பிறப்புறுப்பு வெளிப்பட்டது. அப்போது அந்த நபர் சிரித்துக்கொண்டே கேலியாக தன்னிடம் உதவி செய்யுங்கள் எனக் கேட்டதாக பதிவிட்டுள்ளார்.

    மேலும், உடனடியாக ZOMATO நிறுவனத்திற்கு தெரிவித்ததாகவும் அவர்களின் பதில் மேலும் தன்னை துயரப்படுத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.

    அதிகாலை 1 மணிக்கு யாரும் பணத்தை திரும்பப்பெறுவதற்கு ZOMATO வாடிக்கையாளர் சேவையை தொடர்புகொள்ள மாட்டார்கள். எனக்கு நடந்த விஷயத்திற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தான் விரும்பினேன். ஆனால் அவர்கள் இருதரப்பிலும் என்ன நடந்தது என்று கேட்பதாக கூறினார்கள். மீண்டும் தொடர்பு கொள்வதாக கூறினார்கள் .ஆனால் இதுவரை தொடர்புகொள்ளவில்லை என்றும் தனது வருத்தத்தை தெரிவித்துள்ளார்.

    மேலும் ஒரு பதிவில், ZOMATO தன்னை தொடர்பு கொண்டதாகவும் தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும் கூறியுள்ளார். ஆனாலும், இன்னமும் நான் பாதுகாப்பற்றதாக உணர்கிறேன் என்று கூறியுள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ரூ.2,048 கோடி ரூபாய் பரிவர்த்தனை முடிவடைந்துள்ளது
    • book now, sell anytime அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது

    இந்தியாவில் முன்னணி உணவு டெலிவரி நிறுவனமாக திகழும் சொமேட்டோ நிறுவனம் சினிமா டிக்கெட் முன்பதிவுத் தொழிலில் கால்பதித்துள்ளது.

    சொமேட்டோவின் தாய் நிறுவனமான ஒன் 97 கம்யூனிகேஷன் Ltd நிறுவனம் பிரபல ஆன்லைன் பணப்பரிவார்த்தை செயலியான பே.டி.எம். இல் உள்ள சினிமா மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் டிக்கெட் முன்பதிவு பிசினஸ் கட்டமைப்பை ரூ.2,048 கோடி ரூபாய்க்கு வாங்க உள்ளதாக அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது இந்த பரிவர்த்தனை முடிவடைந்து வரும் செப்டெம்பர் 30 முதல் சொமேட்டோ செயலியின் மூலம் டிக்கெட் புக்கிங் சேவைகள் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    சொமேட்டோ செயலியில் அறிமுகமாகும் book now, sell anytime அம்சத்தின் மூலம் சினிமா, விளையாட்டு மற்றும் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கான ஆன்லைன் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய முடியும்.

    சொமேட்டோ இந்த கட்டமைப்பை வாங்கியிருந்தாலும், பயனர்களுக்கு சிரமம் ஏற்படாத வகையில் அடுத்த 12 மாதங்களுக்கு பே.டி.எம். செயலியிலும் டிக்கெட் முன்பதிவு நடைபெறும் என்று ஒன் 97 கம்யூனிகேஷன் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.  

    • உணவு டெலிவரி நிறுவனமாக நிகழ்ந்துவரும் சொமேட்டோ நிறுவனம் சினிமா டிக்கெட் முன்பதிவுத் தொழிலில் கால்பதிக்க உள்ளது.
    • சினிமா, விளையாட்டு மற்றும் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கான ஆன்லைன் டிக்கெட்டிங் பிஸ்னஸ் கைமாறுகிறது

    இந்தியாவில் முன்னணி உணவு டெலிவரி நிறுவனமாக நிகழ்ந்துவரும் சொமேட்டோ நிறுவனம் சினிமா டிக்கெட் முன்பதிவுத் தொழிலில் கால்பதிக்க உள்ளது.சொமேட்டோவின் தாய் நிறுவனமான ஒன் 97 கம்யூனிகேஷன் Ltd நிறுவனம் பிரபல ஆன் லைன் பணப்பரிவார்த்தை செயலியான பே.டி.எம். இல் உள்ள சினிமா மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் டிக்கெட் முன்பதிவு பிசினஸ் கட்டமைப்பை ரூ.2,048 கோடி ரூபாய்க்கு வாங்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

