search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "2000 Note"

    • 2,000 ரூபாய் நோட்டுகள் வாபஸ் பெறப்பட்ட நாளில், ரூ.3 லட்சத்து 56 ஆயிரம் கோடி மதிப்புள்ள நோட்டுகள் புழக்கத்தில் இருந்தன.
    • கடந்த 29-ந் தேதி நிலவரப்படி, ரூ.8 ஆயிரத்து 470 கோடி மதிப்புள்ள 2,000 ரூபாய் நோட்டுகள் வங்கிக்கு வந்து சேரவில்லை.

    மும்பை:

    2,000 ரூபாய் நோட்டுகளை கடந்த ஆண்டு மே 19-ந் தேதி ரிசர்வ் வங்கி வாபஸ் பெற்றது. அவற்றை செப்டம்பர் 30-ந் தேதிக்குள் வங்கி கணக்கில் செலுத்தலாம் அல்லது வேறு நோட்டுகளாக மாற்றிக்கொள்ளலாம் என்று ரிசர்வ் வங்கி அறிவித்தது. பிறகு இந்த கால அவகாசம் அக்டோபர் 7-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. அதன்பிறகு குறிப்பிட்ட 19 ரிசர்வ் வங்கி அலுவலகங்களில் மட்டும் 2,000 ரூபாய் நோட்டுகள் மாற்றப்பட்டு வருகின்றன.

    இந்நிலையில், ரிசர்வ் வங்கி நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    2,000 ரூபாய் நோட்டுகள் வாபஸ் பெறப்பட்ட நாளில், ரூ.3 லட்சத்து 56 ஆயிரம் கோடி மதிப்புள்ள நோட்டுகள் புழக்கத்தில் இருந்தன. கடந்த 29-ந் தேதி நிலவரப்படி, ரூ.8 ஆயிரத்து 470 கோடி மதிப்புள்ள 2,000 ரூபாய் நோட்டுகள் வங்கிக்கு வந்து சேரவில்லை. அதாவது, 97.62 சதவீத நோட்டுகள் வங்கிக்கு திரும்பி வந்து விட்டன. .

    அந்த நோட்டுகளை 19 ரிசர்வ் வங்கி அலுவலகங்களில் நேரடியாக செலுத்தி மாற்றிக்கொள்ளலாம். அல்லது, எந்த தபால் நிலையத்திலும் 'இந்தியா போஸ்ட்' மூலமாக ரிசர்வ் வங்கி அலுவலகத்துக்கு அனுப்பி, தங்களது வங்கி கணக்கில் வரவு வைத்துக்கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • வாபஸ் அறிவிப்பு வெளியிடப்பட்டபோது, ரூ.3 லட்சத்து 56 ஆயிரம் கோடி மதிப்புள்ள 2,000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்தன.
    • எந்த தபால் நிலையத்தில் இருந்தும் ‘இந்தியா போஸ்ட்’ மூலமாக ரிசர்வ் வங்கி அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கலாம்.

    மும்பை:

    கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ந் தேதி, பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டது. அப்போது, புதிதாக 2,000 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன.

    கடந்த மே 19-ந் தேதி, அந்த நோட்டுகள் வாபஸ் பெறப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்தது. அவற்றை செப்டம்பர் 30-ந் தேதிக்குள் வங்கியில் மாற்றிக்கொள்ளலாம் அல்லது வங்கி கணக்கில் செலுத்தலாம் என்று அறிவித்தது. பின்னர், இந்த கால அவகாசம், அக்டோபர் 7-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.

    அதைத்தொடர்ந்து, 19 ரிசர்வ் வங்கி அலுவலகங்களில் மட்டும் அந்த நோட்டுகளை மாற்றிக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது.

    இந்நிலையில், ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    வாபஸ் அறிவிப்பு வெளியிடப்பட்டபோது, ரூ.3 லட்சத்து 56 ஆயிரம் கோடி மதிப்புள்ள 2,000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்தன. கடந்த 29-ந் தேதி நிலவரப்படி, 97.38 சதவீத நோட்டுகள், வங்கிக்கு திரும்பி விட்டன.

