search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "congress mlas"

    • கேள்வி நேரத்தின்போது காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கோஷங்களை எழுப்பி அமளியில் ஈடுபட்டனர்.
    • அமளி நிலவியபோது 5 பேர் அவையில் இல்லை.

    காந்திநகர்:

    குஜராத் மாநிலத்தில் பா.ஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது. குஜராத் சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இன்று நடந்த கேள்வி நேரத்தின்போது காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கோஷங்களை எழுப்பி அமளியில் ஈடுபட்டனர்.

    போலியான அரசு அலுவலகத்தை திறந்து பல்வேறு நீர்ப்பாசன திட்டங்களை செயல்படுத்துவதற்காக அரசு நிதியை பறித்தவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்கக்கோரி அவர்கள் பிரச்சனையை கிளப்பினார்கள். இந்த ஊழல் தொடர்பாக அவர்கள் கோஷங்களை எழுப்பினார்கள்.

    அமளியை தொடர்ந்து காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 10 பேர் ஒருநாள் சஸ்பெண்டு செய்யப்பட்டனர். காங்கிரசின் பலம் 15 ஆகும். அமளி நிலவியபோது 5 பேர் அவையில் இல்லை.

    • 2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலின் முன்னோட்டமாக தேர்தல் முடிவு அமைந்து உள்ளதால் இமாச்சலப்பிர தேசத்தில் ஆட்சி அமைக்க இரு கட்சிகளும் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
    • அம்மாநிலத்தில் 1985-ஆம் ஆண்டுக்கு பிறகு ஒரு ஆளும் கட்சி வெற்றி பெறுவது இல்லை என்ற நிலை உள்ளது.

    சிம்லா:

    இமாச்சல பிரதேச சட்டசபை தேர்தலில் பதிவான ஓட்டுகள் இன்று எண்ணப்பட்டு வருகிறது. இதில் ஆளும் பாரதிய ஜனதா கட்சிக்கும் காங்கிரசுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. ஓட்டு எண்ணிக்கையில் இரு கட்சிகளும் மாறி மாறி முன்னிலை வகித்து வருகிறது. இதனால் அம்மாநிலத்தில் எந்த கட்சி ஆட்சியை பிடிக்கும் என்ற எதிர்பார்ப்பு எகிறி இருக்கிறது.

    இமாச்சல பிரதேசத்தில் எப்படியும் ஆட்சியை தக்க வைக்க வேண்டும் என்ற முனைப்பில் பாரதிய ஜனதா உள்ளது. அதே போல் இழந்த ஆட்சியை மீண்டும் கைப்பற்ற வேண்டும் என்று காங்கிரஸ் ஆர்வத்துடன் இருக்கிறது.

    ஆட்சியை பிடிக்க பாரதிய ஜனதா குதிரை பேரம் போன்ற நடவடிக்கையில் ஈடுபடலாம் என காங்கிரஸ் கருதுகிறது. இதனால் தங்கள் கட்சி எம்.எல்.ஏ.க்கள் பாரதிய ஜனதா பக்கம் தாவி விடாமல் இருப்பதற்காக அவர்களை பாதுகாக்கும் முயற்சியில் இறங்கி உள்ளது.

    காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெறும் எம்.எல்.ஏ.க்கள் அனைவரையும் பத்திரமாக ராஜஸ்தான் மாநிலத்துக்கு அழைத்து செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது.

    தனி பஸ்கள் மூலம் அவர்கள் அங்கு அழைத்து செல்லப்பட உள்ளனர். அங்கு அவர்கள் பாதுகாப்பாக தங்குவதற்கான ஏற்பாடுகள் மற்றும் வசதிகளை சத்தீஸ்கர் முதல்-மந்திரி பூபேஷ் பாகல் மற்றும் மூத்த தலைவர் பூபேந்திர சிங்கோடா ஆகியோர் செய்து வருகின்றனர். இந்த பணிகளை காங்கிரஸ் மேலிடம் அவர்களிடம் ஒப்படைத்து இருக்கிறது. இமாச்சல பிரதேச தேர்தல் முடிவுகளை அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி உன்னிப்பாக கவனித்து வருகிறார். இன்று பிற்பகல் அவர் சிம்லா வர இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலின் முன்னோட்டமாக இந்த தேர்தல் முடிவு அமைந்து உள்ளதால் இமாச்சலப்பிர தேசத்தில் ஆட்சி அமைக்க இரு கட்சிகளும் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அம்மாநிலத்தில் 1985-ஆம் ஆண்டுக்கு பிறகு ஒரு ஆளும் கட்சி வெற்றி பெறுவது இல்லை என்ற நிலை உள்ளது. இதனால் இம்முறை காங்கிரஸ் ஆட்சியை பிடித்து விடும் என்ற நம்பிக்கையில் அக்கட்சி தொண்டர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர்.

