search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "odisha Assembly"

    • ஒடிசா முதல் மந்திரி நவீன் பட்நாயக் டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்துப் பேசினார்.
    • அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், என்னை பொருத்தவரை மூன்றாம் அணிக்கு வாய்ப்பில்லை என்றார்.

    புவனேஸ்வர்:

    ஒடிசா முதல் மந்திரி நவீன் பட்நாயக் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், பிரதமரை மரியாதை நிமித்தமாக சந்தித்ததாகவும், புவனேஸ்வரில் உள்ள சர்வதேச விமான நிலையத்தை புரிக்கு மாற்றுவது தொடர்பாக பேசியதாகவும் தெரிவித்தார்.

    மேலும், என்னை பொருத்தவரை மூன்றாம் அணிக்கு வாய்ப்பில்லை. வரும் 2024 பாராளுமன்றத் தேர்தலில் எந்த எதிர்க்கட்சி தலைவர்களுடனும் பிஜூ ஜனதா தளம் கூட்டணி வைக்காது, தனித்து போட்டியிடும் என தெரிவித்தார்.

    இந்நிலையில், ஒடிசா சட்டசபை சபாநாயகராக இருந்துவரும் பைக்ரன் கேசரிஆருக்கா மற்றும் ஸ்ரீகாந்தா சாகு, சமீர் ரஞ்சன் தாஸ் ஆகிய இரு மந்திரிகள் தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். இதையடுத்து முதல் மந்திரி நவீன் பட்நாயக் புதிய அமைச்சர்கள் யார் யார் என்பது குறித்து விரைவில் அறிவிக்க உள்ளார்.

    ஒடிசா சட்டமன்ற தேர்தலில் ஆளும் பிஜு ஜனதா தளம் கட்சி வேட்பாளர்கள் தொடர்ந்து முன்னிலையில் இருப்பதால் நவீன்பட் நாயக் மீண்டும் ஆட்சியை தக்க வைக்கிறார்.
    புவனேஸ்வர்:

    ஒடிசாவில் நவீன் பட்நாயக் தலைமையில் பிஜு ஜனதாதளம் ஆட்சி நடந்து வருகிறது.

    147 இடங்களை கொண்ட ஒடிசா சட்டசபைக்கு நான்கு கட்டங்களாக ஓட்டுப்பதிவு நடந்தது. பிஜு ஜனதா தளம், காங்கிரஸ், பாரதிய ஜனதா ஆகியவை தனித்தே போட்டியிட்டன. இதில் காங்கிரஸ் 139 தொகுதிகளில் போட்டியிட்டது.

    பகுஜன் சமாஜ் வாடி (107 இடங்கள்), ஆம் ஆத்மி (15) ஆகியவையும் களத்தில் நின்றன. ஒடிசாவில் அசைக்க முடியாத சக்தியாக நவீன்பட் நாயக் மீண்டும் ஆட்சியை தக்க வைப்பார் என்று கருத்து கணிப்புகள் தெரிவித்தன.

    கருத்துகணிப்புகள் தெரிவித்தபடி ஓட்டு எண்ணிக்கையில் நவீன்பட்நாயக் பிஜு ஜனதா தளம் கட்சி முன்னிலை பெற்றது. பல தொகுதிகளில் அக்கட்சி வேட்பாளர்களே தொடர்ந்து முன்னிலையில் இருந்தனர். இதனால் பிஜுஜனதாதளம் தொண்டர்கள் உற்சாகம் அடைந்தனர்.

    89 தொகுதிகளில் முன்னணி நிலவரம் வெளியான போது பிஜு ஜனதாதளம் 63 தொகுதிகளில் முன்னிலை பெற்றிருந்தது. பா.ஜனதா 19 தொகுதிகளிலும், காங்கிரஸ் 7 தொகுதிகளிலும் முன்னிலையில் இருந்தன. ஒடிசாவில் மெஜாரிட்டிக்கு 74 இடங்கள் தேவை.

    பிஜு ஜனதா தளம் தொடர்ந்து முன்னிலையில் இருப்பதால் ஆட்சியை தக்க வைக்கிறது.

    நவீன் பட்நாயக் தொடர்ந்து 5-வது முறையாக முதல்-மந்திரி ஆக உள்ளார். அவர் 2000, 2004, 2009, 2014-ம் ஆண்டு நடந்த தேர்தல்களில் வெற்றி பெற்று இருந்தார். மீண்டும் ஒருமுறை தனது பலத்தை நிரூபித்து ஒடிசா மக்களின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்குகிறார்.

