search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Bhadrakaliamman temple"

    • குதிரை பக்தர்களின் கூட்டத்திற்குள் புகுந்தது.
    • பக்தர்கள் அலறியடித்து கொண்டு நாலாபுறமும் சிதறி ஓடினர்.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் பஸ் நிலையம் அருகே புகழ் பெற்ற பத்திரகாளி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு அந்தியூர் சுற்று வட்டார பகுதிகளில் இருந்தும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தினமும் பக்தர்கள் பலர் சாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் இன்று 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி திறக்கப்பட்டது. இதையொட்டி பொதுமக்கள் பலர் தங்கள் குழந்தைகளை அழைத்து கொண்டு இன்று காலை அந்தியூர் பத்ர காளியம்மன் கோவிலுக்கு வந்து அம்மனை வழி பட்டனர்.

    இதனால் காலை வேளையில் கோவிலுக்கு பக்தர்கள் அதிக அளவில் வந்திருந்தனர்.

    அப்போது கோவிலுக்குள் ஒரு குதிரை திடீரென கோவிலுக்குள் புகுந்தது. கோவிலில் பக்தர்கள் அதிக அளவில் இருந்தனர். இதையடுத்து அந்த குதிரை பக்தர்களின் கூட்டத்திற்குள் புகுந்தது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த பக்தர்கள் அலறியடித்து கொண்டு நாலாபுறமும் சிதறி ஓடினர்.

    இதையடுத்து கோவில் பணியாளர்கள் குதிரையை கோவில் இருந்து வெளியே விரட்டும் பணியில் ஈடு பட்டனர். ஆனால் அந்த குதிரை கோவில் வளாக த்திலேயே நின்று கொண்டு இருந்தது.

    இதனால் கோவிலுக்கு வந்த பக்தர்கள் ஒரு வித அச்ச உணர்வோடு உள்ளே சென்று சாமி தரிசனம் செய்தனர். இதை தொடர்ந்து சிறுது நேரத்துக்கு பிறகு அந்த குதிரை கோவில் வளாகத்தில் இருந்து வெளி யே சென்றது.

    இதனால் இன்று காலை அந்தியூர் பகுதியில் பரபரப்பு நிலவியது.

    இது குறித்து பொதுமக்கள் கூறும் போது அந்தியூர் பகுதியில் ஏராளமான குதிரைகள் சுற்றி திரிகிறது. மேலும் குதிரை ரோடுகளில் போக்குவரத்து இடையூறும் ஏற்படும் வகையில் உள்ளது. தற்போது கோவிலில் புகுந்து பக்தர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தி உள்ளது. எனவே அந்தியூர் பகுதியில் சுற்றி திரியும் குதிரைகளை அப்புற ப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினர்.

    • மேலூர் அருகே சூரக்குண்டு பத்ரகாளியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது.
    • இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    மேலூர்

    மேலூர் அருகே உள்ள சூரக்குண்டு கிராமம், தெற்கு வளவாருக்கு பாத்தியப்பட்ட 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த பத்ரகாளியம்மன், பாப்பான்குண்டு அய்யன் கோவிலின் கும்பாபிஷேக விழா 16 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்றது. முன்னதாக பக்தர்கள் காப்புகட்டி விரதம் இருந்து வந்தனர். அதனைத்தொடர்ந்து யாகசாலை பூஜை நடைபெற்றது.

    மேலூர் சிவன் கோவில் சிவாச்சாரியார் தட்சிணாமூர்த்தி குருக்கள் கணபதி ஹோமம் செய்து பூஜையை தொடங்கி வைத்தார். அதனைத்தொடர்ந்து யாகசலை பூஜைகள் நடந்தன. நேற்று சிவாச்சாரியார்கள் புனித தீர்த்தத்தை கோபுரகலசத்தில் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தினர். இதனை . கும்பாபிஷேகத்தை ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • கணபதி ஹோமம் செய்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் பஸ் நிலையம் அருகே புகழ் பெற்ற பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் குண்டம் தேர் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

    அதேபோல் இந்த ஆண்டும் கடந்த 16-ந் தேதி பூச்சாட்டுதலுடன் திருவிழா தொடங்கி நடைபெற்று வரு கிறது. இதனைத்தொடர்ந்து கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    வரும் ஏப்ரல் மாதம் 5-ந் தேதி குண்டம் விழாவும், அதனைத்தொடர்ந்து தேர் திருவிழாவும் நடைபெற உள்ளது.