    மீதி ரூ.9 ஆயிரத்து 330 கோடி மதிப்புள்ள நோட்டுகள் இன்னும் புழக்கத்தில் உள்ளன. அவை தொடர்ந்து செல்லுபடி ஆகும்.அந்த நோட்டுகளை ரிசர்வ் வங்கி அலுவலகங்களில் நேரடியாக மாற்றிக்கொள்ளலாம் அல்லது எந்த தபால் நிலையத்தில் இருந்தும் 'இந்தியா போஸ்ட்' மூலமாக ரிசர்வ் வங்கி அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • வாபஸ் அறிவிப்பு வெளியிடப்பட்ட மே 19-ந் தேதி, ரூ.3 லட்சத்து 56 ஆயிரம் கோடி மதிப்புள்ள 2,000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்தன.
    • ரிசர்வ் வங்கி அலுவலகங்களில் 2,000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ளலாம்.

    மும்பை:

    ரிசர்வ் வங்கி, 2,000 ரூபாய் நோட்டுகள் வாபஸ் பெறப்படுவதாக கடந்த மே 19-ந் தேதி அறிவித்தது. அந்த நோட்டுகளை வங்கிக்கணக்கில் செலுத்தலாம் அல்லது வங்கியில் கொடுத்து வேறு மதிப்பு நோட்டுகளாக மாற்றிக்கொள்ளலாம் என்று கூறியது.

    இப்படி மாற்றிக்கொள்ள செப்டம்பர் 30-ந் தேதிவரை கால அவகாசம் அளிக்கப்பட்டது. அந்த அவகாசம் முடிந்தவுடன், நாடு முழுவதும் உள்ள 19 ரிசர்வ் வங்கி அலுவலகங்களில் மாற்றிக்கொள்ளலாம் என்று ரிசர்வ் வங்கி அறிவித்தது.

    இந்நிலையில், நேற்று முன்தினம் நிலவரப்படி, 97 சதவீத 2,000 ரூபாய் நோட்டுகள் வங்கிக்கு திரும்பி வந்து விட்டதாக ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    வாபஸ் அறிவிப்பு வெளியிடப்பட்ட மே 19-ந் தேதி, ரூ.3 லட்சத்து 56 ஆயிரம் கோடி மதிப்புள்ள 2,000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்தன. அக்டோபர் 31-ந் தேதி நிலவரப்படி, ரூ.10 ஆயிரம் கோடி மதிப்புள்ள 2,000 ரூபாய் நோட்டுகள் மட்டுமே புழக்கத்தில் உள்ளன.

    எனவே, 97 சதவீத 2,000 ரூபாய் நோட்டுகள் வங்கிக்கு திரும்பி வந்து விட்டன.

    ரிசர்வ் வங்கி அலுவலகங்களில் 2,000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ளலாம். அங்கு நேரில் செல்ல முடியாதபட்சத்தில், இந்தியா போஸ்ட் தபால் நிலையங்கள் மூலம் நோட்டுகளை அனுப்பும் வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சில இடங்களில் பெட்ரோல் விற்பனை நிலையங்களில் 2,000 ரூபாய் நோட்டுகள் வாங்கப்படுகின்றன.
    • 2,000 ரூபாயை பெட்ரோல் பங்க் மேலாளர் வாங்க மறுத்துவிட்டார்.

    சென்னை:

    2,000 ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்படுவதாகவும், அவற்றை செப்டம்பர் மாதத்துக்குள் வங்கியில் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம் என்றும் ரிசர்வ் வங்கி அண்மையில் அறிவித்தது. இதனையடுத்து பலரும் வங்கிகளில் கொடுத்து மாற்றி வருகிறார்கள்.

