என் மலர்
நீங்கள் தேடியது "Rich List"
- பல்வேறு தொழில்களில் நடிகர் ஷாருக் கான் தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறார்.
- உலக பணக்கார நடிகர்கள் பட்டியலில் ஷாருக்கானுக்கு அடுத்தபடியாக 'டெய்லர் ஸ்விப்ட் உள்ளார்.
இந்தியப் பணக்கார நடிகர்கள் பட்டியல் முதலிடம் பிடித்து வந்த ஷாருக்கான் முதல்முறையாக உலக பணக்கார நடிகர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார்.
The Hurun India வெளியிட்டுள்ள பட்டியலில் 1.4 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் ரூ.12,490 கோடி) சொத்து மதிப்புடன் ஷாருக்கான் முதலிடம் பிடித்துள்ளார்
திரைத்துறை மட்டுமின்றி பல்வேறு தொழில்களில் நடிகர் ஷாருக் கான் தீவிரமாக கவனம் செலுத்தி வருவதே இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. உலகளவில் பிரபலமான ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மற்றும் சொந்த படத்தயாரிப்பு நிறுவனம் ரெட் சில்லீஸ் என்டர்டெயின்மென்ட் உள்ளிட்டவை ஷாருக் கானுக்கு சொந்தமானவை ஆகும்.
உலக பணக்கார நடிகர்கள் பட்டியலில் ஷாருக்கானுக்கு அடுத்தபடியாக 'டெய்லர் ஸ்விப்ட்' 1.3 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் 2 ஆம் இடம் பிடித்துள்ளார். ஜெர்ரி செய்ன்ஃபெல்ட் 1.2 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் 3 ஆம் இடம் பிடித்துள்ளார்.
பிரபல அமெரிக்க பாடகி செலினா கோமஸ் 720 மில்லியன் டாலர் சொத்துமதிப்புடன் 4 ஆம் இடம் பிடித்துள்ளார்.
டாப் 5 இந்தியப் பணக்காரர்கள் பட்டியல்:
1. ஷாருக் கான் மற்றும் குடும்பத்தார் மொத்த சொத்து மதிப்பு ரூ.12,490 கோடி
2. ஜூஹி சாவ்லா மற்றும் குடும்பத்தார் மொத்த சொத்து மதிப்பு ரூ.7,790 கோடி
3. ஹிருத்திக் ரோஷன் மொத்த சொத்து மதிப்பு ரூ.2,160 கோடி
4. கரண் ஜோஹர் மொத்த சொத்து மதிப்பு ரூ.1,880 கோடி
5. அமிதாப் பச்சன் மற்றும் குடும்பத்தர் மொத்த சொத்து மதிப்பு ரூ.1,630 கோடி
- பணக்காரர்கள் பட்டியலில் எலான் மஸ்க் சில மணிநேரங்கள் 2 ஆம் இடத்தில் இருந்தார்.
- 384 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்து மதிப்புடன் மஸ்க் மீண்டும் முதலிடத்தை பிடித்தார்.
ப்ளூம்பர்க் வெளியிட்ட உலக பணக்காரர்கள் பட்டியலில் எலான் மஸ்க்கை பின்னுக்கு தள்ளி, ஆரக்கிள் நிறுவனத்தின் இணை நிறுவனர் லேரி எல்லிசன் முதலிடம் பிடித்து அசத்தினார். ஆனால் அடுத்த சில மணிநேரங்களில் எலான் மஸ்க் மீண்டும் முதல் இடம் பிடித்தார்.
ஆரக்கிள் நிறுவன பங்குகளில் திடீர் உயர்வால் உலக பணக்காரர்களின் பட்டியலில் சில மணிநேரம் லேரி எல்லிசன் முதலிடம் பிடித்திருந்தார்.
தற்போது 384 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்து மதிப்புடன் மஸ்க் தன்னுடைய முதலிடத்தை தக்கவைத்துள்ளார்.
383 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்து மதிப்புடன் லேரி எல்லிசன் 2 ஆம் இடம் பிடித்துள்ளார். 264 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்து மதிப்புடன் மெட்டா நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க் 3 ஆம் இடமும் 252 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்து மதிப்புடன் அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசாஸ் 4 ஆம் இடம் பிடித்துள்ளார்.
- கடந்த 2023 ஜனவரி மாதம் அதானி குழுமம் முறைகேடுகளில் ஈடுபட்டதாக ஹிண்டன்பெர்க் அறிக்கை வெளியாகி அந்நிறுவனத்துக்கு சறுக்கலை ஏற்படுத்தியது.
- வர்த்தகத்தில் அதானியின் பங்குகளின் மதிப்பு கடந்த வெள்ளிக்கிழமை (மே 31) 14 சதவீதம் வரை அதிகரித்துள்ளது
இந்தியாவின் பெரும் பணக்காரர்களான கவுதம் அதானி மற்றும் முகேஷ் அம்பானி ஆகியோரின் நிறுவனங்கள் தொடர்ந்து லாபம் ஈட்டி வருகிறது. இதற்கிடையே பணக்காரர்கள் பட்டியலில் இருவரில் யார் முந்துகிறார்கள் என்ற போட்டி ஆரம்பம் முதலே நிலவி வருகிறது.

