என் மலர்

    நீங்கள் தேடியது "Cell phone app"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • செல்போன் செயலிகள் மூலம் வங்கி விவரங்கள் திருட வாய்ப்பு உள்ளது.
    • www.cybercrime.gov.in என்ற இணைய முகவரியில் புகாரை பதிவிடலாம்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையைச் சேர்ந்தவர் முத்துக்குமார். இவரது வங்கிக் கணக்கில் மர்மநபர்கள் ஆன்லைன் மூலம் மோசடி செய்து ரூ.85 ஆயிரத்து 798-ஐ 3 தவணைகளாக எடுத்தனர்.

    இதுகுறித்த புகாரின் பேரில் மாவட்ட சைபர்கிரைம் போலீசார் நடவடிக்கை எடுத்து பணம் சம்பந்தப்பட்ட வங்கிக் கணக்கை முடக்கம் செய்து ரூ.72 ஆயிரத்து 99-ஐ மீட்டனர். அதனை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை மீட்கப்பட்ட பணத்தை முத்துக்குமாரிடம் ஒப்படைத்தார். பின்னர் போலீஸ் சூப்பிரண்டு கூறியதாவது:

    பொது மக்கள், கல்லூரி மாணவர்கள் தாங்கள் பயன்படுத்தும் செல்போன்களை கவனமாக கையாள வேண்டும், மேற்படி சம்பவம் செல்போனில் மனுதாரரின் மகன் கேம் ஆப்பை டவுன் லோடு செய்து அதில் வந்த தேவையற்ற லிங்கை தொட்டதால் தான் வங்கி விபரங்கள் லிங்க் மூலம் செல்போனில் உள்ள வங்கி விபரங்கள் திருடி உள்ளதாக தெரிகிறது. தேவையற்ற அப்ளிகேஷன் நமது செல்போனில் பயன்படுத்துவதால் நமது தனிப்பட்ட விபரங்கள் மற்றும் வங்கி விபரங்கள் திருட வாய்ப்புள்ளது ஆகவே எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

    பணம் பரிவர்த்தனையில் ஏமாற்றங்கள் நடந்து விட்டதாக கருதினால் உடனே சைபர் கிரைம் உதவி 1930 என்ற கட்டணமில்லா எண்ணை தொடர்பு கொண்டும் அல்லது www.cybercrime.gov.in என்ற இணைய முகவரியில் புகாரை பதிவிடலாம். இவ்வாறு அவர் பேசினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தனியார் ஆப் மூலம் ரூ.8,40,000 பரிசு கிடைத்துள்ளதாக தபால் வழியாக மர்ம நபர்கள் மூலம் கூப்பன் அனுப்பினர்.
    • சுதா 27.09.2022 முதல் 27.01.2023 வரை சில தவணைகளாக மொத்தம் ரூ.3,79,100 பணத்தை வங்கியிலிருந்து அனுப்பியுள்ளார்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் சைபர் கிரைம் போலீஸ் நிலையத்திற்குட்பட்ட பெண்ணாடம் பகுதியை சேர்ந்த சுதாவிற்கு கடந்த செப்டம்பர் 27-ந்தேதி தனியார் ஆப் மூலம் ரூ.8,40,000 பரிசு கிடைத்துள்ளதாக தபால் வழியாக மர்ம நபர்கள் மூலம் கூப்பன் அனுப்பினர். அதை உண்மை என்று நம்பிய சுதா அதில் கொடுக்கப்பட்டிருந்த தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு பேசினார். அப்போது சுதாவிடம் பிரேம் குமார் மற்றும் சுனில் குமார் என்ற பெயரில் மர்ம நபர்கள் பேசினர். உடனே அவர்கள் கூப்பனில் உள்ள பரிசு தொகையை பெறுவதற்கு ரிசர்வ் வங்கியில் என்.ஓ.சி பெற வேண்டும் என்று கூறி அதற்கான தொகையை வங்கி கணக்கில் செலுத்துமாறு கூறியுள்ளனர். 

    இதனையடுத்து சுதா 27.09.2022 முதல் 27.01.2023 வரை சில தவணைகளாக மொத்தம் ரூ.3,79,100 பணத்தை வங்கியிலிருந்து அனுப்பியுள்ளார். பின்னர் போனில் பேசிய நபர்கள் மேலும் பணம் கேட்டு தொந்தரவு செய்ததால பாதிக்கப்பட்ட சுதா நேஷனல் க்ரைம் ரிப்போர்ட்டிங் கோர்ட்டில் புகார் செய்தார். புகாரின் பேரில் கடலூர் மாவட்ட இணையவழி குற்ற காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • அதிகாரிகளின் ஆய்வின்போது ரேஷன் பொருட்கள் வாங்க வரும் மக்கள் நீண்டநேரம் காத்திருக்கும் நிலை ஏற்படுகிறது.
    • புதியசெல்போன் செயலி மூலம் ரேஷன் கடைகளில் ஆய்வுநடத்த மாவட்ட அதிகாரிகள் தயாராகிவருகின்றனர்.