    சில இடங்களில் பெட்ரோல் விற்பனை நிலையங்களிலும் 2,000 ரூபாய் நோட்டுகள் வாங்கப்படுகின்றன. ஆனால் சமீபத்தில் உத்தரபிரதேசத்தில் 2,000 ரூபாய் நோட்டை வாங்க மறுத்த பெட்ரோல் பங்க் ஊழியர்கள், மோட்டார் சைக்கிளில் நிரப்பிய பெட்ரோலை உறிஞ்சி எடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதேபோல் ஒரு சம்பவம் சென்னையிலும் நடந்துள்ளது. சென்னை கொடுங்கையூரை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் ஹரி பிரசாத் (வயது 31). இவர் பெரம்பூர் பஸ் நிலையம் அருகே உள்ள பெட்ரோல் பங்கில் 100 ரூபாய்க்கு பெட்ரோல் போட்டு உள்ளார்.

    கையில் சில்லரை இல்லாததால் அங்கிருந்த ஊழியரிடம் 2,000 ரூபாய் கொடுத்தார். அதனை அந்த பெட்ரோல் பங்க் மேலாளர் வாங்க மறுத்துவிட்டார். மேலும் ஹரிபிரசாத்திடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு, சில்லரை இல்லாவிட்டால் மோட்டார் சைக்கிளில் போட்ட பெட்ரோலை உறிஞ்சி எடுத்துவிடு என்று ஊழியரிடம் கூறியதாக தெரிகிறது.

    இதனையடுத்து அந்த ஊழியர் பெட்ரோலை உறிஞ்சி எடுத்தார். இதுதொடர்பான வீடியோ காட்சிகள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தமிழகம் முழுவதும் வருகிற 7-ந்தேதி பள்ளிகள் திறக்கப்பட்டு புதிய கல்வியாண்டு தொடங்கப்பட உள்ளது.
    • பள்ளி திறப்பு தேதி மற்றும் கட்டணம் குறித்த தகவல்களை வாட்ஸ்-அப் மூலமாக தனியார் பள்ளிகள் தெரிவித்து வருகின்றனர்.

    பணகுடி:

    தமிழகம் முழுவதும் வருகிற 7-ந்தேதி பள்ளிகள் திறக்கப்பட்டு புதிய கல்வியாண்டு தொடங்கப்பட உள்ளது. கோடை விடுமுறை முடிவடைய உள்ள தருவாயில் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை மும்முரமாக நடைபெற்று வருகிறது.

    நெல்லை மாநகர் மற்றும் மாவட்டங்களில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவ-மாணவிகளுக்கு பள்ளி திறப்பு தேதி மற்றும் கட்டணம் குறித்த தகவல்களை வாட்ஸ்-அப் மூலமாக தனியார் பள்ளிகள் தெரிவித்து வருகின்றனர்.

    வருகிற செப்டம்பர் மாதம் 15-ந்தேதிக்குள் ரூ.2 ஆயிரம் நோட்டுக்களை வங்கிகளில் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம் என்று அறிவித்துள்ள மத்திய அரசு இதுதொடர்பாக பல்வேறு வழிகாட்டுதல்களையும் வழங்கி உள்ளது. ஆனால் பெட்ரோல் பங்க் உள்ளிட்ட இடங்களில் அந்த நோட்டுக்களை வாங்க மறுப்பதால் பெரும்பாலானவர்கள் சிரமம் அடைந்து வருகின்றனர். இந்நிலையில் பள்ளிகளில் ரூ.2 ஆயிரம் நோட்டுக்கள் வாங்கப்படாது என்ற நிர்வாகங்களின் அறிவிப்பால் மாணவ-மாணவிகளின் பெற்றோர் குழப்பத்தில் உள்ளனர்.

    • மகாதேவ் காட் பகுதியில் மாவட்ட ரிசர்வ் போலீஸ் படையினர் நக்சலைட்டுகளுக்கு எதிராக வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
    • பணத்தை பறிமுதல் செய்த போலீசார், 2 பேரையும் கைது செய்தனர்.

    பிஜாப்பூர்:

    2,000 ரூபாய் நோட்டுகள் வாபஸ் பெறப்படுவதால், மக்கள் தங்களிடம் இருக்கும் இந்த நோட்டுகளை வங்கிகளில் டெபாசிட் செய்து வருகின்றனர்.