    இந்த பரிவர்த்தனையால் வாடிக்கையாளர்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் இடைப்பட்ட காலத்தில் 12 மாதங்களுக்கு மட்டும் பே.டி.எம். செயலியிலேயே டிக்கெட் முன்பதிவு நடைபெறும் என்று ஒன் 97 கம்யூனிகேஷன் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக ஒன் 97 நிறுவனம் மற்றும் பே.டி.எம். நிறுவனத்திற்கு இடையில் ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது.

    அதன்படி சினிமா, விளையாட்டு மற்றும் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கான ஆன்லைன் டிக்கெட்டிங் பிசினஸ் கைமாறுகிறது. டிஜிட்டல் யுகத்தில் அதிக லாபம் கொழிக்கும் தொழிலாக ஆன்லன் டிக்டிங் தொழில் உருவெடுத்துள்ளது குறிப்பிடத்தத்க்கது.

    • உணவு டெலிவரி நிறுவனங்கள் பல புதிய முயற்சிகளை இந்தியாவில் நடைமுறைப்படுத்தி வருகின்றன.
    • ஒடிசா, மேற்கு வங்காள மாநிலங்களில் மதுபானங்கள் ஹோம் டெலிவரிக்கு அனுமதி உள்ளது.

    புதுடெல்லி:

    இந்தியா மட்டுமின்றி உலக அளவில் ஆன்லைன் புட் ஆர்டர் மற்றும் டெலிவரி என்பது பொதுமக்கள் வாழ்க்கையின் ஓர் அங்கமாக மாறியுள்ளது. இந்தத் துறையில் இருக்கும் பல்வேறு நிறுவனங்கள் தொடர்ந்து வர்த்தகத்தை விரிவாக்கம் செய்துவருகின்றன.

    இந்த நிறுவனங்கள் உணவுக் கட்டணம் போக தங்களின் சேவைக்கான கட்டணத்தையும் வாடிக்கையாளர்களிடமிருந்து வசூலித்துக் கொள்கின்றன.

    மேலும், உணவு டெலிவரி நிறுவனங்கள் தங்களது முதலீட்டாளர்களுக்கு அதிகப்படியான லாபத்தையும், வருமானத்தையும் காட்ட வேண்டும் என்ற இலக்கை வைத்து செயல்பட்டு வருகின்றன. இதனால் பல்வேறு புதிய முயற்சிகளை இந்தியாவில் தற்போது இந்நிறுவனங்கள் நடைமுறைப்படுத்தி வருகின்றன.

    இதையடுத்து பீர், ஒயின் உள்ளிட்ட ஆல்கஹால் குறைவாக சேர்க்கப்பட்ட மதுபான வகைகளை ஆன்லைன் ஆர்டர் மூலம் ஹோம் டெலிவரி செய்ய சோமேட்டோ, ஸ்விக்கி மற்றும் பிக் பாஸ்கட் உள்ளிட்ட நிறுவனங்கள் திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

    ஏற்கனவே ஒடிசா, மேற்கு வங்காள மாநிலங்களில் மதுபானங்கள் ஹோம் டெலிவரிக்கு அனுமதி உள்ளது.

    இந்நிலையில், கர்நாடகா, அரியானா, தமிழ்நாடு, பஞ்சாப், கோவா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களிள் அனுமதி பெற்று மதுபானங்கள் ஹோம் டெலிவரியை நடைமுறைப்படுத்த நிறுவனங்கள் திட்டமிட்டு வருகின்றன.

