என் மலர்
நீங்கள் தேடியது "தாசில்தார் அலுவலகம்"
- மயிலாடுதுறை நகராட்சியில் பாதாள சாக்கடை கழிவு நீர் வெளியேறுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
- ராஜன் தோட்டத்தை சுற்றியுள்ள பகுதியில் கருவேல மரங்களை அகற்ற வேண்டும்
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை அன்னை இந்திரா நகரில் 50 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வரும் கட்டுமான தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இலவச வீட்டு மனைபட்டாவழங்க வலியுறுத்தி மயிலாடுதுறையில் புரட்சிகர சோசியலிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மயிலாடுதுறை தாசில்தார் அலுவலகம் முன்பு மாநில குழு உறுப்பினர் பாபுசங்கர் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் ஏழை மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும், மயிலாடுதுறை நகராட்சியில் பாதாள சாக்கடை கழிவு நீர் வெளியேறுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், மயிலாடுதுறை ராஜன் தோட்டத்தை சுற்றியுள்ள பகுதியில் கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
- தாசில்தார் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடந்தது.
- தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தின் ஒன்றிய மாநாடு கட்சி அலுவலகத்தில் நடந்தது.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தின் ஒன்றிய மாநாடு கட்சி அலுவலகத்தில் நடந்தது. முருகேசன் தலைமை தாங்கினார். பாக்கியம் கொடி ஏற்றி வைத்தார்.
விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாநில தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான தங்கமணி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் கண்ணகி, விவசாய தொழி லாளர் சங்க மாவட்டச் செயலாளர் சாத்தையா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலாளர் சங்கையா, விவசாய தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் கணேசன் உள்ளிட்ட பலர் பேசினர்.
விவசாய தொழிலாளர் சங்கத்தின் மானாமதுரை ஒன்றிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். செயலா ளராக கணேசன், தலைவராக முருகேசன், பொரு ளாளராக சோனையா, துணைச் செயலாளராக நாகேந்திரன், துணைத் தலைவராக அரியமுத்து ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் மணி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகரச் செயலாளர் நாகராஜன், ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர் முருகேசன் மற்றும் விவசாய தொழிலாளர் சங்க உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மகாத்மா காந்தி வேலை உறுதி அளிப்பு திட்டத்தை நிறுத்தும் நிலையை தடுக்க வேண்டும், மானாமதுரை ஒன்றியம் பதினெட்டான் கோட்டை கிராமத்தில் ஆதி திராவிடர்களுக்கு கொடுக்கப்பட்ட இடத்தில் நடந்துள்ள முறைகேடு குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். புத்தனேந்தல் கிராமத்தில் அரசு நிலம் ஆக்கிரமிப்பு செய்ய ப்பட்டதையும், இங்குள்ள மயானத்தை பிற கிராமத்தினர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதையும் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி மானாமதுரை வட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் முற்றுகை போராட்டம் நடத்துவது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
- மன்னார்குடியில் தாசில்தார் அலுவலகத்தில் நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஆய்வு கூட்டம் நடந்தது.
- உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் இப்பகு தியில் சோதனை செய்ய வேண்டும்.
மன்னார்குடி:
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் தாசில்தார் அலுவலகத்தில் நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஆய்வு கூட்டம் நடந்தது கூட்டத்திற்கு உதவி கலெக்டர் நேர்முக உதவியாளர் ஜீவானந்தம் வட்ட வழங்க அலுவலர் மகேஷ் கூட்டுரவு சார் பதிவாளர் பிரபா ஆகியோர் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் மன்னார்குடி பகுதியில் முக்கிய ரேஷன் கடைகளில் மண்ணெ ண்ணெய் தட்டுப்பாடு, கோதுமை தட்டுப்பாடு கடை தெருவில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பது, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் உணவகங்களில் சோதனையை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து மன்னார்குடி நுகர்வோர் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சங்கத் தலைவர் பத்மநாபன்.
நிர்வாகி வேல்முருகன் ஆகியோர் பேசினர்.
உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் இப்பகு தியில் சோதனை செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர் கடந்த மாதம் கூறப்பட்ட புகார்கள் மீது எடுக்கப்பட்ட நடவடி க்கை குறித்தும் விவாதிக்க ப்பட்டது.