    இந்த நிலையில் சத்தீஸ்கரின் பிஜாப்பூர் மாவட்டத்துக்கு உட்பட்ட மகாதேவ் காட் பகுதியில் மாவட்ட ரிசர்வ் போலீஸ் படையினர் நக்சலைட்டுகளுக்கு எதிராக வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக வந்த 2 பேர், போலீசாரை கண்டதும் ஓட்டம் பிடித்தனர். உடனே அவர்களை துரத்திப்பிடித்த போலீசார், அவர்களை சோதனையிட்டனர். இதில் அவர்களிடம் ரூ.6 லட்சத்துக்கு 2,000 ரூபாய் நோட்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அத்துடன் 11 வங்கி கணக்குப்புத்தகங்களும் இருந்தன.

    இந்த பணம் நக்சலைட்டு தளபதி மல்லேசுக்கு சொந்தமானது எனவும், அதை வங்கியில் டெபாசிட் செய்வதற்காக கொண்டு சென்றதும் விசாரணையில் தெரியவந்தது. ஏற்கனவே ரூ.2 லட்சத்தை வங்கியில் டெபாசிட் செய்ததையும் அவர்கள் ஒப்புக்கொண்டனர்.

    இதைத்தொடர்ந்து அந்த பணத்தை பறிமுதல் செய்த போலீசார், 2 பேரையும் கைது செய்தனர். இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.

    • டெல்லியில் ஒரு இறைச்சிக்கடை வியாபாரி தனது கடை முன்பு வைத்துள்ள ஒரு அறிவிப்பு டுவிட்டரில் பரவி வருகிறது.
    • ரூ.2 ஆயிரம் நோட்டுகளை கொடுங்கள், சுத்தமான இறைச்சிக் கடையான சர்தாரில் இருந்து ரூ.2,100-க்கு இறைச்சியை பெற்று செல்லுங்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

    இந்தியாவில் புழக்கத்தில் உள்ள 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வருகிற செப்டம்பர் 30-ந் தேதிக்குள் வங்கிகளில் மாற்றிக் கொள்ளலாம் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை பற்றி ஏராளமான மீம்ஸ்கள் சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.

    இந்நிலையில் டெல்லியில் ஒரு இறைச்சிக்கடை வியாபாரி தனது கடை முன்பு வைத்துள்ள ஒரு அறிவிப்பு டுவிட்டரில் பரவி வருகிறது. அதில், எங்களிடம் ரூ.2 ஆயிரம் நோட்டுகளை கொடுங்கள், சுத்தமான இறைச்சிக் கடையான சர்தாரில் இருந்து ரூ.2,100-க்கு இறைச்சியை பெற்று செல்லுங்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

    இதைப்பார்த்த நெட்டிசன்கள், கடையில் விற்பனையை அதிகரிக்க இது புதுமையான வழியாக இருப்பதாக கருத்துகளை பதிவிட்டு வருகிறார்கள்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 2000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறுவதற்கான முழு செயல் முறையும் இடையூறு இல்லாததாக இருக்கும்.
    • வட்டி விகித உயர்வை நிறுத்துவது என் கையில் இல்லை. அது கள நிலவரத்தை பொறுத்தது.

    புதுடெல்லி:

    ரூ.2 ஆயிரம் நோட்டுகள் அனைத்தையும் திரும்ப பெறும் பணியை ரிசர்வ் வங்கி நேற்று தொடங்கியது. செப்டம்பர் 30-ந் தேதி வரை அனைத்து வங்கிகளிலும் இந்த நோட்டை கொடுத்து வேறு ரூபாய் நோட்டுகளை பெற்று கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது.