    அதே சமயம் இந்த வரலாற்றை முறியடித்து மீண்டும் ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்ற துடிப்பில் பாரதிய ஜனதா உள்ளது. இதனால் இமாச்சல பிரசேத்தில் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.

    • குஜராத் சட்டசபையில் நேற்று கடும் அமளி ஏற்பட்டது.
    • இதனால் 14 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

    அகமதாபாத்:

    குஜராத் சட்டசபை நேற்று காலை கூடியதும் காங்கிரசைச் சேர்ந்த எதிர்க்கட்சித்தலைவர் சுக்ராம் ரத்வா எழுந்து, அரசு ஊழியர்கள், விவசாயிகள், அங்கன்வாடி பணியாளர்களின் போராட்டம் குறித்து விவாதிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

    இதற்கு சபாநாயகர் நிமாபென் ஆச்சார்யா மறுப்பு தெரிவித்தார். உடனே சுயேச்சை எம்.எல்.ஏ ஜிக்னேஷ் மேவானி மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அவையின் மையப்பகுதிக்கு சென்று அரசுக்கு எதிராக கோஷமிட்டனர். மேலும் அரசு ஊழியர்களுக்கு நீதி வழங்க வேண்டும் என்ற கோரிக்கை அடங்கிய அட்டைகளையும் அவர்கள் ஏந்தியிருந்தனர்.

    அமளியில் ஈடுபட்ட எம்.எல்.ஏ.க்களை இருக்கைகளுக்குச் சென்று அமரும்படி சபாநாயகர் வலியுறுத்தினார். ஆனால் அவர்கள் கேட்காததால், அவர்களை இடைநீக்கம் செய்யும் தீர்மானத்தை சட்டசபை விவகாரத்துறை மந்திரி ராஜேந்திர திரிவேதி கொண்டு வந்தார்.

    இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து 14 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் ஜிக்னேஷ் மேவானி ஆகியோரை நேற்று ஒருநாள் இடைநீக்கம் செய்து சபாநாயகர் உத்தரவிட்டார். இதையடுத்து அவர்களை அவைக்காவலர்கள் குண்டுகட்டாக தூக்கி வெளியேற்றியதால் அவையில் பரபரப்பு ஏற்பட்டது.

    • கோவா பாஜகவில், 8 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் இணைந்தனர்.
    • காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பலம் 11ல் இருந்து 3 ஆக குறைந்துள்ளது.

    பனாஜி:

    கோவா மாநிலத்தில் ஆளும் பாஜக முதலமைச்சர் பிரமோத் சாவந்த் முன்னிலையில் நேற்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் முதல்வர் திகம்பர் காமத் தலைமையில்  8 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் பாஜகவில் இணைந்தனர்.

    இதையடுத்து அம்மாநில சட்டசபையில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பலம் 11ல் இருந்து 3 ஆக குறைந்துள்ளது. மூன்றில் இரண்டு பங்கு எம்எல்ஏக்கள் காங்கிரசில் இணைந்ததால் கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை எடுக்க வாய்ப்பில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. 


    இந்நிலையில், பாஜகவில் இணைந்து பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கோவா மாநில முன்னாள் முதலமைச்சர் திகம்பர் காமத் கூறியுள்ளதாவது: காங்கிரசில் தலைமை எங்கே இருக்கிறது? தலைமை இருந்திருந்தால், 2017 ஆண்டு 18 எம்.எல்.ஏ.க்கள் இருந்த போது நாங்கள் ஆட்சி அமைத்திருப்போம்.

