என் மலர்
நீங்கள் தேடியது "Restaurant Owner"
- முந்தைய மூன்று நாட்களின் விற்பனையைப் பொறுத்து பரிமாற்றங்கள் தினமும் தீர்க்கப்படும்.
- தினசரியாக மாற்றுவது என்பதை சொமேட்டோ பிசினஸ் பார்ட்னர் ஆப் மூலம் நிறைவேற்றலாம்.
உணவு விநியோக செயலியான சொமேட்டோ, தனது வலைத்தளத்தில், சிறிய உணவகங்களின் வணிகங்களுக்கான தினசரி கட்டணத் திட்டத்தை அறிமுகப்படுத்துவதாக அறிவித்தது.
இந்த திட்டம் உணவகங்கள் தங்கள் வாராந்திர கட்டண திட்டத்தால் வரும் நிதி சிக்கல்களை சமாளிக்க மற்றும் வருவாயை அடிக்கடி பெற உதவி செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டம் சிறிய அளவிலான உணவகங்களுக்கானது மற்றும் ஒரு உணவகத்திற்கு மாதத்திற்கு 100 ஆர்டர்கள் இருந்தால், அது தினசரி கட்டண திட்டத்துக்கு மாற்றப்படும். வாரந்தோறும் அல்லது தினசரியாக மாற்றுவது என்பதை சொமேட்டோ பிசினஸ் பார்ட்னர் ஆப் மூலம் நிறைவேற்றலாம். மாறுவதற்கு கூடுதல் கட்டணங்கள் எதுவும் இல்லை.

முந்தைய மூன்று நாட்களின் விற்பனையைப் பொறுத்து பரிமாற்றங்கள் தினமும் தீர்க்கப்படும். உணவக உரிமையாளர்கள் தங்கள் செயல்பாடுகளை வளர்த்துக் கொள்ளும்போதும், பிரபலமான நிறுவனங்களைக் கையாளும் போதும் உணவு விநியோகத்தின் போட்டித் துறையில் பல தடைகளை எதிர்கொள்கின்றனர்.
"செயல்திறன் மூலதனம் மற்றும் நிலையான பணப்புழக்கம் ஆகியவை அவர்களின் வெற்றிக்கான மிக முக்கியமான இரண்டு கூறுகள்" என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
- ராமர் படம் இருக்கும் பேப்பர் தட்டுகளில் பிரியாணி வழங்க கூடாது என்று பஜ்ரங் தள் உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்
- மத உணர்வுகளை புண்படுத்தும் நோக்கத்தில் வேண்டுமென்றே இதைச் செய்தார்களா என்றும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்
டெல்லி ஜஹாங்கிர்புரி பகுதியில் ராமரின் படம் இருக்கும் பேப்பர் தட்டில், பிரியாணி பரிமாறியதாக சமூக வலைதளங்களில் வீடியோ பரவியது.
இதை அறிந்த உள்ளூர் மக்களும் பஜ்ரங் தள் உறுப்பினர்களும் கடையைச் சுற்றி, கும்பலாக திரண்டு ராமர் படம் இருக்கும் பேப்பர் தட்டுகளில் பிரியாணி வழங்க கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் காவல்துறையில் இது தொடர்பாக புகார் அளித்தனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் உணவக உரிமையாளரை கைது செய்தனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் மார்க்கெட்டிங் நோக்கத்திற்காக இதைச் செய்தார்களா அல்லது மத உணர்வுகளை புண்படுத்தும் நோக்கத்தில் வேண்டுமென்றே இதைச் செய்தார்களா என்றும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.