    இந்த நிலையில் ரூ.2000 நோட்டுகளை மாற்றும் விவகாரத்தில் இதுவரை பெரிய பிரச்சினைகள் எதுவும் இல்லை என்று ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்ததாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    2000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறுவதற்கான முழு செயல் முறையும் இடையூறு இல்லாததாக இருக்கும். ரிசர்வ் வங்கி நிலைமை தொடர்ந்து கண்காணித்து வருகிறது. இதுவரை பெரிய பிரச்சினை எதுவும் ஏற்படவில்லை.

    வட்டி விகித உயர்வை நிறுத்துவது என் கையில் இல்லை. அது கள நிலவரத்தை பொறுத்தது.

    இவ்வாறு சக்தி காந்ததாஸ் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வெயில் தொடர்ந்து கடுமையாக நீடிப்பதால் பள்ளிகளுக்கான கோடை விடுமுறையை நீடிக்க வேண்டும்.
    • தூத்துக்குடியில் நேர்மையான கிராம நிர்வாக அதிகாரி கொலை செய்யப்பட்டதற்கும் 10 லட்சம். விஷ சாராயத்திற்கும் 10 லட்சம் என்பது என்ன நியாயம்?

    புதுச்சேரி:

    முத்தரையர் நினைவு நாளை முன்னிட்டு புதுவை-கடலூர் சாலை 100 அடி சாலை சந்திப்பில் அவரது உருவப்பட மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நாம் தமிழர் கட்சி சார்பில் நடந்தது.

    இதில் பங்கேற்ற கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் படத்திற்கு மரியாதை செலுத்தி கட்சி கொடியை ஏற்றினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    விஷ சாராய விவகாரத்தில் அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, செஞ்சி மஸ்தான் பதவி விலகி இருக்க வேண்டும். விஷ சாராயத்திற்கு அனைவரும் பதவி விலகி இருக்க வேண்டும். கொடநாடு கொலைக்கு எடப்பாடி பதவி விலகி இருக்க வேண்டும்.

    ஆனால் யாருக்கும் தார்மீக பொறுப்பு என்பது இல்லை. எடப்பாடி ஆட்சியில் கள்ளச்சாராயம் இருந்தது. ஆனால் மக்கள் சாகவில்லை. இப்போது சாராயத்துக்கு பலர் இறந்துள்ளனர். ஆட்சியாளர்களை தேர்வு செய்தது மக்கள். அவர்கள்தான் இனி முடிவு செய்வார்கள்.

    கவர்னரிடம் அ.தி.மு.க.வினர் கடிதம் கொடுக்கின்றனர். அப்படியென்றால் கொடநாடு கொலை விசாரணைக்கும் கடிதம் தரலாமா? தமிழக முதலமைச்சர் வெளிநாடுகளுக்கு ஏற்கனவே பலமுறை சென்றுள்ளார். அவர் சென்றதால் என்ன முதலீடு பெற்றார்?

    தொழில் வளர்ச்சி என்பது பசப்பு வார்த்தை. புதுவையில் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தை தொடங்குகின்றனர். இதில் நமது பாட்டனார் பற்றிய வரலாறு வருமா? தமிழ் இருக்கு என சொல்கிறார்கள். எங்கே இருக்கிறது? 12 ஆயிரம் மாணவர்கள் தமிழ் தேர்வு எழுத வரவில்லை. தமிழ், தமிழ் என கூறுகிறீர்கள். இரு தலைமுறை தாய்மொழியே இல்லாமல் வளர்ந்து விட்டது.

    தமிழ் எங்கு வாழ்கிறது? இதுதான் திராவிட மாடலா? நீண்ட காலமாக சூழ்ச்சி செய்து தமிழனை ஏமாற்றி விட்டார்கள். தமிழ் வாழ்க என மாநகராட்சியில் எழுதினால் போதுமா? கோப்பில் தமிழ் வேண்டாமா? கொஞ்ச நாளைக்கு இந்த கொடுமை போகும். பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தமிழைத்தேடி பயணம் செல்கிறார்.

