search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    செல்போன் செயலிகள் மூலம் வங்கி விவரங்கள் திருட வாய்ப்பு
    X

    செல்போன் செயலிகள் மூலம் வங்கி விவரங்கள் திருட வாய்ப்பு

    • செல்போன் செயலிகள் மூலம் வங்கி விவரங்கள் திருட வாய்ப்பு உள்ளது.
    • www.cybercrime.gov.in என்ற இணைய முகவரியில் புகாரை பதிவிடலாம்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையைச் சேர்ந்தவர் முத்துக்குமார். இவரது வங்கிக் கணக்கில் மர்மநபர்கள் ஆன்லைன் மூலம் மோசடி செய்து ரூ.85 ஆயிரத்து 798-ஐ 3 தவணைகளாக எடுத்தனர்.

    இதுகுறித்த புகாரின் பேரில் மாவட்ட சைபர்கிரைம் போலீசார் நடவடிக்கை எடுத்து பணம் சம்பந்தப்பட்ட வங்கிக் கணக்கை முடக்கம் செய்து ரூ.72 ஆயிரத்து 99-ஐ மீட்டனர். அதனை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை மீட்கப்பட்ட பணத்தை முத்துக்குமாரிடம் ஒப்படைத்தார். பின்னர் போலீஸ் சூப்பிரண்டு கூறியதாவது:

    பொது மக்கள், கல்லூரி மாணவர்கள் தாங்கள் பயன்படுத்தும் செல்போன்களை கவனமாக கையாள வேண்டும், மேற்படி சம்பவம் செல்போனில் மனுதாரரின் மகன் கேம் ஆப்பை டவுன் லோடு செய்து அதில் வந்த தேவையற்ற லிங்கை தொட்டதால் தான் வங்கி விபரங்கள் லிங்க் மூலம் செல்போனில் உள்ள வங்கி விபரங்கள் திருடி உள்ளதாக தெரிகிறது. தேவையற்ற அப்ளிகேஷன் நமது செல்போனில் பயன்படுத்துவதால் நமது தனிப்பட்ட விபரங்கள் மற்றும் வங்கி விபரங்கள் திருட வாய்ப்புள்ளது ஆகவே எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

    பணம் பரிவர்த்தனையில் ஏமாற்றங்கள் நடந்து விட்டதாக கருதினால் உடனே சைபர் கிரைம் உதவி 1930 என்ற கட்டணமில்லா எண்ணை தொடர்பு கொண்டும் அல்லது www.cybercrime.gov.in என்ற இணைய முகவரியில் புகாரை பதிவிடலாம். இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×