கொரோனா பாதிப்பு அதிகரிப்பு: கர்ப்பிணிகள் முகக்கவசம் அணிய அறிவுறுத்தல்

அதிக காய்ச்சல், இருமல், உடல்வலி உள்ளிட்டவை இருந்தால் மகப்பேறு காலத்திற்கு முன்பாகவே மருத்துவமனைக்கு செல்ல வேண்டும்.நெரிசல் மற்றும் கூட்டம் அதிகமாக உள்ள இடங்களுக்கு செல்வதை சில நாட்களுக்கு தவிர்க்க வேண்டும்.
கொரோனா பாதிப்பு அதிகரிப்பு: கர்ப்பிணிகள் முகக்கவசம் அணிய அறிவுறுத்தல்
Published on

கொரோனா பரவல் எதிரொலியாக கர்ப்பிணிகள் முகக்கவசம் அணிய தமிழக பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. மேலும் அதிக காய்ச்சல், இருமல், உடல்வலி உள்ளிட்டவை இருந்தால் மகப்பேறு காலத்திற்கு முன்பாகவே மருத்துவமனைக்கு செல்ல வேண்டும். நெரிசல் மற்றும் கூட்டம் அதிகமாக உள்ள இடங்களுக்கு செல்வதை சில நாட்களுக்கு தவிர்க்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இதனால் அந்தந்த மாநில சுகாதாரத்துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே கொரோனா பாதித்து விழுப்புரம் முண்டியம்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 35 வயது நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். ஐதராபாத்தில் வேலை செய்தபோது கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. சிகிச்சைக்காக சொந்த ஊர் வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com