    காலம் கடந்து விட்டது. ஒரு கடைத்தெருவில்கூட தமிழில் பெயர் பலகை இல்லை. ஒரு வானூர்தியில் ஓட்டுநர் தமிழில் அறிவிப்பு வெளியிட்டார் என அனைவரும் கைதட்டினார்கள். தமிழ் உணர்வு அனைவருக்கும் இருக்கு. டாக்டர் ராமதாஸ் 80 வயதிலும் தமிழை தேடி செல்கிறார், அவரை பாராட்டுகிறேன். அடுத்து வருபவர்கள் இதை தொடர வேண்டும்.

    வெயில் தொடர்ந்து கடுமையாக நீடிப்பதால் பள்ளிகளுக்கான கோடை விடுமுறையை நீடிக்க வேண்டும். மரணமடைந்த விவசாயிகள், இலங்கை தமிழர்கள் கொலை, பல கொடிய சம்பவங்களுக்கு தமிழக அரசு தொகை கொடுத்ததா?

    தூத்துக்குடியில் நேர்மையான கிராம நிர்வாக அதிகாரி கொலை செய்யப்பட்டதற்கும் 10 லட்சம். விஷ சாராயத்திற்கும் 10 லட்சம் என்பது என்ன நியாயம்? காய்ச்சுவதே அவர்கள் என்பதால் பணம் கொடுத்து மறைக்க பார்க்கிறார்கள். இனி மனமுடைந்தால் விஷம் குடிக்க தேவையில்லை. கள்ளசாராயம் குடித்தால் ரூ.10 லட்சம் கிடைக்கும்.

    ரூ.2 ஆயிரம் நோட்டை திரும்ப பெறுவது பைத்தியக்காரத்தனம். வேலையில்லா தையல்காரன் யானைக்கு டவுசர் தைத்த கதைதான் 2 ஆயிரம் ரூபாய் நோட்டு திரும்ப பெறுவது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • ஜொமாட்டோ டி-சர்ட் அணிந்த ஊழியர் ஒருவர் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளின் மீது படுத்து கிடக்கிறார்.
    • ரிசர்வ் வங்கியின் அறிவிப்புக்கு பிறகு தங்களுக்கு வரும் டெலிவரி ஆர்டர்களில் 72 சதவீதம் பேர் ரூ.2 ஆயிரம் நோட்டுகளை கொடுப்பதாக ஜொமாட்டோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

    புழக்கத்தில் உள்ள 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் இன்று முதல் வங்கிகளில் மாற்றி கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டு உள்ள நிலையில், பொதுமக்கள் சிலர் தங்களிடம் உள்ள 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கு பல்வேறு வகைகளை கையாண்டு வருகிறார்கள்.

    அந்த வகையில் உணவு டெலிவரி செய்யும் நிறுவனமான ஜொமாட்டோவில் ஆர்டர் செய்யும் வாடிக்கையாளர்கள் கடந்த சில நாட்களாக தங்கள் உணவுக்குரிய பணத்தை 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை கொடுத்து மாற்றுகிறார்கள்.

    இது தொடர்பாக ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அதில் ஜொமாட்டோ டி-சர்ட் அணிந்த ஊழியர் ஒருவர் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளின் மீது படுத்து கிடக்கிறார். இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது. இதற்கிடையே, ரிசர்வ் வங்கியின் அறிவிப்புக்கு பிறகு தங்களுக்கு வரும் டெலிவரி ஆர்டர்களில் 72 சதவீதம் பேர் ரூ.2 ஆயிரம் நோட்டுகளை கொடுப்பதாக ஜொமாட்டோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

    • இந்தியாவில் புழக்கத்தில் உள்ள 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
    • 2 ஆயிரம் ரூபாய் தாளை இனி எப்போ பார்க்க போறேனோ?

    இந்தியாவில் புழக்கத்தில் உள்ள 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

    இந்நிலையில் நடமாடும் நகைக்கடை என அழைக்கப்படும் மதுரை வரிச்சியூர் செல்வம் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வைத்து வெளியிட்டுள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    அதில், ரூ.2 ஆயிரம் தாளா போகுது. ஒருவாட்டி முகர்ந்துகிறேன். இந்த 2 ஆயிரம் ரூபாய் தாளை இனி எப்போ பார்க்க போறேனோ? தலைவா திரும்பவும் 2 ஆயிரம் ரூபாய் தாளை போட்டிங்கனா சொல்லிட்டு செய்யுங்க. இருக்கிற 2 ஆயிரம் ரூபாய் தாள் பூரா இப்படி வெட்டியா போகுது.