    இதனையடுத்து சாமி ஒவ்வொரு வாகனத்திலும் முக்கிய வீதிகள் வழியாக உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். இதில் அந்தியூர் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து பக்தர்கள் தினந்தோறும் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

    இந்நிலையில் கோவில் வளாகத்தில் பெண் ஒருவர் மயங்கி நிலையில் உயிரிழந்தார். அதனைத்தொடர்ந்து கோவிலில் வளாக ங்கள் தண்ணீரால் தூய்மை செய்யப்பட்டு பின்னர் கணபதி ஹோமம், புண்ணிய தானம் செய்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 

    • காணிக்கை எண்ணும் பணி கோவில் வளாகத்தில் நடைபெற்றது.
    • இதில் பணம், தங்கம், வெள்ளி பக்தர்கள் காணிக்கையாக செலுத்திருந்தனர்.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூரில் பிரசித்தி பெற்ற பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது.

    இந்த கோவிலுக்கு ஈரோடு மாவட்டத்திலுள்ள பல்வேறு இடங்களில் இருந்தும், அண்டை மாவட்டத்தில் இருந்தும் வரும் பக்தர்கள் தங்கம், வெள்ளி மற்றும் பணம் உள்ளிட்டவற்றை காணிக்கையாக செலுத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் கடந்த 5 மாதத்தில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய பணம், தங்கம் மற்றும் வெள்ளி ஆகியவற்றை எண்ணும் பணி கோவில் வளாகத்தில் நடைபெற்றது.

    அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவில் செயல் அலுவலர் நந்தினீஸ்வரி முன்னி–லையில் கோவில் உண்டியல் திறக்கப்பட்டு தனியார் கல்லூரி மாணவி களை கொண்டு காணிக்கை எண்ணப்பட்டது.

    இதில் ரூ.11,29,147 பணம், 135 கிராம் தங்கம், 205 கிராம் வெள்ளி உள்ளிட்டவை பக்தர்கள் காணிக்கையாக செலுத்திருந்தனர்.

    இந்த நிகழ்ச்சியில் பவானி கூடுதுறை சங்க மேஸ்வரர் ஆலய உதவி ஆணையர் சாமிநாதன், அறநிலை யத்துறை ஆய்வாளர் நித்யா, கோவில் பணியாளர்கள் செந்தில், தணிகாச லம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • குண்டம் தேர் திருவிழா பூச்சாட்டுதலுடன் நாளை தொடங்குகிறது.
    • விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

    அந்தியூர்:

    அந்தியூர் பஸ் நிலையம் அருகே பிரசித்தி பெற்ற பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் பங்குனி மாதம் விமரிசையாக குண்டம் தேர் திருவிழா நடைபெறுவது வழக்கம்.

    அதேபோல் இந்த ஆண்டு குண்டம் தேர் திருவிழா பூச்சாட்டுதலுடன் நாளை (16-ந் தேதி) தொடங்குகிறது. தொடர்ந்து 22-ந் தேதி மகிஷாசூர மர்தனமும், 28-ந் தேதி கிராமசாந்தியும், 29-ந் தேதி காலை 11 மணிக்கு கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    அன்றைய தினத்தில் இருந்து தினமும் அம்மன் ஒவ்வெரு வாகனத்திலும் வீதி உலா வந்து பக்தர் களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சி நடைபெறும்.

    அதனைத்தொடர்ந்து அடுத்த மாதம் 5-ந் தேதி குண்டம் திருவிழாவும், 7-ந் தேர் திருவிழா தொடங்கி 10-ந் தேதி வரை தேர் முக்கிய வீதிகள் வழியாக வந்து மீண்டும் நிலையை வந்து அடையும்.

    தொடர்ந்து 11-ந் தேதி பரிவேட்டையும், 12-ந் தேதி வசந்தோற்சவத்துடன் திருவிழா நிறைவடைகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

    • கடந்த 21 ந்தேதி நோன்பு சாட்டுதல் நிகழ்ச்சியுடன் திருவிழா தொடங்கியது.
    • திருமூர்த்தி மலையில் இலிருந்து தீர்த்தம் எடுத்து வரப்பட்டது.

