search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பழைய பென்ஷன் திட்டம் கேட்டு அரசு ஊழியர் சங்கம் பேரணி
    X

    பழைய பென்ஷன் திட்டம் கேட்டு அரசு ஊழியர் சங்கம் பேரணி

    • தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் கோட்டை மைதானத்தில் இருந்து நாட்டாமை கட்டிடம் வரை பேரணி நடந்தது.
    • இந்த பேணியில் புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து அனைவருக்கும் பழைய ஓய்வூதியம் வழங்க வேண்டும்.

    சேலம்:

    தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் கோட்டை மைதானத்தில் இருந்து நாட்டாமை கட்டிடம் வரை பேரணி நடந்தது. பேரணிக்கு மாநில துணை செயலாளர் சண்முகம் தலைமை தாங்கினார்.

    ஓய்வூதியர் சங்க மாநில துணைத்தலைவர் சுப்ரமணியம் பேரணியை தொடங்கி வைத்தார். கோரிக்கைகளை விளக்கி மாவட்ட செயலாளர் சுரேஷ் பேசினார்.

    இந்த பேணியில் புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து அனைவருக்கும் பழைய ஓய்வூதியம் வழங்க வேண்டும். ஆட்குறைப்பு அரசாணைகள் ரத்து செய்யப்பட வேண்டும்.

    தமிழக அரசின் காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு ஊழியர் மூலமாக செயல் படுத்த வேண்டும். சாலை பணியாளர்களின் 41 மாத கால பணி நீக்க காலத்தை பணிக்காலமாக மாற்ற வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

    Next Story
    ×