பத்ரகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

மேலூர் அருகே சூரக்குண்டு பத்ரகாளியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
பத்ரகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
Published on

மேலூர்

மேலூர் அருகே உள்ள சூரக்குண்டு கிராமம், தெற்கு வளவாருக்கு பாத்தியப்பட்ட 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த பத்ரகாளியம்மன், பாப்பான்குண்டு அய்யன் கோவிலின் கும்பாபிஷேக விழா 16 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்றது. முன்னதாக பக்தர்கள் காப்புகட்டி விரதம் இருந்து வந்தனர். அதனைத்தொடர்ந்து யாகசாலை பூஜை நடைபெற்றது.

மேலூர் சிவன் கோவில் சிவாச்சாரியார் தட்சிணாமூர்த்தி குருக்கள் கணபதி ஹோமம் செய்து பூஜையை தொடங்கி வைத்தார். அதனைத்தொடர்ந்து யாகசலை பூஜைகள் நடந்தன. நேற்று சிவாச்சாரியார்கள் புனித தீர்த்தத்தை கோபுரகலசத்தில் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தினர். இதனை . கும்பாபிஷேகத்தை ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்டு சாமி தரிசனம் செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com