அந்த வகையில் ஆசிய பணக்காரர்கள் பட்டியலில் அம்பானியை பின்னுக்குத் தள்ளி கவுதம் அதானி மீண்டும் முன்னிலைக்கு வந்துள்ளார். கடந்த 2022 ஆம் ஆண்டு உலக பொருளாதாரம் சரிவில் இருந்த சமயத்தில் அதானியின் நிறுவனம் அதிக லாபத்தை சேர்த்துக் குவித்ததால் அவர் ஆசியப் பணக்காரர்கள் பட்டியலில் இடம்பெற்றார்.
ஆனால் கடந்த 2023 ஜனவரி மாதம் அதானி குழுமம் முறைகேடுகளில் ஈடுபட்டதாக ஹிண்டன்பெர்க் அறிக்கை வெளியாகி அந்நிறுவனத்துக்கு சறுக்கலை ஏற்படுத்தியது. இந்திய அரசியலிலும் ஹிண்டன்பெர்க் அறிக்கை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் சமீபத்தில் அதானி குழுமத்தின் விமான சேவை வர்த்தகம் குறிப்பிடத்தக்க வகையில் லாபம் ஈட்டியுள்ளது.

இதன்காரணமாக வர்த்தகத்தில் அதானியின் பங்குகளின் மதிப்பு கடந்த வெள்ளிக்கிழமை (மே 31) 14 சதவீதம் வரை அதிகரித்துள்ளதால் ப்ளூம்பெர்க் கறிக்கையின்படி, உலக பணக்காரர்கள் பட்டியலில் 12 ஆவது இடத்துக்கு அம்பானியை பின்னுக்குத் தள்ளி அதானி 11 ஆவது இடத்தைப் பிடித்துள்ளள்ளார். தற்போதைய நிலவரப்படி முறையே கவுதம் அதானியின் சொத்து மதிப்பு 111 பில்லியன் டாலராகவும் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 109 பில்லியன் டாலராகவும் உள்ளது.

- இந்தியாவின் பணக்காரர் பட்டியலை அமெரிக்காவின் பிரபல ஃபோர்ப்ஸ் [Forbes] இதழ் வெளியிட்டுள்ளது.
- இது அம்பானி கடந்த ஒரே ஆண்டில் சேர்த்த சொத்தை விட இரண்டு மடங்கு அதிகம் ஆகும்.
இந்தியாவின் பணக்காரர் பட்டியலை அமெரிக்காவின் பிரபல ஃபோர்ப்ஸ் [Forbes] இதழ் வெளியிட்டுள்ளது. கடந்த அக்டோபர் 9 ஆம் தேதி வெளியான அந்த பட்டியலின்படி 2024 ஆம் ஆண்டில் 100 இந்தியப் பணக்காரர்களில் தொழிலதிபர் முகேஷ் அம்பானி முதலிடம் பிடித்துள்ளார்.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் உள்ளிட்டவற்றின் சொந்தக்காரரான அம்பானி நடப்பு ஆண்டில் 27.5 பில்லியன் டாலர்கள் வரை கூடுதலாக சொத்து சேர்த்துள்ளார். எனவே அவரின் சொத்துமதிப்பு தற்போது 119.5 பில்லியன் டாலர்களாக [11.9 லட்சம் கோடி ருபாய்] அதிகரித்துள்ளது. எனவே உலகப் பணக்காரர் பட்டியலில் அம்பானிக்கு 13 வது இடம். அதற்கு அடுத்தபடியாக 116 பில்லியன் அமெரிக்க டாலர்கள் [11.6 லட்சம் கோடி ருபாய்] சொத்துமதிப்புடன் அதானி குழும நிறுவனர் கௌதம் அதானி இரண்டாவது இடத்தில் உள்ளார்.
மொத்த மதிப்பில் அம்பானிக்கு அடுத்தபடியாக இருந்தாலும், கடந்த ஒரே ஆண்டில் அதிக சொத்து சேர்த்ததில் அம்பானியை அதானி பின்னுக்குத்தள்ளியுள்ளார். அதாவது, அதானி கடந்த ஒரே ஆண்டில் 48 பில்லியன் டாலர்கள் சொத்து சேர்ந்துள்ளார்.

இது அம்பானி கடந்த ஒரே ஆண்டில் சேர்த்த சொத்தை விட இரண்டு மடங்கு அதிகம் ஆகும். எனவே பணக்காரர் பட்டியலில் முதலிடத்தை நோக்கி அதானி முன்னேறி வருகிறார் என்றே இதன்மூலம் புலனாகிறது. தொடர்ந்து பணக்காரர் பட்டியலில் 3.7 பில்லியன் டாலர் மதிப்புடன் சாவித்திரி ஜிண்டால் மூன்றாவது இடத்திலும், நான்காவது இடத்தில் ஷிவ நாடாரும் உள்ளனர்.
இதுதவிர்த்து இதுவரை இல்லாத அளவுக்கு இந்திய பணக்காரர்களின் சொத்துமதிப்பு இந்த வருடம் மட்டும் மொத்தமாக 40 சதவீதம் உயர்ந்து 1 ட்ரில்லியன் டாலர்கள் என்ற அளவைக் கடந்துள்ளது. கடந்த ஆண்டில் இது 799 பில்லியன் டாலர்கள் என்ற அளவில் இருந்தது.