    • வெப்ப அலையால் ஏற்படும் ஹீட் ஸ்ட்ரோக் காரணமாக இந்தியாவில் உயிரிழப்ப்பு எண்ணிக்கை 250 ஐ கடந்துள்ளது.
    • நாடு முழுவதும் உள்ள பெரு நகரங்கள் முதல் டவுன்கள் வரை இந்த டெலிவரி தொழிலாளர்கள் நாள் முழுவதும் சாலைகளின் குறுக்கும் நெடுக்குமாக அழைத்த வண்ணம் உள்ளனர்.

    இந்தியாவில் வழக்கத்தை மீறி இந்த வருடம் அளவுக்கு அதிகமான வெயில் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. வாடா மாநிலங்களான டெல்லி, ராஜஸ்தான், ஹரியானா உள்ளிட்ட இடங்களில் வரலாறு காணாத வெயில் பதிவாகியுள்ளது.

    வெப்ப அலையால் ஏற்படும் ஹீட் ஸ்ட்ரோக் காரணமாக இந்தியாவில் உயிரிழப்ப்பு எண்ணிக்கை 250 ஐ கடந்துள்ளது. முக்கியமாக மதியம் 12 மணி முதல் 4 மணி வரை நிலவும் அதீத வெப்ப அலையால், குழந்தைகள், பெண்கள், உடல் நலம் குன்றியோரர், இணை நோய்கள் உள்ளோர், நாள் முழுவதும் வெயிலில் வேலை செய்யக்கூடிய கட்டுமானப் பணிகள் உள்ளிட்டவற்றில் ஈடுபடும் தொழிலாளர்கள் ஆவர்.

     

    இந்த வகை தொழிலாளர்களில் கிக் ஒர்க்கர்ஸ் என்று அழைக்கப்படும் உணவு டெலிவரி, பொருட்கள் டெலிவரி செய்யும் தொழிலாளர்களும் அடங்குவர். டிஜிட்டல் மயமான உலகில் மக்கள் கடைகளுக்கு செல்வத்தைத் தவிர்த்து வீட்டிலிருந்தபடியே அனைத்தும் கிடைக்க வேண்டும் என்று விரும்புவதால் நாடு முழுவதும் உள்ள பெரு நகரங்கள் முதல் டவுன்கள் வரை இந்த டெலிவரி தொழிலாளர்கள் நாள் முழுவதும் சாலைகளின் குறுக்கும் நெடுக்குமாக அழைத்த வண்ணம் உள்ளனர்.

     

    இந்த நிலையில் சமாளிக்க முடியாத வகையில் அதிகரித்து வரும் வெயில் காரணமாக இந்தியாவின் முன்னணி உணவு டெலிவரி நிறுவனமான ஸோமாட்டோ வாடியளர்களுக்கு வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளது. ஸோமாட்டோ நிறுவனம் தனது அதிகாரபூர்வ எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது, இந்தியா முழுவதும் உள்ள நகரங்களில் வெப்பம் அதிகரித்து வருவதால், மிகவும் அத்தியாவசியமாக தேவைப்படாத பட்சத்தில் மதிய நேரங்களில் உணவு ஆர்டர் செய்வதை வாடிக்கையாளர்கள் தவிர்த்துக்கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளது

    தொழிலாளர்கள் மீது அக்கறை கொண்டு ஸோமாட்டோ வெளியிட்டுள்ள இந்த பதிவுக்கு நெட்டிசன்கள் தங்களின் ஆதாராவை தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையில் உண்மையாகவே தொழிலாளர்கள் மீது அக்கறை இருந்தால் மதிய நேரங்களில் உணவு ஆர்டர்களை ஏற்காமாட்டோம் என்று ஸ்வ்மாடோ அறிவித்திருக்க வேண்டும் என்ற விமர்சனங்களும் எழுந்துள்ளன. 

     

    • நான் சைவ உணவு மட்டும் சாப்பிடுபவன். இது என் மனதை பாதித்தது என பதிவிட்டிருந்தார்.
    • புகார்தாரரின் பில், போன் நம்பர் போன்றவற்றை சரிபார்க்க விரும்புகிறோம் என ஜொமோட்டோ கேட்டுக்கொண்டது.

