என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பத்ரகாளியம்மன் கோவில் உண்டியல் திறப்பு
    X

    உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடந்த போது எடுத்த படம்.

    பத்ரகாளியம்மன் கோவில் உண்டியல் திறப்பு

    • காணிக்கை எண்ணும் பணி கோவில் வளாகத்தில் நடைபெற்றது.
    • இதில் பணம், தங்கம், வெள்ளி பக்தர்கள் காணிக்கையாக செலுத்திருந்தனர்.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூரில் பிரசித்தி பெற்ற பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது.

    இந்த கோவிலுக்கு ஈரோடு மாவட்டத்திலுள்ள பல்வேறு இடங்களில் இருந்தும், அண்டை மாவட்டத்தில் இருந்தும் வரும் பக்தர்கள் தங்கம், வெள்ளி மற்றும் பணம் உள்ளிட்டவற்றை காணிக்கையாக செலுத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் கடந்த 5 மாதத்தில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய பணம், தங்கம் மற்றும் வெள்ளி ஆகியவற்றை எண்ணும் பணி கோவில் வளாகத்தில் நடைபெற்றது.

    அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவில் செயல் அலுவலர் நந்தினீஸ்வரி முன்னி–லையில் கோவில் உண்டியல் திறக்கப்பட்டு தனியார் கல்லூரி மாணவி களை கொண்டு காணிக்கை எண்ணப்பட்டது.

    இதில் ரூ.11,29,147 பணம், 135 கிராம் தங்கம், 205 கிராம் வெள்ளி உள்ளிட்டவை பக்தர்கள் காணிக்கையாக செலுத்திருந்தனர்.

    இந்த நிகழ்ச்சியில் பவானி கூடுதுறை சங்க மேஸ்வரர் ஆலய உதவி ஆணையர் சாமிநாதன், அறநிலை யத்துறை ஆய்வாளர் நித்யா, கோவில் பணியாளர்கள் செந்தில், தணிகாச லம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×