    திருப்பூர்:

    ரேஷன் கடைகளில் விற்பனை செய்யப்பட்ட பொருட்கள், இருப்பு விவரங்கள் குறித்து மாவட்ட கலெக்டர், டி.ஆர்.ஓ., - மாவட்ட வழங்கல் அலுவலர், கூட்டுறவு சார்பதிவாளர், நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகள் தொடர் ஆய்வு மேற்கொள்கின்றனர்.

    பாய்ன்ட் ஆப் சேல் மெஷினை நிறுத்தி ஆய்வு நடத்தப்படுகிறது. இதனால் அதிகாரிகளின் ஆய்வின்போது ரேஷன் பொருட்கள் வாங்க வரும் மக்கள் நீண்டநேரம் காத்திருக்கும் நிலை ஏற்படுகிறது.

    இதனை தவிர்க்க ரேஷன் கடைகளில் ஆய்வு செய்வதற்காக பிரத்யேக செயலி உணவு துறையால் உருவாக்கப்பட்டுள்ளது. அமைச்சர் சக்ரபாணி, அறிமுகப்படுத்தினார். இதையடுத்து திருப்பூர் உள்பட அனைத்து மாவட்டங்களிலும் ரேஷன் கடைகளில் ஆய்வு மேற்கொள்ளும் அதிகாரிகளின் செல்போனில் இந்த செயலி நிறுவப்பட்டு வருகிறது.

    திருப்பூர் மாவட்டத்தில் 1,135 ரேஷன் கடைகள் உள்ளன. புதியசெல்போன் செயலி மூலம் ரேஷன் கடைகளில் ஆய்வுநடத்த மாவட்ட அதிகாரிகள் தயாராகிவருகின்றனர்.

    ரேஷன் கடைக்கு செல்லும் ஆய்வு அதிகாரி தனது செல்போன் செயலியில், யூசர்நேம், பாஸ்வேர்டு அளித்து, புதிய ஆய்வுக்கான பகுதியை உருவாக்குவார். மாவட்டம், தாலுகா, ரேஷன் கடை எண் விவரங்களை அளிப்பார். உடனடியாக கடை பொறுப்பாளர் பெயர், கடை அமைவிடம் உள்பட முழு விவரம் காட்டப்படும்.

    பொருட்கள் இருப்பு, கடை குறித்த ஆய்வு, இதர ஆய்வு என்கிற 3 பிரிவில் ஆய்வு மேற்கொள்ளலாம். பொருட்கள் இருப்பு பிரிவை தேர்ந்தெடுத்து குறிப்பிட்ட பொருளின் பெயரை அதிகாரி பதிவு செய்வார். உடனடியாக அந்த கடையின் பாய்ன்ட்ஆப்சேல் மெஷினில் பதிவாகியுள்ள விவரங்கள் அடிப்படையில் விற்பனை, பொருட்கள் இருப்பு ஆகியன செயலியில் காட்டப்படும்.

    நேரடி ஆய்வுமூலம் குறிப்பிட்ட அளவில் பொருள் இருப்பு உள்ளதா என ஆய்வு மேற்கொண்டு முரண்பாடு இருப்பின், அவ்விவரங்களையும் அபராத தொகையையும் செல்போன் செயலியிலேயே ஆய்வு அதிகாரி பதிவு செய்து விடுவார்.

    இதேபோல் ரேஷன் கடை சரியான நேரம் இயங்குகிறதா, பணியாளர், மின் இணைப்பு, எலக்ட்ரானிக் தராசு, பொருள் இருப்பு, பாய்ன்ட் ஆப் சேல் மெஷின் செயல்பாடு ஆகிய பல்வேறு அம்சங்கள் குறித்து ஆய்வு செய்து ஆம், இல்லை என பதிவு செய்யும் வசதியும் உள்ளது.செயலியை பயன்படுத்துவது எளிதாக புரிந்து கொள்ள படவிளக்கத்துடன் கூடிய விளக்க கையேடு வழங்கப்பட்டுள்ளன.குறைகள் கண்டறிந்து களையப்பட்ட பின், ரேஷன் கடை ஆய்வுகள் முழுமையாக இந்த செயலி மூலமாகவே மேற்கொள்ளப்படும் என்கின்றனர் வழங்கல் பிரிவு அதிகாரிகள்.

    ×