- பேசிய வருவாய் ஆய்வாளர் சொந்த அலுவல் காரணமாக வெளியே இருப்பதாகவும், நாளை வருகிறேன் என கூறியுள்ளார்.
- சத்தியசீலன் போச்சம்பள்ளி தாசில்தார் மகேந்திரனிடம் சென்று முறையிட்டுள்ளார்.
மத்தூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த ஜம்புகுட்டப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சத்தியசீலன் (வயது 42).
இவரது மகள் 12-ம் வகுப்பு தேர்வு முடித்துவிட்டு கல்லூரிக்காக விண்ணப்பம் செய்து வருகிறார்.
இந்நிலையில் விண்ணப்பத்திற்கு முதல் பட்டதாரி சான்று தேவைப்படுவதால், கையொப்பம் பெற போச்சம்பள்ளி வருவாய் அலுவலகத்திற்கு சத்தியசீலன் தனது மகளுடன் வந்தார். அங்கு வருவாய் ஆய்வாளர் இல்லாததால், அலுவலகத்தின் வெளியே எழுதப்பட்டிருந்த செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டுள்ளார்.
அப்போது பேசிய வருவாய் ஆய்வாளர் சொந்த அலுவல் காரணமாக வெளியே இருப்பதாகவும், நாளை வருகிறேன் என கூறியுள்ளார்.
இதையடுத்து சத்தியசீலன் போச்சம்பள்ளி தாசில்தார் மகேந்திரனிடம் சென்று முறையிட்டுள்ளார்.
தாசில்தாரின் உத்திரவின் பேரில் அங்கு வந்த வருவாய் ஆய்வாளர், இந்த விண்ணப்பத்தில் கையொப்பம் போட முடியாது, இது உனது மகளே இல்லை என கூறியதாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த சத்தியசீலன் தனது உறவினர்களுடன் வருவாய் அலுவலகம் முன்பு தர்ணாவில் ஈடுபட்டார். விபரம் அறிந்து வந்த போச்சம்பள்ளி தாசில்தார் மகேந்திரன் மற்றும் போச்சம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகலட்சுமி ஆகியோர் சமாதான பேச்சு வார்த்தை நடத்தினர்.
பின்னர் அதிகாரிகள் சத்தியசீலன் கொண்டு வந்த மனுவில் கையொப்பம் பெற்ற பின்னர் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- அரசின் திட்டங்கள் மக்களுக்கு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
- உதயநிதி ஸ்டாலினிடம் சாலையில் திரண்டிருந்த பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை வழங்கினர்.
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தூத்துக்குடியில் தி.மு.க. நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்ற பின் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
பின்னர் அவர் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் அரசின் திட்டங்கள் குறித்த கலந்தாய்வு கூட்டத்திதில் கலந்து கொள்ள சென்றார்.
அப்போது டூவிபுரத்தில் உள்ள வருவாய் தாசில்தார் அலுவலகத்திற்கு சென்று 'திடீர்' ஆய்வு செய்தார். அப்போது தாசில்தார் சுப்பையா மற்றும் அதிகாரிகளிடம், பொதுமக்கள் அளிக்கும் பட்டா பெயர் மாற்றம் உள்ளிட்ட மனுக்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். காலதாமதம் செய்யக்கூடாது என்று கூறினார்.
தொடர்ந்து அரசின் திட்டங்கள் மக்களுக்கு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
பின்னர் பொதுமக்கள் அளிக்கும் பட்டா விண்ணப்பங்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
அதனை முடித்து வெளியே வந்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் சாலையில் திரண்டிருந்த பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை வழங்கினர். அப்போது மேயர் ஜெகன் பெரியசாமி உடன் இருந்தார்.
- பிஏபி. பாசன கிளை வாய்க்காலின் மூலம் தண்ணீா் பெற்று விவசாயம் செய்து வருகிறாா்.
- காங்கயம் வட்டாட்சியா் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்துள்ளாா்.
காங்கயம் :
காங்கயம் அருகே உள்ள சிவன்மலை ஊராட்சிக்கு உள்பட்ட சிக்கரசம்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் சாந்தாமணி (வயது 55). இவருக்குச் சொந்தமாக 4 ஏக்கா் விவசாய நிலம் உள்ளது. பிஏபி. பாசன கிளை வாய்க்காலின் மூலம் தண்ணீா் பெற்று விவசாயம் செய்து வருகிறாா்.