    உடுமலை :

    உடுமலை சங்கிலி வீதியில் பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. நாடார் உறவின் முறையார் சங்கத்துக்கு பாத்தியப்பட்ட இந்த கோவில் திருவிழா கடந்த 21 ந்தேதி நோன்பு சாட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. அதைத்தொடர்ந்து கருப்பண்ணசாமி பூஜையும் திருமூர்த்தி மலையில் இலிருந்து தீர்த்தம் எடுத்து வரப்பட்டது.பின்பு பத்ரகாளியம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும் இதையடுத்து கொடியேற்றுதல், காப்புக்கட்டுதல், கும்பம், பூவோடு எடுத்துவருதல், மாவிளக்கு, பொங்கல் வழிபாடு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    விழாவின் முக்கிய நிகழ்வான அம்மன் திருக்கல்யாணம் நேற்று காலை சிவாச்சாரியார்கள் தலைமையில் நடந்தது.சூலத்தேவருடன் திருக்கல்யாண அலங்கா ரத்தில் அருள்பாலித்த பத்ரகாளிஅம்மனை திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.அதைத்தொடர்ந்து ஊஞ்சல் உற்சவம், சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றது. பின்னர் நிர்வாகத்தின் சார்பில் பக்தர்கள் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    மாலையில் கேரள செண்டைமேளம் மற்றும் மேளதாளங்கள் முழங்க அம்மன் திருவீதி உலா நடந்தது. சங்கிலி வீதி, அமணலிங்க வீதி, மற்றும் சதாசிவம் வீதி வழியாக திருவீதி உலா குட்டை திடலை அடைந்தது. அங்கு வானவேடிக்கை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதையடுத்து கொடி இறக்குதல், சக்தி கும்பம் கங்கையில் விடுதல், நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இன்று மாலை 7 மணிக்கு மஞ்சள் நீராட்டு விழாவும் அதனைத் தொடர்ந்து அபிஷேகமும் நடைபெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை உடுமலை நாடார் உறவின் முறையார் சங்க நிர்வாகிகள், மகளிர் அணி நிர்வாகிகள், இளைஞர் அணியினர் செய்து இருந்தனர்.

    • ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
    • பட்டாசு வெடித்த போது தீப்பொறி சாரத்தின் மீதுபட்டு தீப்பிடித்தது.

    சிவகாசி:

    சிவகாசியில் உள்ள பத்ரகாளியம்மன் கோயிலில் திருப்பணிகள் நடைபெற்று வந்தன. ராஜகோபுரத்திற்கு வர்ணம் தீட்டுவதற்காக கம்புகள் கட்டி சாரம் அமைக்கப்பட்டிருந்தது. மேலும் சாக்கு துணிகளால் ராஜகோபுரம் முழுவதும் மூடப்பட்டிருந்தது. இந்நிலையில் அந்த பகுதியில் திருமண நிகழ்ச்சி ஊர்வலம் நடைபெற்றது. அப்போது அந்த கூட்டத்தில் இருந்த சிலர் பேன்சி ரக பட்டாசு வெடித்தப் போது அதில் இருந்து வெளிவந்த தீப்பொறி கோயில் சாரத்தின் மீது சுற்றப்பட்டிருந்த சாக்கில் பட்டு தீப்பிடித்தது.

    இதில் கோயில் உச்சிபகுதி முழுவதும் சாரம் தீப்பிடித்து கொழுந்து விட்டு எரிந்தது. உடனடியாக சிவகாசி தீயணைப்பு படையினர் இரண்டு வாகனங்களுடன் வந்து ஒரு மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இது குறித்து சிவகாசி போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த தீ விபத்து காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.

    • அந்தியூர் செல்லீஸ்வரர் வகையறா திருக்கோவிலில் பத்ரகாளியம்மன் கோவிலில் உண்டியல் காணிக்கை என்னும் பணி நடைபெற்றது.
    • பக்தர்கள் உண்டியலில் ரூ.16 லட்சத்து 19 ஆயிரத்து 714 தொகையாகவும், 380 கிராம் தங்கமும், 414 கிராம் வெள்ளியும் காணிக்கையாக செலுத்திருந்தனர்.

