search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தமிழக வாழ்வுரிமை கட்சியின் மாவட்ட செயற்குழு கூட்டம்
    X

    கூட்டத்தில் மாவட்ட செயலாளர் ரமேஷ் பேசினார்.

    தமிழக வாழ்வுரிமை கட்சியின் மாவட்ட செயற்குழு கூட்டம்

    • மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்.
    • மாவீரர் நாள் பொதுக்கூட்டத்தில் மயிலாடுதுறையிலிருந்து ஏராள–மானோர் கலந்து கொள்வது.

    சீர்காழி:

    சீர்காழியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ரமேஷ் தலைமை வகித்தார்.

    மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சிங்காரவேல், மோகன், குமார், சீர்காழி மேற்கு ஒன்றிய செயலாளர் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சீர்காழி நகர செயலாளர் ரஞ்சித் குமார் வரவேற்றார். மாவட்ட செயலாளர் ரமேஷ் கட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து பேசினார்.

    மயிலாடுதுறை, சீர்காழி, பூம்புகார் ஆகிய சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் புதிய உறுப்பினர்களை சேர்ப்பது, வடகிழக்கு பருவமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க அரசை வலியுறுத்துவது, வருகிற 27ஆம் தேதி தஞ்சையில் தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் எம்.எல். ஏ. தலைமையில் நடைபெறும் மாவீரர் நாள் பொதுக்கூட்டத்தில் மயிலாடுதுறை மாவட்டத்திலிருந்து ஏராளமானோர் கலந்துக் கொள்வது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    இதில் ஒன்றிய செயலா–ளர்கள் செல்வகுமார், வேலுமணி மற்றும் நிர்வா–கிகள் ஆகாஷ், சக்திவேல், மணிவண்ணன், ராஜதுரை உள்ளிட்ட பலர் பங்கேற்றார்.

    முடிவில் நகர இளைஞரணி தலைவர் சந்தோஷ்குமார் நன்றி கூறினார்.

    Next Story
    ×