இந்நிலையில் வாய்க்காலில் இருந்து தண்ணீா் வரும் பாதையை பக்கத்து நிலத்துக்காரா் அடைத்து வைத்துவிட்டதாகக் கூறி, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் சாந்தாமணி புகாா் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் விரக்தியடைந்த சாந்தாமணி காங்கயம் வட்டாட்சியா் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்துள்ளாா். பின்னா் மனுவை வாங்கி வைத்துக் கொண்டு முறையாக விசாரிக்கவில்லை எனக் கூறி, சாந்தாமணி திடீரெனெ வட்டாட்சியா் அலுவலகம் முன்பு பெட்ரோலை ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தாா். அப்போது அங்கிருந்த துணை வட்டாட்சியா் மற்றும் போலீசார் அவரிடமிருந்த பெட்ரோல் பாட்டிலை பறித்தனா். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து வட்டாட்சியா் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நேரில் வந்து ஆய்வு செய்வதாக உறுதியளித்ததைத் தொடா்ந்து சாந்தாமணி மற்றும் அவரது குடும்பத்தினா் திரும்பிச் சென்றனா்.
- அவினாசி, தாராபுரம், காங்கயம், வெள்ளகோவில், மடத்துக்குளம், பல்லடம் ஆகிய இடங்களில் சிறப்பு முகாம் நடக்கிறது.
- முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு கைரேகை பதிவு ஆகாமல் ரேஷன் பொருட்களை வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
திருப்பூர் :
திருப்பூர் மாவட்டத்தில் கைரேகை பயன்படுத்தி ரேஷன் கடைகளில் பொருட்கள் வழங்கப்படுகிறது. முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு கைரேகை பதிவு ஆகாமல் ரேஷன் பொருட்களை வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அவர்களின் நன்மைக்காக நாளை 9-நதேதி (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை ஆதார் பதிவில் கைரேகை புதுப்பித்தல் சிறப்பு முகாம் தாசில்தார் அலுவலகங்களில் நடக்கிறது.
அதன்படி அவினாசி தாலுகாவில் தாசில்தார் அலுவலகத்திலும், தாராபுரம் தாலுகாவில் தாசில்தார் அலுவலகம், ஆர்.டி.ஓ. அலுவலகத்திலும், காங்கயம் தாலுகாவில் தாசில்தார் அலுவலகம், வெள்ளகோவில் நகராட்சி அலுவலகம், மடத்துக்குளம் தாலுகாவில் தாசில்தார் அலுவலகம், பல்லடம் தாலுகாவில் தாசில்தார் அலுவலகம், நகராட்சி அலுவலகம் ஆகிய இடங்களில் சிறப்பு முகாம் நடக்கிறது.
திருப்பூர் வடக்கு தாலுகாவில் தாசில்தார் அலுவலகம், தொட்டிப்பாளையம் மண்டல அலுவலகம், திருப்பூர் தெற்கு தாலுகாவில் தாசில்தார் அலுவலகம், கலெக்டர் அலுவலகம், நல்லூர் மண்டல அலுவலகம், மாநகராட்சி மைய அலுவலகம், உடுமலை தாலுகாவில் தாசில்தார் அலுவலகம், உடுமலை நகராட்சி அலுவலகம், ஊத்துக்குளி தாலுகாவில் தாசில்தார் அலுவலகத்திலும் சிறப்பு முகாம் நடக்கிறது.
இந்த முகாமில் பங்கேற்று ஆதார் கார்டில் கைரேகை பதிவை புதுப்பித்து, சிரமம் இல்லாமல் பொருட்களை வாங்கி பயன்பெறலாம் என்று கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியை அருகில் உள்ள மாவடுகுறிச்சி (கி) ஊராட்சி நாடாகாடு கிராமத்தில் 400-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இதில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட 125 குடும்பங்களை சேர்ந்த பொதுமக்களுக்கு இதுவரை அரசு வழங்கிய 27 பொருட்கள் அடங்கிய நிவாரணப் பெட்டகம் மற்றும் நிவாரண உதவித்தொகை, புயல் பாதித்து 60 நாட்களைக் கடந்த நிலையிலும் கிடைக்கவில்லையாம்.
இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் முறையிட்டும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் ஆவேசம் அடைந்த நாடாகாடு கிராம பொதுமக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் தாசில்தார் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். நிவாரணம் வழங்காவிட்டால் ஆதார் அட்டை, குடும்ப அட்டையை திரும்ப ஒப்படைப்பதாக கூறினர்.
தலைமை இடத்து துணை தாசில்தார் யுவராஜ், கூடுதல் தலைமை இடத்து துணை தாசில்தார் சுந்தரமூர்த்தி, வருவாய் ஆய்வாளர் சுப்பிரமணியன், இன்ஸ்பெக்டர் பரமானந்தம், சப்-இன்ஸ்பெக்டர் அருள்குமார், இளம்பரிதி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி நிவாரணம் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும் என உறுதி அளித்தனர். இதனையடுத்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். #GajaCyclone
சாதி சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், வருமான சான்றிதழ், முதல் பட்டதாரிக்கான சான்றிதழ் உள்ளிட்ட வருவாய்த்துறை மூலம் வழங்கப்படும் அனைத்து சான்றிதழ்களையும் பெறுவதற்கு முன்பெல்லாம் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகங்கள், வருவாய் ஆய்வாளர் அலுவலகங்கள், தாசில்தார் அலுவலகங்களுக்கு பொதுமக்கள் செல்ல வேண்டும். ஒவ்வொரு இடத்திற்கும் நேரில் செல்ல வேண்டிய நிலை இருந்ததால் வீண் அலைச்சல் பொதுமக்களுக்கு ஏற்பட்டது. அலுவலர்கள் இல்லை என்றால் அலுவலகத்திலேயே காத்திருக்க வேண்டிய நிலை இருந்தது. இதனால் நேரம் வீணானது.
இவற்றை தவிர்க்கும் வகையில் தமிழகம் முழுவதும் அனைத்து தாசில்தார் அலுவலகங்கள், மாநகராட்சி, நகராட்சி, கூட்டுறவு சங்க அலுவலகங்களில் தமிழ்நாடு அரசு தகவல் தொழில்நுட்பவியல்துறை, அரசு கேபிள் டி.வி. நிறுவனம் சார்பில் இ-சேவை மையங்கள் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன.
தஞ்சை மாவட்டத்தில் கும்பகோணம், ஒரத்தநாடு, பாபநாசம், பட்டுக்கோட்டை, பேராவூரணி, தஞ்சை, திருவையாறு, திருவிடைமருதூர், பூதலூர் ஆகிய 9 தாசில்தார் அலுவலகங்களிலும், மாநகராட்சி, நகராட்சி அலுவலகங்கள், பேரூராட்சி அலுவலகங்கள், கூட்டுறவு சங்க அலுவலகங்களில் 274 இ-சேவை மையங்கள் செயல்பட்டு வருகின்றன.
வருவாய்த்துறையினரால் வழங்கப்படும் அனைத்து சான்றிதழ்களையும் இ-சேவை மையங்கள் மூலமாகவே பெற்று கொள்ளலாம். மேலும் புதிய குடும்ப அட்டை பெறுவதற்கும், குடும்ப அட்டையில் முகவரி மாற்றம் செய்வதற்கும் இந்த மையங்கள் மூலமாகவே விண்ணப்பம் செய்யலாம். இவைகள் அனைத்தும் இணையதளம் வழியாக சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அனுப்பப்படும். அவர்கள் விண்ணப்பத்தின் உண்மை தன்மை குறித்து விசாரித்து அதன் அடிப்படையில் சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன.
பொதுமக்கள் தங்களது விண்ணப்பங்களை பதிவு செய்வது, அவற்றின் மீதான நடவடிக்கை ஆகியவற்றை குறுந்தகவல் மூலமாக செல்போன் மூலம் தெரிந்து கொள்ள முடியும். சான்றிதழ் தயாரான தகவல் பெறப்பட்டதும், சம்பந்தப்பட்ட இ-சேவை மையங்களில் பெற்று கொள்ளலாம். இ-சேவை மையங்கள் வழியாக சான்றிதழ்கள் வழங்கும் நடைமுறை வந்தபிறகு கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய் ஆய்வாளர், தாசில்தார் அலுவலகங்களுக்கு பொதுமக்கள் செல்லும் வீண் அலைச்சல் தவிர்க்கப்பட்டுள்ளது.
