17வது மாடியில் இருந்து குதித்து தொழிலதிபர் தற்கொலை.. கடவுளிடம் கைகூப்பி பிரார்த்தனை செய்த வீடியோ

தனது காரில் வந்து இறங்கிய சந்தர்கனி நேராக கட்டிடத்தின் 17வது மாடியில் ஏறினார்.வாட்ச்மேன் அவரை சமாதானம் செய்து 10வது மாடி வரை அழைத்து வந்தார்.
17வது மாடியில் இருந்து குதித்து தொழிலதிபர் தற்கொலை.. கடவுளிடம் கைகூப்பி பிரார்த்தனை செய்த வீடியோ
Published on

மகாராஷ்டிராவின் சோலாப்பூரை சேர்ந்த தொழிலதிபர் சுனில் மோதிலால் சந்தர்கனி (59). இவர் முல்தானி என்ற பிரபல பேக்கரி ஒன்றை நடத்தி வருகிறார்.

நேற்று மதியம், சோலாப்பூரின் விஜய்பூர் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றுக்கு தனது காரில் வந்து இறங்கிய சந்தர்கனி நேராக கட்டிடத்தின் 17வது மாடியில் ஏறினார்.

மொட்டை மாடியின் விளிம்பில் நின்று கடவுளிடம் கைகூப்பி சந்தர்கனி பிரார்த்தனை செய்த வண்ணம் இருந்தார். அவரை கண்ட வாட்ச்மேன் வேகமாக மேலே சென்று அவரை கீழே அழைத்து வர முயன்றார்.

அவரை சமாதானம் செய்த வாட்ச்மேன், அவருடன் கீழே இறங்கினார். ஆனால் 17வது மாடியில் இருந்து 10வது மாடிக்கு இருவரும் வந்தபோது சந்தர்கனி, தனது கார் சாவியை மேலேயே மறந்து வைத்துவிட்டதாக கூறி மீண்டும் 17வது மாடிக்கு சென்று அங்கிருந்து கீழே குதித்தார்.

அவர் பலத்த காயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுவதற்கு முன்பு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இறந்தார். இதுதொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து தற்கொலைக்கான காரணங்களை விசாரித்து வருகின்றனர்.

அவர் கைகூப்பி பிரார்த்தனை செய்த சிசிடிவி காட்சி தற்போது வேகமாக பரவி வருகிறது. 

X

Maalai Malar
www.maalaimalar.com