    திடீரென என்னிடம் கலந்தாலோசிக்காமல், எதிர்க்கட்சித் தலைவர் பதவியிலிருந்து என்னை நீக்கி விட்டார்கள்.இது நியாயமா? என்னை டெல்லிக்கு அழைத்து ஆலோசனை நடத்தியிருக்க வேண்டியது கட்சித் தலைமையின் பொறுப்பாகும்.

    ஒரு முடிவெடுக்கணும்னு நினைச்சப்போ, நான் கோவிலுக்குப் போனேன், என் தொண்டர்கள் கோபமா இருக்காங்க, இனி காங்கிரசுக்கு வேலை செய்ய வேண்டாம்னு எனக்கு சாதகமாக கோவில் பிரசாதம் வந்திருக்கு. நான் அவர்களிடம் (ஆதரவு எம்எல்ஏக்கள்) உங்கள் விருப்பத்துக்கு ஏற்ப செயல்படுங்கள், நான் உங்களுக்கு ஆதரவளிக்கிறேன் என்று தெரிவித்தேன். இப்போது காங்கிரஸ் கட்சியில் எதுவும் மிச்சமில்லை. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    இதனிடையே, ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமைப் பயணத்தின் வெற்றியை பொறுத்துக் கொள்ள முடியாமல், கோவாவில் ஆபரேஷன் கிச்சாட் மூலம் எம்எல்ஏக்களை பாஜக மாற்றியுள்ளாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.

    • ஐந்து காங்கிரஸ் எம்எல்ஏக்கள் முதலமைச்சருடன் அவரது வீட்டில் ஆலோசனை.
    • கோவா எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் இருந்து மைக்கேல் லோபோ நீக்கம்.

    கோவா மாநிலத்தில் பிரமோத் சாவந்த் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. 40 உறுப்பினர்களைக் கொண்ட கோவா சட்டசபையில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் 25 சட்டசபை உறுப்பினர்களும், எதிர்க்கட்சியான காங்கிரசிற்கு 11 உறுப்பினர்களும் உள்ளனர்.

    இன்று அம்மாநில மழைக்கால சட்டசபை கூட்டத் தொடர் தொடங்க உள்ளது. இந்நிலையில் அம்மாநில காங்கிரஸ் எம்எல்ஏக்கள் சிலர் பாஜகவில் இணைந்து விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கோவா எதிர்க்கட்சித் தலைவர் மைக்கேல் லோபோ, டெலிலா லோபோ, திகம்பர் காமத், கேதர் நாயக் மற்றும் ராஜேஷ் ஃபல்தே சாய் ஆகிய ஐந்து காங்கிரஸ் எம்எல்ஏக்கள் முதலமைச்சருடன் அவரது வீட்டில் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில், கோவா மாநிலத்திற்கு சென்று அரசியல் நிகழ்வுகளை கண்காணிக்குமாறு அக்கட்சியின் எம்.பி முகுல் வாஸ்னிக்கை காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி கேட்டுக் கொண்டுள்ளார். முன்னதாக எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்பில் இருந்து மைக்கேல் லோபோவை காங்கிரஸ் கட்சி நீக்கி உள்ளது. காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பாஜகவில் இணையும் சதித்திட்டத்தை மைக்கேல் லோபோ மற்றும் திகம்பர் காமத் ஆகியோர் தீட்டியதாக கோவா காங்கிரஸ் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் குற்றம் சாட்டி உள்ளார்.

