

பெங்களூருவில் ஜெப்டோ டெலிவரி ஊழியர் வாடிக்கையாளரைத் தாக்கிய சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
பெங்களூருவின் பசவேஸ்வரநகர் பகுதியில் மே 21 அன்று நடந்த இந்த சம்பவத்தின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
வாடிக்கையாளர் ஷஷாங்க் கூறுகையில், தனது வீட்டிற்கு டெலிவரி வந்தபோது, டெலிவரி ஊழியர் விஷ்ணுவர்தன் தவறான முகவரியைக் கொடுத்ததற்காக தனது மைத்துனி மீது கோபமடைந்தார்.
டெலிவரி ஊழியர் நடத்தையைப் பற்றி தான் கேள்வி எழுப்பியபோது, அவர் தன்னை திட்டி அடித்தார்.
இந்த தாக்குதலுக்குப் பிறகு மருத்துவமனையில் சி.டி ஸ்கேன் செய்ததில் கண்ணுக்குக் கீழே உள்ள எலும்பு உடைந்துள்ளதாகவும், அது விரைவில் குணமடையவில்லை என்றால், அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருக்கும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்ததாகவும் ஷஷாங்க் தெரிவித்தார்.
காவல்துறையில் புகார் அளித்து, இந்த வீடியோவை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார்.
A #Bengaluru businessman, has alleged he was assaulted by a #Zepto delivery agent, following an address-related dispute. The #CCTV footage shows - there were arguments between a customer and Zepto delivery agent, following that the customer pushed the delivery agent and later… pic.twitter.com/C9cxGcyVXe