search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பத்ரகாளியம்மன் கோவில் குண்டம் தேர் திருவிழா
    X

    பத்ரகாளியம்மன் கோவில் குண்டம் தேர் திருவிழா

    • குண்டம் தேர் திருவிழா பூச்சாட்டுதலுடன் நாளை தொடங்குகிறது.
    • விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

    அந்தியூர்:

    அந்தியூர் பஸ் நிலையம் அருகே பிரசித்தி பெற்ற பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் பங்குனி மாதம் விமரிசையாக குண்டம் தேர் திருவிழா நடைபெறுவது வழக்கம்.

    அதேபோல் இந்த ஆண்டு குண்டம் தேர் திருவிழா பூச்சாட்டுதலுடன் நாளை (16-ந் தேதி) தொடங்குகிறது. தொடர்ந்து 22-ந் தேதி மகிஷாசூர மர்தனமும், 28-ந் தேதி கிராமசாந்தியும், 29-ந் தேதி காலை 11 மணிக்கு கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    அன்றைய தினத்தில் இருந்து தினமும் அம்மன் ஒவ்வெரு வாகனத்திலும் வீதி உலா வந்து பக்தர் களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சி நடைபெறும்.

    அதனைத்தொடர்ந்து அடுத்த மாதம் 5-ந் தேதி குண்டம் திருவிழாவும், 7-ந் தேர் திருவிழா தொடங்கி 10-ந் தேதி வரை தேர் முக்கிய வீதிகள் வழியாக வந்து மீண்டும் நிலையை வந்து அடையும்.

    தொடர்ந்து 11-ந் தேதி பரிவேட்டையும், 12-ந் தேதி வசந்தோற்சவத்துடன் திருவிழா நிறைவடைகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

    Next Story
    ×