    கோவாவில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பாஜகவில் இணைந்தது ஜனநாயகம் அல்ல, பண நாயகம் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய சிங் தெரிவித்துள்ளார். புனேயில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாஜகவில் இணைந்து காங்கிரஸ் எம்எஏக்கள், மத்திய அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறையின் வழக்குகளை எதிர்கொள்கிறார்களா என்பது குறித்த ஆய்வு செய்ய வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

    ஆபரேசன் தாமரை திட்டத்தை பா.ஜனதா கைவிடவில்லை. இன்னும் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கிறது என்று கர்நாடக முதல் மந்திரி குமாரசாமி குற்றம் சாட்டியுள்ளார். #kumarasamy #bjp #congressmlas #yeddyurappa

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ்-மதசார்பற்ற ஜனதாதள ஆட்சியை கவிழ்க்க பாரதீய ஜனதா சதி செய்து வருவதாக கர்நாடக முதல் மந்திரி குமாரசாமி கூட்டணி ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல் மந்திரியுமான சித்தராமையா ஆகியோர் கூறி இருந்தனர்.

    ஏற்கனவே 2 முறை ஆட்சியை கவிழ்க்க பா.ஜனதா மேற்கொண்ட முயற்சி தோல்வி அடைந்ததாகவும், தற்போது 3-வது முறையாக இந்த முயற்சியை மேற்கொண்டு வருவதாகவும் சித்தராமையா மற்றும் துணை முதல்மந்திரி பரமேஸ்வர் ஆகியோர் குற்றம் சாட்டி இருந்தனர்.

    இதைத்தொடர்ந்து காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். எம்.எல்.ஏ.க்களை பாதுகாக்க காங்கிரசார் நடவடிக்கை எடுத்தாலும் பாரதீய ஜனதா தொடர்ந்து காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுடன் போனில் பேசி அவர்களை இழுக்க முயற்சி செய்து வருவதாக கர்நாடக முதல் மந்திரி குமாரசாமி குற்றம் சாட்டி உள்ளார்.

    இதுகுறித்து அவர் பெங்களூருவில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கர்நாடக மாநிலத்தில் கூட்டணி ஆட்சியை கவிழ்க்க பா.ஜனதா முயற்சிக்க வில்லை என்று எடியூரப்பா கூறி இருக்கிறார். ஆபரேசன் தாமரை நடைபெறவில்லை என்றும் அவர் கூறி இருக்கிறார். ஆனால் உண்மையில் ஆபரேசன் தாமரை திட்டத்தை பா.ஜனதா கைவிடவில்லை. இன்னும் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கிறது.

    எம்.எல்.ஏ.க்களை இழுக்கும் முயற்சியில் பா.ஜனதா தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.

    கடந்த வியாழக்கிழமை இரவு கூட காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஒருவருடன் பா.ஜனதாவினர் தொடர்பு கொண்டு பேசி இருக்கிறார்கள். அப்போது பா.ஜனதாவுக்கு வரும்படி அந்த எம்.எல்.ஏ.வை அழைத்து இருக்கிறார்கள்.

    அதற்காக மிகப்பெரிய பரிசை கொடுப்பதாக அந்த எம்.எல்.ஏ.விடம் சொல்லி இருக்கிறார்கள். அந்த மிகப்பெரிய பரிசு நீங்கள் நினைப்பது போல் மிகக்குறைவான பரிசு அல்ல. அது மிகப்பெரிய பரிசு.

    அந்த மிகப்பெரிய பரிசு என்னவென்று நான் சொன்னால் அனைவரும் வியப்படைவீர்கள். மிகப்பெரிய பரிசு மட்டுமல்ல பணமும் கொடுப்பதாக அந்த எம்.எல்.ஏ.விடம் பா.ஜனதாவினர் பேரம் பேசி இருக்கின்றனர்.

    ஆனால் அந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ. பா.ஜனதாவுக்கு வரமாட்டேன் என்று கூறி இருக்கிறார். தற்போது தான் மகிழ்ச்சியாக இருப்பதாகவும், தன்னை தொடர்பு கொள்வதை விட்டுவிடும்படியும் அந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ. பா.ஜனதாவிடம் கூறி இருக்கிறார். இந்த தகவலை அந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.வே என்னிடம் கூறினார்.

    அந்த எம்.எல்.ஏ.வுக்கு பா.ஜனதா கொடுக்கும் மிகப்பெரிய பரிசு என்ன என்பதை நான் கூறமாட்டேன். அதுகுறித்து அந்த எம்.எல்.ஏ.வை தொடர்பு கொண்டு நீங்கள் கேட்டுக்கொள்ளுங்கள்.