    ஆன்-லைன் மூலம் வினியோகம் செய்யப்படும் பொருட்களில் சில நேரங்களில் பொருட்கள் மாற்றி வழங்கப்படுவதாக புகார்கள் எழுந்து வருகின்றன.

    இந்நிலையில் புனேவை சேர்ந்த பங்கஜ் சுக்லா என்பவர் ஆன்-லைன் மூலம் ஜொமோட்டோவில் சைவ உணவு ஆர்டர் செய்த நிலையில் அவருக்கு சிக்கன் பிரியாணி வினியோகம் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பான புகைப்படத்தை எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள பங்கஜ் சுக்லா தனது பதிவில் கூறி இருப்பதாவது:-

    புனேவின் கார்வே நகரில் உள்ள ஒரு கடையில் பன்னீர் பிரியாணி ஆர்டர் செய்தேன். ஆனால் எனக்கு வினியோகம் செய்யப்பட்ட அந்த பிரியாணியில் சிக்கன் துண்டு இருந்தது. நான் சைவ உணவு மட்டும் சாப்பிடுபவன். இது என் மனதை பாதித்தது என பதிவிட்டிருந்தார். அவரது இந்த பதிவு இணையத்தில் வைரலான நிலையில், அவரது பதிவுக்கு பலரும் ஆதரவு தெரிவித்து ஜொமோட்டோவுக்கு எதிராக விமர்சனங்களை பதிவிட்டனர்.

    இதைத்தொடர்ந்து ஜொமோட்டோ அவரது பதிவுக்கு பதில் அளித்தது. அதில், புகார்தாரரின் பில், போன் நம்பர் போன்றவற்றை சரிபார்க்க விரும்புகிறோம் என கேட்டுக்கொண்டது. இந்த விவகாரம் இணையதளத்தில் வைரலாகி விவாதத்தை ஏற்படுத்தி வருகிறது.

    • அதிக பணம் கொடுத்தால் சூப்பர் Fast டெலிவரி என்ற புதிய அம்சத்தை அறிமுகம் செய்வதற்கான சோதனை முயற்சியில் ஈடுபட்டுள்ளது
    • சோமேட்டோ நிறுவனம் ஒவ்வொரு ஆர்டருக்கும் உண்டான Platform Fee எனப்படும் கட்டணத்தையும் ₹5 ஆக உயர்த்துகிறது

    ஆன்லைன் உணவு நிறுவனமான சோமேட்டோ, கூடுதல் தொகை செலுத்தும் வாடிக்கையாளர்களுக்கு விரைவாக உணவை டெலிவரி செய்யும் வகையில் புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தவுள்ளது.

    இதற்கான சோதனை முயற்சியில் சொமேட்டோ நிறுவனம் ஈடுபட்டுள்ளது. முதல்கட்டமாக மும்பை, பெங்களூரு போன்ற நகரங்களில் இந்த சோதனை முயற்சி நடைபெறவுள்ளது.

    மேலும், சோமேட்டோ நிறுவனம் ஒவ்வொரு ஆர்டருக்கும் உண்டான தனது பிளாட்பார்ம் கட்டணத்தை 25% உயர்த்தியுள்ளது, இதன்படி ஒவ்வொரு ஆர்டருக்கும் கூடுதலாக 5 ரூபாய் வசூலிக்கப்படும். இந்த மாற்றம் டெல்லி, பெங்களூரு, மும்பை, ஹைதராபாத் மற்றும் லக்னோ போன்ற முக்கிய நகரங்களில் தற்போது அமலாகியுள்ளது.

    பிளாட்ஃபார்ம் கட்டணம் என்பது டெலிவரி கட்டணத்திற்கு மேல் வசூலிக்கப்படும் கூடுதல் கட்டணமாகும். 2023 ஆகஸ்ட் மாதத்தில் 2 ரூபாயாக அறிமுகப்படுத்தப்பட்ட பிளாட்பாரம் கட்டணம் தற்போது 5 ரூபாயாக உயர்ந்துள்ளது.

    ×