search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புத்தக கண்காட்சி பணிகளுக்கு அரசு பள்ளி ஆசிரியா்களை நியமிக்கக்கூடாது - இந்து இளைஞா் முன்னணி வலியுறுத்தல்
    X

    புத்தக கண்காட்சி பணிகளுக்கு அரசு பள்ளி ஆசிரியா்களை நியமிக்கக்கூடாது - இந்து இளைஞா் முன்னணி வலியுறுத்தல்

    • இந்து இளைஞா் முன்னணி சாா்பில் போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • தனியார் புத்தக நிறுவனத்தின் சாா்பில் ஆண்டுதோறும் புத்தகக் கண்காட்சி நடைபெற்று வருகிறது.

    திருப்பூர்

    திருப்பூரில் தனியாா் நிறுவனம் சாா்பில் நடைபெறும் புத்தகக் கண்காட்சியின் பணிகளுக்கு அரசு பள்ளி ஆசிரியா்களை நியமிக்கக் கூடாது என்று இந்து இளைஞா் முன்னணி வலியுறுத்தியுள்ளது.

    இது குறித்து இந்து இளைஞா் முன்னணி மாநில ஒருங்கிணைப்பாளா் சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- திருப்பூரில் தனியார் புத்தக நிறுவனத்தின் சாா்பில் ஆண்டுதோறும் புத்தகக் கண்காட்சி நடைபெற்று வருகிறது.

    இதனிடையே தற்போது நடைபெற உள்ள புத்தக கண்காட்சியில் பணி செய்ய அரசுப் பள்ளி ஆசிரியா்களை நியமிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது கண்டனத்துக்குரியது என்று தேசிய ஆசிரியா்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இத்தகைய போக்கை நிறுத்தாவிட்டால் இந்து இளைஞா் முன்னணி சாா்பில் போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×