    கடந்த 2014-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் பிஜு ஜனதாதளம் 117 தொகுதிகளை வென்று இருந்தது.
    4 கட்டங்களாக நடைபெறும் ஒடிசா மாநில சட்டசபை தேர்தலில் கோரேய் தொகுதியில் பகுஜன் சமாஜ் வேட்பாளராக காஜல் நாயக் என்ற திருநங்கை களமிறக்கப்பட்டுள்ளார். #BSPtransgendercandidate #transgendercandidate #Odishaassembly #Odishapolls #KajalNayak
    புவனேஸ்வர்:

    ஒடிசா மாநில சட்டசபைக்கான தேர்தலில் 147 தொகுதிகளுக்கு ஏப்ரல் 11-ம் தேதி தொடங்கி நான்கு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

    இந்த தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளராக கோரேய் தொகுதியில் காஜல் நாயக் என்ற திருநங்கை போட்டியிடுகிறார். ஜாஜ்பூர் பகுதியை சேர்ந்த காஜல் நாயக், திருநங்கையர் சங்கத்தலைவராகவும் சமூகச் செயற்பாட்டாளராகவும் உள்ளார்.



    நான் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று விரும்பி பல கட்சிகளை அணுகினேன். ஆனால், யாரும் எனக்கு வாய்ப்பளிக்கவில்லை. என்னை வேட்பாளராக அறிவித்த பகுஜன் சமாஜ் கட்சி தலைமைக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என காஜல் நாயக் குறிப்பிட்டுள்ளார். #BSPtransgendercandidate  #transgendercandidate #Odishaassembly #Odishapolls #KajalNayak
    ஒடிசா மாநிலத்தில் எம்.எல்.ஏ., எம்.பி. பதவிகளில் பெண்களுக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்க வகைசெய்யும் மசோதா சட்டசபையில் ஒருமனதாக நிறைவேறியது. #OdishaAssembly #33pcreservation #womenreservation
    புவனேஸ்வர்:

    பாராளுமன்ற தேர்தல் மற்றும் அனைத்து மாநில சட்டசபை தேர்தல்களில் போட்டியிட பெண்களுக்கு உரிய வகையில் பிரதிநிதித்துவம் அளிக்கப்படுவதில்லை என பெண்ணுரிமை ஆர்வலர்கள் நாடு முழுவதும் குரல் எழுப்பி வருகின்றனர்.

    இந்நிலையில், ஒடிசா மாநிலத்தில் எம்.எல்.ஏ., எம்.பி. பதவிகளில் பெண்களுக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்க வகைசெய்யும் மசோதா சட்டசபையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

    147 உறுப்பினர்களை கொண்ட ஒடிசா மாநில சட்டசபையில் தற்போது 12 பெண் எம்.எல்.ஏ.க்கள் மட்டுமே உள்ளனர். ஆண்-பெண்களுக்கு இடையிலான இந்த விகிதாச்சாரத்தை ஓரளவுக்கு சீரமைக்க முதல்-மந்திரி நவீன் பட்நாயக் தீர்மானித்தார்.

    இதைதொடர்ந்து,  எம்.எல்.ஏ., எம்.பி. பதவிகளில் பெண்களுக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்க வகைசெய்யும் மசோதா ஒன்றை அவர் சட்டசபையில் தாக்கல் செய்தார். இந்த மசோதா எதிர்ப்பு ஏதுமின்றி ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

    எனினும், நேற்றிரவு இந்த மசோதா மீதான விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய சட்டசபை பா.ஜ.க. தலைவர் கே.வி.சிங்டியோ, பாராளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் ஆளும்கட்சியால் கொண்டு வரப்பட்டுள்ள இந்த மசோதாவில் ஏதோ உள்நோக்கம் உள்ளதாக குறிப்பிட்டார். காங்கிரஸ் கட்சி கொறடாவும் இதே கருத்தை முன்வைத்தார்.

    இதற்கு பதிலளித்த அரசு கொறடா, பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் விஷயத்தில் அனைத்து மாநிலங்களுக்கும் ஒடிசா முன்மாதிரியாக இருந்து வந்துள்ளது என தெரிவித்தார். #OdishaAssembly #33pcreservation #womenreservation 
    ×