கர்ப்பிணிகளுக்கான சிகிச்சைகள் குறித்து செல்போன் செயலி மூலம் கண்காணிப்பு

30 வயதுக்கு மேற்பட்ட கர்ப்பிணிகள் சிக்கலான பிரசவங்களை எதிர்நோக்கியிருப்பவர்களாக கருதப்படுகின்றனர். 'ஹை ரிஸ்க் மதர் டிராகிங்' எனும் மொபைல்போன் செயலியில் பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கோப்புபடம்.
கோப்புபடம்.
Published on

தாராபுரம் :

தமிழகத்தில் கர்ப்பிணிகள், சிசு இறப்பை பூஜ்யமாக்க சுகாதாரத் துறை தொடர்ந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. சிக்கலான பிரசவத்தை எதிர்நோக்கியிருக்கும் பெண்களை பிரத்யேக மொபைல்போன் செயலி வாயிலாக கண்காணிக்கும் நடவடிக்கையை சுகாதாரத் துறையினர் மேற்கொண்டுள்ளனர்.

இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது :- கர்ப்பகாலத்தில் ஏற்படும் ரத்தசோகை, உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, இருதய பாதிப்புக்கு உள்ளானவர்கள், 30 வயதுக்கு மேற்பட்ட கர்ப்பிணிகள் சிக்கலான பிரசவங்களை எதிர்நோக்கியிருப்பவர்களாக கருதப்படுகின்றனர்.தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் கர்ப்பிணிகளின் தகவல்களை பகிரவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.கர்ப்பிணிகளை கண்காணிப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ள 'ஹை ரிஸ்க் மதர் டிராகிங்' எனும் மொபைல்போன் செயலியில், கர்ப்பிணிகளின் முழு விவரங்களையும் பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. கர்ப்பிணிகள் விவரங்களை அந்தந்த பகுதி கிராம சுகாதார செவிலியர்கள் பார்க்கலாம். பிரச்னைக்குரிய கர்ப்பிணிகளை அடையாளம் கண்டு எளிதில் கண்காணிக்க முடியும்.

ஒவ்வொரு மாதமும் அவர்களின் உடல் நிலை குறித்து அறிந்து உரிய ஆலோசனைகள், சிகிச்சையை பரிந்துரைக்க முடியும். இதனால் கர்ப்பகாலங்களில் ஏற்படும் இறப்புகளை கட்டுப்படுத்த முடியும் என்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com