என் மலர்
நீங்கள் தேடியது "fingerprint"
- அவினாசி, தாராபுரம், காங்கயம், வெள்ளகோவில், மடத்துக்குளம், பல்லடம் ஆகிய இடங்களில் சிறப்பு முகாம் நடக்கிறது.
- முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு கைரேகை பதிவு ஆகாமல் ரேஷன் பொருட்களை வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
திருப்பூர் :
திருப்பூர் மாவட்டத்தில் கைரேகை பயன்படுத்தி ரேஷன் கடைகளில் பொருட்கள் வழங்கப்படுகிறது. முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு கைரேகை பதிவு ஆகாமல் ரேஷன் பொருட்களை வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அவர்களின் நன்மைக்காக நாளை 9-நதேதி (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை ஆதார் பதிவில் கைரேகை புதுப்பித்தல் சிறப்பு முகாம் தாசில்தார் அலுவலகங்களில் நடக்கிறது.
அதன்படி அவினாசி தாலுகாவில் தாசில்தார் அலுவலகத்திலும், தாராபுரம் தாலுகாவில் தாசில்தார் அலுவலகம், ஆர்.டி.ஓ. அலுவலகத்திலும், காங்கயம் தாலுகாவில் தாசில்தார் அலுவலகம், வெள்ளகோவில் நகராட்சி அலுவலகம், மடத்துக்குளம் தாலுகாவில் தாசில்தார் அலுவலகம், பல்லடம் தாலுகாவில் தாசில்தார் அலுவலகம், நகராட்சி அலுவலகம் ஆகிய இடங்களில் சிறப்பு முகாம் நடக்கிறது.
திருப்பூர் வடக்கு தாலுகாவில் தாசில்தார் அலுவலகம், தொட்டிப்பாளையம் மண்டல அலுவலகம், திருப்பூர் தெற்கு தாலுகாவில் தாசில்தார் அலுவலகம், கலெக்டர் அலுவலகம், நல்லூர் மண்டல அலுவலகம், மாநகராட்சி மைய அலுவலகம், உடுமலை தாலுகாவில் தாசில்தார் அலுவலகம், உடுமலை நகராட்சி அலுவலகம், ஊத்துக்குளி தாலுகாவில் தாசில்தார் அலுவலகத்திலும் சிறப்பு முகாம் நடக்கிறது.
இந்த முகாமில் பங்கேற்று ஆதார் கார்டில் கைரேகை பதிவை புதுப்பித்து, சிரமம் இல்லாமல் பொருட்களை வாங்கி பயன்பெறலாம் என்று கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார்.
தர்மபுரி பாராளுமன்ற தேர்தல் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி, அரூர்(தனி) சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நாளை(வியாழக்கிழமை) நடக்கிறது.
இந்த தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை உறுதிசெய்ய தர்மபுரி மாவட்ட நிர்வாகம், மாவட்ட உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை ஆலோசனைப்படி தர்மபுரி மாவட்ட ஓட்டல்களில் நாளை வாக்களித்து விட்டு ஓட்டல்களுக்கு செல்பவர்கள் வாக்களித்த கைவிரல் மையை காண்பித்தால் சாப்பிட்ட உணவுக்கான கட்டணதொகை மற்றும் பார்சல் கட்டணதொகையில் 10 சதவீத தள்ளுபடி வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
பொதுமக்கள் மத்தியில் வாக்குப்பதிவின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இந்த முயற்சியை மேற்கொள்வதாக தர்மபுரி மாவட்ட ஓட்டல் சங்க நிர்வாகிகள் தெரிவித்து உள்ளனர்.
தமிழ்நாட்டில் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பொருட்கள் சரியான முறையில் பொதுமக்களுக்கு சென்றடைய பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.
தற்போது 1 கோடியே 95 லட்சம் ரேஷன் கார்டுகளும் ஸ்மார்ட் கார்டுகளாக மாற்றப்பட்டு உள்ளதால் பெருமளவு முறைகேடுகள் தடுக்கப்பட்டுள்ளது.
ஆனாலும் ஸ்மார்ட் கார்டை அடுத்தவர்களிடம் கொடுத்து ரேஷன் பொருட்களை சிலர் வாங்கி வருகின்றனர்.
வசதி படைத்தவர்கள் தங்கள் வீடுகளில் வேலை பார்ப்பவர்களிடம் கார்டை கொடுத்து பொருட்களை வாங்கிக் கொள்ள அனுமதிக்கின்றனர். இதனால் அரசின் மானியம் வீணாகிறது.
இதை தடுப்பதற்காக ரேஷன் கடைகளில் ஸ்மார்ட் கார்டுடன் கைவிரல் ரேகையையும் பதிவு செய்தால்தான் பொருட்கள் வாங்க முடியும் என்ற புதிய நடைமுறையை அரசு நடைமுறைப்படுத்த உள்ளது.
இதுகுறித்து உணவு வழங்கல் துறை கமிஷனர் மதுமதியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

இதன் அடுத்த கட்டமாக குடும்ப உறுப்பினர்கள் ரேஷன் கடைகளில் கைவிரல் ரேகையை பதிவு செய்தால்தான் பொருட்கள் வாங்க முடியும் என்ற நிலையை கொண்டு வர உள்ளோம்.
ரேஷன் கடைகளில் ஸ்மார்ட் கார்டை பதிவு செய்யும் மிஷினுடன் கைவிரல் ரேகையை பதிவு செய்வதற்கான மிஷினும் கூடுதலாக வைக்கப்பட உள்ளது.
அதில் குடும்ப தலைவர் அல்லது கார்டில் உள்ள குடும்ப உறுப்பினர் கைரேகையை பதிவு செய்தால் தான் பொருட்கள் கிடைக்கும். ஒவ்வொரு முறை பொருட்கள் வாங்கும் போதும் கைரேகை வைக்க வேண்டும்.
இந்த நடைமுறை இன்னும் 3 மாதத்தில் செயல்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கிறோம். இதற்காக கைவிரல் ரேகையை பதிவு செய்யும் மிஷின் ரேஷன் கடைகளில் வைக்கப்பட உள்ளது. இதன் மூலம் முறைகேடுகள் முற்றிலும் தடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார். #RationCard #SmartCard