search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Railway security force"

    • ரெயில்வே பாதுகாப்பு படையினருக்கான மண்டல அளவிலான கபடி போட்டி இன்று தொடங்கியது.
    • தொடக்க விழாவில் மதுரை கோட்ட ெரயில்வே கூடுதல் கோட்ட மேலாளர் ரமேஷ்பாபு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

    மதுரை

    மதுரை ெரயில்வே காலனி செம்மண் திடலில் ெரயில்வே பாதுகாப்பு படை சார்பில் மண்டலங்களுக்கு இடையேயான 31-வது கபடி போட்டி இன்று தொடங்கியது. தொடக்க விழாவில் மதுரை கோட்ட ெரயில்வே கூடுதல் கோட்ட மேலாளர் ரமேஷ்பாபு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பாதுகாப்பு படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

    மதுரை கோட்ட பாதுகாப்பு படை அதிகாரி அன்பரசு பேசினார். கூடுதல் கோட்ட மேலாளர் ரமேஷ்பாபு கொடியசைத்து கபடி போட்டியை தொடங்கிவைத்தார். இதில் சென்னை, திருவனந்தபுரம், மதுரை, திருச்சி, சேலம் ஆகிய 5 ரெயில்வே கோட்டங்களை சேர்ந்த அணி வீரர்கள் கலந்துகொண்டனர்.

    ெரயில்வே பாதுகாப்பு படை வீரர்களுக்கு இடையேயான கபடி போட்டியில் இன்று லீக் சுற்றுகள் நடக்கிறது. சென்னை, திருவனந்தபுரம், மதுரை, திருச்சி, சேலம் ஆகிய அணிகளுக்கு இடையே கடும் போட்டி ஏற்பட்டது. இதன் காரணமாக ஆரம்பம் முதலே ஆட்டத்தில் அனல் பறந்தது.

    இதில் வெற்றி பெறும் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும். மதுரை ெரயில்வே காலனி சிமெண்ட் திடலில் நாளை(4-ம் தேதி) இறுதிப்போட்டி நடக்க உள்ளது. இதில் மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் பத்மநாபன் அனந்த் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு வெற்றி பெற்ற அணி மற்றும் வீரர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்க உள்ளார்.

    ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்த பெண் பயணியை மீட்ட ரெயில்வே பாதுகாப்பு படை வீரரை ரெயில்வே அதிகாரிகள் பாராட்டினர்.
    சென்னை:

    சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் நேற்று காலை 11-வது நடைமேடையில் இருந்து சென்னை கடற்கரை ரெயில் நிலையம் நோக்கி மின்சார ரெயில் புறப்பட்டது. அப்போது அந்த ரெயிலில் 35 வயதுடைய பெண் அவசர அவசரமாக ஏற முயன்றார். எதிர்பாராத விதமாக அவரது கால் தவறி ரெயிலில் இருந்து கீழே விழுந்தார். நடைமேடைக்கும், ரெயில் பெட்டிக்கும் நடுவில் சிக்கிய அந்த பெண்ணை 11-வது நடைமேடையில் பாதுகாப்பு பணியில் இருந்த ரெயில்வே பாதுகாப்பு படை சிறப்பு பிரிவு வீரர் ஆர்.கே.மீனா விரைந்து செயல்பட்டு காப்பாற்றினார்.

    இந்த செயல் குறித்து ரெயில்வே உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. விரைந்து செயல்பட்ட ரெயில்வே பாதுகாப்பு படை சிறப்பு பிரிவு வீரர் ஆர்.கே.மீனாவை ரெயில்வே அதிகாரிகள் பாராட்டினர். 
    டிக்கெட் எடுக்காமல் ரெயிலில் பயணம் செய்த பயணிகள் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் சிக்கினர்.அவர்களுக்கு ரெயில்வே பாதுகாப்பு படையினர் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
    நாகமலை புதுக்கோட்டை:

    பாதுகாப்பான நீண்ட தூர பயணத்திற்கு பொதுமக்கள் பெரிதும் விரும்புவது ரெயில் பயணத்தைத் தான்.அதிலும் தற்போது பஸ் கட்டணம் அதிகரித்ததில் இருந்து ரெயில்களில் தான் பலரும் பயணம் செய்கின்றனர்.

    இதனால் ரெயில்களில் கூட்டம் அலைமோதி வருகிறது. குறிப்பாக முன்பதிவு அல்லாத ரெயில் பெட்டிகளில் இருக்கை வசதி இல்லாமல் பலரும் நின்று கொண்டே செல்கின்றனர். இதில் சிலர் கூட்ட நெரிசலை பயன்படுத்தி பயணச்சீட்டு எடுக்காமல் பயணிப்பதாக ரெயில்வே துறையினருக்கு புகார்கள் வந்தன.

    இதனையடுத்து ரெயில்வே பறக்கும் படை பரிசோதகர்கள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இன்று காலை ராமேசுவரத்தில் இருந்து மதுரைக்கு புறப்பட்ட பயணிகள் ரெயிலில், தெற்கு ரெயில்வே மதுரை கோட்ட வர்த்தக ஆய்வாளர் கார்த்திக் ராஜா தலைமையில் பறக்கும் படையினர் சோதனை நடத்தினர்.

    அப்போது கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த 35-க்கும் மேற்பட்டோர் பயணச்சீட்டு இன்றி பயணம் செய்வது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்கள் மதுரை ரெயில் நிலையம் வந்ததும், ரெயில்வே பாதுகாப்பு படையினர் வசம் ஒப்படைக்கப்பட்டனர்.

    ரெயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் முகேஷ்குமார் விசாரணை நடத்தி, டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்த பயணிகளிடம் ரூ.10 ஆயிரம் அபராதம் வசூல் செய்தார். #tamilnews
    ×