இந்த மையங்கள் மூலம் சான்றிதழ் பெறுவது மிக எளிதாகவே இருந்தது. இதனால் இ-சேவை மையங்களில் எப்போதும் கூட்டம் அதிகமாக இருக்கும். அதிலும் தற்போது பள்ளிக்கூடம் திறந்துவிட்டதால் மாணவர்களுக்கு சாதி சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், வருமான சான்றிதழ் பெறுவதற்காக வழக்கத்தை காட்டியிலும் விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. கடந்த 5 நாட்களாக இ-சேவை மையங்களில் சர்வர் இணைப்பு கிடைக்கவில்லை. இதனால் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்யவும் முடியவில்லை. சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்து பொதுமக்களுக்கு வழங்கவும் முடியவில்லை.
தஞ்சை தாசில்தார் அலுவலகத்தில் செயல்பட்ட இ-சேவை மையத்தில் சர்வர் இணைப்பு கிடைக்காததால் நேற்று மையத்தை ஊழியர்கள் பூட்டிவிட்டனர். இதனால் சான்றிதழ் பெறுவதற்காகவும், பதிவு செய்வதற்காகவும் வந்த பொதுமக்கள் அவதிப்பட்டனர்.
இது குறித்து பொதுமக்கள் சிலர் கூறியதாவது:-
தொடக்கத்தில் இ-சேவை மையங்களில் சாதி சான்று, இருப்பிட சான்று உள்ளிட்ட சில சான்றிதழ்கள் மட்டுமே வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது 15-க்கும் மேற்பட்ட சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன. ஆனால் தற்போது 30-க்கும் மேற்பட்ட சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருகின்றன. கடந்த ஒரு வாரமாக இ-சேவை மையங்களின் சர்வர் இணைப்பு கிடைக்கவில்லை.
வழக்கமாக 50 விண்ணப்பங்கள் வரை பதிவேற்றம் செய்த நிலையில் நேற்றுமுன்தினம் 5 விண்ணப்பங்கள் மட்டுமே பதிவேற்றம் செய்ய முடிந்தது. இதனால் மையங்களுக்கு சான்றிதழ் பெற வந்த பொதுமக்கள், மாணவர்கள் பல மணிநேரம் காத்திருந்துவிட்டு வீட்டிற்கு திரும்பி சென்றோம். இன்றைக்கு(நேற்று) மையத்தையே பூட்டிவிட்டனர். சர்வர் இணைப்பு கிடைக்காத பிரச்சினை 5 நாட்களாக நீடித்து வருகிறது. ஆனால் அவற்றை சரி செய்ய எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை.
இதனால் பொதுமக்கள் தான் பாதிக்கப்படுகின்றனர். தினமும் எந்த வேலைக்கும் செல்லாமல் மையத்திற்கு அலைவது தான் வேலையாக உள்ளது. வீண் அலைச்சலை போக்குவதற்கு தான் இ-சேவை மையம் தொடங்கப்பட்டது. இப்போது இங்கேயும் சான்றிதழ் பெற அலைய வேண்டிய நிலை உள்ளது. பொதுமக்களின் நலன் கருதி உடனே சர்வர் இணைப்பு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இது பற்றி அதிகாரிகள் கூறும்போது, சர்வர் இணைப்பு கிடைக்காததால் 5 நாட்களாக பெரும் பிரச்சினையாக தான் உள்ளது. காலையில் 9 மணி அளவில் இணைப்பு கிடைக்கிறது. 10 மணிக்கு மேல் இணைப்பு கிடைப்பது இல்லை. பொதுமக்கள் பல மணிநேரம் காத்திருந்துவிட்டு திரும்பி செல்லும் சம்பவம் நடக்கிறது. நேற்று பல இடங்களில் சர்வர் இணைப்பு பிரச்சினை எதுவும் ஏற்படவில்லை. நாளைக்குள்(திங்கட்கிழமை) இந்த பிரச்சினை தீரும் என்றனர்.






