search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    26-வது தேசிய புத்தக கண்காட்சி
    X

    புத்தக கண்காட்சியில் எதிர்கட்சித்தலைவர் சிவா நூலை வெளியிட செந்தில் குமார் எம்.எல்.ஏ. பெற்றுக் கொண்டர். 

    26-வது தேசிய புத்தக கண்காட்சி

    • புதுவை எழுத்தாளர்கள் புத்தக சங்கத்தின் சார்பில் 26-வது தேசிய புத்தக கண்காட்சி புதுவை வேல் சொக்கநாதன் திருமண நிலையத்தில் தொடங்கியது.
    • வருகிற 25-ந் தேதிவரை இக்கண்காட்சி நடைபெறுகிறது.

    புதுச்சேரி:

    புதுவை எழுத்தாளர்கள் புத்தக சங்கத்தின் சார்பில் 26-வது தேசிய புத்தக கண்காட்சி புதுவை வேல் சொக்கநாதன் திருமண நிலையத்தில் தொடங்கியது. வருகிற 25-ந் தேதிவரை இக்கண்காட்சி நடைபெறுகிறது. தொடக்க விழாவிற்கு ஜான்குமார் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். முதல்-அமைச்சர் ரங்கசாமி கண்காட்சியை தொடங்கி வைத்து புதிய நூல்களை வெளியிட்டார்.

    பாஞ்.ராமலிங்கம் நோக்க உரையாற்றினார். எழுத்தாளர்கள் புத்தக சங்க தலைவர் முத்து வரவேற்று பேசினார். வேல்.சொ.இசைக்கலைவன் முன்னிலை வகித்தார். கோதண்டபாணி நன்றி கூறினார்.

    இக்கண்காட்சியில் இந்த ஆண்டிற்கான புத்த சேவா ரத்னா விருது புதுவை கூட்டுறவு புத்தக சங்கம் மற்றும் புதுவை தமிழ் சங்கத்தின் துணை தலைவர் ஆதிகேசவன், மோரீசியஸ் முருகன் பவுன்டேசன் தலைவர் தேவராஜன் பொன்னம்பலம், ஓய்வு பெற்ற தமிழ் பேராசிரியர் ஜோதி, புதுவை பல்கலை க்கழக நூலகர் விஜயகுமார், சமூக ஆர்வலர் சடகோ ப்பன் ஆகியோருக்கு வழங்கப்பட்டது. முடிவில் கோதண்டபாணி நன்றி கூறினர்.

    கடந்த ஆண்டு 1 1/2 லட்சத்துக்கும் அதிகமான புத்தகங்கள் ரூ.50 லட்சம் அலவிற்கு விற்பனை நடைபெற்றது. இந்த ஆண்டு 2 லட்சத்துக்கு அதிகமான புத்தகங்கள் ரூ.75 லட்சம் அளவிற்கு விற்பனை ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    Next Story
    ×