search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சூரியஒளி மின்சக்தி பூங்கா- ரெட்டியார்பட்டியில் மின்வாரிய அதிகாரிகள் ஆய்வு
    X

    ஆய்வில் ஈடுபட்ட மின்வாரிய அதிகாரிகள்.

    சூரியஒளி மின்சக்தி பூங்கா- ரெட்டியார்பட்டியில் மின்வாரிய அதிகாரிகள் ஆய்வு

    • ரெட்டியார்பட்டி பிரிவு அலுவலகத்துக்கு உட்பட்ட பகுதியில் தனியார் சூரிய ஒளி மின் சக்தி பூங்கா அமைக்கப்பட இருக்கிறது.
    • ஆய்வு பணியை நெல்லை மின் பகிர்மான வட்ட மேற்பார்வை மின் பொறியாளர், நகர்ப்புற கோட்ட செயற்பொறியாளர் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

    நெல்லை:

    தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் நெல்லை நகர்ப்புற கோட்டத்தில் ரெட்டியார்பட்டி பிரிவு அலுவலகத்துக்கு உட்பட்ட பகுதியில் தனியார் சூரிய ஒளி மின் சக்தி பூங்கா 3 மெகாவாட்டில் அமைக்கப்பட இருக்கிறது. அதிலிருந்து பெறப்படும் மின்சாரம் ரெட்டியார்பட்டி துணை மின் நிலையத்திற்கு கொண்டு செல்வதற்கான ஆய்வு பணியை நெல்லை மின் பகிர்மான வட்ட மேற்பார்வை மின் பொறியாளர் குருசாமி, நெல்லை நகர்ப்புற கோட்ட செயற்பொறியாளர் முத்துக்குட்டி ஆகியோர் இணைந்து ஆய்வு மேற்கொண்டனர். நெல்லை சந்திப்பு உபகோட்ட உதவி செயற்பொறியாளர் தங்க முருகன், உதவி மின் பொறியாளர் ரெட்டியார்பட்டி பிரிவு ( பொறுப்பு ) அபிராமிநாதன் ஆகியோர் உடன் இருந்தனர்.

    Next Story
    ×