    ஓகே மகிழ்ச்சி, விடை கொடுக்கிறேன் உனக்கு. போயிட்டு வா ஆத்தா... எங்களை காக்கும் தெய்வம் நீ.. எங்களை விட்டு போற... என கூறியுள்ளார்.

    • தமிழகத்தில் 12 பொதுத்துறை வங்கிகள், 30 தனியார் வங்கிகள் மூலம் மாநிலம் முழுவதும் சுமார் 8 ஆயிரம் கிளைகள் உள்ளன.
    • 8 ஆயிரம் கிளைகளிலும் 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.

    சென்னை:

    2000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறுவதாக ரிசர்வ் வங்கி கடந்த வெள்ளிக்கிழமை அறிவித்தது.

    2000 ரூபாய் நோட்டுகளை வைத்திருப்பவர்கள் மே 23-ந்தேதி அனைத்து வங்கிகளிலும் அதை கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் அல்லது டெபாசிட் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டது. இதற்காக செப்டம்பர் 30-ந்தேதி வரை கால அவகாசமும் வழங்கப்பட்டுள்ளது.

    2000 ரூபாய் நோட்டுகளை மாற்றும் நடவடிக்கை இன்று தொடங்கியது. இதற்காக அனைத்து வங்கிகளிலும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. 2000 ரூபாய் நோட்டுகள் அதிகளவு வந்தால் அவற்றை மாற்றி கொடுப்பதற்கு ஏற்ப பணத்தை கையிருப்பு வைத்திருக்க வேண்டும் என்று ஏற்கனவே ரிசர்வ் வங்கி அறிவுறுத்தி இருந்தது.

    அதன்பேரில் அனைத்து வங்கிகளிலும் கடந்த வெள்ளிக்கிழமையே தேவையான அளவுக்கு 200 ரூபாய், 500 ரூபாய் நோட்டுகள் இருப்பு வைக்கப்பட்டன. சென்னை ரிசர்வ் வங்கி கிளையிலும் அதிகளவு பணம் இருப்பு வைக்கப்பட்டது.

    2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற வருபவர்களுக்கு வங்கிகளில் உரிய வசதி செய்து கொடுக்கப்பட வேண்டும் என்று ரிசர்வ் வங்கி கூறி இருந்தது. அதை ஏற்று பெரும்பாலான வங்கிகளில் 2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற தனி இட வசதி உருவாக்கப்பட்டு இருந்தது. சில வங்கிகளில் மக்கள் கூட்டமாக வரலாம் என்று கருதி தனி வரிசை அமைத்து கொடுத்து இருந்தனர்.

    முதியோர்கள் வங்கிக்கு வரும் பட்சத்தில் அவர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு இருந்தது. அதுபோல மாற்றுத்திறனாளிகளுக்கும் தனி இடவசதி செய்து கொடுக்கப்படும் என்று கூறப்பட்டு இருந்தது.

    அதன்படி மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள் வருகை தந்தபோது அவர்களுக்கு முதலில் பணத்தை மாற்றி கொடுத்து அனுப்பினார்கள்.

    தற்போது கோடை வெயில் உச்சத்தில் இருப்பதால் 2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற வருபவர்களை வங்கிகளில் நீண்ட நேரம் காத்திருக்க செய்யக்கூடாது என்று சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. வங்கிக்கு வருபவர்களின் தாகத்தை தீர்ப்பதற்கு தண்ணீர் வசதியும் செய்து கொடுக்கப்பட்டு இருந்தது.