    கடந்த 2008-ம் ஆண்டு எம்.எல்.ஏ.க்களை பேரம் பேசி இழுத்து முதல் மந்திரி பதவியை எடியூரப்பா தக்க வைத்துக்கொண்டார். அதுபோலத்தான் தற்போதும் எம்.எல்.ஏ.க் களை இழுக்கும் பணியை பா.ஜனதா மேற்கொண்டு வருகிறது.

    எம்.எல்.ஏ.க்களை இழுக்க பா.ஜனதா முயற்சித்து வருவதை நான் ஒன்றும் செய்ய முடியாது.

    இவ்வாறு அவர் கூறினார். #kumarasamy #bjp #congressmlas #yeddyurappa

    கர்நாடக மாநிலத்தை ஆளும் குமாரசாமி தலைமையிலான கூட்டணி மந்திரிசபையில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 8 எம்.எல்.ஏ.க்கள் இன்று மந்திரிகளாக பதவி ஏற்று கொண்டனர். #Karnatakaministry #ministryexpanded #CongressMLAs
    பெங்களூரு:

    கர்நாடக மாநில சட்டசபை தேர்தலில் அதிக இடங்களில் வெற்றிபெற்ற மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி காங்கிரஸ் ஆதரவுடன் அங்கு ஆட்சி அமைத்தது. முதல் மந்திரி குமாரசாமி தலைமையிலான மந்திரிசபை 7 மாதங்களுக்கு முன்னர் பதவி ஏற்றுகொண்டது. பின்னர் கடந்த ஜூன் 5 தேதி விரிவாக்கம் செய்யப்பட்ட இந்த மந்திரிசபையில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த துணை மந்திரி ஜி.பரமேஸ்வரா உள்பட 24 பேர் இடம் பெற்றிருந்தனர்.

    கர்நாடக சட்டபையில் உறுப்பினர்கள் எண்ணிக்கை அடிப்படையில் இம்மாநிலத்தில் 34 பேர்வரை மந்திரிகளாக பணியாற்றலாம். அவ்வகையில், கூட்டணி அரசு என்ற ஒப்பந்தப்படி மந்திரிசபையில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 8 எம்.எல்.ஏ.க்கள் இன்று  மந்திரிகளாக இணைக்கப்பட்டனர்.

    பெங்களூரு நகரில் உள்ள ராஜ்பவனில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் எம்.பி.பாட்டீல், ஆர்.பி.திமப்புரா, சத்தீஷ் ஜரிக்கோலி, சி.எஸ்.ஷிவாலி, பரமேஸ்வரா நாய்கி, இ.துக்காராம், ரஹிம் கான் மற்றும் எம்.டி.பி. நாகராஜ் ஆகியோரை மந்திரிகளாக நியமித்து கவர்னர் வஜுபாய் வாலா பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

    இந்நிகழ்ச்சியில் முதல் மந்திரி குமாரசாமி, துணை மந்திரி ஜி.பரமேஸ்வரா, கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ் உள்ளிட்டோர் பங்கேற்று புதிய மந்திரிகளுக்கு வாழ்த்து தெரிவித்தனர். இன்று பதவியேற்ற மந்திரிகளுடன் சேர்த்து அம்மாநில மந்திரிசபையின் எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. #Karnatakaministry #ministryexpanded #CongressMLAs 
    சத்தீஸ்கரில் காங்கிரஸ் வெற்றி பெறும் வாய்ப்புள்ளதால் எம்.எல்.ஏ.க்களை முன்கூட்டியே பாதுகாக்க காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அதிரடி உத்தரவிட்டுள்ளார். #RahulGandhi #ChhattisgarhElections

    புதுடெல்லி:

    முதல்-மந்திரி ராமன்சிங் தலைமையில் பா.ஜனதா ஆட்சி நடந்து வரும் சத்தீஸ்கர்  மாநில சட்டசபைக்கு 2 கட்டமாக ஓட்டுப்பதிவு நடந்தது.

    மொத்தம் உள்ள 88 இடங்களில் கடந்த மாதம் 12-ந் தேதி முதல் கட்டமாக 18 தொகுதிகளுக்கும் மீதம் உள்ள 70 தொகுதிகளுக்கும் ஓட்டுப்பதிவு நடந்தது.