    அந்தியூர்:

    அந்தியூர் செல்லீஸ்வரர் வகையறா திருக்கோவிலில் பத்ரகாளியம்மன் கோவிலில் உண்டியல் காணிக்கை என்னும் பணி நடைபெற்றது.

    பக்தர்கள் உண்டியலில் ரூ.16 லட்சத்து 19 ஆயிரத்து 714 தொகையாகவும், 380 கிராம் தங்கமும், 414 கிராம் வெள்ளியும் காணிக்கையாக செலுத்திருந்தனர்.

    இதில் பவானி சங்கமேஸ்வரர் கோவில் உதவி ஆணையர் சுவாமிநாதன், ஆய்வாளர் ஸ்ரீ மாணிக்கம் மற்றும் கோவில் செயல் அலுவலர் சீனிவாசன், பணியாளர்கள், தனியார் கல்லூரி மாணவிகள் சுமார் 50 பேர் கலந்து கொண்டனர்.

    • பத்ரகாளியம்மன் கோவில் குடமுழுக்கு விழா நடந்தது
    • திருப்பணிகள் செய்யப்பட்டு புதுப்பிக்கப்பட்டது

    புதுக்கோட்டை:

    பொன்னமராவதி அருகே உள்ள மூலங்குடி பொய்சொல்லா மெய்யர், பத்ரகாளியம்மன் கோயில் குடமுழுக்கு விழா நடைபெற்றது.

    பழமை வாய்ந்த இக்கோயிலில் அண்மையில் நாட்டுக்கோட்டை நகரத்தார் பெருமக்களால் திருப்பணிகள் செய்யப்பட்டு புதுப்பிக்கப்பட்டது. குடமுழுக்கு விழாவின் தொடக்கமாக யாகசாலை பூஜைகள் தொடங்கி நடைபெற்றது. காலை 10 மணியளவில் கோவனூர் சுவாமிநாத பண்டிதர் தலைமையில் பண்டிதர்கள் யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீரினை கும்பத்தில் ஊற்றி விநாயகர், பொய் சொல்லா மெய்யர், பத்ரகாளியம்ன், மூலிகைமலையான், பிரம்மர் கருப்பர் மற்றும் பொன்னையா சுவாமி உள்ளிட்ட சன்னிதானங்களுக்கு குடமுழுக்கு செய்தனர்.

    விழாவின் போது திருமுறை பாராயணங்கள் ஒதப்பட்டது.விழாவை சுற்றுவட்டார கிராமங்களை சார்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். விழாவிற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை பொன்னமராவதி காவல் ஆய்வாளர் தனபாலன் தலைமையிலான காவல்துறையினர் செய்திருந்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை நகரத்தார்கள், ஊர்ப்பொதுமக்கள் மற்றும் பரம்பரை பூஜகர்கள் செய்திருந்தனர். தொடர்ந்து ஐம்பெரும் கடவுளர் திருவீதி உலா நடைபெற்றது.

    • திருவிழா கடந்த 23-ந் தேதி பொரிசாட்டுதலுடன் தொடங்கியது.
    • 180 பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது

    கோவை:

    கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள தொட்டிபாளையத்தில் பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் குண்டம் திருவிழா நடைபெறுவது வழக்கம்.

    இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 23-ந் தேதி பொரிசாட்டுதலுடன் தொடங்கியது. 25-ந் தேதி கரும்பு வெட்டுதல், அம்மன் அழைப்பு நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. 29-ந் தேதி பிள்ளையார் பொங்கல், குண்டம் திறத்தல், குண்டத்தில் பசுமாடு விடும் நிகழ்ச்சியும் பின்னர் புண்ணியார்ச்சனை நிகழ்ச்சியும் நடந்தது.

    தொடர்ந்து இரவு குண்டத்துக்கு தீ மூட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. கிராம சாந்தி உள்ளிட்ட பல்வேறு பூஜைகளும் நடந்தன. நேற்று அதிகாலை சக்தி கரகம் மற்றும் வீரபத்திரன் சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெ ற்றன.

    தொடர்ந்து காலை 7 மணி அளவில் குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் காப்பு கட்டி விரதமிருந்த ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என அனைவரும் குண்டம் இறங்கி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.

    தொடர்ந்து 180 பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. குண்டம் திருவிழாவில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவுக்கான ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் மற்றும் விழா கமிட்டியினர் செய்திரு ந்தனர்.

    ×