    கடந்த 2016-ம் ஆண்டு பணமதிப்பிழப்பு செய்யப்பட்ட போது வங்கிகளிலும், ஏ.டி.எம். மையங்களிலும் மக்கள் ஆயிரக்கணக்கில் திரண்டு பணத்தை மாற்ற போட்டி போட்டனர். இதனால் பெரும்பாலான வாடிக்கையாளர்கள் கடும் அவதிக்குள்ளாக நேரிட்டது.

    ஆனால் தற்போது 2000 ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்படும் என்று மட்டுமே அறிவிக்கப்பட்டு உள்ளது. செல்லாது என்று அது அறிவிக்கப்படவில்லை. இதன் காரணமாக வங்கிகளுக்கு 2000 ரூபாய் நோட்டுகளுடன் வந்தவர்களின் எண்ணிக்கை மிக குறைவாகவே இருந்தது.

    சென்னையில் கொத்தவால் சாவடி உள்பட சில இடங்களில் மட்டுமே குறிப்பிட்ட சில வங்கிகளில் 2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற அதிகம் பேர் திரண்டிருந்தனர். மற்ற வங்கிகளில் ஓரிருவர் மட்டுமே வந்து சென்றதை காண முடிந்தது.

    பல வங்கிகளில் இன்று காலை நிலவரப்படி எதிர்பார்த்த அளவுக்கு கூட்டம் இல்லை. 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ள அவகாசம் நீட்டிக்கப்படலாம் என்பதால் மக்கள் மத்தியில் எந்த அவசரமும் காணப்படவில்லை என்பதை பார்க்க முடிந்தது.

    2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற கணக்கு வைத்திருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. விண்ணப்பம் ஏதும் பூர்த்தி செய்து கொடுக்க வேண்டிய அவசியமும் இல்லை என்று கூறப்பட்டு இருந்ததால் பொதுமக்கள் மிக எளிதாக 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றி சென்றனர். மொத்தமாக அதிகளவு 2000 ரூபாய் நோட்டுகளுடன் வந்தவர்களிடம் மட்டுமே அடையாள அட்டை கேட்கப்பட்டது.

    மற்றபடி ஏ.டி.எம். மூலம் 2000 ரூபாய் நோட்டுகளை பல இடங்களில் டெபாசிட் செய்தனர். சில வங்கிகளில் எழுதி கொடுத்தும் டெபாசிட் செய்தனர். ஒருவர் 10 நோட்டுகளை மட்டுமே மாற்ற முடியும் என்ற நிலை இருந்ததால் அதற்கேற்ப வசதிகள் செய்யப்பட்டு இருந்தன.

    நகர் பகுதிகளில் அதிக வாடிக்கையாளர்கள் வந்து செல்லும் வங்கிகளில் 2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற சற்று கூட்டம் வரலாம் என்று எதிர்பாார்க்கப்பட்டது. இதனால் வங்கிகளில் டோக்கன் வழங்கி அதன் அடிப்படையில் பணத்தை மாற்றிக் கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.

    சில வங்கிகளில் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருந்தன.

    தமிழகத்தில் 12 பொதுத்துறை வங்கிகள், 30 தனியார் வங்கிகள் மூலம் மாநிலம் முழுவதும் சுமார் 8 ஆயிரம் கிளைகள் உள்ளன. இந்த 8 ஆயிரம் கிளைகளிலும் 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.

    2000 ரூபாய் நோட்டுகள் மாற்றும் நடவடிக்கைகள் தொடங்கி இருப்பதால் கடைகளில் இந்த நோட்டுகளை வாங்க வியாபாரிகள் மறுக்கிறார்கள். அரசு சார் நிறுவனங்களிலும் 2000 ரூபாய் நோட்டுகளை வாங்க மறுக்கிறார்கள்.

    பெட்ரோல் நிலையங்கள், பஸ்கள் மற்றும் மால்களிலும் 2000 ரூபாய் நோட்டுகளை கொடுக்க இயலவில்லை. இதனால் வங்கிகளில் மட்டுமே இனி 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ள முடியும் நிலை ஏற்பட்டுள்ளது.

    ×