    வருகிற 11-ந்தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெறுகிறது. இதற்கிடையே சத்தீஸ்கரில் காங்கிரசுக்கு மெஜாரிட்டி கிடைக்கும் என்றும், ஆட்சியைப் பிடிக்கும் என்றும் அந்த கட்சி தலைவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். மாநிலத்தில் பல்வேறு தொகுதிகளை பார்வையிட்ட பின்பு காங்கிரஸ் தலைவர்கள் இது தொடர்பாக மேலிடத்துக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

    சத்தீஸ்கர்  மாநில கட்சி விவகாரங்களை கவனிக்கும் மேலிட பொறுப்பாளர் பி.எல்.புனியா, காங்கிரஸ் கட்சிக்கு 50 இடங்கள் கிடைக்கும், மெஜாரிட்டி இடங்களுடன் ஆட்சி அமைக்கும் வாய்ப்பு இருப்பதாக மேலிடத்துக்கு தகவல் தெரிவித்துள்ளார்.


    முதல்-மந்திரி வேட்பாளராக கருதப்படும் அஜித்ஜோகி இதர பிற்படுத்தப்பட்டோர் வாக்குகளை கவரும் வகையில் செயல்பட்டுள்ளார். இது காங்கிரசுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் உள்ளதாக தலைவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

    மேலும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும், சத்தீஸ்கரில் தொகுதி வாரியாக வெற்றி வாய்ப்பு குறித்து தேர்தல் பொறுப்பாளர்களின் கருத்துக்களை கேட்டறிந்தார்.

    இதையடுத்து அவர் மாநில தேர்தல் பொறுப்பாளர்களுக்கு பல அதிரடி உத்தரவுகள் பிறப்பித்துள்ளார். தேர்தல் முடிவுகள் முழுவதும் வெளியாகும் வரை யாரும் வெற்றிக் கொண்டாட்டங்களில் ஈடுபடக் கூடாது என்றும் தெரிவித்துள்ளார்.

    கடந்த 3 தேர்தல்களில் தொடர்ச்சியாக காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் வாய்ப்பை இழந்துள்ளது. எனவே இந்த முறை ஆட்சி அமைக்க வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில் கோவா, மணிப்பூர் மாநிலங்களில் எம்.எல்.ஏ.க்களை பா.ஜனதா இழுத்ததுபோல் இங்கு நடைபெறக் கூடாது என்பதில் முனைப்பாக உள்ளது.

    எனவே தேர்தல் முடிவு வெளியாகத் தொடங்கியதும் வெற்றி பெறும் எம்.எல்.ஏ.க்களை பாதுகாக்கவும் ராகுல் உத்தரவிட்டுள்ளார்.

    உடனடியாக அவர்களை ஒரே இடத்தில் தங்க வைத்து பாதுகாக்க வேண்டும், அவர்களுடன் தொடர்பில் இருக்க வேண்டும், தேர்தல் முடிவு வருவதற்கு முன்பே யார்-யாருக்கு வெற்றி வாய்ப்பு உள்ளதோ அவர்களை இப்போதே கண்காணித்து பாதுகாக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.

    மேலும் ஓட்டு எண்ணிக்கையின்போது முறைகேடு நடைபெறாமல் இருக்க காங்கிரஸ் ஏஜெண்டுகள் விழிப்புடன் செயல்பட வேண்டும் என்று மேலிடம் உத்தரவிட்டுள்ளது. #RahulGandhi #ChhattisgarhElections

    சென்னை தலைமை செயலகத்தில் சபாநாயகர் தனபாலை, காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் இன்று சந்தித்து பேசினர். #TNAssembly #Dhanapal #Congress
    சென்னை:

    சென்னை தலைமை செயலகத்தில் சபாநாயகர் தனபாலை, காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் இன்று சந்தித்து பேசினர்.

    சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.ராமசாமி, எம்.எல்.ஏ.க்கள் வசந்த குமார், விஜயதாரணி உள்ளிட்ட எம்.எல்.ஏ.க்கள், சபாநாயகரை அவரது அறையில் இன்று சந்தித்து பேசினார்கள். அப்போது அவர்கள் உடனடியாக சட்டசபையை கூட்ட வேண்டும் என்று சபாநாயகர் தனபாலிடம் கோரிக்கை வைத்தனர்.

    கஜா புயல் பாதித்த மாவட்டங்களில் மேற்கொள்ள வேண்டிய நிவாரண பணிகள் பற்றி முழுமையாக விவாதிப்பதற்கு வசதியாகவும், மத்திய அரசிடம் தமிழக அரசு கேட்டுள்ள நிவாரண நிதியை முறைப்படி கேட்டுப் பெறுவதற்கு வழிவகுக்கும் வகையிலும் தமிழக சட்டமன்ற கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

    இது தொடர்பான மனு ஒன்றையும் அவர்கள் சபாநாயகரிடம் அளித்தனர்.


    மேகதாது அணை பிரச்சனையில் கர்நாடகா அரசின் நடவடிக்கைகளுக்கு தடை விதிக்கும் வகையில் மத்திய அரசை வலியுறுத்தவதற்காக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றினால் அதற்கு கூடுதல் அழுத்தம் கொடுக்க முடியும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இதுபற்றியும் சட்டசபை கூட்டத்தில் விவாதிக்கலாம் என்றும் காங்கிரஸ் எம்.எல். ஏ.க்கள் கோரிக்கை வைத்து உள்ளனர். #TNAssembly #Dhanapal #Congress
    கோவா சட்டசபையில் அதிக உறுப்பினர்களை பெற்றிருந்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இரு எம்.எல்.ஏ.க்கள் இன்று பா.ஜ.க.வுக்கு தாவியதால் ஆளும்கட்சியின் பலம் கூடியுள்ளது. #CongressMLAsJoinBJP
    பனாஜி:

    40 இடங்களை கொண்ட கோவா சட்டசபைக்கு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு 16 எம்.எல்.ஏ.க்களும், பா.ஜ.க.வுக்கு 14 எம்.எல்.ஏ.க்களும் கிடைத்தனர்.

    இருப்பினும், அதிக இடங்களில் வெற்றிபெற்ற காங்கிரசால் அங்கு ஆட்சி அமைக்க முடியவில்லை. கோவா முற்போக்கு கட்சியை சேர்ந்த 3 எம்.எல்.ஏ.க்கள், மகாராஷ்டிரவாடி கோமந்தக் கட்சியை சேர்ந்த 3 எம்.எல்.ஏ.க்கள் மற்றும் 3 சுயேட்சை எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுடன் அங்கு பா.ஜ.க. ஆட்சியை பிடித்தது. 

    23 உறுப்பினர்களின் ஆதரவுடன் பா.ஜ.க. தலைமையிலான அரசின் முதல் மந்திரியாக முன்னாள் ராணுவ மந்திரி மனோகர் பரிக்கர் பொறுப்பேற்றுள்ளார். எதிர்க்கட்சியாக காங்கிரஸ் உள்ளது.

    இந்நிலையில், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சுபாஷ் ஷிரியோட்கர் மற்றும் தயாநந்த் சோப்டே ஆகியோர் இன்று டெல்லியில் பா.ஜ.க. தேசிய தலைவர் அமித் ஷாவை சந்தித்து தங்களை அக்கட்சியில் இணைத்து கொண்டனர். #GoaCongressMLAs  #CongressMLAsJoinBJP
    அதிகார வரம்பை தவறாக பயன்படுத்தி வரும் கவர்னர் கிரண்பேடி மீது உரிமை மீறல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சபாநாயகர் வைத்திலிங்கத்திடம் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் புகார் கொடுத்துள்ளனர்.
    புதுச்சேரி:

    புதுவை காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் லட்சுமி நாராயணன், தீப்பாய்ந்தான், பாலன், ஜெயமூர்த்தி, தனவேலு, அனந்தராமன், விஜயவேணி ஆகியோர் சபாநாயகர் வைத்திலிங்கத்திடம் ஒரு உரிமை மீறல் புகார் கொடுத்துள்ளனர்.

