என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
சரக்கு ஆட்டோ மோதி முதியவர் படுகாயம்
- சாலையை கடக்க முயன்ற போது கரூரிலிருந்து நாமக்கல் நோக்கி அதிவேகமாக வந்த சரக்கு ஆட்டோ சின்னப்பகவுண்டர் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
- சரக்கு ஆட்டோவை அதிகமாக ஓட்டி வந்து விபத்து ஏற்படுத்திய வெங்கரை அருகே திட்டமேடு பகுதியை சேர்ந்தவரை பரமத்தி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் மோகனூர் தாலுகா ஊஞ்சபாளையம் அருகே பொன்னேரிப்பட்டி பகுதி சேர்ந்தவர் சின்னப்பகவுண்டர் (வயது 80). விவசாயி. இவர் மாடு வாங்குவதற்காக தனது மோட்டார் சைக்கிளில் வீட்டில் இருந்து புறப்பட்டு கரூர் -சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார்.
சாலையை கடக்க முயன்ற போது கரூரிலிருந்து நாமக்கல் நோக்கி அதிவேகமாக வந்த சரக்கு ஆட்டோ சின்னப்பகவுண்டர் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்டு சின்னப்பகவுண்டர் பலத்த காயம் ஏற்பட்டது. அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு நாமக்கல்லில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்த புகாரின் பேரில், சரக்கு ஆட்டோவை அதிகமாக ஓட்டி வந்து விபத்து ஏற்படுத்திய வெங்கரை அருகே திட்டமேடு பகுதியை சேர்ந்த தினகரன் (45) என்பவர் மீது பரமத்தி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். சரக்கு ஆட்டோவை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்