    புதுவை கவர்னர் சட்டப்பேரவையின் சுதந்திரத்தையும், மாண்பையும் குலைக்கும் வகையில் நீண்ட நாட்களாக பேசி வருகிறார்.

    மத்திய அரசு தன்னிச்சையாக 3 உறுப்பினர்களை நியமித்ததையடுத்து தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.

    இந்த உத்தரவைப்பற்றி கருத்து தெரிவிக்கையில், அந்த 3 பேரையும் நியமன உறுப்பினர்களாக அங்கீகரித்து சட்டசபை கூட்டத்தொடரில் கலந்து கொள்ள அனுமதிக்காவிட்டால் சட்ட சிக்கலையும், பின்விளைவுகளையும் சந்திக்க நேரிடும் என சட்டப்பேரவைக்கே எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    அவர்கள் கூட்டத்தொடரில் கலந்து கொள்ளும்பட்சத்தில்தான் நிதி மசோதா தாக்கல் செய்ய அனுமதித்துள்ளேன் என நிபந்தனையும் விதித்திருப்பது சட்டப்பேரவையின் தனித்தன்மையை, சுதந்திர தன்மையை கேலிக்குரியதாக்கி தரம் தாழ்த்துவதாக உள்ளது.

    அதோடு சட்டத்தை இயற்றுபவர்களே சட்டத்தை மீறுபவர்கள் என்று பொதுமக்களின் மனதில் தவறான எண்ணத்தையும் உருவாக்கியுள்ளார்.

    இது, அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களின் மாண்பையும், உரிமையையும் பாதிப்பிற்குள்ளாக்கி உள்ளது. ஒட்டுமொத்தமாக சபையின் கண்ணியத்தையும், மாண்பையும் வேண்டுமென்றே தாழ்த்தி அவதூறாக பேசியும் சபையை அவமதித்தும் வருகிறார்.

    நிலுவையில் உள்ள ஒரு வழக்கு பற்றி இடைக்கால உத்தரவில் தன் இஷ்டம்போல விளக்கம் அளிக்கிறார். சட்டசபையை தன் ஆளுகைக்கு கீழ் செயல்படும் ஒரு துறையை போல கருதி உத்தரவிடுவது சபையை அவமதிக்கும் செயலாகும்.

    எனவே உறுப்பினர்களின் புகாரை ஏற்று கவர்னர் மீது உரிமை மீறல் நடவடிக்கை மற்றும் சபை அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொள்கிறோம்.

    இவ்வாறு அந்த புகாரில் கூறியுள்ளனர்.
    டெல்லியில் இன்று தமிழக காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுடன் ராகுல் காந்தியின் ஆலோசனை கட்சி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #CongressMLAs, #RahulGandhi

    சென்னை:

    தமிழக காங்கிரசில் நிலவும் கோஷ்டி பூசல் டெல்லி மேலிடத்தை அதிருப்தி அடையவைத்துள்ளது.

    இந்த நிலையில் தமிழக காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 8 பேரையும் ராகுல்காந்தி இன்று டெல்லிக்கு அழைத்து இருந்தார். அதன்பேரில் எம்.எல்.ஏ.க்கள் கே.ஆர்.ராமசாமி, வசந்தகுமார், விஜயதாரணி, பிரின்ஸ், காளிமுத்து, மலேசிய பாண்டியன், கணேஷ், ராஜேஷ்குமார் ஆகிய 8 பேரும் டெல்லி புறப்பட்டு சென்றனர்.

    டெல்லியில் ராகுல்காந்தி எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது கட்சி நிலவரம், அரசியல் நிலவரம், கட்சி வளர்ச்சிக்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்துள்ளார்.

    இதற்கிடையில் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் மற்றும் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோரும் டெல்லியில் முகாமிட்டுள்ளார்கள்.

    தமிழக காங்கிரசில் அதிரடி மாற்றங்கள் செய்ய விருப்பதாக கூறப்படும் நிலையில் ராகுல் காந்தியின் ஆலோசனை கட்சி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #CongressMLAs, #RahulGandhi

    ×